Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் வருமா காவடிக்குத் தடை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வருமா காவடிக்குத் தடை? 
[Sunday 2015-11-01 08:00]

இந்துக்களின் மத பழக்க வழக்கங்களுக்கு கனடாவில் தடை விதிக்கப்படுமா என்பது தொடர்பில் தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன.  காவடி எடுக்கும் பொழுது செடில் என்கின்ற முள்ளுக்குத்தி எடுப்பதானது காட்டுமிராண்டித்தனமானது என்றும். இவ்வாறான மதப்பழக்கங்களை கனடாவில் தொடருவதற்கு அனுமதிக்க முடியாது என முன்னைய அரசாங்கமும் கண்சவேட்டிவ் கட்சியும் திட்டவட்டமாக அறிவித்திருந்தன.

இந்துக்களின் மத பழக்க வழக்கங்களுக்கு கனடாவில் தடை விதிக்கப்படுமா என்பது தொடர்பில் தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன.  காவடி எடுக்கும் பொழுது செடில் என்கின்ற முள்ளுக்குத்தி எடுப்பதானது காட்டுமிராண்டித்தனமானது என்றும். இவ்வாறான மதப்பழக்கங்களை கனடாவில் தொடருவதற்கு அனுமதிக்க முடியாது என முன்னைய அரசாங்கமும் கண்சவேட்டிவ் கட்சியும் திட்டவட்டமாக அறிவித்திருந்தன.
இந்துக்களின் மத பழக்க வழக்கங்களுக்கு கனடாவில் தடை விதிக்கப்படுமா என்பது தொடர்பில் தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன. காவடி எடுக்கும் பொழுது செடில் என்கின்ற முள்ளுக்குத்தி எடுப்பதானது காட்டுமிராண்டித்தனமானது என்றும். இவ்வாறான மதப்பழக்கங்களை கனடாவில் தொடருவதற்கு அனுமதிக்க முடியாது என முன்னைய அரசாங்கமும் கண்சவேட்டிவ் கட்சியும் திட்டவட்டமாக அறிவித்திருந்தன.


எனினும் இது இப்பொழுது வேறு திசையில் பிரச்சினை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. குறிப்பாக இவ்வாறான சம்பவங்களை அறிவிப்பதற்கென ஒரு தொலைபேசிச் சேவையை ஆரம்பிப்பதற்கும் பொலிசாரைப் பணிக்கமர்த்துவதற்கும் 8 மில்லியன் டொலர்களை ஒதுக்குவதற்குமான உறுதிமொழியை தேர்தல் காலத்தில் கண்சவேட்டிவ் கட்சியின் முக்கியஸ்தரான கிறிஸ் அலெக்ஸ்சான்டர் விடுத்திருந்தார்.

இந்த விவகாரம் பற்றி லிபரல் கட்சி நேரடியாகக் கருத்தேதும் தெரிவிக்காத போதும், இந்த விவகாரம் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பல இனப்பிரிவினரும் தங்களது சம்பிரதாயங்கள் குறித்து விவாதித்து வரும் வேளையில், தமிழர்கள் முதுகு மற்றும் கைகளில் செடில் குத்தி அவற்றில் கயிற்றின் துணை கொண்டு காவடியெடுப்பது, வாய் அலகில் வேல் குற்றுவது மற்றும் பறவைக் காவடி எடுப்பது என்பன இந்த விவகாரங்களிற்குள் அடங்கும் என்று பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்றதொரு அச்சநிலை தமிழர்களிடையே ருதுசாந்தி விழா என அழைக்கப்படும் பூப்புனித நீராட்டு விழா தொடர்பான விடயத்தில் ஏற்பட்ட போதும், அந்த அச்சம் ஓரளவு தவிர்க்கப்பட்டுள்ள நிலையில், செடில் குத்திக் காவடியெடுத்தல் தொடர்பான விவகாரத்தில் உண்மைநிலையை கனடியத் தமிழர் தேசிய அவை, கனடியத் தமிழ்க் காங்கிரஸ், கனடிய மனிதவுரிமை மையம் போன்றன விளக்க வேண்டுமெனவும், கனடாவிலுள்ள ஆலயங்கள் அனைத்தும் ஒன்றுகூடி இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டுமென்ற கோரிக்கை பக்தர்களிடையே எழுந்துள்ளது.

முக்கியமாக இது காட்டுமிராண்டித்தனமான பழக்க வழக்கமா என்பது கண்டறியப்பட்டு அதனை ஆலயங்கள் பக்தர்களிற்கு அறிவிக்கலாம் என்பதே பலரின் வேண்டுகோளாக இருக்கின்றன. எனினும் இது தொடர்பாக தமிழர்களின் தொடர்பாடல் மூலமே இதனை கனடா அரசாங்கத்திற்கு விளங்க வைக்க முடியும். இது தொடர்பில் பல்வேறு தரப்பட்டவர்களும், முயற்சித்தால் தமிழ் மக்களின் அதாவது இந்துக்களின் பழக்க வழக்கங்களில் ஒன்றான இந்த நேர்த்திக்கடன்களை காப்பாற்ற முடியும். இல்லையேல் இது புலம் பெயர் தேசங்களில் இருக்கும் நமது அடுத்த தலைமுறையினர் இவ்வாறான நிகழ்வுகளை மறக்கும் நிலையினை உருவாக்கி விடும் என்ற கருத்துக்கள் முன்வைக்கபப்பட்டுள்ளன.http://www.seithy.com/breifNews.php?newsID=143733&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.