Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2015 - பாராளுமன்ற தேர்தல் வடகிழக்கு உட்பட இலங்கை முழுவதும் கிளறப்படும் குப்பபைகளால் துர்நாற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் 2015  நெருங்கிவரும் நிலையில் மஹிந்த தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான தகவல்களும் நாளாந்தம் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கடந்த 10 வருட ராஜபக்ஸ குடம்ப ஆட்சியில் நிலவிய மோசமான ஊழல்கள் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கின்றன...

இந்தநிலையில் மஹிந்த குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பிலான புதிய தகவல் ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளன...

இதன்போது குறித்த ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கடந்த 2012 முதல் 2014 வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி செயலகத்தில் 2344228641.68 ரூபாய் (200 கோடிக்கும் அதிகமான) வரி செலுத்துவோரின் பணம் முன்னாள் ஜனாதிபதியின் பயணங்களுக்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு செலவிட்ட பணம் 643250689.84 ரூபாய் எனவும், அப்பணம் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது பிரதிநிதிகளின் வெளிநாட்டு பயணங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வட பெக்கோ பல்கலைக்கழக மாணவர்களுக்கு 264000 ரூபாய் பணத்தினை அன்பளிப்பு செய்துள்ளதாகவும், 2013ம் ஆண்டு அறிவுரைக்காக 46732602 ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக இலங்கை விமான சேவையினால் மேலும் ஒரு விலைப்பட்டியல் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது 2014ம் ஆண்டும், அவ் விலைப்பட்டியலில் 305004001 ரூபாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய 2014ம் ஆண்டில் மாத்திரம் செலவிட்ட பணம் 948254720.84 ரூபாவாகும். அல்லது வேறு முறையில் கூறினால் கிட்டத்தட்ட 100கோடியாகும்.

2014ம் ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஏ 340 விமானத்தை வாடகைக்கு பெற்றுக்கொணடதற்கான விலைப்பட்டியல் இவற்றுடன் இணைக்கப்படவில்லை. அதனையும் இணைத்தால் விலைப்பட்டியல் மேலும் அதிகாரிக்கப்படும். மேலும் அது தொடர்பிலான தகவல்கள் இதுவரையில் கிடைக்கவில்லை.

இச் செலவுகளுக்கு இடையில் இரண்டு சந்தர்ப்பங்களில் இரண்டு கெமராக்கள் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், குறித்த இரண்டு கெமராக்களும் பணத்திற்கு பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நியூயோர்க் நகரத்தில் 2014ம் ஆண்டும் இக்கெமராக்கள் பணத்திற்கு பெற்றுக்கொண்டதாகவும், அதற்கு 529000 ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வைத்து கெமரா உபகரணங்கள் பணத்திற்கு பெற்றுக்கொள்வதற்காக 9119141.39 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

கெமராக்கள் கடமைகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் தெளிவாக தெரியவில்லை. 2014ஒக்டோபர் மாதம் ரோம், மிலன், வத்திக்கான நகரம் செல்வதற்காக முன்னாள் ஜனாதிபதி செலவிட்ட பணம் 67722245.34 ரூபாவாகும்.

ரோம் மற்றும் இத்தாலி மலர் கண்காட்சி பயணத்திற்கு ஏ 340 விமான செலவு 44195550 ரூபாய் விலைப்பட்டியல் ஒன்று ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ் விலைப்பட்டியலுக்கான பணத்தினை இதுவரையில் விமான சேவைக்கு செலுத்தப்படவில்லை. மூன்று நாட்கள் குறித்த விஜயத்திற்காக அரசாங்க திறைசேரியில் செலவிட்ட முழு பணம் 111917795.34 ரூபாவாகும். 2014 செப்டெம்பர் மாதம் ராஜபக்ச நியூயோர்க் பயணத்திற்கு செலவிட்ட பணம் 127052113.52 ரூபாய் (இதில் விமான கட்டணம் உள்ளடக்கப்படவில்லை). 2014ம் ஆண்டு அபுதாபி பயணத்திற்காக செலவிட்ட பணம் 5724005.61 ரூபாய். பொலிவியாவுக்கு விமானம் ஒன்று வரும் வரையில் மஹிந்த ராஜபக்சவுக்கு செலவிட்ட பணம் 50764270.90 ரூபாய்.

2014 ஜனவரி மாதம் முன்னாள் ஜனாதிபதியின் கடைசி மகன் ஜப்பான் செல்வதற்காக வரி பணத்தில் இருந்து 2086000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பதி கோவிலுக்கு செல்வதற்காக ஏ 340 விமானத்தை இலங்கை விமானச் சேவைகள் ஊடக முன்னாள் ஜனாதிபதி பெற்றுக்கொண்டுள்ளார்.

திருப்பதி வெங்கடேஷ்வரர் கோவிலுக்கு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட விமானத்தின் கட்டணம் 3916836 ரூபாவாகும். இதற்கான கட்டணம் இதுவரையிலும் செலுத்தப்படவில்லை.

அவர் 4458225 ரூபாய் உட்பட அரசாங்க திறைசேரிக்கு செலுத்த வேண்டிய கடன் பணம் 12291297 ரூபாய் என தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122643/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.