Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கைதிகளின் கண்ணீர்த்துளிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிர்க்கூடு

அதிர்கிறது

உணர்வுகள்

அழுகிறது

இமை மடல்

சிவக்கிறது

கண்ணீர்ச்சுரப்பி வற்றி

இரத்தம் கசிகிறது

சாவுச்செய்திகளை

கேட்டுக் கேட்டே

காது என்புகள்

அறுந்து போகிறது

ஈழ மண்ணில்

இரத்த ஆறு ஓடுகிறது

சவக்குழிகள்

நிறைகிறது

நடுவீதியில் இறங்கி

பதாகை சுமந்து

உரத்து கத்தி

ஒரு பயனுமில்லை

நடு வீதியில்

உச்சி வெயிலில் நின்று

உரிமைக்காய்

உரத்து கத்தியவரி;ன்

உயிர் மூச்சு

பட்ட பகலில்

பறிக்கப்பட்டுள்ளது

இலங்கைத்தீவு

ஜனநாயக போர்வையுடன்

கண் காதுகளை

இறுக மூடிய

சர்வதேசம்

குருட்டு மனித உரிமை

பேசுகிறது

கதிர வெளியில்

காட்டு மிராண்டிகள்

தின்று குவித்த

உறவுகளுக்காய்

நீதி கேட்டவன்

உயிரிழந்து கிடக்கிறான்

தமிழன் இரத்தம்

குடிக்கும்

இரத்தப்பிரியர்களே!

ஈனப்பிறப்பெடுத்த

இழியவர்களே!

எங்கள் அன்புக்குரிய

அண்ணன் ரவிராஜின்

உயிர்க்குடித்த

படுபாதகர்களே!

உங்கள் கைகளிலுள்ள

முட்டாள் துப்பாக்கிக்கு

முகவரி தெரிவதில்லை

நினைவி;ல்கொள்ளுங்கள்

இன விடுதலை

இலக்குடன் பயனித்தவன்

கொலையுண்டு கிடக்கிறான்

தென்மராட்சியின்

அறிவொளி

அடங்கி கிடக்கிறது

பயங்கரவாத

சட்டப்பிடியில்

சிக்கித்தவித்த

தமிழர்களின்

கை விலங்குத்

சிங்கள நீதிமன்றில்

கர்ஜித்தவன்

கண் மூடி கிடக்கிறான்

சிங்கள பாராளுமனறில்

கர்ஜித்தவன்

'தமிழர்" உரிமை கேட்டவன்

உணர்விழந்து கிடக்கிறான்

காணாமல் போனோரையும்

கடத்தப்பட்டோரையும்

தேடியலைந்தவன்

பெட்டியினுள் கிடக்கிறான்

மக்களின் நண்பன்

மௌனித்து கிடக்கிறான்

தலையில்

அடித்து அடித்து

அழுது

எங்கள் தலைவியை

மாற்ற முடியாது

சமாதானம்

பேசிக்கொணடே

சண்டை பிடிப்பவர்களுடன்

சமரசத்துடன் வாழமுடியாது

சர்வதேசத்தை

நம்பிக்கொண்டே

உறவுகளின்

உடலுக்கு

மண்தூவ முடியாது

உறவுகளை

இழந்த இதயம்

துடித் துடித்தழுகிறது

இந்த அவலத்துக்கு

முற்றிடுங்கள்

அன்பான அண்ணன்

மாமனிதன் ரவிராஜின்

ஆத்மா சாந்திக்காய்

கண்ணீர் மல்க

கைதிகள் நாம்

மௌனிக்கின்றோம்!! மௌனிக்கின்றோம்!!

துயர உணர்வுடன்

தமிழ் அரசியல் கைதிகள்

மகசின் சிறைச்சாலை

http://www.tamilnaatham.com/poems/2006_NOV...ine20061120.htm

தமிழனாக பெரிய இழப்பு..ஊர்க்காரனாக மிகப்பெரிய இழப்பு..

சதியில் குழிபறித்த ஈன்ப்பிறவிகள் பாடம் படிக்க நாளாகுமோ..

சோகம் நிறைந்த வரிகளுடன் உள்ள கவிதை

சோகம் நிறைந்த வரிகளுடன் உள்ள கவிதை

ஆமாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.