Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில், நகரங்களில் வசிக்கும் மக்கள் எண்ணிகை அதிகரித்து உள்ளது , அவர்களின் வாழ்க்கை நிலை பற்றிய சுவாரசிய தகவல்

Featured Replies

Dinamalar Banner Tamil News

gallerye_234810967_1288433.jpg

gallerye_234750241_1288433.jpg

gallerye_234756861_1288433.jpggallerye_234806221_1288433.jpggallerye_234802678_1288433.jpgதமிழகத்தில், நகரங்களில் வசிக்கும் மக்கள் எண்ணிகை அதிகரித்து உள்ளது. மேலும், அவர்களின் வாழ்க்கை நிலை பற்றிய சுவாரசிய தகவல், நேற்று வெளியிடப்பட்ட, சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

நாடு சுதந்திரம் அடையும் முன், 1931ல், சமூக, பொருளாதார, ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்பின், இதுபோன்ற கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்நிலையில், 2011ல், இந்தக் கணக்கெடுப்பை, மத்திய அரசு, நாடு முழுவதும் நடத்தியது. காகிதம் பயன்படுத்தாமல், கையடக்க எலக்ட்ரானிக் கருவி மூலம், வீடு, வீடாகச் சென்று, தகவல்கள் சேகரிக்கப்பட்டன. 

ஒவ்வொரு குடும்பத்தின் கல்வி அறிவு, வருவாய், வேலை வாய்ப்பு, குடியிருப்பு வசதி, வீடுகளில் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் ஜாதி போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டன. 

இதற்கிடையில், சில எதிர்ப்புகள் காரணமாக, ஜாதி வாரியானபுள்ளி விவரங்களை வெளியிடாமல், பொருளாதார ரீதியான தகவல்களை மட்டும் வெளியிட, மத்திய அரசு முடிவு செய்தது.
முதல்கட்டமாக, அனைத்து மாநிலங்களும், வரைவு புள்ளி விவரங்களை வெளியிட்டன. இதில், ஆட்சேபனைகளைப் பெற்று, அதன் அடிப்படையில் திருத்தங்கள் செய்து, இறுதி புள்ளி விவரங்களை சில மாநிலங்கள் வெளியிட்டன.இதையடுத்து, நாடு முழுவதற்குமான, சமூக, பொருளாதார கணக்கெடுப்பு விவரங்களை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று வெளியிட்டார்.

தமிழகம்:

தமிழகத்தைப் பொறுத்தவரை, 32 மாவட்டங்களில், வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், ஆட்சேபனைகளைப் பெற்று, கிராம சபைகளில் விவாதித்து, இறுதிப் பட்டியலை, வெளியிடும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தேசிய கணக்குப்படி, 73 சதவீத குடும்பங்கள், கிராமங்களில் வசிக்கின்றன. ஆனால், தமிழகத்தில், 57.53 சதவீத குடும்பங்களே கிராமங்களில் வசிக்கின்றன. 42.47 சதவீத குடும்பங்கள், நகரப் பகுதிகளில் வசிக்கின்றன. தேசிய அளவில் ஒப்பிடுகையில், நகர்ப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம். அத்துடன், தமிழக கிராமங்களில் வசிக்கும் குடும்பங்களின் நிலை குறித்தும், பல தகவல்கள் தெரிய வருகின்றன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1288433

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.