Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வு, அடிப்படை பிரச்சினைகள் குறித்து மோடியுடன் பேச்சு நடத்துவோம் - சுமந்­திரன்

Featured Replies

sumanthiran1_9.jpg

 
 
 
 
உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்கை வரவுள்ள இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடி­யு­ட­னான சந்­திப்­பின்­போது தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு உள்­ளிட்ட முக்­கிய பல விட­யங்கள் தொடர்பில் பேச­வுள்­ள­தாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.
 
எதிர்­வரும் 13ஆம் திகதி இலங்­கைக்கு வர­வி­ருக்கும் இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடி­யுடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் சந்­திப்­பினை மேற்­கொள்­ள­வுள்ள நிலையில் சந்­திப் பின்­போது எவ்­வா­றான விட­யங்கள் முன்­வைக்­கப்­ப­டு­மென தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ரிடம் வின­வி­யப்­போதே கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் வெளி­வி­வ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
 
இலங்கை விஜ­யத்­தினை மேற்­கொள்­ள­வுள்ள இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புடன் சந்­திப்­பினை மேற்­கொள்­ள­வுள்ளார். இதன்­போது எமது தரப்பின் சார்பில் பல முக்­கிய விட­யங்களை முன்­வைக்­க­வுள்ளோம். குறிப்­பாக நாம் தொடர்ச்­சி­யாக கோரி­வரும் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் வலி­ய­றுத்­துவோம். அர­சியல் தீர்வு விட­யத்தில் இந்­திய அரசின் ஈடு­பாடு இருக்க வேண்­டு­மெ­னவும் இலங்கை இந்­திய அனு­ம­தி­யுடன் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டு­மென்­பது தொடர்­பிலும் நாம்பேசுவோம்.
 
மேலும் தமிழ் மக்­களின் மீள்­கு­டி­யேற்ற செயற்­பா­டுகள் மிக மந்த கதியில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. எனவே அதனை துரி­தப்­ப­டுத்­து­வது தொடர்­பிலும் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பாகவும் கவ­னத்தில் கொண்­டு­வ­ர­வுள்­ள­துடன் மீனவர் பிரச்­சினை குறித்தும் முக்­கி­ய­மாக கவ­னத்தில் கொண்­டு­வ­ர­வுள்ளோம்.
 
வட பகுதி மீன­வர்கள் தொடர்ச்­சி­யாக பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அவர்­க­ளுக்­கான பாது­காப்பும் மீன்­பி­டிப்­ப­தற்­கான அனு­ம­தி­களும் தடை­க­ளின்றி பெற்­றுக்­கொ­டுக்கப்பட வேண்டும். எனவே அதற்­கான உட­ன­டித்­தீர்வு அவ­சி­ய­மா­ன­தென்­பதை தெரி­விப்போம்.
 
அதேபோல் அனல்மின் நிலை­ய­ம் அமைப்­பது தொடர்பில் இலங்கை அரசும் இந்­திய அரசும் உடன்­ப­டிக்கை மேற்­கொண்­டுள்ள நிலையில் அவை வடக்கு மக்­களை பாதிக்­காத வகை­யிலும் மீள் குடி­யேற்­றத்­தினை பாதிக்­காத வகை­யிலும் நடை­பெற வேண்­டு­மென்­ப­தனை தெரி­விப்போம். இன்னும் பல­முக்­கிய விட­யங்கள் தொடர்­பிலும் பேச­வுள்ளோம்.
 
அத்­தோடு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்கை விஜ­யத்தின் ஏற்­பா­டு­களை ஆராயும் நோக்கில் இலங்கை வந்­துள்ள இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்­மா­சு­வ­ரா­ஜூ­டனும் நாளை மதியம் கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். இப்பேச்சுவார்த்தைகளில் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொள்வர்.இதன்போது மீனவர் பிரச்சினையை பிரதானப்படுத்தி பேசுவதுடன் ஏனைய ஒரு சில அரசியல் காரணிகள் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 

Edited by Athavan CH

சுஷ்மாவையும் விட்டு வைக்காத சங்கரி…

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஜுக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘இக்கடிதம் தமிழர் விடுதலைகக் கூட்டணியின் செயலாளர் நாயகத்திடமிருந்து வருகிறது. இத்துடன் வரும் பத்திரங்கள் தாங்கள் 2013ஆம் ஆண்டு சித்திரை மாதம் 9ஆம் திகதி இந்திய நாடாளுமன்றத்தின் சர்வகட்சித் தூதுக் குழுவுக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் தலைவியாக தலைமை தாங்கி வந்தபோது யாழ்ப்பாணத்தில் வைத்து கையளித்த பத்திரங்கள், மகஜர்கள் ஆகியவற்றின் உண்மைப் பிரதிகளாகும்.

அச்சமயம் பல ஸ்தாபனங்களும் தங்களை சந்திக்க கூடியிருந்தமையால் அவை பற்றி விளக்கமளிக்க போதிய அவகாசம் கிடைக்கவில்லை. அன்றிருந்த நாட்டு நிலைமைக்கும் இன்றுள்ள நிலைமைக்கும் அதிக வித்தியாசம் இல்லாமையாலும் ஆட்சிபீடத்தில் எமக்கு சாதகமான அரசு ஆட்சிபுரிவதாலும் இந்தப் பத்திரங்களைப் படித்து இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக முழுவிபரங்களையும் படித்து அறிய மிகப்பொருத்தமான நேரம் இதுதான் என்பதை உணர்கின்றோம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ விஜயத்துக்கு சில நாட்களுக்கு முன்பே தாங்கள் வருகை தந்துள்ளமையால் இலங்கையின் இனப்பிரச்சினை சம்பந்தமாக சகல விபரங்களையும் பற்றி அறிய போதிய நேரம் உள்ளமையால் இலங்கைப் பிரச்சினை சம்பந்தமாக மிகத்தெளிவான ஒரு விளக்கத்தை பிரதம அமைச்சருக்கு கொடுக்கக்கூடிய வாய்ப்புண்டு.

அரசமாற்றம், மக்களின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் குறிப்பாக நரேந்திர மோடியும், ஏனைய இந்திய நாட்டின் அதிகாரிகளும் காட்டும் ஆர்வம் அத்தனையும் இணைந்து இனப்பிரச்சினை தீர்வை அடைய அண்மித்துவிட்டோம் என்ற வலுவான செய்தியைத் தருகிறது.

தற்போதைய அரசு பதவியில் வந்து இரண்டே மாதங்கள் ஆகின்றது. பல்வேறு கொள்கைகள் முரண்பாடுகள், கடும் போக்காளர்களைக் கொண்ட ஏறக்குறைய 38 அரசியற்கட்சிகள் இணைந்து எல்லோர்க்கும் விரோதமான ஒருவரைப் பதவியை விட்டு இறக்கி, ஜனநாயகத்தையும், அடிப்படை மனித உரிமைகளையும் மக்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பதற்கு இணைந்து உருவாக்கப்பட்டதே.

நடக்க இருக்கின்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமக்கு புகழ் சேகரிக்கப் பார்க்கிறார்கள். ஆகவே நாட்டை தாமே காப்பாற்றினோம் என்பவர்கள் பற்றி எச்சரிக்க விரும்புகிறேன்.

பிரதம மந்திரியை ஓர் குழு புதுடில்லியில் சந்தித்தபோது அக்குழுவில் வேறு தமிழ் குழுக்கள் சேராது உள்ளன என கேட்ட கேள்விக்கு, அவர்கள் கூறிய பதில் ‘இரண்டொரு தமிழ்க் குழுக்கள் அரசுடன் சேர்ந்து செயற்படுகிறார்கள்! அவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என தம்மால் அறிய முடியவில்லை’ என்று. இது உண்மையல்ல.

பிரதம மந்திரி இவர்களை அரசுடன் பேச்சுவார்ததையில் ஈடுபடுமாறு கேட்டுள்ளார். இந்தக்குழு இப்போதும் விடுதலைப்புலிகளின் பினாமிகளாகச் செயற்படுவதாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து நீக்கியும் விட்டமையால், தகுந்த பதில் கொடுக்க முடியாமல் மழுப்பிவிட்டனர். மேலும் மக்கள் தமக்கு நாடாளுமன்ற தேர்தல் மூலமும், உள்ளூராட்சித் தேர்தல்கள்; மூலமும் ஆணை தந்துள்ளனர் என்ற கூற்றை உண்மையென ஏற்கமுடியாது.

ஏனெனில் கடைசியாக நடந்த 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு யாழ் மாவட்டத்தில் ஏழரை லட்சம் வாக்குகளில் விழுந்த வாக்குகள் 63,000 வாக்குகள் மட்டுமே! நாடளாவிய ரீதியில் 10 சதவீதமான வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர். உள்ளுராட்சித் தேர்தல் வாக்குகளை வைத்து ஆணையை பெற்றுவிட்டதாக கூற முடியாது.

என்னால் இந்தியப் பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதங்களின் பிரதிகளை தங்களுக்கு அனுப்பியுள்ளேன். தங்களுக்கு வேண்டிய சகல விபரங்களையும் இவற்றில் பெற்றுக்கொள்ளலாம். புதுடில்லியில் பிரதமரையும் தங்களையும் சந்தித்த தூதுக் குழுவினர் விடுதலைப் புலிகளின் உதவியோடு தமிழர் விடுதலைக் கூட்டணியை அழிக்க முயன்றனர்.

மிக்க திறமையுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களை அழித்துவிட்டு தாமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனக் கூறுகின்றனர். உண்மைநிலை யாதெனில் இத்தனை அனர்த்தங்கள் மத்தியிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி தப்பிப் பிழைத்து இயங்குகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

http://www.jvpnews.com/srilanka/99867.html

 

இணையங்கள் குழப்புகின்றனரா? அல்லது குழப்பமான அரசியலில் தான் நாம் பயணிக்கின்றோமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.