Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இலங்கைக்கு எச்சரிக்கை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்ன் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் கடந்த கால தவறுகளை மீளவும் செய்யக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 28ம் அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்படும் போது மக்களின் கருத்து குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களும் உள்ளீடுகளும் மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட தவறுகள் மீளவும் இடம்பெறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கை இந்த அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டியது என்ற போதிலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை ஒத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் ஒத்துழைப்பு வழங்க விரும்பும் முறைமை ஆகியனவற்றின் அடிப்படையிலேயே அறிக்கை சமர்ப்பித்தல் கால தாமதப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

 

கடந்தகால தவறுகளை செய்யவேண்டாம்-  இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் கோரிக்கை:

இலங்கை அரசாங்கத்தை கடந்த கால தவறுகளை செய்யவேண்டாம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இன்றைய அமர்வில் உரையாற்றுகையில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள செய்யத் அல் ஹுசைன்  மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இந்த அமர்வில் உறுப்பு நாடுகள் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதல் தொடர்பான பேரவையின் தீர்மானம் அமுல்படுத்தப்பட்ட விதம் குறித்த எனது அறிக்கையை பரிசீலிக்க இருந்தன,இதில் மனித உரிமை பேரவையின் விசாரணை தொடர்பான முடிவுகளும் இடம்பெற்றிருக்கும்.

எனினும் தீவிர ஆலோசனைக்கு பின்னர்,விசாரணை குழுவின் நிபுணர்களின் ஆலோசனைக்கு ஏற்பவும்,குறிப்பிட்ட அறிக்கையை வெளியிடுவதை செப்டம்பரில் நடைபெறவுள்ள 30 வது அமர்வு வரை தாமதிக்குமாறு நான் பரிந்துரை செய்துள்ளேன்.

இலங்கையில் மாற்றமடையும் சூழ்நிலைகள், அரசாங்கத்திடமிருந்து எனக்கு ஓத்துழைப்பு வழங்குவது குறித்து கிடைத்துள்ள சமிக்ஞைகள், மேலும் தகவல்கள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் என்பவை குறித்து மதிப்பிட்ட பின்னரே நான் அவ்வாறு பரிந்துரைசெய்தேன்.

இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நீதிக்கான விசேட அறிக்கையாளரையும், பலவந்தமாக காணமற் போகச்செய்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற் குழுவையும் , என்னையும் செப்டம்பர் அமர்விற்கு முன்னதாக  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இக்காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அதில் தொடர்புட்ட சகலருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்.

இலங்கையில் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும்  ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள ஓரேயொரு வாய்ப்பிது.பலனளிக்க கூடிய பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்காக பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.

  http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117269/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.