Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

100 நாட்கள் வேலைத்திட்டத்தை பாராட்டி யாழில் சுவரொட்டி

Featured Replies

article_1430913290-100days.jpg

 

 
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு வாழ்த்துத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை (06) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
 
'நல்லாட்சி அரசின் 100 நாள் வேலைத்திட்டம்' என தலைப்பிட்டு, வெள்ளைவான் கலாசாரம், கழிவு எண்ணெய் கலாசாரம், கசாப்புக்கடை அரசியல் கலாசாரம், இலஞ்ச ஊழல் கலாசாரம் ஆகியவற்றை நீக்கி, தமிழ் மக்களுக்கு அச்சமின்றி அடக்குமுறையின்றி, அடவாடித்தனமின்றி, கௌரவமாக, சுதந்திரமாக வாழ வழியமைத்த நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்து ஒட்டப்பட்டுள்ளது.
 
சுவரொட்டியின் கீழ் வடபகுதி தமிழ் மக்கள் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற்போனோரை கண்டறிதல், மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படுதல் ஆகிய விடயங்கள் செய்யப்படவில்லையென பல்வேறு தரப்பினரால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில் இவ்வாறானதொரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. 
 
 
  • தொடங்கியவர்

100 நாள் வேலை திட்டம் குறித்து விஜயகலா பெருமிதம்.. பொதுத்தேர்தலை இலக்குவைத்த சுவரொட்டிகளா?

 

 

poster_1238_CI.JPG
 
 
புதிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனுமில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் ' நல்லாட்சி அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ் மக்கள் அச்சமின்றி , அடக்குமுறையின்றி , அடாவடித்தனமின்றி , கௌரவமாக , சுதந்திரமாக வாழ வழியமைத்துள்ளதாக யாழில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
 
இந்த சுவரொட்டிகளை மகளீர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் ஆதரவாளர்களே ஒட்டியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
புதிய அரசாங்கம் 100  நாள் வேலைத்திட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை , காணமல் போனவர்கள் தொடர்பான தகவல்கள் , மீள் குடியேற்றம் , போன்றவற்றில் அக்கறை இன்றி செயல்பட்டு வந்ததாகவும், 
 
வடக்கில் கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற நெல்சிப் திட்ட ஊழல் போன்ற பாரிய ஊழல்கள் தொடர்பில் எந்தவிதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும்,
 
100 நாள் வேலைத்திட்டத்தில் மூலம் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளும் இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலையே இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.