Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொடரும் அகதிகள் துயரம்: 13 குழந்தைகள் உட்பட 22 பேர் கடலில் மூழ்கி பலி

Featured Replies

தொடரும் அகதிகள் துயரம்: 13 குழந்தைகள் உட்பட 22 பேர் கடலில் மூழ்கி பலி

 

துருக்கியிலிருந்து கீரீஸுக்கு வந்த அகதிகள் படகு மூழ்கியது, நீரில் தத்தளிப்பவர்களை காப்பாற்றும் மீட்புப் பணியினர். | படம்: ஏ.எஃப்.பி.
துருக்கியிலிருந்து கீரீஸுக்கு வந்த அகதிகள் படகு மூழ்கியது, நீரில் தத்தளிப்பவர்களை காப்பாற்றும் மீட்புப் பணியினர். | படம்: ஏ.எஃப்.பி.

ஐரோப்பாவுக்குள் எப்படியாவது நுழையும் முயற்சியில் கிரீஸ் நாட்டு காலிம்னோஸ் மற்றும் ரோட்ஸ் தீவு நோக்கி வந்த அகதிகள் படகு கடலில் மூழ்கி 22 பேர் பலியாகியுள்ளனர். இதில் 13 பேர் குழந்தைகள்.

ஆனால், 144 பேர் காப்பாற்றப் பட்டதாக கிரீஸ் நாட்டு துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமையான இன்று காலை காலிம்னோஸ் தீவில் 19 சடலங்கள் கரையொதுங்கின. இதில் 6 பெண்கள், 10 குழந்தைகள் அடங்கும்.

துருக்கியிலிருந்து படகில் காலிம்னோஸ் தீவுக்கு இந்த அகதிகள் வந்துள்ளனர். இதே போல் ரோட்ஸ் அருகே கடலில் மேலுமொரு படகு கவிழ்ந்து சிலர் பலியாகியுள்ளனர்.

துருக்கியிலிருந்து கிரீஸுக்கு வரும் முயற்சியில் அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 68 அகதிகள் பலியாகியுள்ளனர்.

சிரியாவில் ஐ.எஸ். ஆக்ரமிப்பு பகுதியில் அரசப் படைகளின் கடும் தாக்குதல்களை அடுத்து ஆயிரக்கணக்கில் அங்கிருந்து மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். இதில் பலரும் நடுக்கடலில் மூழ்கி பலியாவது ஒரு வாடிக்கையான துயரமாகவே மாறிவிட்டது.

கிரீஸின் லெஸ்பாஸில் மட்டும் இந்த ஆண்டு சுமார் 3 லட்சம் அகதிகள் நுழைந்துள்ளனர். இதில் சுமார் 1 லட்சம் பேர் அக்டோபரில் மட்டும் வந்துள்ளனர். கடற்காற்றை தாங்காத சிறிய மரப்படகில் இவர்கள் வருகின்றனர், இதனால் படகுகள் முறிந்து கடலில் மூழ்கி பலியாகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/world/தொடரும்-அகதிகள்-துயரம்-13-குழந்தைகள்-உட்பட-22-பேர்-கடலில்-மூழ்கி-பலி/article7822856.ece

  • தொடங்கியவர்

அகதிகள் படகு மூழ்கி 38 பேர் பலி?

உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியா, இராக், ஆப்கானிஸ் தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். தற்போதைய நிலையில் கிரீஸ் தீவுகள் மற்றும் துருக்கி நாட்டில் நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் கரையேறி வருகின்றனர்.

இந்நிலையில் கிரீஸ் நாட்டின் லெஸ்பாஸ் தீவுப் பகுதியை நோக்கி 283 அகதிகளுடன் நேற்று மரப் படகு வந்து கொண்டிருந்தது. இந்தப் படகு தீவுக்கு அருகில் நெருங் கியபோது எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கியது.

கிரீஸ் கடலோர காவல் படையினர் விரைந்து செயல் பட்டு 242 பேரை மீட்டனர். 3 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் 38 பேரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

http://tamil.thehindu.com/world/அகதிகள்-படகு-மூழ்கி-38-பேர்-பலி/article7821986.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.