Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விம்பிள்டன் வின்னர் ‘யார்’

Featured Replies

  • தொடங்கியவர்

விம்பிள்டன் டென்னிஸ்: வரலாறு படைப்பாரா ஃபெடரர்?

 
federer_2470399f.jpg
 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் மோதுகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கும் பரபரப்புக்கும் உள்ளாகியிருக்கும் இந்த ஆட்டத்தில் ஃபெடரர் வெற்றி பெறும்பட்சத்தில் விம்பிள்டனில் அதிகமுறை (8) பட்டம் வென்றவர் என்ற வரலாற்றைப் படைப்பதோடு, ஓபன் எராவில் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீரர் (33 வயது 338 நாட்கள்) என்ற பெருமையையும் பெறுவார். விம்பிள்டனில் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற சாதனை அமெரிக்காவின் ஆர்தர் ஆஷேவிடம் உள்ளது. அவர் 1975 விம்பிள்டன் போட்டியில் பட்டம் வென்றபோது அவர் 31 வயது 360 நாட்களை எட்டியிருந்தார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதியில் ரோஜர் ஃபெடரர் 7-5, 7-5, 6-4 என்ற நேர் செட்களில் முர்ரேவை வீழ்த்தினார். ஆக்ரோஷமாக ஃபெடரர் ஆடிய அரையிறுதி ஆட்டம், 2003 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் அவர் உச்சகட்ட பார்மில் இருந்தபோது ஆடிய ஆட்டத்தை நினைவுபடுத்தியது. இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் ஃபெடரர், அதில் 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை 2003 முதல் 2010 வரையிலான காலத்தில்தான் வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 26-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் ஃபெடரருக்கு, இது 10-வது விம்பிள்டன் இறுதிப் போட்டியாகும். கடந்த ஆண்டு விம்பிள்டனில் ஜோகோவிச்சிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க ஃபெடரருக்கு இந்தப் போட்டி நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இதில் வெல்லும்பட்சத்தில் விம்பிள்டனில் 80-வது வெற்றியைப் பதிவு செய்வார் ஃபெடரர்.

ஜோகோவிச்சும், ஃபெடரரும் இதுவரை 39 போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் ஃபெடரர் 20 முறையும், ஜோகோவிச் 19 முறையும் வெற்றி கண்டுள்ளனர். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 12 முறை மோதியுள்ள இருவரும் தலா 6 வெற்றிகளை ருசித்துள்ளனர்.

8 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் ஜோகோவிச்சுக்கு, இது 17-வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியாகும். இந்த சீசனில் ஆஸ்திரேலிய ஓபன், இண்டியன்ஸ்வெல்ஸ், மியாமி, மான்டிகார்லோ, ரோம் மாஸ்டர்ஸ் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், 47 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். 3-ல் மட்டுமே தோற்றிருக்கிறார்.

மொத்தத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டி அக்னி பரீட்சையாகவே பார்க்கப் படுகிறது. ஜோகோவிச் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வந்திருக்கும் அதேவேளையில் ஃபெடரர் தனது உச்சகட்ட பார்முக்கு வந்திருப்பதால், கடந்த முறையப் போன்றே இந்த முறையும் ஆட்டம் நீண்ட நேரம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/sports/விம்பிள்டன்-டென்னிஸ்-வரலாறு-படைப்பாரா-பெடரர்/article7411667.ece

  • தொடங்கியவர்

விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை!

விம்பிள்டன் டென்னிசில் ஒரே சீசனில் இந்தியாவை சேர்ந்த 3 பேர் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிகவும் பழமையான விம்பிள்டனில் நேற்று முன்தினம் நடந்த மகளில் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஷா சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை பட்டம் வென்றது. விம்பிள்டனில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சானியா மிர்ஷா நிகழ்த்தினார்.

sum2.jpg

கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லியான்டர் பயஸ் - மார்ட்டினா ஹிங்கிஸ் இணை 6-1, 6-1, என்ற நேர் செட்களில் அலெக்சான்டர் பெயா மற்றும் டிமியா பாபோஸ் ஜோடியை வீழ்த்தியது. இது லியாண்டல் பயஸ் வெல்லும் 16வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும். இதற்கு முன் கடந்த 1990ஆம் ஆண்டு விம்பிள்டன் ஜுனியர் ஒற்றையர் பிரிவில்  பட்டம் வென்றதே லியாண்டரின்அதிகபட்ச விம்பிள்டன் சாதனையாக இருந்தது.

sum1.jpg

நேற்று நடந்த ஜுனியல் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நகல்,  வியட்நாமை சேர்ந்த நாம் ஹாங் லீயுடன் இணைந்து இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்கா மற்றும் ஜப்பான் வீரர் அகிரா சான்டிலன் ஜோடியை 7-6 (4), 6-4 என்ற செட் கணக்கில் வென்றது. கடந்த 2009ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் ஒற்றையர்  ஜுனியர் பிரிவில் யுகி பாம்ரி கடைசியாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்றிருந்தார்.

sum.jpg

அதற்கு பின் தற்போது 17 வயது சுமித் நகல் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் ஜுனியர் பிரிவில் இந்த சாதனையை படைத்துள்ளார். மேலும் ஜுனியர் பிரிவில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற 5 வது வீரர் என்ற பெருமையையும் சுமித் நகல் பெற்றார்.

இதற்கு முன் கடந்த 1954ஆம் ஆண்டு ராமநாத கிருஷ்ணன் விம்பிள்டன் ஜுனியர் பிரிவில் பட்டம் வென்றார். ரமேஷ் கிருஷ்ணன் 1979 ஆம் ஆண்டு விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் பட்டங்களை வென்றார். தொடர்ந்து லியாண்டர், யுகி பாம்ரி ஆகியோர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றனர். தற்போது அந்த வரிசையில் சுமித் நகல் இணைந்துள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=49363

  • தொடங்கியவர்

ஃபெடரரின் விம்பிள்டன் கனவை தகர்த்து ஜோகோவிச் சாம்பியன்

 
 
கோப்பையை முத்தமிடும் ஜோகோவிச் | படம்: ஏபி
கோப்பையை முத்தமிடும் ஜோகோவிச் | படம்: ஏபி

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்விட்சார்லாந்தின் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

முதல்நிலை வீரராக இருக்கும் ஜோகோவிச் 7-6, 6-7, 6-4, 6-3 என்ற செட்களில் ஃபெடரரை வீழ்த்தினார். கடந்த மாதம் பிரெஞ்ச் ஓபன் இறுதியின் வாவ்ரிங்காவை எதிர்த்து தோல்வி கண்ட ஜோகோவிச்சுக்கு இந்த வெற்றி உற்சாகத்தைத் தந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டி ஃபெடரர் - ஜோகோவிச் மோதிய 40-வது போட்டியாகும்.

இதற்கு முன் 17 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ஃபெடரர், அரையிறுதிப் போட்டியில் ஆண்டி முர்ரேவை அபாரமாக வீழ்த்தி, அந்த வெற்றியின் மூலம் அவரது விமர்சகர்களுக்கு பதிலளித்தார். ஆனால் இந்த தோல்வி பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

வெற்றி பெற்றதும் ஆடுகளத்தில் இருந்து கொஞ்சம் புல்லை பிய்த்து சாப்பிட்டார் ஜோகோவிச். இது செர்பிய நாட்டு வழக்கமாகப் பார்க்கப்படுகிறது.

ஃபெடரர் தவறவிட்ட சாதனை

ஒருவேளை இந்த இறுதிப் போட்டியில் ஃபெடரர் வெற்றி பெற்றிருந்தால், விம்பிள்டனில் அதிகமுறை (8) பட்டம் வென்றவர் என்ற வரலாற்றைப் படைப்பதோடு, ஓபன் எராவில் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீரர் (33 வயது 338 நாட்கள்) என்ற பெருமையையும் பெற்றிருப்பார். விம்பிள்டனில் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற சாதனை அமெரிக்காவின் ஆர்தர் ஆஷேவிடம் உள்ளது. அவர் 1975 விம்பிள்டன் போட்டியில் பட்டம் வென்றபோது அவர் 31 வயது 360 நாட்களை எட்டியிருந்தார்.

விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன்பு வரை, 8 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்தார் ஜோகோவிச். தனது 17-வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியை சந்தித்த அவர், விம்பிள்டனில் வென்று தனது கிராண்ட் ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தினார்.

http://tamil.thehindu.com/sports/பெடரரின்-விம்பிள்டன்-கனவை-தகர்த்து-ஜோகோவிச்-சாம்பியன்/article7416848.ece

  • தொடங்கியவர்

சானியாவை புறக்கணித்த பி.பி.சி : சண்டைக்கு போன மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி!

விம்பிள்டன் போட்டியில் மகளிர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஷா சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. போட்டி முடிந்த அடுத்த நிமிடம் பி.பி.சி. இந்தியா நிறுவனம், மார்ட்டினா ஹிங்கிஸ் விம்பிள்டனில் பட்டம் வென்றதாக மட்டும் ட்விட்டரில் பதிவு செய்தது .  சானியாவின் பெயரை பதிவு செய்ய மறந்து விட்டது.

rani.jpg

இதனை பார்த்த மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி,  சானியாவும் தான் பட்டம் வென்றுள்ளார் என்று பி.பி.சி யின் தவறை சுட்டிக் காட்டியிருந்தார். ஸ்ம்ரிதி இரானியின் பி.பி.சி.க்கு எதிரான ட்விட் 411 முறை மறு ட்விட் செய்யப்பட்டது. 

ஸ்ம்ரிதியை தொடர்ந்து ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் சானியாவுக்கு ஆதரவாகவும் பி.சி.சி.யின் செயலை கண்டித்தும் ட்விட் செய்தபடி இருந்தனர். சிலர் பி.பி.சி. இனவெறியுடன் செயல்படுவதாகவும் ட்விட்டில் குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்துபி.பி.சி தனது இந்தியா டைம் லைன் பகுதியில் இரட்டையர் பிரிவில்  மார்ட்டினா ஹிங்கிஸ் மட்டுமே வென்றது போல பதிவிட்டிருந்த ட்விட்டை நீக்கியது.

http://www.vikatan.com/news/article.php?aid=49365

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.