Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல் இல்லாத சிங்கம் போல டி வில்லியர்ஸ் இல்லாத தென்ஆப்ரிக்கா திணறல் !

Featured Replies

பல் இல்லாத சிங்கம் போல டி வில்லியர்ஸ் இல்லாத தென்ஆப்ரிக்கா திணறல் !

ங்கதேச அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் ஆட்டத்தில் தென்ஆப்ரிக்க அணி 162 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

SOUTH%281%29.jpg

மிர்பூரில் நடந்த இந்த போட்டியில் உலகக் கோப்பை தொடரில் விதிக்கப்பட்ட தடை காரணமாக தென்ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் விளையாடவில்லை. ஏற்கனவே அவருக்கு விடுப்பளிக்கப்பட்டு நாடு திரும்பி விட்ட நிலையில் தென்ஆப்ரிக்க அணி வங்கதேசத்தை மிர்பூரில் எதிர்கொண்டது.

பகலிரவு போட்டியான இதில், டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி கேப்டன் ஹாசிம் ஆம்லா பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர் குயின்டன் டி காக் 2 ரன்னில் அவுட் ஆனார். 22 ரன்னில் ஆம்லா வெளியேறினார். டுப்லெசிஸ் மட்டும் ஓரளவுக்கு சமாளித்து 44 ரன்கள் எடுத்தார். ரூசவ் 4, மில்லர் 9, டுமினி 13 ரன்கள் எடுத்து வருவதும் போவதுமாக இருந்தனர்.

கடைசிக்கட்டத்தில் ஃபாரா பெகரைதீன் 36 ரன்களை எடுத்தால்தான் தென்ஆப்ரிக்க அணியால் 150 ரன்களை தாண்ட முடிந்தது. இறுதியில் 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களுக்கு தென்ஆப்ரிக்கா ஆல்அவுட் ஆனது. வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாபீசூர் ரஹ்மான் , நாசிர் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகளையும் ருபெல் ஹொசைன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

http://www.vikatan.com/news/article.php?aid=49356

  • தொடங்கியவர்

வங்கதேச ஆக்ரோஷத்துக்கு தப்ப முடியாத தென் ஆப்பிரிக்கா தோல்வி

 
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3-வது விக்கெட்டுக்காக 135 ரன்கள் வெற்றிக் கூட்டணி அமைத்த சவுமியா சர்க்கார், மஹமுதுல்லா. | படம்: ஏ.எஃப்.பி.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3-வது விக்கெட்டுக்காக 135 ரன்கள் வெற்றிக் கூட்டணி அமைத்த சவுமியா சர்க்கார், மஹமுதுல்லா. | படம்: ஏ.எஃப்.பி.

மிர்பூரில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி தனது சிறப்பான ஆல்ரவுண்ட் ஆட்டத்தினால் தென் ஆப்பிரிக்காவை குறைந்த ரன்களில் சுருட்டி பிறகு இலக்கை 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இதுவரை 1-1 என்று சமன் செய்துள்ளது. முதல் போட்டியில் ஹாட்ரிக்குடன் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய ஒருநாள் சாதனை நிகழ்த்திய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாதாவை வங்கதேசத்தின் சவுமியா சர்க்கார், லிட்டன் தாஸ், மஹமுதுல்லா ஆகியோர் பழிக்குப் பழியாய் பின்னி எடுக்க அவர் 7 ஓவர்களில் 45 ரன்களை கொடுக்க நேர்ந்தது.

தென் ஆப்பிரிக்காவின் ஏ.பி.டிவில்லியர்ஸ் இல்லாத அணி வங்கதேசத்தின் அபாரமான பந்துவீச்சுக்கு 46 ஓவர்களில் 162 ரன்களுக்குச் சுருண்டது. முஸ்தபிசுர் ரஹ்மான் 10 ஓவர்கள் 1 மெய்டன் 38 ரன்களுக்கு 3 விக்கெட் என்று மீண்டும் அசத்தினார்.

ரூபல் ஹுசைன் 2, நசீர் ஹுசைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 27.4 ஓவர்களில் 167/3 என்று அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது. சவுமியா சர்க்கார் 79 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்சருடன் 88 ரன்களையும், மஹ்முதுல்லா 64 பந்துகளீல் 50 ரன்களையும் எடுத்து 135 ரன்களை சுமார் 22 ஓவர்களில் ஜோடி சேர்ந்து எடுத்து அபார வெற்றி பெறச் செய்தனர்.

2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய பிறகு மீண்டும் வங்கதேசம் அந்த அணியை வீழ்த்தியுள்ளது. மந்தமான பிட்சில் வங்கதேச வேக மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்களை கடுமையாக நெருக்கினர், ரன்கள் எடுப்பது கடும் சிரமமாக இருந்தது, மாறாக தென் ஆப்பிரிக்கப் பந்து வீச்சை சவுமியா சர்க்கார் மற்றும் மஹ்முதுல்லா மிகவும் சுதந்திரமாக ஆடினர்.

தொடர்ந்து தங்களது மாறுபடும் பந்துகள் மூலம் ரன் எடுப்பதை வெகுவாகக் குறைத்த வங்கதேச வீச்சாளர்கள் அதனால் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்கள் வெறுப்பில் தவறான ஷாட்களை தேர்வு செய்ய வைத்து வெற்றி கண்டனர். தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மென்கள் ஜோடி சேர்ந்து அதிகபட்சமாக எந்த ஒரு விக்கெட்டுக்கும் 30 ரன்களைக் கூட எடுக்க முடியவில்லை என்பதே எதார்த்தம். குவிண்டன் டி காக்கிற்கு முஸ்தபிசுர் வீசிய பந்து அற்புதமானது, ஷார்ட் பிட்ச் லெந்திலிருந்து எழும்பிய பந்தினால் தனது நிலையிலிருந்து முற்றிலும் நேராகாத் திரும்பிய டி காக் மட்டையின் மேல் பகுதியில் பட்டு பேக்வர்ட் பாயிண்டில் கேட்ச் ஆனது.

அதன் பிறகு ஆம்லா, டுபிளெஸ்ஸிஸ் 29 ரன்களைச் சேர்த்தனர், இதுதான் அவர்கள் இன்னிங்சில் அதிகபட்ச ஜோடி ரன்கள். ஆம்லாவின் ஸ்டம்ப்களை பெயர்த்தார் ரூபல் ஹுசைன். இவர் முதலில் 2 ,மெய்டன்களுடன் தொடங்கி நெருக்கடியை தொடங்கி வைக்க, ஷாகிப் அல் ஹசன், ரைலி ரூஸோவை கடும் நெருக்கடிக்குள்ளாக்க ரன்களே வரவில்லை. கடும் குழப்பத்தில் இருந்த ரூசோவ் கடைசியில் நசீர் ஹுசைனின் நேர் பந்துக்கு பவுல்டு ஆனார்.

டேவிட் மில்லர், ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் டுமினி ஆகியோர் ஷார்ட் தேர்வின் தோல்வியினால் ஆட்டமிழந்தனர். டுபிளெஸ்ஸிஸ் அதிகபட்சமாக 64 பந்துகளில் 41 எடுத்து நெருக்கடியில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசியில் பெஹார்டீன் (36), கிறிஸ் மோரிஸ் (12), ரபாதா (10) ஆகியோர் மூலம் ஸ்கோர் ஒரு வழியாக 100/6 என்ற நிலையிலிருந்து 162 வரை வந்தது.

இலக்கைத் துரத்திய போது புதிய வேகப்புயல் ரபாதா, தமிம் இக்பால், லிட்டன் தாஸ் ஆகியோரை பவுல்டு செய்ய வங்கதேசம் 24/2 என்று ஆனது.

சவுமியா சர்க்காரின் சாதுரியமான தாக்குதல் ஆட்டம்:

கைல் அபாட், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் நேர் நேர் தேமாவாக வீசுவார்கள் என்பதை அறிந்த சவுமியா சர்க்கார், மஹமுதுல்லா அவர்கள் இருவரையும் அடித்து ஆடினர். 47 பந்துகளில் சவுமியா தனது அரைசதத்தை எட்டினார். தென் ஆப்பிரிக்கா திணறிய அளவுக்கு பிட்ச் இல்லையோ என்பது போல் இருந்தது இருவரது ஆட்டமும்,

சவுமியா சர்க்கார் மட்டும் 13 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்காவின் அனைத்து வீரர்களும் சேர்ந்து அடித்தது 14 பவுண்டரி ஒரு சிக்ஸ் என்பதும் கவனிக்கத்தக்கது. டுமினியையும் இருவரும் விளாசினர். இம்ரான் தாஹிரும் தப்பவில்லை. இவரை 2 பவுண்டரிகள் விளாசி பிறகு ஸ்வீப் சிக்ஸ் அடித்தார் சவுமியா சர்க்கார்.

ரபாதா தொடக்கத்தில் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீசி சோதிக்க லிட்டன் தாஸ் லாங் லெக் மீது ஒரு அபார சிக்ஸை அடித்து ஆச்சரியப்படுத்தினார். பிறகு பேக்வர்ட் ஸ்கொயர்லெக்கில் அடித்த பவுண்டரியும் அபாரம். ஆனால் அதே ஓவரில் ஃபுல் பந்து ஒன்றை வீச அடிக்கப் போன லிட்டன் பவுல்டு ஆனார். மஹ்முதுல்லா இறங்கியவுடனேயே ரபாதாவை பவுண்டரி அடித்தார். மீண்டும் 23-வது ஓவரில் ரபாதா வர, ரபாதா பந்தை மேலேறி வந்து மிட்விக்கெட்டுக்கும் மிடானுக்கும் இடையே பவுண்டரி விளாசினார் மஹமுதுல்லா, அதே ஓவரில் சவுமியா சர்க்கார் புல் ஷாட்டில் ஒரு பவுண்டரி விளாசினார்.

முதல் போட்டியில் அச்சுறுத்தியவர் என்ற அச்சம் துளிக்கூட இல்லாமல் அவர் பந்துகளையும் அடித்து ஆடினர் வங்கதேச பேட்ஸ்மென்கள். இம்ரான் தாஹிரை சிக்ஸ் அடித்து வெற்றி ரன்களை எடுத்தார் சவுமியா சர்க்கார். இவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

20 ஓவர்கள் பக்கம் மீதமிருக்க வங்கதேசம் பெற்ற வெற்றி, டெஸ்ட் அணிக்கு எதிராக பெறும் பெரிய வெற்றியாகும்.

http://tamil.thehindu.com/sports/வங்கதேச-ஆக்ரோஷத்துக்கு-தப்ப-முடியாத-தென்-ஆப்பிரிக்கா-தோல்வி/article7417207.ece

  • தொடங்கியவர்
தென் ஆப்ரிக்கா 168/9 (40/40 ov)
பங்களாதேஷ் 153/0 (23.5/40 ov, target 170)
 
அடுத்த வெற்றியை நோக்கி பங்களாதேஷ்
  • தொடங்கியவர்

9 விக்கெட்களால் பங்களாதேஷ் வெற்றி. தொடரையையும் வென்றது.

  • தொடங்கியவர்
கோப்பை வென்றது வங்கதேசம்: தென் ஆப்ரிக்கா அதிர்ச்சி தோல்வி

சிட்டகாங் : சொந்தமண்ணில் வங்கதேசத்தில் வெற்றி தொடர்கிறது. நேற்று தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 'டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வங்கதேச அணி, கோப்பை கைப்பற்றி வரலாறு படைத்தது. வங்கதேசம் சென்ற தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது.

முதல் இரு போட்டிகள் முடிவில் 1-1 என, தொடர் சமமாக இருந்தது.இரு அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டகாங்கில் நடந்தது. 'டாஸ்' வென்று களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.குயின்டன் டி காக் (7), டுபிளசி (6), ஆம்லா (15), ரூசோவ் (17) ஏமாற்ற 50 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. பின் மழை காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இம்முறை மில்லர் (44), பெகர்டியன் (12) கைவிட்டனர். டுமினி மட்டும் அரைசதம் (51) அடித்தார்.

 

தென் ஆப்ரிக்க அணி 40 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 168 ரன் எடுத்தது.40 ஓவரில் 170 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், சர்கார் ஜோடி அசத்தல் துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 154 ரன் சேர்த்த நிலையில் சர்கார் 90 ரன்னுக்கு அவுட்டானார்.பின் வங்கதேச அணி 26.1 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து, 'டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வரலாறு படைத்தது:

இதையடுத்து 2-1 என, வென்ற வங்கதேச அணி, தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக முதன் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது.

* சமீபத்தில் சொந்தமண்ணில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இந்தியா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது வங்கதேச அணி. தற்போது தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, தொடர்ச்சியாக 4 ஒருநாள் தொடர்களில் கோப்பை வென்று அசத்தியது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1296739

  • தொடங்கியவர்

தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது :கிரிக்கெட் உலகின்' பாகுபலி' வங்கதேசம்!

கிரிக்கெட்டை பொறுத்த வரை கத்துக்குட்டி அணியாகவே கருதப்பட்டு வந்த வங்கதேசம் தற்போது ஜாம்பவான் அணிகளை கூட வேட்டையாடத் தொடங்கி விட்டது. பாகிஸ்தான், இந்தியா அணிகளை தொடர்ந்து தற்போது தென்ஆப்ரிக்காவும் வங்கதேசத்திடம் தொடரை இழந்து ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

sum.jpg

சிட்டாங்கில் நடந்த 3வது ஒருநாள் பகலிரவு போட்டியில் வங்கதேச அணி தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக பந்து வீசியது.பந்துவீச்சை  தாக்குபிடிக்க முடியாமல்குயின்டன் டி காக் 7 ரன்னிலும் டுப்லெசிஸ் 6 ரன்னிலும் வெளியேறினர். ஆம்லா 15 ரன்னிலும் ரோசவ் 17 ரன்களிலும் அவுட் ஆனார்கள். தென்ஆப்ரிக்க அணி 23 ஓவர்களில் 78 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த போது மழை குறுக்கிட்டது. மழை நின்ற பிறகு ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தென்ஆப்ரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தது.

sum1.jpg

டக்வெர்த்லீவிஸ் விதிப்படி 40 ஓவர்களில் 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர்கள் தமிம் இக்பாலும் சவும்யா சர்க்காரும் தென்ஆப்ரிக்க பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 154 ரன்களை அதிரடியாக சேர்த்தது. சவும்யா சர்க்கார் 75 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார்.

தமிம் இக்பால் 61 ரன்கள் எடுத்தார். இறுதியில் வங்கதேச அணி 26.1 ஓவர்களில் 170 ரன்களை எடுத்து
9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் தென்ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றாலும் அடுத்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று வங்கதேச அணி 2-1 என்று தொடரை கைப்பற்றியது. தென்ஆப்ரிக்க அணிக்கு எதிராக வங்கதேசம் தொடரை வெல்வது இதுவே முதல் முறை.

கிரிக்கெட்டில் புதிய சாம்பியனாக மாறி வரும் வங்க தேச அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 4வது முறையாக தொடரை கைப்பற்றி சாதித்துள்ளது. ஏற்கனவே ஜிம்பாப்வே அணியை 5-0 என்று வொயிட் வாஷ் செய்தது. பாகிஸ்தான் 3-0 என்று வொயிட் வாஷ் ஆனது. இந்தியா 2-1 என்று தொடரை இழந்தது. தற்போது தென்ஆப்ரிக்காவும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=49530

  • தொடங்கியவர்

தென் ஆப்பிரிக்காவை நசுக்கிய வங்கதேசம் தொடரைக் கைப்பற்றியது

 
  • ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷாகிப் அல் ஹசனை பாராட்டும் வங்கதேச வீரர்கள். | படம்: ஏ.எஃப்.பி.
    ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷாகிப் அல் ஹசனை பாராட்டும் வங்கதேச வீரர்கள். | படம்: ஏ.எஃப்.பி.
  • ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது பெற்ற சவுமியா சர்க்கார். | படம்: ஏ.எப்.பி.
    ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது பெற்ற சவுமியா சர்க்கார். | படம்: ஏ.எப்.பி.

சிட்டகாங்கில் நடைபெற்ற 3-வதும், கடைசியுமான ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஊதித் தள்ளியது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது வங்கதேசம்.

எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் எங்கள் ஊருக்கு வந்தால் நாறிப்போக வேண்டியதுதான் என்பதே வங்கதேசத்தின் தாரக மந்திரமாக அமைந்துள்ளது. நியூசிலாந்து முதன் முதலாக 4-0 என்று ஒரு தொடர் முழுதும் உதைவாங்கிச் சென்று தொடங்கி வைத்தது. அதன் பிறகு ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இந்தியா, தற்போது தென் ஆப்பிரிக்காவையும் தங்கள் சொந்த மண்ணில் வீழ்த்தியது வங்கதேசம்.

40 ஓவர்களுக்கு குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து மீண்டுமொரு வங்கதேச சிக்கன மற்றும் நெருக்குதல் பந்துவீச்சுக்கு முன் ஒன்றும் செய்ய முடியாமல் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்களையே எடுத்தது. டுமினி அதிகபட்சமாக 51 ரன்களையும், டேவிட் மில்லர் அதிகபட்சமாக 44 ரன்களையும் எடுத்தனர். ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், ரூபல் ஹுசைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்,

தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 26.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து அனாயாசமாக ஊதித்தள்ளியது. தமிம் இக்பால் 61 நாட் அவுட், மீண்டும் சவுமியா சர்க்கார் 75 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்சருடன் 90 ரன்கள் எடுத்து கடைசியில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளைத் தட்டிச் சென்றார். தென் ஆப்பிரிக்காவின் அனைத்து பவுலர்களும் ஓவருக்கு 6 ரன்கள் வீதம் விட்டுக் கொடுத்தனர் என்பது வங்கதேச பேட்ஸ்மென்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறது.

குவிண்டன் டி காக், முஸ்தபிசுர் ரஹ்மானின் அபாரமான பந்துக்கு லெக் ஸ்டம்பை இழந்தார். ஹஷிம் ஆம்லா, டுபிளெஸ்ஸிஸ் ஆகியோரின் பேட்டிங் திறனை ஷாகிப் அல் ஹசன் கேள்விக்குட்படுத்தினார். கடைசியில் அடித்துப் பார்க்கலாம் என்று நினைத்த டுபிளெஸ்ஸிஸ் டாப் எட்ஜில் அவுட் ஆனார். ஷாகிப் அல் ஹசன் பிறகு ஆம்லாவையும் எட்ஜ் செய்ய வைத்து தனது 200-வது ஒருநாள் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ரைலி ரூசோவ், மஹமுதுல்லா பந்தை புல் ஆட முயன்று பேலன்ஸ் இழந்தார். இதனால் கேட்ச் ஆனது. தென் ஆப்பிரிக்கா உடனே 50/4 என்று ஆனது.

மில்லர், டுமினி ஆட்டத்தை தங்கள் இஷ்டத்துக்கு ஆட முடியாது என்பதை உணர்ந்தனர். தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் 23 ஓவர்களில் 78/4 என்று இருந்த போது மழை வரத் தொடங்கியது. சுமார் இரண்டரை மணி நேரம் மழை பெயதது.

மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது டேவிட் மில்லர் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டினார். கடைசியில் மோர்டசா பந்தை அடிக்க முயன்று பேக்வர்ட் பாயிண்டில் சபீரின் அருமையான கேட்சுக்கு அவுட் ஆனார். இது மஷ்ரபே மோர்டசாவின் 200-வது ஒருநாள் போட்டி விக்கெட்டாகும்.

ஃபர்ஹான் பெஹார்டீன் 12 ரன்கள் எடுத்து ஷாகிப் பந்தை தூக்கி அடித்தார். லாங் ஆனில் சபீர் அதனை பிடித்தார். ஆனால் தான் எல்லைக்கோட்டைத் தாண்டி விடுவோம் என்று உணர்ந்த அவர் பந்தை இங்கேயே தூக்கி வானில் எறிந்து விட்டு பிறகு மீண்டும் உள்ளே வந்து கேட்சைப் பிடித்தார்.

இதன் பிறகு டுமினி, பின்வரிசை வீரர்களுடன் விடப்பட்டார். இவர்களால் முஸ்தபிசுர் ரஹ்மானின் கட்டர்களையும், ரூபல் ஹுசைனின் யார்க்கர்களையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அடுத்த 19 ரன்களில் 4 விக்கெட்டுகள் மடிய தென் ஆப்பிரிக்கா 168 ரன்களையே எடுக்க முடிந்தது.

170 ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறங்கிய வங்கதேசம், தென் ஆப்பிரிக்க தொடக்க வேகப்பந்து வீச்சாளர்களான கைலி அபாட், ரபாதா ஆகியோரின் நேர் பந்துகளையும், ஒன்று ஷார்ட் பிட்ச் அல்லது ஃபுல் பந்துகளாக வந்ததையும் சுலபத்தில் எதிர்கொண்டனர்.

ரபாதாவை 3 லெக் திசை பவுண்டரிகள் அடித்த சவுமியா சர்க்காரின் ஆக்ரோஷத்தினால் வங்கதேசம் 8-வது ஓவரில் 50 ரன்களை எட்டியது. ஸ்பின்னர் இம்ரான் தாஹிர், டுமினி எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, இவர்களை மேலேறி வந்து எளிதில் ஆடினர் சவுமியாவும், தமீமும். தமிம் 70 பந்துகளில் 50 ரன்கள் எடுக்க, சவுமியா சர்க்கார் 41 பந்துகளில் அரைசதம் கண்டார்.

சவுமியா சர்க்கார் சதம் அடிக்க வாய்ப்பிருந்தாலும் அவர் கடைசியில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். தமிம், மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் வரலாற்று வெற்றிக்க்கு இட்டுச் சென்றனர்.

வங்கதேச அணி, ஆரம்ப கால இலங்கை போல் ஒரு எழுச்சியுறும் அணியாக மாறியுள்ளது. ஆனால் இவர்களின் ஆக்ரோஷம் துணைக்கண்டத்திலிருந்து ஒரு ஆஸ்திரேலிய மனநிலை கொண்ட அணியாக உருவெடுக்கச் செய்யும் என்பதாகவே தெரிகிறது.

இனி வங்கதேசத்தை ‘மின்னோஸ்’ என்று அழைக்க முடியாது. 'வங்கதேசம் ஜாக்கிரதை' என்று மற்ற டெஸ்ட் அணிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/தென்-ஆப்பிரிக்காவை-நசுக்கிய-வங்கதேசம்-தொடரைக்-கைப்பற்றியது/article7429424.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.