Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கர நிலநடுக்கம்: ஆப்கனில் 17 பேர், பாகிஸ்தானில் 12 பேர் பலி; டெல்லி, ஸ்ரீநகரில் நில அதிர்வுகள்

Featured Replies

பயங்கர நிலநடுக்கம்: ஆப்கனில் 17 பேர், பாகிஸ்தானில் 12 பேர் பலி; டெல்லி, ஸ்ரீநகரில் நில அதிர்வுகள்

 
டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் பலரும் கட்டிடங்களை விட்டு வெளியேறினர். | படம்: ஏஎஃப்பி
டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் பலரும் கட்டிடங்களை விட்டு வெளியேறினர். | படம்: ஏஎஃப்பி

ஆப்கானிஸ்தானின் ஜார்ம் என்ற இடத்துக்கு தெற்கு தென்மேற்கே இந்துகுஷ் மலைப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்திற்கு பாகிஸ்தானில் 12 பேர் பலியானதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் ஊடகத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானில் ரிக்டர் அளவில் 4.8 என்று பதிவான பின்னதிர்வு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானில் பலி எண்ணிக்கை 17 என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும் 55 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறியுள்ளது.

மேலும் பூகம்பத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஆப்கான் நகரமான தலுக்கானில் 12 பள்ளிச்சிறுமிகள் பலியாகியுள்ளனர். மேலும் 30 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஸ்ரீநகரின் மையப்பகுதியில் உள்ள ஜெஹாங்கிர் சவுக்கில் உள்ள மேம்பாலதில் விரிசல்கள் ஏற்பட்டதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீநகருக்கு 55 கிமீ தொலைவில் உள்ள சொபோரில் ராணுவ பதுங்குகுழி நொறுங்கியதில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஆப்கான் தலைநகரில் பூகம்ப தாக்கம் காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு வீடுகள் பல குலுங்கின, சுவர்களில் பெரும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன, தெருக்களில் கார்கள் உருண்டு கிடந்தன என்று ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்கான் நேரப்படி இன்று மதியம் 2.39 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதன் தாக்கம் டெல்லி, ஸ்ரீநகர், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டுள்ளது.

டெல்லியில் சுமார் ஒரு நிமிடம் வரை இதன் தாக்கம் உணரப்பட்டது. மேலும் கட்டிடங்கள் குலுங்கியதால் நூற்றுக்கணக்கானோர் கட்டிடங்களிருந்து வெளியேறி சாலைக்கு வந்தததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கன் தலைநகர் காபுலிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.

196 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தொலைதூரப் பகுதியான ஃபெய்ஸாபாத்துக்கு 82கிமீ தொலைவில் தென் கிழக்கே இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. ஆனால், உயிரிழப்பு, காயம், சேதம் பற்றிய உடனடித் தகவல்கள் இல்லை.

நிலநடுக்க தாக்கம் காரணமாக ஸ்ரீநகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக முதல்வர் ஓமர் அப்துல்லா ட்வீட் செய்துள்ளார்.

இந்த நிலநடுக்கம் காரணமாக வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் 4 பேர் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் நிலநடுக்கத்தைப் பார்த்த மக்கள், கட்டிடங்கள் ஆடியதைப் பார்த்ததாகவும், இது 2005-ம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தை நினைவூட்டியதாகவும் தெரிவித்தனர்.

காஷ்மீர் ஹன்சா பள்ளத்தாக்கிலிருந்து வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவில், பனிமலைச் சரிவு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பஞ்சாப், உத்தராகண்ட், மற்றும் ராஜஸ்தான் பகுதிகளிலும் நிலநடுக்க அலைகள் உணரப்பட்டது.

இந்திய-யுரேசிய கண்டத் தட்டுக்கள் மோதும் இடத்தில் இமாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் பூகம்ப ஆபத்து பகுதியாக திகழ்கின்றன. யுரேசிய கண்டத்தட்டுக்கு அடியே இந்திய துணைக் கண்டத் தட்டு நுழைந்து வருவதால் எண்ணிலடங்கா சிறிய மற்றும் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

http://tamil.thehindu.com/india/பயங்கர-நிலநடுக்கம்-ஆப்கனில்-17-பேர்-பாகிஸ்தானில்-12-பேர்-பலி-டெல்லி-ஸ்ரீநகரில்-நில-அதிர்வுகள்/article7805865.ece?homepage=true

  • தொடங்கியவர்

பயங்கர நிலநடுக்கம்: பாகிஸ்தான், ஆப்கனில் 160-க்கும் மேற்பட்டோர் பலி; ஆயிரக்கணக்கானோர் காயம்

 
 
  • பாகிஸ்தானில் சர்கோதா பகுதியில் பூகம்ப சேத நிலவரம்.| படம்: ஏ.எஃப்.பி.
    பாகிஸ்தானில் சர்கோதா பகுதியில் பூகம்ப சேத நிலவரம்.| படம்: ஏ.எஃப்.பி.
  • பயங்கர நிலநடுக்கத்தில் ஆப்கானிஸ்தானில் வீடுகள் சேதமடைந்தன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடக்கிறது. | படம்: ராய்ட்டர்ஸ்
    பயங்கர நிலநடுக்கத்தில் ஆப்கானிஸ்தானில் வீடுகள் சேதமடைந்தன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடக்கிறது. | படம்: ராய்ட்டர்ஸ்
  • டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் பலரும் கட்டிடங்களை விட்டு வெளியேறினர். | படம்: ஏஎஃப்பி
    டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் பலரும் கட்டிடங்களை விட்டு வெளியேறினர். | படம்: ஏஎஃப்பி

ஆப்கானில் இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக தெற்காசிய நாடுகளில் பலி எண்ணிக்கை 160க்கும் அதிகமாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தானில் 135 பேரும், ஆப்கானில் குறைந்தது 31 பேரும் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும், நூற்றுக் கணக்கான வீடுகள் தரைமட்டமானதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் ஜார்ம் என்ற இடத்துக்கு தெற்கு தென்மேற்கே இந்துகுஷ் மலைப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்திற்கு பாகிஸ்தானில் 52 பேர் பலியானதாகவும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஊடகத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கனில் ரிக்டர் அளவில் 4.8 என்று பதிவான பின்னதிர்வு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானில் பலி எண்ணிக்கை 17 என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும் 55 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறியுள்ளது.

மேலும் பூகம்பத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஆப்கன் நகரமான தலுக்கானில் 12 பள்ளிச்சிறுமிகள் பலியாகியுள்ளனர். மேலும் 30 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஸ்ரீநகரின் மையப்பகுதியில் உள்ள ஜெஹாங்கிர் சவுக்கில் உள்ள மேம்பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீநகருக்கு 55 கிமீ தொலைவில் உள்ள சொபோரில் ராணுவ பதுங்குகுழி நொறுங்கியதில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஆப்கன் தலைநகரில் பூகம்பத் தாக்கம் காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு வீடுகள் பல குலுங்கின, சுவர்களில் பெரும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன, தெருக்களில் கார்கள் உருண்டு கிடந்தன என்று ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்கன் நேரப்படி இன்று மதியம் 2.39 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதன் தாக்கம் டெல்லி, ஸ்ரீநகர், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டுள்ளது.

டெல்லியில் சுமார் ஒரு நிமிடம் வரை இதன் தாக்கம் உணரப்பட்டது. மேலும் கட்டிடங்கள் குலுங்கியதால் நூற்றுக்கணக்கானோர் கட்டிடங்களிருந்து வெளியேறி சாலைக்கு வந்தததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கன் தலைநகர் காபுலிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.

196 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தொலைதூரப் பகுதியான ஃபெய்ஸாபாத்துக்கு 82கிமீ தொலைவில் தென் கிழக்கே இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. ஆனால், உயிரிழப்பு, காயம், சேதம் பற்றிய உடனடித் தகவல்கள் இல்லை.

நிலநடுக்கத் தாக்கம் காரணமாக ஸ்ரீநகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக முதல்வர் ஓமர் அப்துல்லா ட்வீட் செய்துள்ளார்.

இந்த நிலநடுக்கம் காரணமாக வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் 4 பேர் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் நிலநடுக்கத்தைப் பார்த்த மக்கள், கட்டிடங்கள் ஆடியதைப் பார்த்ததாகவும், இது 2005-ம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தை நினைவூட்டியதாகவும் தெரிவித்தனர்.

காஷ்மீர் ஹன்சா பள்ளத்தாக்கிலிருந்து வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவில், பனிமலைச் சரிவு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பஞ்சாப், உத்தராகண்ட், மற்றும் ராஜஸ்தான் பகுதிகளிலும் நிலநடுக்க அலைகள் உணரப்பட்டது.

இந்திய-யுரேசிய கண்டத் தட்டுக்கள் மோதும் இடத்தில் இமாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் பூகம்ப ஆபத்து பகுதியாக திகழ்கின்றன. யுரேசிய கண்டத்தட்டுக்கு அடியே இந்திய துணைக் கண்டத் தட்டு நுழைந்து வருவதால் எண்ணிலடங்கா சிறிய மற்றும் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

http://tamil.thehindu.com/india/பயங்கர-நிலநடுக்கம்-பாகிஸ்தான்-ஆப்கனில்-160க்கும்-மேற்பட்டோர்-பலி-ஆயிரக்கணக்கானோர்-காயம்/article7805865.ece?homepage=true

  • தொடங்கியவர்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஃப்ரிடி ரூ.50 லட்சம் நிதியுதவி!

 

afridi.jpgபெஷாவர்: பாகிஸ்தானில் நிலநடுக்கம் பாதித்த பெஷாவர் பகுதிக்கு சென்ற கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

பாகிஸ்தானில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட பெஷாவருக்கு இன்று சென்ற கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 லட்சம் நிதியுதவி வழங்கிய அஃப்ரிடி, மற்ற கிரிக்கெட் வீரர்களும் உதவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

http://www.vikatan.com/news/article.php?aid=54287

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.