Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முற்போக்கு தமிழ் கூட்டணி இன்று உதயம்

Featured Replies

article_1433257473-mm.jpg

 

கொழும்பு மற்றும் மலையகத்தை மையப்படுத்தி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் தலைமையில் 'முற்போக்கு தமிழ் கூட்டணி' என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று இன்று உதயமாகிறது. கொழும்பு மற்றும் மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமையினை பாதுகாப்பதற்காக கூட்டணி அரசியல் ஒன்று தேவை என்பதை பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், இன்று மாலை 3 மணிக்கு, கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலின் கோல்டன் பொன்ட் மண்டபத்தில் 'முற்போக்கு தமிழ் கூட்டணி' என்னும் புதிய அரசியல் கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து செய்தி தெரிவிக்கிறது.

 

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் இராஜாங்க கல்வி அமைச்சருமான வி.இராதாகிருஷ்ணன் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் தேசிய உட்கட்டமைப்பு அமைச்சருமான பழனி திகாம்பரம் ஆகியோருக்கிடையிலேயே மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகவுள்ளது.

 

இக்கூட்டணியின் தலைவராக மனோ கணேசனும் பிரதித் தலைவர்களாக திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோரும் இருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது. மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாண இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களை இந்த கூட்டமைப்பு அரவணைக்கின்ற போதிலும் மலையகம் என்ற வரையறையை மாத்திரம் கொண்ட ஒரு கூட்டமைப்பாக இது இருக்கப்போவதில்லை.

 

கொழும்பில் வாழும் வட-கிழக்கை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களையும், களுத்துறை முதல் கொழும்பு, கம்பஹா, புத்தளம் உட்பட மேற்கு கரையோர மாவட்டங்களிலேயே பிறந்து வளர்ந்துவிட்ட  அடையாளத்தை கொண்ட தமிழ் மக்களையும் இந்த கூட்டமைப்பினூடாக இணைக்கவுள்ளனர். 'மலையக தேசியம் எமது கூட்டணிக்குள்ளே நிச்சயம் முக்கிய பங்கை வகிக்கும்.

 

ஆனால், எங்கள் கூட்டணி பரந்துப்பட்ட தமிழ் கூட்டணியாகவும், முற்போக்கு அரசியல் அணியாகவுமே தேசிய, சர்வதேசிய ரீதியாக முன்நகரும். மலைநாட்டு மாவட்டங்களில் வாழும் மலையக தமிழர், மேற்கு கரையோர மாவட்டங்களில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள், மேல்மாகாணத்தில் வாழும் வட., கிழக்கை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஆகிய அனைத்து பிரிவினைரையும் எமது கூட்டணி உள்வாங்கும்' என கூட்டணி உருவாக்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட ஒரு கட்சி பிரதிநிதி தெரிவித்தார்.

 

'தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எமது கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கு இன்று இருக்கின்ற புரிந்துணர்வு, நமது கூட்டணியின் செயற்பாட்டுக்கு  மேலும்  வலு சேர்க்கும்' என்றும் அவர் கூறினார். தேர்தலை எதிர்நோக்கியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான  ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு இந்த புதிய கூட்டணி உறுதுணையாக இருக்கும் என்று கருதப்படுகின்ற நிலையில் 'பிரதமர் ரணில் தலைமையிலான ஐ.தே.க.வும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் எமக்கு ஏறக்குறைய ஒன்றுதான்.

 

இந்த சமன்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருக்கக்கூடாது என்பதுவே எங்கள் மக்களின் பிரதான எதிர்பார்ப்பு' என புதிய கூட்டணி தொடர்பில் முன்நின்று உழைத்த ஒருவர் தெரிவித்தார். இன்று உதயமாகும் முற்போக்கு தமிழ் கூட்டணியானது உரிய வேளையில், தேர்தல் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டு இலக்கை அடையும் என தெரிவிக்கப்படுவதோடு கூட்டணியினை வடக்கு, கிழக்கு நோக்கி விஸ்தரிப்பது தொடர்பிலும் ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

 

 http://www.tamilmirror.lk/147461#sthash.dKEC6jh3.dpuf

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

த.மு.கூ. புதிய வரலாறு படைக்கும்: மனோ

 

article_1433341954-aa.jpg

 

இன்று உதயமாகும் தமிழ் முற்போக்கு கூட்டணி, காலத்தின் பணிப்பை பூர்த்தி செய்து நாட்டின் அரசியல் பரப்பில் புதிய வரலாற்றை படைக்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். மலையக தலைமைகள் ஒன்றிணைந்து புதிதாக உருவாக்கியுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று புதன்கிழமை (03) கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

எமது கூட்டணி மத்திய மாகாணம், மேல் மாகாணம், ஊவா மாகாணம்,  சப்ரகமுவ மாகாணம், வடமேல் மாகாணம் போன்ற மாவட்டங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களை, அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பாக செயற்படும். இந்த அனைத்து மாவட்டங்களிலும் நமது கூட்டணி கட்சிகளின் பிரதிநிதித்துவம் இல்லாத இடங்களில் நமது அரசியல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

 

வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் 15 இலட்சம் தமிழர்களை,  தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் நமது தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதித்துவம் செய்யவுள்ளது. இந்த கூட்டணி, மலையகத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு  கூட்டணியாக, பரவலாக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டது. எமது கூட்டணிக்குள்ளே மலையக மூச்சு இருக்கின்றது. மலையக உயிரோட்டம் இருக்கின்றது. மலையக தேசியம் இருக்கின்றது. ஆனால், இந்த கூட்டணி மலையகத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

 

கிளிநொச்சி மற்றும் வன்னி மாவட்டங்களில் வாழும் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட பெருந்தொகை மக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பிரதிநிதித்துவம் செய்கின்றது. நமது இரண்டு கூட்டு அமைப்புகளுக்கு இடையில், பிரிபடாத இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைவது என்ற இலக்கு தொடர்பில் ஒரு புரிந்துணர்வு இயல்பாகவே ஏற்படுமென நாம் எதிர்பார்கின்றோம்.         நமது கூட்டணி சமூக முன்னோடிகளை அடக்கிய ஆலோசனை சபை ஒன்றை அமைக்கும். கட்சிகளின் நேரடி சார்பு அற்ற சிந்தனையாளர்கள் இந்த சபையில் அங்கம் வகிக்கும்படி அழைக்கப்படுவார்கள். இந்த சபை கூட்டணிக்கு வழி கட்டும் சபையாக செயற்படும் என்று அவர் கூறினார்.

 

  வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை, பிரிபடா இலங்கை என்ற ஒரே நாட்டு வரையறைக்குள் நின்று நாம் முன் வைப்போம். மலையக தோட்ட தொழிலாளர்களின் தொழிற்சங்க கோரிக்கைகளையே பொதுவாக நமது மக்களின் அரசியல் கோரிக்கைகளாக கருதும் சிந்தனை பொதுவாக நிலவுகிறது. இதை நாம் மாற்றுவோம். மலையக தோட்ட தொழிலாளர்களின் தொழிற்சங்க கோரிக்கைகளை எமது இந்த கூட்டணி அரசியல் பலத்துடன் நாம் உரிய தொழிற்சங்க தளத்தில் சந்திக்கும். அதேவேளை எமது மக்களின் அரசியல் கோரிக்கைகளை நாம், எமது கூட்டணியின் தலைமையின் பங்குபற்றலுடன் நமது பொது செயலாளர் அந்தனி லோரன்ஸ் தலைமையில் அமைக்கப்படும் குழு ஆய்வு செய்து ஆலோசனை சபையின் ஒத்துழைப்புடன் உரிய தேசிய, சர்வதேசிய அரங்குகளில் வெளிப்படுத்தும் என்றார். -

 

http://www.tamilmirror.lk/147552#sthash.3Hg6v6U0.dpuf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். கூட்டமைப்பு தனித்து கொழும்பில் தேர்த்தலில் நிற்காமல் புர்ந்துணர்வு அடிப்படையில் மனோவின் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டால் தமிழருக்கான பலம் மேலும் அதிகரிக்கும். ஆசனங்களின் அடிப்படையில் எதிர்கட்சிக்கான வாய்ப்புக்களும் உண்டு.

  • தொடங்கியவர்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் விபரம்

 

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனை தலைமையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இக்கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று புதன்கிழமை கொழும்பு, தாஜ்சமுத்திரா ஹோட்டலின் நடைபெற்றது. இதன்போதே இக்கூட்டணியின் உறுப்பினர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

 

இதற்கமைவாக இக்கூட்டணியின் தலைவராக மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசனும் பிரதி தலைவர்களாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணனும் செயலாளராக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோரன்ஸும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை, கூட்டணியின் பொருளாளராக தொழிலாளர் தேசிய சங்க உறுப்பினர் திலகராஜ், இணை உப தலைவர்களாக அ.அரவிந்தகுமார்(ம.ம.மு), மத்திய மாகாண சபை உறுப்பினர் வேலு குமார்(ஜ.ம.மு) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இணை தவிசாளர்களாக வேலனை வேனியன் (ஜ.ம.மு), வடிவேல் புத்திரசிகமாணி (தொ.தே.ச), எஸ்.விஜேசந்திரன் (ம.ம.மு) தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உப பொருளாளராக சரத் அத்துகோரள (ம.ம.மு), நிர்வாக செயலாளராக சன் குகவர்தன்(ஜ.ம.மு), பிரதி நிர்வாக செயலாளர்களாக ஜி.நகுலேஸ்வரன் (தொ.தே.ச), சன் பிரபாகரன்   ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். -

 

http://www.tamilmirror.lk/147559#sthash.1BZW9PDY.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.