Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜ பக்ஷே இந்தியா வருகை: தமிழ் நாட்டில் பலத்த எதிர்ப்பு....!!!

Featured Replies

ராஜ பக்ஷே இந்தியா வருகை: தமிழ் நாட்டில் பலத்த எதிர்ப்பு....!!!

------------------------------------------------------------

இலங்கை அதிபர் மஹிந்த ராஜ பக்ஷே யின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் எதிர்ப் புப் போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களைக் கண்டித்து, திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது என்று கட்சி உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ரவிக்குமார் கூறினார்.

நாளை இலக்கியம், கலை மற்றும் திரைப்படத்துறையினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். கவிஞர் வைரமுத்து தொடங்கி வைக்கும் இந்தப் போராட்டத்தில் தமிழக முதலமைச்சரின் மகள் கனிமொழி உட்பட பல எழுத்தாளர்களும் பங்கேற்கின்றனர். திராவிடர் கட்சித் தலைவர் கி.வீரமணி போராட்டத்தை முடித்து வைப்பார் என்று அவர் சொன்னார். நாளை டில்லியில் மதிமுக உண்ணா விரதப் போராட்டம் நடத்த உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே தலைமை யில் நடைபெறும் ஆசிய மேயர்கள் மாநாட்டில் தமிழக மேயர்கள் எவரும் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபக் ஷேவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த மாநாட்டில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 6 மேயர்களும் கலந்து கொள்ளக் கூடாது என்று பாமக கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தமிழக மேயர்கள் வெள்ள நிவாரணப் பணி மற்றும் சொந்த வேலை காரணமாக ஆசிய மேயர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்துள்ளனர். உத்தராஞ்சல் மாநிலத்தின் டேராடூனில் இன்று தொடங்கும் ஆசிய மேயர்கள் மாநாட்டை ராஜபக்ஷே தலைமை தாங்கித் தொடங்கி வைக்கிறார்.

இரண்டாவது முறையாக இந்தியப் பயணம் மேற்கொண் டிருக்கும் ராஜபக்ஷே, “நான் இந்தியாவுக்கு மிகவும் நன்றியுடை யவனாக இருப்பேன். இந்தியா எங்களது அண்டை நாடு மட்டுமல்ல, நெருங்கிய தோழமை நாடும்கூட என்று கூறினார்.

இலங்கைக்கு இந்தியா 7,000டன் உணவுப் பொருட்களை அனுப்ப முன்வந்துள்ளது. அவற்றை விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், தேவைப் பட்டாலே மனிதாபிமான உதவிகளை இந் தியா வழங்கும். அப் படி வழங்கும் பட்சத்தில் அவற்றை எப்படி அனுப்புவது என்பது குறித்து தீர்மானிப்போம் என்று இந்தி யாவின் தேசிய பாது காப்பு ஆலோசகர் திரு எம்.கே.நாராயணன் “ஹிந்து” நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இலங்கை குறித்த இந்தியாவின் நிலையில், மத்திய அமைச் சின் நிலையையே மாநில அரசு பின்பற்றும் என்று கூறிய தமிழக முதல்வர் மு.கருணாநிதி, இது குறித்து இருதரப்பும் மறு பரிசீலனை செய்வதாகவும் சொல்லியுள்ளார்.

ராஜபக்ஷே தமிழக முதலமைச்சர் கருணாநிதியை டில்லி செல்லும் போதோ அல்லது டில்லி சென்று இலங்கை திரும்பும் போதோ சென்னையில் சந்திக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.

மஹிந்த ராஜ பக்ஷே திங்கட் கிழமை புதுடில்லி சென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அதிபர் அப்துல் கலாம் உட்பட அரசி யல் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். இந்திய பிரதமருடனான சந்திப் பின் போது இலங்கையின் அமைதி முயற்சி, வடகிழக்கில் இடம்பெற்று வரும் மோதல் நிலை, மனிதாபிமான உதவிகள் போன்றவை தொடர்பாக விரிவாக கலந்துரையாடவுள் ளார்.

பாக்கு நீரிணையில் இந்திய இலங்கை கடற்படை கூட்டு ரோந்து, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் பெறுவது, இரு நாட்டு வர்த் தகத்தை மேலும் அதிகரிப்பது தொடர்பாகவும் மன்மோகனுடன் இலங்கை அதிபர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ராஜ பக்ஷே இந்தியாவுக்கு 5 நாள் அதிகாரத்துவப் பயணம் மேற் கொண்டுள்ள வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேயும் இந்தியா செல்கிறார்.

நாளை, திங்கட்கிழமை கொல்கத்தாவிற்குச் செல்லும் ரணில் விக்கிரமசிங்க 29-ம் தேதி புதுடில்லி செல்வதுடன், அங்கு முக்கிய பிரமுகர் களுடனும் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.

''HAPPY BIRTHDAY TO THE TAMIL NATIONAL LEADER''

-Tamils from Singapore.

TAMILMURASU-SINGAPORE-26 november 2006.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Thanks for nitharsanan and singapore tamils.

இந்தியா போறது எதுக்கோ...(அதுக்குள்ளே இங்கே அடிங்க எண்டும் சொல்லியிருப்பன் எங்க குண்டு போடபோறாங்களோ..)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.