Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடங்குபவர்கள் அடக்கப்படுவீர்கள்; உரிமைக்காக போராடுங்கள் என்கிறார் அரச அதிபர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

01dcccf3f611785c2eac3c1b9d1f97e9.jpg

அடங்குபவர்கள் அடக்கப்படுவீர்கள் . அடங்கினால் அடக்குமுறை இன்னும் பிரயோகிக்கப்படும்  நீங்கள் உரிமைக்காக போராட வேண்டும்  என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்தார் .
 
யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள்  வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.  அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்  தெரிவித்தார். 
IMG_8104.jpg
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
மகளிர்களுக்கான உரிமைகள் கிடைக்கவில்லை என்பதற்கு போராட்டங்களும் விழிப்புணர்வுகளும் மகளிர் தினங்களும் ஆதாரப்படுத்துகின்றன. 
 
அதனைவிட எமது இந்து சமயத்திலும் மகளிர் பெருமை தத்துவங்கள்  ரீதியாக காட்டப்படுகின்றது . அத்துடன் பிரதேச ரீதியில் இருக்கும் மகளிர் அமைப்புக்கள்  மாவட்ட ரீதியில் சமாசங்களை உருவாக்க வேண்டும்.
IMG_8095.jpg
 
இவ்வாறு உருவாக்கினால் மட்டுமே  மகளிருக்கான உரிமைகள்,  காரியங்களை முன்னெடுக்க பலமாக இருக்கும். அரசினால் மகளிர் விவகார அமைச்சு என்ற தனியொரு அமைச்சு உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது. 
 
மகளிர்களுக்கு அவர்களது உரிமைகளுக்கான போராட்டம், வாழ்க்கைப் போராட்டம் உள்ளது. இந்தஅடிப்படையில் வாழ்வாதாரத்தில் மிகவும் பாதிப்படைந்த பெண்களுக்கு மருதங்கேணியில் இல்லம்  ஒன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
IMG_8100.jpg
 
அதுபோல யாழ்ப்பாணம் மற்றும்  ஊர்காவற்றுறை ஆகிய பகுதிகளில் உள்ள பொலிஸ்  நிலையங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கும் என தனி அலகு ஒன்றினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் சிறுவர் , பெண்களுக்கு இடம்பெறும் வன்முறைகளைக் கட்டப்படுத்த விழிப்புணர்வு கருத்தரங்குகள் , குறுந்திரைப்படங்கள் என்பன வெளியிடப்பட்டு வருகின்றன.அடங்குபவர்கள் அடக்கப்படுவீர்கள்.அடங்கினால் அடங்குமுறை இன்னும் பிரயோகிக்கப்படும். 
 
IMG_8110.jpg
எனவே இவற்றுக்கு மத்தியில் உரிமைகளுக்காக போராட வேண்டும். இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும்  சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. 
 
மேலும் தேர்தல் சட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்பவர்களில் 40 வீதமானவர்கள்18- 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களாக இருக்க வேண்டும். இது கட்டாயமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
IMG_8118.jpg
 
ஆனால் பெண்களுக்கு என தேர்தல் சட்டத்தில் எவ்வித கட்டாயமாக்கல்களும் இல்லை. எனவே மகளிர்கள் சமூகத்துடன் அரசியல் கலந்த மாற்றத்தினையும்  எதிர்காலத்தில் கொண்டுவரவேண்டும். 
 
யாழ். மாவட்டம் மட்டுமல்ல அனைத்து மாவட்ட மகளிர்களும்  ஒன்றிணைய வேண்டும்  அதற்கான பங்களிப்பு என்றும்  அரச சார்பானவர்கள் என்பதால் எங்களால் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 
 
இதேவேளை,  அகில இலங்கை ரீதியிலும் சர்வதேச ரீதியிலம் சென்று சாதனை படைத்த வீராங்கனைகள்  இதன்போது கௌரவிக்கப்பட்டனர். மேலும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் தமது ஊக்கத்தினை வெளிப்படுத்திய பெண்களும்  அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர். 

http://onlineuthayan.com/News_More.php?id=640643908509243446

சும்மா ஜாலியா இப்படி பேச அதை சீரியஸா எடுத்து போராட்டதில் அவங்க ஈடுபட்டால் என்ன செய்ய. கொஞ்சமாவது அரச அதிபருக்கு பொறுப்புணர்வு வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.