Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்த முடியாது: மார்க் சக்கர்பெர்க்!

Featured Replies

இந்தியா இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்த முடியாது: மார்க் சக்கர்பெர்க்!

 

mark%20zugarberk%20pic.jpgபுதுடெல்லி: இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில்,  இந்தியாவின் தொடர்பு இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்தமுடியாது என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள மார்க், டெல்லி ஐஐடி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவில் இருப்பது உற்சாகமாக இருக்கிறது. புது ஆற்றலை கொடுக்கிறது" என்று கூறினார்.

பின்னர் அவரிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு மார்க் அளித்த பதில்களும் வருமாறு:
 

இந்தியா வர வேண்டும் என்ற ஆர்வம் ஏன் வந்தது?

ஃபேஸ்புக்கின் முக்கிய மார்க்கெட்  இந்தியா. இங்குதான்  13 மில்லியன் பேர் ஃபேஸ்புக் வலைத்தளத்தை பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் பலர் இன்டர்நெட்டை கூட  பயன்படுத்துவதில்லை. அதனால் மக்களின்  பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள இங்கு வாய்ப்புக்கள் அதிகம். இந்திய மக்களிடையே தொடர்பை ஏற்படுத்துவது அவசியம்.

உலகிலேயே ஃபேஸ்புக் அதிகம் பயன்படுத்துபவர்களில் இந்தியா 2-ம்  இடத்தில் உள்ளது. இந்தியாவின் தொடர்பு இல்லாமல் உங்களால் உலக நாடுகளிடையே தொடர்பு ஏற்படுத்த முடியாது. எனவே இந்தியாவில் ஆன்லைன் பயன்பாடு இன்னும் அதிகரித்து பில்லியன் எண்ணிக்கையைத் தொட வேண்டும் என விரும்புகிறோம்.

அதனால் இந்தியா வந்துள்ளது உற்சாகமாக உள்ளது. இன்டர்நெட் பயன்படுத்துபவர்களால் வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும். வறுமையை ஒழிக்கவும்  வழி செய்ய முடியும்.
 

கேண்டி கிரஷ் (candy crush) கோரிக்கைகளை எவ்வாறு தடுப்பது?

அதற்கான தீர்வை காணும் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். விரும்பும் ஃ பேஸ்புக் பயனாளிகளுக்கு மட்டும் கேண்டி கிரஷ் கோரிக்கை வரும் வசதியை விரைவில் கொண்டுவருவோம்.

தற்போதுள்ள சூழலில் ஃபேஸ்புக்கிடம் இருந்து எந்த மாதிரியான புதுமைகளை எதிர்பார்க்கலாம்?

அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இன்னும் மேன்மையான கம்ப்யூட்டர் சிஸ்டம்களை உருவாக்க நினைக்கிறோம். அதன் மூலம் உலகின் பல மொழிகளை இன்னும் எளிதாக மொழி பெயர்க்கவும், எளிதில் புரிந்து கொள்ளவும் முடியும்.

 Internet.org என்ற திட்டத்தின் மூலம் இனைய சேவையை கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த திட்டம் மூலம் 12 மில்லியன் பேர் இணைய வசதி பெறுகின்றனர்.

ஃபேஸ்புக் மூன்று முக்கிய தடைகளை அகற்ற முயற்சித்து  வருகிறது. அதன் படி இணைய வசதி பெறுவதற்காக சாத்தியமான வழிகளுக்கு முதலீடு செய்வது, குறைந்த இணைய டேட்டாவை பயன்படுத்தும் அப்ளிகேசன்கள் மீது கவனம் செலுத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவற்றை செயல்படுத்துவோம்.

mark%20in%20india.jpg

மார்க் சூப்பர் பவாராக உதவியது எது?

மிகச் சிறந்த தொழில்நுட்பங்களில் ஒன்றுதான் மக்களை சூப்பர் பவராக்குகிறது.

கல்வித்துறையில் ஃபேஸ்புக்கின் பங்கு?

 ஆன்லைன் மூலம் கல்விக்கான விபரங்களை அளித்து வருகிறோம். இது முன்னேற்றத்திற்கான பெரிய பங்கு.

நெட் நியூட்ராலிட்டி பற்றி?

ஜீரோ ரேட் தயாரிப்புக்கள் மாணவர்களுக்கு பெரிதும் உதவும். மீனவர்களும் இதை பயன்படுத்தி தங்களின் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளலாம்.

தாஜ்மஹால் சென்ற அனுபவம் பற்றி...

தாஜ்மஹால் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அது காதலின் அடையாளம்.

இவ்வாறு அவர் கூறினார்.


முன்னதாக மார்க்,  இந்தியா கேட் பகுதியில் காலையில் தனது சகாக்களுடன் வாக்கிங் , ஜாக்கிங் சென்றார். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

http://www.vikatan.com/news/article.php?aid=54327

  • தொடங்கியவர்

கேண்டி கிரஷ் முதல் நெட் நியூட்ராலிட்டி வரை: டெல்லியில் மார்க் பகிர்ந்த 10 'ஸ்டேட்டஸ்'

 

 
டெல்லி ஐஐடி-யில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் | படம்: ஏஎப்பி
டெல்லி ஐஐடி-யில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் | படம்: ஏஎப்பி

இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் புதன்கிழமை டெல்லி ஐஐடி-யில் டவுன்ஹால் கேள்வி - பதில் நிகழ்வின் மூலம் பேராசிரியர்களையும் மாணவர்களையும் சந்தித்துப் பேசினார்.

இதை முன்னிட்டு காலையிலேயே மாணவர்கள் கூட்டம் களைகட்டியது. டவுன்ஹால் முழுவதும் சிறிது நேரத்திலேயே நிரம்பியது. அதில் மார்க் பேசியதின் சுருக்கப்பட்ட வடிவம்:

* "இந்தியாவில் 13 கோடிக்கு மேற்பட்ட மக்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர். இங்கே முக்கியத்துவம் வாய்ந்ததும், செயல்பாடுகள் நிறைந்ததுமான சமுதாயத்திடம் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது இந்தியாவில் இருப்பது உற்சாகத்தை அளிக்கிறது. இங்கிருக்கும் உங்களின் ஆற்றல், என்னை வியக்க வைக்கிறது.

* இந்தியா மிகப்பெரிய மக்களாட்சியைக் கொண்ட நாடு. உலக மக்கள் அனைவரையும் இணையத்தில் இணைக்க எண்ணும்போது, உங்களால் இந்தியாவைப் புறக்கணிக்க முடியாது.

* இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பத்து பேரிலும், ஒருவர் வேலை பெறுகிறார்; மற்றொருவர் வறுமையில் இருந்து வெளியே வருகிறார். இணையப் பயன்பாடு, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.

* இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி (Internet.org) இப்போது 24 நாடுகளில் உள்ளது. இதன்மூலம், உலகம் முழுக்க ஒன்றரை கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த முயற்சியால், இந்தியாவில் மட்டும் பத்து லட்சம் பேர் இணைய வசதி பெற்றுள்ளனர். 'இலவச அடிப்படை இணையம்' மூலம், மக்கள் எல்லா இணைய வசதிகளையும் பயன்படுத்த முடியாது. ஆனால் அடிப்படை இணையம், எதற்காக இணையம் தேவை என்ற புரிதலை அவர்களிடத்தில் ஏற்படுத்தும்.

* கேள்வி - பதில் நேரத்தில் ஒருவர் கேட்ட, 'கேண்டி கிரஷ் அழைப்புகளை எப்படித் தவிர்ப்பது?' என்ற கேள்விக்கு அரங்கமே அதிர்ந்தது. பதிலளித்த மார்க், "அதற்கான தீர்வைக் கண்டறிந்து கொண்டிருக்கிறோம்" என்றார்.

* என்ன மாதிரியான சூப்பர் பவரை விரும்புவீர்கள்? என்ற கேள்விக்கு, "தொழில்நுட்பம். அதன்மூலம் என்ன வகையான சூப்பர் பவர் வேண்டுமோ, அதை நீங்கள் பெறலாம்" என்றார் மார்க்.

* ஃபேஸ்புக்கில் என்ன புதிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்? என்று கேட்டதற்கு, "5 முதல் 10 வருடங்களில் ஃபேஸ்புக்கில் சிறந்த முறையில் மொழிமாற்றம் செய்து, அனைவரும் அனைத்து மொழிகளையும் புரிந்துகொள்ளும் வகையில், கணிப்பொறி அமைப்புகளை மாற்ற எண்ணியிருக்கிறோம்" என்றார்.

* "வருங்காலத்தில் தகவல்களை சேமித்து வைப்பதிலும், பகிர்ந்து கொள்வதிலும் காணொலி முக்கியப் பங்கு வகிக்கும். இப்போது நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவுத்திறன் சார்ந்த செயல்திட்டத்தின் மூலம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் படத்தைத் தொட்டுணர முடியும்" என்றார்.

* "மனிதர்களைப் புண்படுத்தும் வேலைகளில் ஈடுபடுவோரின் செயல்களைத் தடுப்பதற்கான நெறிமுறைகளை உருவாக்கி வருகிறோம்" என்று ஃபேஸ்புக்கின் எதிர்காலத் திட்டம் பற்றி விவரித்தார்.

* "இலவச அடிப்படை இணையம், ஒருபோதும் இணைய சமவாய்ப்பை (நெட் நியூட்ராலிட்டி) எதிர்க்கவில்லை. இணைய சமவாய்ப்பு என்பது முக்கியமானது. அதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். மக்கள் புதிதாக ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க நினைத்து, பின்னர் என்ன செய்வது என்று யோசித்துத் தேங்கிவிடும் போக்கு தற்போது பெருகி வருகிறது" என்றார் மார்க்.

http://tamil.thehindu.com/india/கேண்டி-கிரஷ்-முதல்-நெட்-நியூட்ராலிட்டி-வரை-டெல்லியில்-மார்க்-பகிர்ந்த-10-ஸ்டேட்டஸ்/article7814127.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.