Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜபக்ச, குடும்பத்தினரதும் ஆதரவாளர்களதும் நம்பகத்தன்மையை அழிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது

Featured Replies

 

 

தேர்தலுக்கு முன்னதாக ராஜபக்ச,  அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் நம்பகத்தன்மையை அம்பலப்படுத்தி அழிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவது தெளிவாகின்றது.


இதற்கான தந்திரோபாயமொன்றை வகுப்பதற்கு உயர்மட்ட ஊடககுழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பிரதமரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் இடம்பெற்றுள்ளனர் என கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது.


அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது


தேர்தல் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய 20 வது திருத்தம் நிறை வேற்றப்பட்வுடன் பாராளுமன்றத்தை கலைத்து விடுவேன் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.


19 வது திருத்த்திற்கான அங்கீகாரத்தை சபாநாயகர் சமல்ராஜபக்ச இன்னமும் வழங்காததால் 20 திருத்தத்தை அவசரசட்டமூலமாக சமர்ப்பிக்க அரசாங்கம் எண்ணியுள்ளது.


இதேவேளை கட்சிகள் மத்தியில் 20 வது திருத்தம் தொடாபான விவாதம் கடந்த வாரம் தொடர்ந்து இடம்பெற்றது.வெள்ளிக்கிழமை சிறிய கட்சிகள் பத்தரமுல்லiயில் 20 வது திருத்தம் குறித்து ஆராய்ந்தன, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஜே.வி.பியும் கூட இதில் கலந்துகொண்டன.


இதேவளை சனிக்கிழமை ஜே.விபி தலைவரிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


எதிர்வரும் நாட்களில் கட்சிதலைவர்கள் இது குறித்து ஆராய்ந்து இறுதிமுடிவை எடுப்பதற்காக பல சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர்.


20 வது திருத்தத்தை நிறைவேற்றுவது ஆனால் தேர்தலை விகிதாச்சார முறையின் கீழேயே நடத்துவது என்ற எண்ணமும் அரசாங்கத்திடம் காணப்படுகின்றது. தேர்தலில் வெற்றிபெற்று புதிய அரசாங்கத்தை அமைத்த பின்னரே 20 திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவருவது குறித்தும் அரசு சிந்திக்கின்றது.


ஜனாதிபதி யூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளார்.


புதிய தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்துவதற்கு ஆகக்குறைந்தது ஓரு வருடமாவது தேவைப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் அரசாங்கம் கருத்திலெடுத்துள்ளது.


இவ்வாறான சூழ்நிலையின் கீழ் பாராளுமன்ற தேர்தல் மோதல் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான ஒன்றாகவே அமையப்போகின்றது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதியினுடைய கோரிக்கைகளை முற்றாக நிராகரித்துள்ள நிலையில் ராஜபக்சவும் அவரது சகாக்களும் என்ன செய்யப்போகின்றனர் என்பதே முக்கிய கேள்வி.


குருநாகலில் ராஜபக்சவை பிரதமரர் வேட்பாளராக அறிவிப்பதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்காக நடைபெற்ற பேரணியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 50ற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


அரசாங்கம் பல விதமான விசாரணைகளை முன்னெடுப்பது குறித்து தெரிவித்துவருவதால் ராஜபக்சவிற்கும் அவரது சகாக்களுக்குமான காலம் குறைவடைந்து வருகின்றதா? அதேவேளை அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்துவதில் உறுதியாகவுள்ளார்.


ராஜபக்சவிற்கு ஆதரவான பிரச்சாரங்களுக்கு மத்தியில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை கண்டு பிடிப்பதற்கு தனது அரசாங்கம் உதவும் என உறுதியளித்துள்ளார். வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ராஜபக்சவின் சொத்துக்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.


ராஜபக்ச அந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், மங்களவிற்கு எதிரான நடவடிக்கை குறித்து தனது சட்டத்தரணிகளை கலந்து ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.


தேர்தலுக்கு முன்னதாக ராஜபக்ச, அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் நம்பகத்தன்மையை அம்பலப்படுத்தி அழிப்பதற்கு அரசாங்கம் தயாராகிவருவது தெளிவாகின்றது.


இதற்கான தந்திரோபாயமொன்றை வகுப்பதற்கு உயர்மட்ட ஊடககுழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பிரதமரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் இடம்பெற்றுள்ளனர்.


இதன் காரணமாக ராஜபக்ச விசுவாசிகளுக்கு புதிய கூட்டணியை ஏற்படுத்துவது கடினமான விடயமாக அமையப்போகின்றது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119575/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.