Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'விளங்க முடியா கவிதை' ரமேஷ்பாபு

Featured Replies

டிசம்பர் 05, 2006

சென்னை: பரங்கிமலை மேல் உள்ள சர்ச் வளாகத்தில் சமீபத்தில் நடந்த கொலை தொடர்பாக கைதாகியுள்ள 'சைக்கோ சாமி' ரமேஷ் பாபுவின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீஸார் இப்போது படு தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

பரங்கிமலையின் மீது அமர்ந்துதான் இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தோமையர் (செயின்ட் தாமஸ்) கிறிஸ்தவ மதப் பிரசாரத்தை மேற்கொண்டார். கி.பி. 72ம் ஆண்டு அவரை ஈட்டியால் குத்தி ஒருவர் கொலை செய்தார். அதன் பிறகு இப்போது மீண்டும் ஒரு அப்பாவியின் ரத்தம் பரங்கிமலையை நடுங்க வைத்துள்ளது.

நவம்பர் 26ம் தேதி சர்ச் வளாகத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையத்தின் மேலாளரான ஜேக்கப்பை ஒரு நபர் வெறித்தனமாக குத்திக் கொன்றான். மாலையில் நடந்த கொடூரக் கொலை, பல நூறு பக்தர்கள் முன்னிலையில் நடந்ததுதான் பலரையும் பதை பதைக்க வைத்துள்ளது.

கிருஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் வந்து சேரும் பேராலாயம்தான் புனித தோமையர் பேராலயம். கொலையாளியை போலீஸார் அடுத்த நாளே ஆதம்பாக்கம் பகுதியில் வைத்துப் பிடித்து விட்டனர். பிடிபட்டவன் பெயர் ரமேஷ்பாபு.

நான் தான் கல்கி பகவான் என்று கூறிக் கொண்டு திரியும் இந்த ரமேஷ்பாபுவிடம் போலீஸார் விசாரித்தபோது பல வினோதமான தகவல்கள் கிடைக்கவே, போலீஸாருக்கு மண்டை காய்ந்து போய் விட்டது. ரமேஷ் பாபு கூறிய தகவல்களை வைத்து அவரை சைக்கோ என்று நினைப்பதா அல்லது அவருக்குப் பின்னணியில் ஏதாவது சதித் திட்டம் இருக்குமா என்று முடிவு செய்ய முடியாமல் குழம்பிப் போனது போலீஸ்.

ரமேஷ்பாபு கூறிய தகவல்கள் அப்படி இருந்தன. ஆதம்பாக்கத்தில் மெய்நெறி சநாதன தர்ம ஸ்தபானம் என்ற அமைப்பை வைத்துள்ளான் ரமேஷ் பாபு. இதற்காக இணையதளம் ஒன்றையும் அவன் வடிவமைத்துள்ளான். தனது வீட்டிலேயே இந்த அமைப்பின் அலுவலகத்தை நடத்தி வந்துள்ளான் பாபு.

அப்பகுதியினருக்கு ரமேஷ் பாபு என்றாலே டெர்ரர்தான். அந்த அளவுக்கு படு மிரட்டலாக இருந்துள்ளான் ரமேஷ் பாபு. வீடு உள்ள தெருவில் வாசலில் யாரும் நிற்கக் கூடாதாம். தான் வெளியே நடக்கும்போது யாராவது எதிரே வந்து விட்டால் அவ்வளவுதான் 'கல்கி பகவான்' வரும்போது எதிரில் வருவதா என்று கோபமாக கத்துவானாம்.

அதேபோல பெண்களைக் கண்டாலும் ரமேஷûக்குப் பிடிக்காதாம். இரவெல்லாம் ரமேஷின் வீட்டிலிருந்து அசுரர்களை வதம் பண்ண வந்திருக்கு கல்கி பகவான் நான்தான் என்று கத்திக் கொண்டே இருப்பானாம்.

சரிதான், சரியான கிராக்கு போல என அப்பகுதியில் ரமேஷ்பாபுவைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்து கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் பயங்கர கொலையைச் செய்வான் ரமேஷ் பாபு என அவர்கள் யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லையாம்.

2005ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மெய்நெறி என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளான் ரமேஷ் பாபு. இதையடுத்து அந்த அமைப்புக்கு ஆள் பிடிப்பதற்காக வீடு வீடாகப் போய் பிரசாரம் செய்துள்ளான். அரசியல்வாதிகள், நடிகர், நடிகையர் எல்லாம் அசுரர்கள். இவர்கள் எல்லோரையும் நான் வதம் செய்யப் போகிறேன். அதுக்காகத்தான் இந்த மெய்நெறி அமைப்பு. என்னுடன் வாருங்கள், மெய் நெறி அமைப்பை வலுப்படுத்துங்கள் என்று கூற ஏதோ பைத்தியம் போல என நினைத்து ரமேஷைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர்.

ஆனாலும் தனது மெய்நெறி அமைப்பு குறித்து தொடர்ந்து பிரசாரம் செய்தவண்ணம் இருந்தான் ரமேஷ்பாபு. தனது பைக்கிலும் மெய்நெறி அமைப்பின் சின்னத்தைப் பொறித்து வைத்திருந்தான்.

இப்படித் திரிந்த ரமேஷ்பாபுதான் பரங்கிமலை சர்ச் வளாகத்தில் படுகொலையை செய்துள்ளான். அவனை போலீஸார் பிடித்தபோது முரண்டு பிடிக்கவில்லையாம். மாறாக, கொலை செய்ய தான் பயன்படுத்திய கத்தியை அவனாகவே போலீஸிடம் எடுத்துக் கொடுத்தானாம்.

இப்படி ஒரு ஆளை பார்த்ததே இல்லை என்று அவனைக் கைது செய்த ஆதம்பாக்கம் காவல் நிலைய போலீஸார் ஆச்சரியமாக கூறுகின்றனர். காவல் நிலையத்தில் இருந்தபோது யாருடனும் பேசாமல் இருந்தானாம். சாப்பாடு கொடுத்தபோது ஒரு இட்லியை மட்டும் சாப்பிட்டு விட்டு அப்படியே இருந்தானாம்.

யோகா போஸில், லாக்கப்பில் இருந்த அவன் காலையில் டிபன் ஏதும் சாப்பிடவில்லையாம். மாறாக ஒரே ஒரு டீ மட்டும் குடித்தானாம். அவனை ஒரு சைக்கோ என்றுதான் போலீஸார் முடிவு செய்திருந்தனர் முதலில். ஆனால் பரங்கிமலை சர்ச் தரப்பில் இதற்குப் பெரிய பின்னணி இருக்கலாம் என சந்தேகம் கிளப்பப்பட்டதால் இப்போது ரமேஷ் பாபுவின் பின்னணி குறித்து போலீஸார் குடையத் தொடங்கியுள்ளனராம்.

இந்த விவகாரம் குறித்து சர்ச் வட்டாரத்தில் கூறுகையில், ரமேஷ் பாபுவின் பின்னணியில் பஜ்ரங் தள், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் உள்ளன என்கின்றனர்.

ஜேக்கப்பைக் கொன்ற பின்னர் சர்ச்சுக்குள் நுழைந்த ரமேஷ்பாபு, அங்கிருந்த இரு சிலைகளை சேதப்படுத்தி அவற்றின் மீது ஜேக்கப்பின் ரத்தத்தை தெளித்துள்ளான்.

ஜேக்கப்பின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு நடந்த திருப்பலியின்போதும் சிலர் திடீரென அங்கு வந்து 'ஜெய் பாரத் மாதா கீ ஜெய்' என்று கோஷமிட்டுவிட்டு ஓடியுள்ளனர்.

இதையெல்லாம் பார்க்கும்போது இந்தக் கொலைக்குப் பின் மிகப் பெரிய சதித் திட்டம் இருப்பதாக சந்தேகப்படுகிறோம். பாதிரியார்களை கொல்லவே ரமேஷ்பாபு வந்திருக்கக் கூடும் என கருதுகிறோம் என்கின்றனர் சர்ச் நிர்வாகிகள்.

இதை பாதிரியார் ஜெயசீலனும் ஆமோதிக்கிறார். இந்த சம்பவத்தின் பின்னணியில் பெரிய கும்பலே இருக்கும் என சந்தேகப்படுகிறோம். புனிதத் தலமான இந்த வளாகத்தில் இப்படி ஒரு கொலை நடந்திருப்பது வேதனை தருகிறது. இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து, மோதலையும், வெறுப்பையும் உருவாக்க சில சக்திகள் முயற்சிப்பதைத் தடுக்க வேண்டும் என்கிறார்.

இந்த சந்தேகத்தால் தற்போது ரமேஷ்பாபுவின் மெய்நெறி இயக்கம், அவனது பின்னணி, அந்த அமைப்பில் யார் யார் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

அடர்ந்த தாடியும், முறுக்கு மீசையும், தலையில் ரிப்பன் கட்டியும் படு வித்தியாசமாக காணப்படும் ரமேஷ்பாபு சாதாரண ஆள் இல்லை. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்துள்ளார் ரமேஷ் பாபு.

இவர் பிறந்தது வாணியம்பாடியில். ஆனால் சிறுவயது முதலே வளர்ந்தது ஆதம்பாக்கத்தில்தான். 1991ல் படிப்பை முடித்த ரமேஷ்பாபு, 2000ம் ஆண்டு வரை வேலை பார்த்துள்ளார்.

பின்னர் பிரான்ஸ் நாட்டின் சாய்பெம் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இந்த சமயத்தில், 2004ம் ஆண்டின் பிற்பகுதியில்தான் தனது 'புதிய பாதைக்குத்' திரும்பியுள்ளார் ரமேஷ்பாபு.

மெய்நெறி என்ற அமைப்பை உருவாக்கி அதற்காக இணையதளம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். இதில் அசுராந்தத்திற்கு எதிரான தனது போர் என்று குறிப்பிட்டுள்ளார். அசுராந்தம் என்பது அசுரர்களின் உச்ச குணம். இதை எதிர்த்தே தனது போர் என்று கூறுகிறார் ரமேஷ்பாபு.

மனித சமூகத்தின் அனைத்துப் பிரிவிலும் அசுரத்தனம் ஊடுறுவியுள்ளதாக குற்றம் சாட்டுகிறார் ரமேஷ். அதை அழிக்கத்தான் இந்தப் போர் என்றும் முழங்கியுள்ளார். தனது அசுர வதத்தில் அனைவரும் கூட நின்று உதவ வேண்டும் என்று இணையதளம் மூலம் அழைப்பு விட்டுள்ளார் ரமேஷ்பாபு.

ரமேஷ்பாபுவின் இலக்கு, அவரது போக்கு, கடைசியில் செய்த கொலை எல்லாமே ஒன்றும் புரியாத குழப்பமாகவே உள்ளன. ஆளவந்தானில் கமல்ஹாசன் பாடுவது போல ரமேஷ்பாபு ஒரு 'விளங்க முடியா கவிதை!'

ரமேஷ்பாபுவின் பின்னணியை காவல்துறை தெளிவாக விளக்கினால் மத மோதல்களையும், துவேஷத்தையும், வருத்தத்தையும் போக்க பெரும் உதவியாக இருக்கும்.

'கிராக்கு' ரமேஷ்பாவுவின் இணையதள முகவரி:

http://00a66e4.netsolhost.com/home.htm.

http://thatstamil.oneindia.in/news/2006/12/05/godman.html

kal002.jpg

இணையத்தளத்திற்குச் சென்று பார்த்தேன் ராம் படத்தையும் அன்னியன் படத்தையும் கலந்து பார்த்த மாதிரி இருக்கு.

நானும் மெய்நெறி அமைப்பில் இணைய விரும்புகிறேன்...குரு உள்ளே போய்விட்டார்...எனவே நான் தான் இனி கல்கி அவதாரம்.

கொலைகள் தொடரும்.....!

எங்கள் புதிய இணையத்தளம் http://www.meineri.org

அனைவரும் வந்து இணையுங்கள்.

திருச்சிற்றம்பலம்

Edited by saanakiyan

  • தொடங்கியவர்

குருவே எப்ப உங்களின் அவதாரம் முடியும் ஹீஹி

குருவே எப்ப உங்களின் அவதாரம் முடியும் ஹீஹி

களத்தில் விதண்டாவாதம் செய்பவர்களை களையெடுக்கும் வரை தொடரும்...!

பார்த்தீர்களா என் குருவுக்கும் எனக்கும் எத்தனை உருவ ஒற்றுமை என்று.

:P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.