Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோன் கெரியின் இலங்கை விஜயம் - சாந்தி சச்சிதானந்தம்

Featured Replies

kerry_CI.jpg

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் இலங்கை விஜயமே இந்த வாரம் பெரிய செய்தியாகிற்று. அவர் அரச தலைவர்களை மட்டுமன்றி தமிழ் அரசியல் தலைவர்கள் சிவில் சமூக பிரமுகர்கள் எனப் பலதரப்பட்டவர்களைச் சந்தித்து சென்றிருக்கின்றார். கடந்த சில வருடங்களாக ஸ்ரீலங்கா அரசின் மீது அழுத்தம் கொடுக்கக்கூடிய சக்தியாகவும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அதற்கு எதிரான பிரேரணையைக்கொண்டு வருவதற்கு உதவிய சக்தியாகவும் அமெரிக்கா இயங்கியதனால் இவருடைய வருகை தமிழ் மக்கள் விசேடமாகக் கவனம் செலுத்தும் வருகையாகி விட்டது. புதிய அரசாங்கத்துடன் தனது நல்லுறவுகளைப் புதுப்பித்துக்கொண்டிருக்கும் பின்னணியில், தமிழ் மக்களின் நலன்களையொட்டி அமெரிக்கா எடுக்கப் போகும் நிலைப்பாடுகள் யாவை என்பதே கேள்வியாகும். இக்கேள்விக்கு பதிலை மே மாதம் இரண்டாம் திகதி சிவில் சமூகத்தினருக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தான் ஆற்றிய உரையில் கெரி தெரிவித்திருந்தார். அந்த வகையில் இந்த உரையை சற்றே ஆழமாக நோக்க வேண்டியிரக்கின்றது.

உரை முழுவதும் “மங்கள” என வாஞ்சையுடன் எமது வெளியுறவு அமைச்சரைக் குறித்து அவர் விளித்தது தற்செயலான பேச்சல்ல என்பதை நாம் கவனிக்க வேண்டும். இருவருக்குமிடையில் நல்ல அன்னியோன்னியம் தோன்றியிருப்பதை ஏனைய தரப்புக்களுக்கும் அவர் கூற விரும்பியதை இது சுட்டிக் காட்டிற்று. ஸ்ரீலங்கா அரசுடன் உறவுகளைப் புதுப்பித்துக்கொண்ட அடிப்படையிலிருந்துதான் இனி அமெரிக்காவினுடைய வெளியுறவுக் கொள்கை எமது நாட்டைப் பொறுத்தவரை எப்படி இருக்கப் போகின்றது என்பதை நாம் கணிக்கலாம். கெரியின் உரையின் பிற்பகுதி முழுவதுமே அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்திய கொள்கையினைப் பற்றியதாக இருந்தது. இக்கொள்கைப்படி அமெரிக்காவின் நேச நாடுகளான இந்தோனெசியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இலங்கை தனது உறவுகளை வைத்துக்கொள்ளக் கோரப்படுகின்றது. இதனை சீனாவுடன் அதீத உறவுகளை வைத்திருப்பது பற்றிய ஓர் எச்சரிக்கையாகவே நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது.

அது மட்டுமல்லாமல், இலங்கை மனித உரிமைகளை வலுப்படுத்த அமெரிக்கா உதவும், அது ஊழல் மோசடி மூலம் வெளிநாடுகளுக்கு இழந்த வளங்களை மீட்டெடுக்க உதவும் போன்ற வாக்கியங்கள், இந்தக் கோட்டைப் பற்றாவிட்டால் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு என்ன நடக்கலாம் என்பதையும் சூசகமாகத் தெரிவிக்கின்றது. இராஜபக்சவுக்கு உதவினால் பின்னர் தமக்கு அமெரிக்;காவிற்குச் செல்ல விசா அனுமதி கிடைக்காது என்னும் காரணத்திற்காகவே அவருடைய விசேட படைத்தலைமை தேர்தலின் கடைசி நிமிடத்தில் அவர் காலை வாரியது நேயர்களுக்கு நினைவிருக்கலாம். இதற்கும் மேலாக  இனி ஆங்காங்கே பதுக்கி வைத்திரக்கும் அவர்கள் சொத்துக்களுக்கும் ஆபத்து எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இப்பிடியிலிருந்து எமது நாடு தப்பிப்பது கடினம்தான். இனி அமெரிக்கப் போக்கில்தான் நாடு செல்லப் போகின்றது என்பதை நாம் அனுமானிக்கலாம்.  

கெரியின் உரையின் முற்பாகம் எமது நாட்டில் நடந்து முடிந்த யுத்தத்தினையும் அதன் பின்னராக முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய நல்லிணக்க செயற்பாடுகளையும் தொட்டுக்கொண்டு செல்கின்றது. இனி மேல் இந்த நாட்டின் இளஞ்: சந்ததியினர் சமாதானத்தை மட்டும்தான் அறியும் காலம் வரவேண்டும் எனக் கூறும் கெரி அதே நேரத்தில் யுத்தம் புரியப்படவும் சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன என தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட 30 வருட யுத்தத்தினை ஆதரிக்கும் நிலைப்பாட்டினை எடுத்துச் சொல்கின்றார். சில வேளைகளில் போரிடவும் தேவை ஏற்படுமானால், அத்தேவையினை நாம் ஆதரித்து  அனுமதித்தால், சமாதானத்தை மட்டுமே அறியும் சந்ததியினரை நாம் உருவாக்குவது எப்படி? எந்தக் காலத்திலுமே போரிட வேண்டிய ஏதோவொரு தேவை ஏற்படுமே? சமாதானம் பற்றிய சர்வதேச சமூகத்தின் இரட்டை நாக்கு நிலைப்பாடு இவருடைய உரையில் தெளிவாகத் தெரிந்தது. இது எமக்கு முன்னரே தெரிந்த விடயம் என்பதனால் இதனைப் பற்றி இப்பொழுது நிறையப் பேசிப் பலனில்லை.

மேலும், அரசு இதுவரை காணிகளைத் திருப்பிக் கொடுக்க ஆரம்பித்திருப்பதையும் மக்களை மீளக் குடியமர்த்த முயற்சி செய்வதையும் பாராட்டினார். இது தொடர்ந்து முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கூறினார். பொறுப்புக் கூறல் என வந்தபோதுதான் பிரச்சினை ஆரம்பித்தது. ஸ்ரீலங்கா அரசு போர்க்குற்றங்கள் குறித்த நம்பிக்கை மிகுந்த “உள்ளக விசாரணைகளை” முன்னெடுப்பதற்கு ஐ.நாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்கிறார் கெரி. இதிலிருந்து சர்வதேச நீதிமன்றில் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படுவதற்காகவென மனித உரிமை ஆணையாளர் அறிக்கை வெளியிடப்படப் போகின்றது என்கின்ற முன்னைய எதிர்பார்ப்புகள் ஓரங்கட்டப்பட்டு விட்டனவோ என எம்மை ஐயமுறச் செய்கின்றது.

இவருடைய கூற்றுக்களுடன், வருகின்ற செப்டம்பர் மாத அளவில் தேர்தல்களை வைத்துக்கொண்டால் ஐ.நா அறிக்கையை மேலும் தாமதப்படுத்த ஓர் வாய்ப்பு வரும் என கெரி மங்களவிடம் ஆலோசனை கூறியதாகவும் ஒரு வதந்தி உலாவுவது தமிழ் மக்களுக்கு மேலும் கிலி கொடுக்கும் செய்தியாகும். உயர் மட்ட தலைவர்களை விசாரிக்கும் சர்வதேச விசாரணையுடன் கூட எமது அரசு அதிகாரத்தின் சகல மட்டங்களிலும் மனித உரிமைகள் மீறலில் செயற்பட்ட  நபர்களுக்கெதிரான உள்ளக விசாரணைகளை முன்னெடுப்பதே ஆழமான அரசு சீர்திருத்தத்திற்கு இட்டுச் செல்லக் கூடியதாகும். அதனைப் பற்றி கெரி மூச்சு விடவில்லை.

பொறுப்புக் கூறல் தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருப்பது சரி. ஆனால் அதனிலும் முக்கியமானதாக தமிழ் மக்களின் அரசியற் பிரச்சினை தீர்வும் இருக்கின்றது. இதனைப் பற்றிக் குறிப்பிடுகையில் மாகாணங்களுக்கான அதிகாரப்பரவலாக்கல் தேவை என போகின்ற போக்கில் சொல்லிக் கொண்டு போகிறார் கெரி. அதிகாரப் பரவலாக்கல் ஒத்துக்கொள்ளப்படாமையே 30 வருட யுத்தத்துக்குக்காரணம் என்பது ஏனோ மறந்து விட்டது. காணிகளைத் திருப்பிக் கொடுப்பதும், போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதும் மட்டுமே தீர்வினைக் கொண்டு தராது.

அவர் கார்த்திகா என்கின்ற கிழக்கிலங்கைப் பெண்ணை உதாரணமாகக் குறிப்பிடுகின்றார். விடுதலைப் புலிகளினால் கட்டாய ஆட்சேர்ப்பில் பிடிக்கப்பட்டு அவர்களுடைய படையில் போராட நிர்ப்பந்திக்கப்பட்டாள் என அவளை விபரிக்கின்றார். இது ஏதோ ஆபிரிக்க நாடுகளில் இயங்கும் கூலிப்படைகள் பிள்ளைகளை வைத்து யுத்தம் புரிவது போல இங்கும் நடந்ததாகத்தான் கதை போகின்றது. விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு இருந்தது உண்மைதான். ஆனால் அவர்களுக்கொரு இலட்சியமும் இருந்ததே. அதற்காக எத்தனை ஆயிரம் பேர் விரும்பி வந்து தமது உயிரைத் தியாகம் செய்தார்கள். சிங்கள மக்களின் இறுக்க மனப்பான்மையினால்தான் இன்று கார்த்திகா போன்ற பிள்ளைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இத்தகைய நிலைப்பாடுகளுக்கு சவால் விடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்பதே இங்கு கேள்வியாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஜோன் கெரியுடன் நடத்திய சந்திப்பு பற்றி விளக்கமாக வெளியிடப்படவில்லை. இப்படியான சந்திப்புக்களில் தமிழ்த் தரப்புக்கள் தமது சார்பாக ஒரு அறிக்கையினை கையளிப்பது அவசியமாகும். எழுதப்பட்டுள்ள அந்த அறிக்கையானது தமிழ்த் தரப்பு நியாயங்களை ஏனையோர்க்குத் தெளிவுபடுத்தவதற்கு உதவும். மேலே கூறியதுபோல இவ்வறிக்கை இரு பிரிவுகளைக்கொண்டதாக அமைய வேண்டும். முதற்பிரிவு போரின் பின்னரான புனர்வாழ்வைப்பற்றியும் நல்லிணக்கத்தைப் பற்றியுமாக இருக்கக்கூடும். இதனடிப்படையிலான நடவடிக்கைகள் எவ்வாறு நீண்;டகால நோக்கிலான தீர்வுக்கு இட்டுச் செல்லும் என அடுத்த பிரிவு விளக்க வேண்டும். தகுதி வாய்ந்த சர்வதேச மற்றும் உள்ளக விசாரணைகள் எங்கள் அரசின் சீர்திருத்தத்திற்கு அடி கோலுபவை. இராணுவ மற்றும் நீதித்துறையின் சீர்திருத்தமின்றி இந்நாட்டில் சமாதானம் தோன்ற முடியாது. அதே போல இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் ஒற்றையாட்சிக்குக் கீழ் காணப்பட முடியாதன என்பது ஆணித்தரமாக வலியுறுத்தப்பட வேண்டும். இதற்கெல்லாம் என்னவிதமான முறைவழிகளைத் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர் என்பதை அவசியம் விளக்கவேண்டும்.

சர்வதேச விசாரணைகள் மூலம் நாம் எதிர்பார்ப்பது என்ன, உள்ளக விசாரணைகளில் நாம் எரிர்பார்ப்பது என்ன என்பதனையும், நாம் குறித்து நிற்கும் தீர்வின் சட்டகங்களையும் எடுத்துக் கூற வேண்டும். நாம் தெளிவாக இவற்றைத் தெரிவிப்பதனால், கெரி போன்ற இராஜதந்திரிகள்; தமது உரைகளில் பயங்கரவாதம் எனக் கருத்துக்களைக் கண்டபடி எடுத்து வீசாமல் இன்னமும் கவனமாக இருப்பர். சர்வதேச சமூகம் ஸ்ரீலங்கா அரசுடன் ஒட்டிக்கொண்ட நிலையில் இதனை தமிழ்த் தலைமைகள் எவ்வாறு கையாளப் போகின்றன என்பதைப் பற்றி   இன்னமும் எங்களுக்குத் தெளிவில்லை.இப்பொழுதும் இருட்டில் தடுமாறுகின்ற பணியைத்தான் செய்கிறார்களோ என்னவோ? .

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119560/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.