Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த ஆட்சியில் தீர்வைப் பெறுவதற்கு கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும்

Featured Replies

ariyanendran.jpg

தேர்தலின் பின்னர் அமையவிருக்கும் புதிய ஆட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் அவர் மூலமாக நாம் முழுமையான அரசியல் தீர்வைப் பெறவேண்டும். 

இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம் மிக்க கட்சியாக 22 உறுப்பினர்ளைப் பெறவேண்டும். இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டும். 

இதுவே தெளிவான இலக்கு. ஒவ்வொரு தமிழ் மகனும் இந்தத் தெளிவைப் பெற வேண்டும். புத்திஜீவிகள் தெளிவுபடுத்தவும் வேண்டும்.

இவ்வாறு மாவடிமுன்மாரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் உரையாற்றிய இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர் பா. அரியநேந்திரன் கூறினார்.

http://virakesari.lk/articles/2015/07/19/அடுத்த-ஆட்சியில்-தீர்வைப்-பெறுவதற்கு-கூட்டமைப்பைப்-பலப்படுத்த-வேண்டும்

 

  • தொடங்கியவர்

த.தே.கூ. வை வாக்குகளினால் பலப்படுத்தவேண்டும்

article_1437362830-mail.google.jpg

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வாக்குகளினால் பலப்படுத்துவதன் மூலம் புரையோடிப்போயுள்ள தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெறமுடியுமென்று கூட்டமைப்பின் சார்;பில் போட்டியிடும் அம்பாறை மாவட்ட வேட்பாளர் எம்.குணசேகரம் சங்கர் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

'சலுகை அரசியல், நல்லெண்ண அரசியல், இணக்க அரசியல் ஆகியன தமிழ் மக்களை ஏமாற்றும் பசப்பு வார்த்தைகள். இவை கடந்தகால அரசியல் வரலாறுகளில் நாம் கண்டு சலித்துப்போன விடயங்கள்' என்றார்.   'மேலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உலக நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் அழுத்தம் கொடுக்கக்கூடிய சக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே உண்டு. ஓர் இனம் தன்னைத்தானே ஆள்வதற்கும் தன்னைத்தானே வழிநடத்தி அந்த இனத்தின் மொழி, கலை, கலாசாரம் மற்றும் நிலங்களை எல்லைகளாகக் கொண்ட ஓர்  இனத்தின் இருப்பை நிலை நிறுத்தக்கூடிய அடிப்படையான  விடயங்களை பெற்றுக்கொள்ளும் வகையில், தமிழ் மக்கள் இந்தத் தேர்தலை ஒரு மாற்றத்தின் சக்தியாக கொண்டு தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பை பலமிக்க சக்தியாக மாற்றவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.

 http://www.tamilmirror.lk/150499#sthash.oeOPC8Pd.dpuf

 

  • தொடங்கியவர்

எழுச்சியை ஏற்படுத்துவதன் ஊடாகவே தமிழ் தேசியத்தை பலப்படுத்த முடியும் - புளொட் வியாளேந்திரன்

article_1437452079-mail.google.com.jpg

தமிழ் மக்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துவதன் ஊடாகவே தமிழ் தேசியத்தினை பலப்படுத்தமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சி.வியாளேந்திரன் தெரிவித்தார். வாகரை, பால்சேனையில் நேற்று திங்கட்கிழமை  நடைபெற்ற தேர்தல் பிரசாரகூட்டத்தின் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாங்கள் அரசியல் ரீதியான விழிப்படைந்த சமூதாயமாக மாற்றம் பெறவேண்டும்.எமக்குள் உள்ள உணர்வுகளை அரசியல் மூலம் அடைவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறான நகர்வுகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டுமானால் கல்வி ,பொருளாதார ரீதியான கட்டமைப்புகள் வளர்க்கப்படவேண்டும். எனவே,எதரிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை வெற்றிபெறச்செய்வதன் மூலம் அந்த நகர்வினை கொண்டுசெல்ல முடியும் என்றார்.

http://www.tamilmirror.lk/150563#sthash.9Rzxp3Zk.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை தான் பலப்படுத்தனும் என்ற அவசியம் இல்லை. தமிழ் தேசிய கட்சிகளை பலப்படுத்தினாலும் இது சாத்தியம். கூட்டமைப்பை பலப்படுத்துவதன் பலாபலனை தான் பார்த்தோமே. சம் சிங்கக் கொடிதூக்கிறார். சும் சுதந்திர தினம் கொண்டாடுறார். மாவை ரணில் பின்னாடி பதுங்கிறார்..! இன்றும் வவுனியாவில் சித்திரவதை கூடம் வைச்சிக்கும்..சித்தார்த்தன் கூட்டமைப்புக்குள். இவை தான் கூட்டமைப்பைப் பலப்படுத்தி மக்கள் கண்ட நன்மைகள். :unsure::shocked:

  • தொடங்கியவர்

த.தே.கூ. அடக்குமுறைகளை தட்டிக் கேட்டது

article_1437564217-mail.google.com.jpg

சிறுபான்மையினருக்கு குறிப்பாக, தமிழினத்துக்கு செய்த அடக்குமுறைகளை துணிந்து நின்று தட்டிக்கேட்ட கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும்  வேட்பாளர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு, நாவற்காட்டு பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

'எமது உரிமைகள் பறிக்கப்படும்போது, ஓங்கிய குரலாக ஒலித்து தமிழருக்காக குரல் கொடுத்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். கூட்டமைப்பை உடைப்பதற்கு தேசிய ரீதியில் பல சக்திகள் உருவாக்கப்பட்டுள்ளன' என்றார்.   'மேலும், த.தே.கூ. தேசிய ரீதியில் மட்டுமல்லாமல்,  சர்வதேச ரீதியிலும் தமிழருக்காக குரல் கொடுத்து வருகின்றது.  தமிழர்களின் வாக்குகளை பிரிப்பதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவினப்படுத்துவதற்கும் வெற்றிலைக்காரரும் யானைக்காரரும் அவர்களால் ஏவப்பட்ட சுயேட்சைக் குழுக்கழும் பரிசுகளுடன் வாக்குக் கேட்டு வருவார்கள். அதற்கு தமிழ் மக்கள் சோரம் போகக்கூடாது. இந்தப் பொதுத்தேர்தல்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் முக்கியமானதாக அமையவுள்ளது"என்றார்.   -

http://www.tamilmirror.lk/150677#sthash.IXEL7tz2.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.