Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படை கப்பக் குழு

Featured Replies

Different-Types-Of-Robbery.jpg

 

மூன்று தசாப்த யுத்த காலத்தில் காணாமல் போனோ­ரது பட்­டியல் நீண்­டது. இந்நிலையில் யுத்தம் நிறை­வ­டைய ஒரு வரு­டத்­துக்கு முன் அதா­வது 2008 ஆம் ஆண்டு முதல் யுத்தம் நிறை­வ­டைந்து இரு ஆண்­டுகள் அதா­வது 2011 வரை தலை நகர் கொழும்பை ஒரு கடத்தல் கலா­சாரம் புரட்டி எடுத்­தது.
 
 
வெள்ளை வேன் கலா­சாரம் என அப்­போது அடை­யாளம் காணப்­பட்ட அந்த கடத்­த­லுக்குள் சிக்கி குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்குள் மட்டும் சுமார் 28 பேர் கடத்­தப்­பட்டு முக­வ­ரி­யின்றி உள்­ளனர். இந் நிலையில் தான் குற்றப் புல­னாய்வுப் பிரிவு கடற்­ப­டையின் கப்பக் குழு ஒன்று தொடர்பில் தக­வல்­களை வெளிப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளது.
 
இந்த குழு சுமார் 8 அல்­லது 9 பேரைக் கொண்­டது என சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் வெளிப்­ப­டுத்திக் கொண்­டுள்ள தக­வல்­க­ளுக்கு அமை­வாக அதில் மூன்று கடற்­படை உயர் அதி­கா­ரி­களும் உள்­ளனர்.
 
பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண கேச­ரிக்கு வழங்­கிய இது தொடர்­பி­லான விஷேட தக­வலில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் ஆரம்­பித்­துள்ள விசா­ர­ணை­களில் 8 கடற்­ப­டை­யினர் தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அதில் முன்னாள் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் டீ.கே.பீ .தஸ­நா­யக்­கவின் பெயரும் உள்­ள­டங்­கி­யுள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. இது­வரை இரு சிங்­க­ள­வர்கள் மற்றும் தமிழ், முஸ்­லிம்கள் என 11 பேரின் கடத்தல் தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­தா­கவும் இது தொடர்பில் சுமார் 30 வரை­யி­லான வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் கப்பம் பெறும் நோக்­கி­லேயே இந்த கடத்­தல் கள் இடம்­பெற்­றுள்­ள­தாகவும் மேலோட்­டமாக பார்க்கும் போதே தெரி­வ­தா­க சுட்­டிக்­காட்­டினார்.
 
உண்­மையில் இந்த கடற்­ப­டையின் கப்பக் குழு தொடர்­பி­லான தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது 2008 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணி­ய­ளவில் மூன்று தமிழ் மாண­வர்­களும் அவர்­க­ளது நண்­பர்­க­ளான இரண்டு முஸ்லிம் மாண­வர்­களும் தெஹி­வ­ளையில் கடத்­தப்­பட்ட சம்­பவம் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­க­ளி­லாகும்.
 
இது தொடர்பில் கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் ஆட்­கொ­ணர்வு மனு­வொன்று கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்­ன­தாக தாக்கல் செய்­யப்­படும் போது விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின்­றன.
 
இந் நிலை­யில்தான் கடற்­ப­டையின் அப்­போ­தைய தள­பதி அட்­மிட்ரல் வசந்த கரு­ணா­கொட இந்த கடத்­த­லுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர் ஒரு­வரின் பெயரை முதன் முத­லாக வெளிப்­ப­டுத்­து­கின்றார். இது தொடர்பில் சம்­பவம் இடம்­பெற்­றது முதல் விச­ார­ணை­களை ஆரம்­பித்த சீ.சீ.டீ.எனப்­படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­விடம் இருந்து குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை பொறுப்­பேற்று நடவடிக்­கையில் இறங்­கிய போதே இந்த வெளிப்­ப­டுத்தல் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அதா­வது அட்­மிரல் வசந்த கரு­ணா­கொட புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 28
 
ஆம் திகதி முன்­வைத்த முறைப்­பாடு ஊடா­கவே இந்த கடத்­த­லுடன் கடற்­ப­டை­யினர் தொடர்பு குறித்த முத­ன்மைத் தகவல் பகி­ரங்­க­மா­கின்­றது.
' நேவி சம்பத்' என அழைக்­கப்­பட்ட லெப்­டினன் கொமாண்டர் தர அதி­கா­ரி­யான எம்.என்.டீ.எஸ்.முன­சிங்க தொடர்­பி­லேயே இந்த முறைப்­பாட்­டினை அப்­போ­தைய தள­பதி அட்­மிரல் வசந்த கரு­ணா­கொட புல­னாய்வுப் பிரிவில் முன்­வைத்­தி­ருந்தார்.
 
இந் நேவி சம்­பத்தை பற்றி சொல்­லி­யா­க­வேண்டும். நேவி சம்பத் கடற்­ப­டையின் கடை நிலை அதி­கா­ரியோ அல்­லது உத்­தி­யோ­கத்­தரோ அல்ல. மாற்­ற­ாக கடற்­ப­டையின் அப்­போ­தைய தள­ப­தி­யான வசந்த கரு­ணா­கொ­டவின் பாது­காப்பு பிரிவின் முக்­கி­ய­மான அதி­காரி. இத­னை­விட அவ­ருக்கு கீழ் இருந்த குழு கடற்­படை புல­னாய்வு நடவடிக்­கை­களில் தொடர்­பு­பட்­டி­ருந்­த­துடன் தேசிய புல­னாய்வுப் பிரி­வு­டனும் தொடர்­பு­களைக் கொண்­டி­ருந்­த­தாக அறிய முடி­கின்­றது.
 
இந்த கடத்தல் தொடர்பில் விசா­ர­ணை­களை குற்றப் புல­னாய்வுப் பிரிவு ஆரம்­பிக்கும் போதே நேவி சம்பத் மீது அப்­போ­தைய குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்­டிசின் அவ­தானம் திரும்­பி­யி­ருந்­தாலும் ஆரம்­பத்தில் கடற்­படை தள­பதி தனது பாது­காப்பு பிரிவின் சகா மீதான சந்­தேக பார்­வை­களை முற்­றாக மறுத்தார்.
 
இந்நிலை­யி­லேயே திடீ­ரென கடற்­ப­டையின் புல­னாய்வுப் பிரிவு வெளிப்­ப­டுத்திக் கொண்ட தகவல்கள் என தெரி­வித்து குற்றப் புல­னாய்வுப் பிரிவின் நேவி சம்­பத்­துக்கு எதி­ராக கடற்­படை தள­ப­தி­யாக இருந்த வசந்த கரு­ணா­கொ­ட­வினால் முறை­யி­டப்­பட்­டது.
 
நேவி சம்பத்தை மிக இர­க­சி­ய­மான முறையில் கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பிர­தே­சங்­களில் சிவி­லி­யன்­களை கடத்திச் சென்று கப்பம் பெற்று அவர்­களை கொலை செய்து வந்­த­தா­கவும் அதற்கு சாத­க­மாக யுத்த சூழலை அவர் பயன்­ப­டுத்­திக்­கொண்­ட­தா­கவும் கடற்­ப­டையின் புல­னாய்வுத் தகவல்கள் ஊடாக அப்­போது அறி­ய­மு­டிந்­தது. இதற்­காக நேவி சம்பத் பிரத்­தி­யேக மாக பார் என்ற உளவு பார்க்கும் நபர் ஒரு­வரை நிய­மித்­தி­ருந்­த­தா­கவும் அவர் வி­டு­தலை புலி­களின் கபில் அம்­மானின் கீழ் பயிற்சி பெற்­றவர் எனவும் அவரே நேவி சம்­பத்தின் கப்பக் குழு­வுக்கு கடத்­தப்­படத்தக்­க­வர்கள் தொடர்பில் தகவல் வழங்­கு­பவர் எனவும் அறிய முடிந்­தது. எனினும் இந்த தக­வலில் எந்­த­ளவு தூரம் உண்மை உள்­ளது என்­பதை அறிய இன்று வரை பார் என்ற குறித்த உளவு பார்க்கும் நபரை கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. அவரை நேவி சம்பத் தலை­மை­யி­லான குழு­வி­னரே இறுதிக் கட்ட யுத்த காலப்­ப­கு­தியில் கொன்­று­விட்­ட­தா­கவும் ஒரு தகவல் உள்­ளது.
 
இந் நிலையில் நேவி சம்­பத்தின் கடத்தல் தொடர்பில் கடற்­படை புல­னாய்வுப் பிரிவு வெளிப்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் தகவல்கள் ஒன்றும் இர­க­சி­ய­மல்ல. அந்த தக­வல்­களின் படி குறித்த சம்­பவம் வரு­மாறு:
 
அது கடந்த 2008 ஆம் ஆண்டு செப்­டெம் பர் மாதம் பார் உள­வாளி இளைஞர் குழு ஒன்றை தொடர்பில் நேவி சம்பத் தலை­மை­யி­லான கடற்­படை கப்பக் குழு­வுக்கு உளவு தகவல் ஒன்றை வழங்­கி­யுள்ளார். இத­னை­ய­டுத்தே தெஹி­வளை ஐந்து மாணவர் கடத்தல் சம்­பவம் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இதில் குறிப்­பிட்ட ஒரு மாணவன் பட்டப் படிப்பு ஒன்று தொடர்பில் 2008 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 17 ஆம் திகதி வெளி நாடொன்­றுக்கு செல்ல தயா­ராக இருந்­தவன். இந் நிலையில் தான் வெளிநாடு செல்ல முன் தனது நான்கு நண்­பர்­களையும் பார்த்­து­விட்டு செல்லும் நோக்கில் அவர்கள் தெஹி­வளை பிர­தே­சத்தில் ஒன்று சேர்ந்­துள்­ளனர். அது 2008 செப்டெம்பர் 16 ஆம் திக­தி­யாகும். அதில் இருவர் முஸ்­லிம்கள். ஏனையோர் தமி­ழர்கள். இந் நிலையில் அவர்கள் ஒன்று கூடி­யி­ருந்த இடத்தை அடைந்­துள்ள குறித்த கப்பக் குழு ஐவ­ரையும் அள்ளிச் சென்­றுள்­ளது.
 
இவ்­வாறு கடத்­தப்­பட்ட ஐவரும் கொழும்பு இலங்கை வங்கி தலை­மை­யகம் அமைந்­துள்ள பகு­தியில் இருந்த ஒரு கட்­டி­டத்தில் தடுத்து வைக்­கப்பட்­டி­ருந்­துள்­ளனர். இதனை தொடர்ந்தே வெளி நாட்­டுக்கு பட்டப் படிப்பை மேற்­கொள்ள செல்லத் தயா­ராக இருந்த மாண­வனின் தந்­தையை தொடர்­பு­கொள்­ளவும் அந்த கப்பக் குழு அவ­ரிடம் ஒரு கோடி ரூபாவை கப்­ப­மாக கோரவும் திட்­ட­மிட்­டுள்­ளனர். இந் நிலையில் கடற்­ப­டையின் அப்­போ­தைய தள­ப­திக்கு நேவி சம்­பத்தின் நடவ­டிக்­கைகள் குறித்து தொடர்ச்­சி­யான முறைப்­பா­டுகள் கிடைத்­த­வண்ணம் இருந்­துள்­ளன. இத­னை­ய­டுத்து ரியல் அட்­மிரல் தர அதி­காரி ஒரு­வரின் கீழ் விசா­ர­ணைகள் இடம்­பெற்ற போது அனைத்து தக­வல்­களும் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன. அதன்­படி, குறித்த ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்பட்டு திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
 
இந் நிலையில் கடற்­ப­டையின் புல­னாய்வுப் பிரிவு இது தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள நிலையில் நேவி சம்­பத்தின் குழுவில் இருந்­த­தாக கூறப்­படும் இரு கடற்­ப­டை­யினர் சம்­பவம் தொடர்பில் ஒப்­புதல் வாக்­கு­மூலம் ஒன்றை விசா­ர­ணை­யா­ளர்­க­ளிடம் அளித்­துள்­ளனர்.
 
அந்த வாக்கு மூலங்­களில் தம்மால் அந்த ஐவரும் கடத்­தப்­பட்­ட­தா­கவும் அதில் நால்­வரை கொலை செய்து துண்­டு­துண்­டு­க­ளாக வெட்டி களனி கங்­கையின் ஓரி­டத்தில் மூழ்­க­டித்­த­தா­கவும் வெளிநாடு சென்று பட்­டப்­ப­டிப்பை முன்­னெ­டுக்க தயா­ராக இருந்த மாண­வனை திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­முக்கு கொன்டு சென்றதா­கவும் அங்கு வைத்து அவரை 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி சுட்­டுக்­கொன்­ற­தா­க வும் அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.
 
இந்த தகவல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்­ன­ரேயே குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு கடற்­படை தள­பதி நேவி சம்பத் தொடர்பில் தனது முறைப்­பாட்டை முன் வைத்­துள்­ள­துடன் அது முன் வைக்­கப்­படும் போதும் நேவி சம்பத் கடற்­ப­டையில் இருந்து தப்பிச் சென்­றி­ருந்தார்.
 
இந் நிலை­யி­லேயே நேவி சம்பத் தங்­கி­யி­ருந்த அறை சீல் வைக்­கப்பட்டு குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரின் சோத­னைக்கு உள்­ளா­னது. சோத­னைக்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி நேவி சம்­பத்தை புல­னாய்வுப் பிரி­வினர் கைது செய்­தனர். அன்­றைய தினமே அவ­ரது அறை புல­னாய்வுப் பிரி­வி­னரால் சோத­னைக்குட்­ப­டுத்­தப்­பட்­டது.
 
7.62X25 துப்­பாக்கி ரவைகள், 7.62மி.மீ. வெடி குண்­டுகள் கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, எச்.எஸ்.பி.சி, வங்கி, இலங்கை வங்­கி­களின் சேமிப்புப் புத்­த­கங்கள், காசோ­லைகள், காணாமல் போன­வர்­களின் தேசிய அடை­யாள அட்­டைகள், கட­வுச்­சீட்­டுக்கள், சோனி எரிக்சன் சிம் அட்­டைகள், உட்­பட 21 தடயப் பொருட்­களை பொலி­ஸாரால் கைப்­பற்ற முடிந்­தது. அத்­துடன் தன்­டுவம் முத­லாளி எனப்­படும் வட்­டிக்கு பணம் கொடுக்கும் வர்த்தகர் ஒரு­வ­ரிடம் பல இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான வவுச்சர் ஒன்று வைப்புச் செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் அதுவும் மீட்­கப்­பட்­டது.
இந் நிலையில் கைது செய்­யப்­பட்ட நேவி சம்­பத்தை பொலிஸார் தடுத்து வைத்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து பின்னர் கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்தி விளக்­க­ம­றி­ய­லிலும் வைத்­தனர்.
 
சுமார் ஒரு­வ­ருடம் வரை விளக்­க­ம­றி­யலில் இருந்த நேவி சம்பத் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் திகதி பிணையில் விடு­த­லை­யானார். இதனை தொடர்ந்தே இந்த விவ­காரம் குறித்து மேலும் சில தக­வல்கள் கசி­யத்­தொ­டங்­கின.
 
அந்த தக­வல்கள் இந்த கடத்­தல்கள் கொலை­க­ளுக்கு பின்னால் கடற்­ப­டையின் அப்­போ­தைய தள­பதி அட்­மிரல் வசந்த கரு­ணா­கொ­டவின் நெருங்­கிய அதி­கா­ரி­க­ளாக செயற்­பட்ட கடற்­படை முன்னாள் ஊடகப் பேச்­சாளர் தஸ­நா­யக்க, ரண­சிங்க போன்றோர் உள்­ள­தா­கவும் தன்னை பழி­வாங்கும் முக­மாக அவர்­களால் கொலை­யுண்ட நபர்­களின் அடை­யாள அட்­டைகள், கடவுச் சீட்­டுக்­களை தனது அறையில் போட்டு தன்னை மாட்­டி­விட்­ட­தாக நேவி சம்பத் ஊடாக வெளியில் வந்­தது.
 
இந் நிலையில் தான் கடந்த ஜன­வரி மாதம் இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டு­கின்றது. இதனை மற்­றொரு சாத­க­மாக பயன்­ப­டுத்தி கொள்ளும் நேவி சம்பத் இடை­யீட்டு மனு­வொன்றை ( மோசன் ஒன்றை) நீதி­மன்றில் தாக்கல் செய்து இது தொடர்பில் புதிய தகவல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.
 
அதா­வது கடற்­ப­டையின் அப்­போ­தைய தள­பதி ஊடாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு சமர்­ப்பிக்­கப்­பட்ட கடற்­படை புல­னாய்வுப் பிரிவின் விசா­ரணை அறிக்கை ஊடாக நேவி சம்பத் கைது செய்­யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்­கப்பட்டு விசா­ர­ணைக்குட்­ப­டுத்­தப்பட்­டி­ருந்தார். இந் நிலையில் 2011 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் திகதி மன்­றுக்கு அறிக்கை தாக்கல் செய்த குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேவி சம்பத் இந்த கடத்­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­யவர் என்­பதை அடித்து சொல்­லி­யி­ருந்­தது. எனினும் தற்­போது மன்­றுக்கு தாக்கல் செய்­யப்பட்­டுள்ள இடை­யீட்டு மனுவின் ஊடாக இவற்­றுக்கு பொறுப்புக் கூற வேண்­டி­ய­வ­ராக முன்னாள் கடற்­படை தள­பதி அட்­மிரல் வஸந்த கரு­ணா­கொட ஆக்­கப்­பட்­டுள்ளார்.
 
இந் நிலை­யி­லேயே தற்­போது புதிய கோணத்தில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது.எவ்­வா­றா­யினும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உத்­தி­யோக பூர்வ தகவல்­களின் பிர­காரம் இது­வரை கடத்­தப்­பட்ட 11 பேர் தொடர்பில் தகவல்­களை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளனர். இவர்கள் 2008 ஆகஸ்ட் மாதத்துக்குள் 2009 செப்டெம்பர் மாதத்துக்கும் இடையே கடத்தப்பட்டவர்களாவர். மரு­தானை, தெஹி­வளை, கொட்­டாஞ்­சேனை, வெள்­ள­வத்தை உள்­ளிட்ட பிர­தே­சங்­களில் கடத்­தப்­பட்­ட­வர்கள் தொடர்­பி­லேயே இந்த வெளிப்­ப­டுத்­தல்கள் செய்யப்­பட்­டுள்ளன. இவர்கள் அனை­வரும் கொழும்பு சைத்திய வீதியில் உள்ள கடற்­படை முகாம் மற்றும் திருகோணமலை முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.
 
எனினும் அவர்கள் தற்போது உயிருடன் உள்ளனரா அல்லது கொலை செய்யப்ப ட்டுவிட்டனரா என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை பிரிவுக்கு கிடைக்கவில்லையாம். இந் நிலையிலேயே சுமார் 8 அல்லது 9 கடற்படை அதிகாரிகளை சந்தேக வளையத்துக்குள் வைத்துள்ள குற் றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளது.
 
இதுவரை செய்யப்பட்டுள்ள விசாரணை களில் கொழும்பு, திருகோணமலை கடற் படை முகாம்களில் கடத்தப்படுவோர் தடுத்து வைக்கும் கலாசாரம் ஒன்று இருந்து வந்துள்ளமை உறுதியாகியுள்ளது. அப்படியானால் திருகோணமலை கடற்படை முகாமில் இயங்கியதாக கூறப்படும் கோத்தா தடுப்பு முகாம் உள்ளிட்ட சந்தே கங்கள் யதார்த்தமாக மாறியுள்ளன. இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் மிக விரைவில், வெளிவரலாம். அதன்படி கடற்படை முகாம்களில் இவ்வாறு புதைந்துபோன இரகசியங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
 
எனினும் தற்போதும் கடத்தப்பட்டவர்கள் எங்கு எப்படி உள்ளார்கள் என்பது விடை தெரியாத வினாவே.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.