Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன், தமிழ்ச்செல்வன் விரும்பினால் கொரியாவுக்கு அனுப்புவேன்...

Featured Replies

பிரபாகரன், தமிழ்ச்செல்வன் விரும்பினால் இவ்வாரத்திற்குள் கொரியாவுக்கு அனுப்புவேன் சபையில் பிரதியமைச்சர் மேர்வின் சில்ஜா

நாட்டில் வாழ்கின்றவர்களை இனம், மொழி, மத பேதங்களை மறந்து தகுதிக்கேற்ப வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். வடகிழக்கில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்பது முற்றிலும் தவறானது. பிரபாகரன், தமிழ்ச்செல்வன் விரும்பினால் இந்த கிழமைக்குள் அவர்களை கொரியா நாட்டிற்கு அனுப்பிவைப்பேன் என்று தொழில் உறவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொழில் உறவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பாக பதிலளித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

சிங்களவர் மத்தியில் என்றுமே வைராக்கியம் இல்லை. தமிழ், சிங்கள மக்களிடையே இருந்த உறவுகள் இன்று விரிந்துசென்றுள்ளன. நாம் வரலாற்றை தெரிந்து வைத்திருக்கவில்லை. துட்டகைமுனு என்ன செய்தார் என்பதைகூட நாம் கற்றுக்கொள்ளவில்லை. கடந்த ஒருவருட காலத்திற்குள் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் சபையில் தெரிவிக்கின்றார். ஆனால், பிரேமதாச முதல் எத்தனை பேர் பலியெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாவரும் கிளிநொச்சியிலோ அல்லது யாழ்ப்பாணத்திலோ வைத்து கொலை செய்யப்படவில்லை. மஹிந்த சிந்தனையில் இனபேதத்திற்கு இடமில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். தொழில் உறவு அமைச்சில் மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது. பிள்ளை கிடைக்கும் முன்னர் சோமாவதியா, ஞானப்பாலவா என பெயர் சூட்ட முடியாது.

நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் பொறுமை காக்கவேண்டும். வேலை நிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டம் என்ற சொல்லை நிறுத்திவிட்டு பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண வேண்டும். எமது அமைச்சில் ஊழல் இடம்பெற்றதாக கூறுகின்றனர். அவ்வாறு இடம்பெற்றிருந்தால் அமைச்சரும் நானும் வீட்டுக்கு போவதற்கு தயாராக இருக்கின்றோம். அது குறித்து விசாரணை செய்வதற்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு இருக்கின்றது என்பதனை நினைவுபடுத்த இருக்கின்றேன்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றிரவு பிறந்த குழந்தைபோல பேசுகின்றார். ஆயுதம் எடுத்தது யார்? துவக்குச்சூட்டுக்கு ஆட்லறி மூலமே பதில் வழங்குவோம். அடித்தால் திருப்பி அடிக்காத சிங்களவன் தன் இனத்தின் பெயரை மாற்றிக்கொள்ளவேண்டும். சிங்களவனுக்கு என்றுமே முதுகில் காயமிருக்காது. அவனுக்கு நெஞ்சிலேயே காயம் இருக்கும். நான் அடிக்கமாட்டேன். அடித்தால் அவர் பூதவுடல் வைக்கும் மலர்ச்சாலையிலேயே இருக்கவேண்டிவரும்.

www.tamilwin.com

  • தொடங்கியவர்

மகிந்தவையும் ரம்புக்வெலவயும் யப்பானுக்கு அனுப்பி ஏதாவது கம்பனியில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்ல உங்கட கொழும்பில இருக்கிற சிங்கள இளைஞர்களுக்கு உங்கட நாட்டிலயே வேலை வாங்கி குடுக்க கானேலை இதில உங்களுக்கு கொரியா காறன் வேலை வாங்கி தாறான்!! ஏன் என்டா கொரியா காறன்ர பொருளாதாரம் அமோக விளைச்சல் தானே அவன் போற வாறவன் எல்லாரையும் குப்பிட்டு வேலை குடுக்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா!!

அவர் தம்சந்ததியின் வீரப் பிரதாபங்களை அளக்கிறார் போலும்.

கோகர்ணத்துக் காட்டுக்குள்ளே போய், தூர்ந்து போன மரப் பொந்துகள், மலைக் குகைகளை கேக்கட்டுமே!!!

கொப்பாட்டன் காலத்து வீரத்தின்-பாரம்பரியம் எல்லாம்...... கதை, கதையாய்ச் சொல்லுமே.

தனக்கே வேலை இல்லாததால்தான் இவன் கண்டதெல்லாம் கதைக்கின்றான் ஆகையால் இவன் மணைவியிடம் போய் ஏதாவது வேலை இவனுக்கு கொடுக்க வேண்டும் என்று ராஜபக்கவை அனுப்பி தூது விட்டாள் இவனுக்கு விரைவில் வேளை கொடுப்பான்கள் அத்தோடு ஏதாவது எடுபிடி வேளை அல்லது யாருக்காவது மாமா வேலை பாக்க சிங்களத்திடம் அனுப்பி வைத்தாள் ஜேவிபி காரண் கொடுப்பான்

எமது தலைவருக்கு யாரடா வேலை கொடுப்பது அவர் அன்றும் புலிகளின் மக்களின் தலைவர் நிலையில் தான் இருக்கின்றார் ஆனால் ரட்ணசிறி விக்கியாரே உமக்கு கடந்த கால வாழ்க்கை நினைப்பில் இருந்தாள் நீர் இப்படி கதைத்து இருக்க மாட்டீர் எனவே உமது வேலையை சரிவர காப்பாற்றிக்கொள்ளும் காப்பாற்ற தெரியாது போனால் தமிழ் செல்வனிடம் போய் கேளும் அவர் உமக்கு அவர்களின் தமிழீழத்தில் பங்கர் வெட்டிற வேலையாவது தருவார்கள் மாதம் 10.000 ருபா சம்பளத்துக்கு அது உமது நாட்டில் உமது குடும்பத்தை ஓட்டக் காணும் அதன் பின்பு ஏதாவது காட்டிக்கொடுப்பு வேலை செய்தாள் ( இராணுவத்திக்கு அல்ல புலிகளுக்கு) எக்கச் சக்கமாக நீர் உழைக்கலாம் விரும்பினால் சொல்லும் அல்லது புலிகளின் தொலைபேசிக்கு அடித்துப்பாரும் சத்தியமாய் சொல்லுறன் நல்ல சம்பளம்

எமது தலைவருக்கு யாரடா வேலை கொடுப்பது அவர் அன்றும் புலிகளின் மக்களின் தலைவர் நிலையில் தான் இருக்கின்றார் ஆனால் ரட்ணசிறி விக்கியாரே உமக்கு கடந்த கால வாழ்க்கை நினைப்பில் இருந்தாள் நீர் இப்படி கதைத்து இருக்க மாட்டீர் எனவே உமது வேலையை சரிவர காப்பாற்றிக்கொள்ளும் காப்பாற்ற தெரியாது போனால் தமிழ் செல்வனிடம் போய் கேளும் அவர் உமக்கு அவர்களின் தமிழீழத்தில் பங்கர் வெட்டிற வேலையாவது தருவார்கள் மாதம் 10.000 ருபா சம்பளத்துக்கு அது உமது நாட்டில் உமது குடும்பத்தை ஓட்டக் காணும் அதன் பின்பு ஏதாவது காட்டிக்கொடுப்பு வேலை செய்தாள் ( இராணுவத்திக்கு அல்ல புலிகளுக்கு) எக்கச் சக்கமாக நீர் உழைக்கலாம் விரும்பினால் சொல்லும் அல்லது புலிகளின் தொலைபேசிக்கு அடித்துப்பாரும் சத்தியமாய் சொல்லுறன் நல்ல சம்பளம்

மன்னிக்கவும் மேவின் சில்வாதான் சொன்னவராம் ஆகையால் அவருக்கும் வேலை இருக்குது என்று சொல்லுங்கோவன் தயவு செய்து பிரதம மந்திக்கு வேலைகொடுக்கச் சொல்லிப்போட்டன் இவன் மேவினுக்கும் கொடுங்கோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

உமக்கு அவர்களின் தமிழீழத்தில் பங்கர் வெட்டிற வேலையாவது தருவார்கள் மாதம் 10.000 ருபா சம்பளத்துக்கு அது உமது நாட்டில் உமது குடும்பத்தை ஓட்டக் காணும்

அதுக்குத்தான் தலைவரோட நேரடியாக் கதைக்கோணுமெண்டுடுறாங்களோ

Mervin should have asked this question to ettappans Sangaree or Douglas that if they like to settle in Korea or Singapore like ettappan Karuna. :blink::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.