Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தை வெளியேற்றுவதில்லை என்று ஜனாதிபதி உத்தரவாதம் - புதிய இராணுவத் தளபதி

Featured Replies

வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றப் போவதில்லை என்று சிறிலங்காவின் ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாக, புதிய இராணுவத் தளபதி க்ரிஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
 
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
 
வடக்கில் இருந்து ஒரு இராணுவத்துறுப்பினரேனும் குறைக்கப்பட போவதில்லை.
 
அத்துடன் இராணுவ முகாம்களும் அகற்றப்படாது.
 
முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி இதற்கான உத்தரவாதத்தை வழங்கி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

http://www.pathivu.com/news/38947/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்
இராணுவத்தை வெளியேற்றுவேன் என பிரதமர் உத்தரவாதம் தந்தால் அவருடன் கைகுலுக்கவும் தயார் : முதலமைச்சர்
4a63019fb1088845fc612f0aa6b6bbe1.jpg
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியை வளர்க்கவே இங்கு வந்தார். அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமுமில்லை. 
 
இது முற்றிலும் ஓர் அரசியல் ரீதியான பயணம். எனவே நான் மக்களின் பிரதிநிதி என்ற முறையில் பிரதமரின் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லையே என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது. 
 
அவர் இராணுவத்தினரை படிப்படியாக வெளியேற்றுவேன் என உத்தரவாதம் தந்தால் நான் அவருடன் கைகுலுக்கவும் தயார் என , வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
இன்று  முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி திறப்பு விழாவில் இணை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
மேலும் அவர் உரையாற்றுகையில்,
 
எமது பிரச்சினைகளை ஓரளவு தெரிந்து வைத்து எமக்காகக் குரல் கொடுப்பவர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன அவர்கள்.
 
 இந்தத் தருணத்தில் எம்முடன் சேர்ந்து இந்த நிகழ்வில் அவர் கலந்து கொள்வதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். 
 
முல்லைதீவு மாவட்ட மக்களின் நலனை எமது முன்னுரிமை கொடுக்க வேண்டிய ஒரு விடயமாக நினைத்து எமது கடமைகளை ஆற்றி வருகின்றோம். எம்மால் பணம் செலவழித்துக் கட்டமுடியாவிட்டாலும் americares நிறுவனம் தமது செலவில் கட்டித்தந்துள்ள இந்த சத்திரசிகிச்சைத் தொகுதிஇ இரத்த வங்கி ஆகியவற்றைத் திறந்துவைத்தாவது எமது மகிழ்வையும் கரிசனையையும் உங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளோம். 
 
முன்னைய அரசிற்கு ஒரு சத்திர சிகிச்சை அளிக்க எமது ஜனாதிபதிக்கு உறுதுணையாக நிற்கின்றவர் கௌரவ அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன. 
 
அவர் முன்னைய அரசின் நோயுற்ற பகுதிகளை வெட்டி சத்திர சிகிச்சை செய்து புதியதொரு அரசை எமக்குத் தரப் படாதபாடு பட்டுள்ளார். அவருக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.
 
 இருப்பினும் அவரின் புதிய அரசின் பிரதமருடன் எனக்கேன் வீண் விவாதம் என்று அவரும் நினைக்கக்கூடும். எனதருமை மக்களான நீங்களும் நினைக்கக்கூடும். வரமுன் காப்பவனே புத்திசாலி. வருவதை அறிந்து நாங்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அது எம்மையே வருத்தும். 
 
என்னைப் பொறுத்தவரையில் இன்றே திரும்பவும் வீடு சென்று எனது ஓய்வினை மீண்டும் ஏற்றுவாழும் மனோநிலையில்தான் நான் இருக்கின்றேன். எதுவும் தேவையில்லை. ஆனால் பொறுப்புக்கள் தரப்பட்டால் அவற்றைத் தட்டிக்களிக்க நான் தயாரில்லை. 
 
அண்மையில் பிரதமரின் விஜயம் பற்றி ஓர் அழைப்பிதழ் கிடைத்தது. அதை அனுப்பியவர் என்னைத் தெரிந்த திருமதி றோசி சேனாநாயக. திருமதி விஜயகலா மகேஸ்வரனின் அழைப்பின் பேரில் பிரதமர் வருகின்றார் என்றும் அந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் என்னையும் பங்குபற்றுமாறு அழைக்கப்பட்டது.
 
 என்னைப் பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகம் அழைக்கவில்லை. பிரதமர் தமது விஜயம் பற்றி எம்முடன் கலந்தாலோசிக்கவுமில்லை. அவர் சார்பான அழைப்பை விடுத்தது அவரின் கட்சியின் பிரமுகர் ஒருவர். கட்சியின் இன்னொருவரின் அழைப்பின் பேரிலேயே அவர் வருகை தந்தார். 
 
ஆக மொத்தம் இதன் அர்த்தம் என்ன? தமது கட்சியை இங்கு நிலைநாட்ட, அலுவலகங்களைத் திறந்து வைக்க,நேரடியாக மத்தியில் இருந்து மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுத்து இன்னாரை அண்டினீர்கள் ஆனால் உங்களுக்கு நாங்கள் சகல உதவிகளையும் பெற்றுக் கொடுப்போம் என்று கட்சி முறையாகக் கூறவே பிரதமர் இங்கு வருகை தந்தார். 
 
இது முற்றிலும் ஒரு அரசியல் ரீதியான பயணம். எனவே நான் மக்களின் பிரதிநிதி என்ற முறையில் பிரதமரின் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லையே என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது. 
 
அவர் தமது கட்சியை வளர்க்க வந்தார். வளர்த்துவிட்டுப் போகட்டும். அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமுமில்லை. 225 மக்கள் பிரதிநிதிகள் கொண்ட நாடாளுமன்றத்தில் இன்று 45 பிரதிநிதிகளை மட்டுமே கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிப் பலம் பெற்று ஆண்டு வருகின்றது.
 
 அடுத்த பொதுத் தேர்தலில் தமக்கு என்ன கிடைக்குமோ என்ற பயம் உள்ளூரப் பிரதமரை வருத்திக் கொண்டுதான் இருக்கும். அதனால்தான் வடமாகாணத்தில் எப்படியாவது காலடி ஊன்ற அவர் பல நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
 
 ஒரு பிரதமரை அண்டினால் பல நன்மைகள் பெறலாம் என்பது எனக்குத் தெரிந்த விடயம்தான். ஆனால் அடுத்த பொதுத் தேர்தலில் என்ன நடக்கப் போகின்றது என்பதை அறியாது வடமாகாணத்தில் எம் மக்களின் செல்வாக்கைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த அவர் விழையும் போது அதனை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதும் எனது கடப்பாடுதான். 
 
இதிலே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. வடமாகாணத்தில் தமது கட்சியை நிலை நாட்ட பிரதமர் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது உண்மை.
 
மக்களால் பெருவாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் புறக்கணித்துத் தனது கட்சியின் சிலரை முன்வைத்தே தமது அரசியலைக் கொண்டு நடத்துவதற்கு எத்தணிக்கின்றார் என்பதும் உண்மை.
 
அடுத்த கட்டமாக இதைத்தரமாட்டேன். அதைத் தருவேன் என்று எங்களுக்கு அரசியல் ரீதியாகப் பிரச்சினைகளை உண்டாக்கப் போவதும் நான் அறிந்ததே. அதாவது எங்களுடன் சேர்ந்தால் உங்களுக்குச் சகல நன்மைகளும் கிடைக்கும். சேராவிட்டால் நீங்கள் எங்களைப் புறக்கணித்தவர்கள் ஆவீர்கள். 
 
 
நான் என் சொந்த நன்மை கருதியோஇ சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு இடம் கொடுத்தோ முரண் நடவடிக்கைளில் ஈடுபடவில்லை. எமது முரண்பாடானது வடமாகாணத்தில் இருந்து இராணுவ முகாம் ஒன்றைத்தானும் அகற்ற முடியாது என்று கௌரவ அமைச்சர் ஒருவர் கூறியதில் இருந்தே தொடங்கியது. 
 
ஒருசில கேந்திரஸ்தானங்கள் தவிர மற்றைய இடங்களில் இருக்கும் இராணுவத்தினரைப் படிப்படியாக ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் வெளியே அனுப்புவேன் என்று பிரதமர் தரமான ஓர் உத்தரவாதத்தைத் தரட்டும். உடனே அவருடன் கைகுலுக்குவேன். இராணுவ முகாம் ஒன்றைத்தானும் வெளியேற்றாமல், வலி வடக்கில் உறுதியளித்த ஆயிரம் ஏக்கர்களில் 400 ஏக்கரை மட்டும் விடுவித்து விட்டு அரசியல் ரீதியாகத் தமக்கு இலாபம் தேடும் பிரதமருடன் நான் எவ்வாறு கைகுலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவிப்பது? 
 
எமது மக்கள் எங்களை மாகாண ஆட்சிபீடம் ஏற்றியது சில காரணங்களை முன்வைத்து. அவை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. 
 
போர் முடிந்த பின்னர் அவர்களுக்கு வடமாகாணத்தில் எந்த வேலையும் இல்லை. வேண்டுமெனில் பொலிஸாரின் தொகையைக் கூட்டட்டும். ஆனால் இராணுவத்தினர் மக்களின் காணிகளை மீளளித்து மக்கள் மத்தியில் இருந்து வெளியேற வேண்டும். இவ்வாறான முக்கிய விடயங்களை நாங்கள் அறுதியிறுதியாகப் பேசித் தீர்த்துக் கொள்ளாவிடில் பாதிக்கப்படப்போவது நாங்களே என அவர் மேலும் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/News_More.php?id=413243955502232209

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.