Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்புடன் செல்வம் அவர்களுக்கு...

Featured Replies

அன்புடன் செல்வம் அவர்களுக்கு... நடராஜா குருபரன் எழுதுவது..

01 செப்டம்பர் 2015
Bookmark and Share
 

 

அன்புடன் செல்வம் அவர்களுக்கு...   நடராஜா குருபரன் எழுதுவது..

 

 

 

அன்புடன் செல்வம் அவர்களுக்கு...  

நடராஜா குருபரன்.. எழுதுவது..

 

இன்று பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவராகவும்தேர்வாகி இருக்கிறீர்கள்... முதலில் வாழ்த்துக்கள்...

 

1990களில் வவுனியா முழு இராணுவக் கட்டுப்பாட்டுள் இருந்தகாலத்தில் வவுனியா நகர பகுதியில்  முதலில் உங்களைச்சந்தித்திருந்தேன்பின்னர் குகன் வவுனியாவில் பொறுப்பாகஇருந்த காலத்திலும் உங்களுடன் தொடர்பில் இருந்தேன்பின்கொழும்பில் உங்களை நேரடியாகவும் சந்தித்திருந்தேன்.பிற்பாடு எங்கள் தொடர்பு தொலைபேசியில் பேசுவதாகத்தொடர்ந்ததுஅண்மைக் காலமாக தொலைபேசியில்தொடர்புக்கு வருவதில்லைஅதனால் நானும் அழைக்காமல்விட்டுவிட்டேன்ஆனாலும் வாழ்த்துகளை மட்டுமல்லபரிந்த்துரைகளையும் சொல்லவேண்டியது ஒருபத்திரிகையாளனின் கடமை என்று மனம் சொல்லியதுஅதனால்தான் இக்கடிதம்.

 

இலங்கைப் பாராளுமன்றில் பிரதமரை தவிர்த்து 3 ஆவதுபெரும் பதவி இன்று உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது...

 

உங்களுக்குக் கிடைத்த அந்தப் பதவியும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் 16 பேருக்கான நாடாளுமன்ற பதவிகளும்இவற்றின் கூடவே வரும் வரப்பிரசாதங்களும் தமிழ் மக்களின்வாக்குகளினால் கிடைக்கப்பெற்றவைரத்தமும் சதையுமாக,குற்றுயிராய் கொலைக்களத்தில் கிடந்த லட்சக்கணக்கானமக்களின் தியாகத்திற்கு பரிசாகாக்கிடைத்திருக்க வேண்டியசுதந்திரமும் விடுதலையும் இன்னும்கிடைக்கவில்லை.ஆனாலும் உலக ஒழுங்கின் அழுத்தத்தினால் இலங்கைநாடாளுமன்றத்துள் நுழையவேண்டிய சூழ் நிலைக்காட்பட்டநிலையில் கிடைப்பவை மக்களுக்கே சொந்தமானவை என்பதைநினைவூட்டவேண்டிய பொறுப்பையும் கடமையையும் நினைவுகூர்ந்து உங்களுடன் கடிதமூலம் பேச நினைக்கிறேன்.…

 

இத்திறந்த கடிதம் உங்களுக்குச் சிலவேளை எரிச்சலைக்கூடத்தரலாம்இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் நிகழ்ந்துவரும் மாற்றங்களில் குளோபலின் பங்கும் நிச்சமாக இருக்கிறதுஎன்ற தன்னம்பிக்கையில் உங்களுடனும் உங்களை போன்றசகல அரசியல்வாதிகளுடனும் உரையாடவேண்டிய தேவைஎனக்கு இருக்கிறதுஉங்களை அவதானிக்க வேண்டியபொறுப்பும் இருக்கிறது.

அண்மைக் காலத்தில் பாராளுமன்ற பிரதிக் குழுக்களின்தலைவர் என்ற பதவி கிடைக்கும் 3ஆவது தமிழர் நீங்கள் என நினைக்கிறுன்முதலில் ஜே.வீ.பியின் முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் இந்தப் பொறுப்பில்இருந்தார்...

 

ஜே.வி.பியின் கட்சிக் கோட்பாடுகளின் அடிப்படையில்அவருக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள அனைத்தையும் தான்அங்கம் வகித்த கட்சிக்கே கையளித்திருந்தார்அவற்றை அவர்தனிப்பட அனுபவிக்கவோகையாளவோ இல்லை..

 

அடுத்து பதவி வகித்தவர் ஈபிடிபியின்  முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் முருகேசு சந்திரகுமார்தனக்குரியவரப்பிரசாதங்களை அவர் எப்படி பயன்படுத்தினார் எனஉண்மையில் எனக்கு தெரியாதுஅவர் அதனைத் தமிழ்மக்களுக்காகப்பயன்படுத்தியிருந்தால் யாராவது முன்வந்துசொல்லுங்கள்.

 

ஆனால் உங்களுக்கு தற்போது கிடைக்கப் பெற்றுள்ள புதியபதவியின் ஊடாக கிடைக்கப் பெறும் வரப்பிரசாதங்களை நீங்கள்எப்படி பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதில் முழுமையானவெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என நான் கருதுவதில்எந்தத் தவறுகளும் இல்லை என நீங்கள் கூறுவீர்களோதெரியவில்லை.

 

இப்பொழுது சந்திரகுமாரைக் கேட்டால் அவர் கட்டாயம்வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றுகூறுவார்.

 

ஆயிரக்கணக்கான போராளிகளினதும் லட்சக்கணக்கானமக்களினதும் தியாக வேள்வியில் செய்யப்பட்ட மிக அற்பமானஅறுவடைதான் உங்களுக்கு கிடைத்த பதவிஆனால் தனிப்பட்டஉங்களுக்கு இது பெரிய அறுவடைஆனால்பொதுக்காணிகளில் செய்யும் அறுவடைகள் குறித்து மக்கள்கண்காணிப்பார்கள்.

 

ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச் செல்வன் தனது முகநூல்பதிவில் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் பதவிக்குஉரிய வரப்பிரசாதங்கள் எவை என விபரமாகக்குறிப்பிட்டிருக்கிறார்.

 

ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச் செல்வனின் பதிவைஇங்கு தருகிறேன்:

"இப்பதவிக்குரியவருக்கு வழங்கப்படுகின்ற வரப்பிரசாதங்களைவிட பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் உள்ளிட்டஏனையவர்களுடன் ஏற்படுகின்ற அறிமுகம் மற்றும்தொடர்பாடல் என்பதே மிக முக்கியமானது.

 

இதனைக் கொண்டு தங்கள் பிரதேசங்களில் மக்களின்அடிப்படைப் பிரச்சினைகள் முதல் வேலைவாய்ப்பு உள்ளிட்டபல வற்றை செய்ய முடியும்.

முன்னாள் பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தவிசாளா்சந்திரகுமார் அவர்கள் இதனை வைத்தேஆயிரக்கணக்கனவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பலவிடயங்களை மேற்கொண்டார்.

 

பாராளுமன்றத்தில் உள்ள அனைவருடனும் நட்பு ஏற்படும் அந்தநட்பை கொண்டு காரியங்களை சாத்தித்துகொள்ள முடியும்.

 

இது ஒரு புறமிருக்க இந்த பதவிக்குரிய வரப்பிரசாதங்களைபாருங்கோ

 

22 பணியாளர்கள்அதி சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட07வாகனங்கள் அதில் நான்கு வாகனத்திற்கு வரையறையற்றஎரிபொருள் எவ்வளவு வேண்டுமென்றாலும்நிரப்பிக்கொள்ளலாம். 22 பணியாளர்களில் 03 பேருக்கு 70ஆயிரத்திற்குமேல் இதர படிகள் உள்ளிட்ட சம்பளம்,ஏனையவர்களுக்கு 40 ஆயிரத்திற்கு மேல்உண்மையாகபணியாளர்களை நியமிக்கலாம் அல்லது மனைவி மச்சான்மாமன் என்று நியமித்து கொடுப்பனவை பெற்றுக்கொள்ளமுடியும்)

 

இதனை தவிர நான்கு ஜந்து தொலைபேசி இணைப்புகள்போட்டோ கொப்பி மெசின்பக்ஸ் மெசின்அதற்குரியகொடுப்பனவுகள் என கூறிக்கொண்டே போகலாம்"

 

இவ்வளவு வரப்பிரசாதங்களிலும் மிக முக்கியமானது 22பணியாளர்களை பாராளுமன்ற காலம் முழுமையும் பணிக்குஅமர்த்தமுடியும் என்பதுஉங்களது தனிப்பட்ட நலன்களுக்குவெளியே 22 குடும்பங்கள் பயன்பெறக் கூடிய வரப்பிரசாதம்இது.

 

வடக்கில் நீங்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் வன்னியின் 3மாவட்டங்களுமே யுத்தத்தில் அதிக அழிவுகளையும்இழப்பையும் சந்தித்த மாவட்டங்கள் ஆகும்.அங்குள்ளபாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த தகுதி உடைய 20 பேருக்குஉங்களால் வேலை வழங்க முடியும்.. ஏனையவரப்பிரசாதங்களில் மாவட்டங்களின் அபிவிருத்திக்கு ஒருபகுதியை வழங்க முடியும்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்ஒரு கட்சியின் தலைவர்விடுதலை இயக்கம் ஒன்றின்தலைவர்... 3 முறை பாராளுமன்ற சென்ற ஒரு உறுப்பினர்...என்ற வகையில் முன்னுதாரணமாக நடந்து கொள்ளுவீர்களா?உங்களது வெளிப்படைத் தன்மையை உங்களுக்கு வாக்களித்தமக்களுக்கு தெரியப்படுத்துவீர்களா?

 

இப்படிக்கு

நடராஜா குருபரன்..

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123531/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.