Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வரலாற்று முக்கியத்துவம்மிக்க இலங்கைப் பயணத்தை கனடியத் தமிழர் பேரவை வரவேற்கிறது:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
CTC%20logo%20seithycom.jpg

28 ஆண்டுகளின் பின் இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கை செல்கிறாhர். இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் அடிப்படையில் இந்தியப் பிரதமரின் தற்போதைய பயணம் அங்கு ஓர் நிரந்தரத் தீர்வையும் அமைதியையும் உண்டாக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியப் பிரதமர் ஒருவர் வடமாகாணம் செல்வது இதற்கான வாய்ப்புகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குக் குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு வாழ் தமிழரின் சிக்கல்களுக்குத் தீர்வுகாண மதிப்புக்குரிய பிரதமர் மோடி அவர்கள் தனிப்பட்ட முறையில் உறுதி பூண்டிருப்பதைக் கனடியத் தமிழர் பேரவை வரவேற்கிறது.

   

2009ஆம் ஆண்டின் பின் நில அபகரிப்பு, தடுத்து வைத்திருப்போரை விடுதலை செய்தல், இராணுவத்தை அகற்றல் போன்றவற்றை வலியுறுத்திப் பல மனித உரிமை அமைப்புகள் குரல்கொடுத்து வருகின்றன. இந்தியப் பிரதமரின் இந்தப் பயணம் இவ் வேண்டுகோள்களை நிறைவேற்றப் பெரிதும் துணைசெய்யும் என நம்புகிறோம்.

 

இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனா அவர்களின் அரசு நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வரப் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரச பதவிகளில் இருந்து இராணுத்தினரை நீக்கியமை, வட-கிழக்கு மாகாணங்களுக்கான பயணம், திருமதி செயக்குமாரி மற்றும் ஏழு பெயரது விடுதலை ஆகியன சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். இவைபோன்று இன்னும் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. ஆத்தேர்டு போர்குற்றங்களை விசாரிக்கும் முக்கிய விடயம் செயற்படுத்தப்பட வேண்டியுள்ளது. நிரந்தர தீர்வுக்கும் இனங்கிடையோன நல்லெண்ணத்தை உருவாக்கவும் அமைதிக்கும் இது முக்கிய தேவையாக உள்ளது.

 

அனைத்து முக்கிய கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டணி அரசால் ஒரு நிரந்தரத் தீர்வை எட்டும் சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த வாய்ப்பைத் தவறவிடாது தமிழ் மக்களாற் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டுமெனப் பிரதமர் மோடி அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

 

அத்தோடு தமிழ் நாட்டில் வாழும் இலங்கை ஏதிலியருக்கு நாடு திரும்ப ஓர் வாய்ப்பான சூழலை உருவாக்குதல், மீனவரிடையேயான சிக்கல்களுக்கு நியாயமான தீர்வுகாணல் போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் வழங்குமாறு கனடியத் தமிழர் பேரவை பிரதமர் மோடி அவர்களை கேட்டுக்கொள்கிறது.

 

மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உறுதியான தலைமைத்துவத்தைப் பாராட்டுவதோடு இலங்கைக்கான அவரது பயணம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

 

கூடிய விளக்கங்களுக்கு கனடியத் தமிழர் பேரவை: 416-240-0078

 

http://seithy.com/breifNews.php?newsID=128116&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.