Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

78 இந்திய மீனவர்கள் யாழ். நீதிமன்றங்களால் விடுதலை

Featured Replies

78 இந்திய மீனவர்கள் யாழ். நீதிமன்றங்களால் விடுதலை
78 இந்திய மீனவர்கள் யாழ். நீதிமன்றங்களால் விடுதலை
யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 78 இந்திய மீனவர்கள் இன்று ஊர்காவற்துறை மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பருத்தித்துறை மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
 
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மPனவர்களில் 19 பேரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, 19 நபர்களையும் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமாரும், பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய 59 மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜாவும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளனர்.
 
குறித்த மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
இந்திய மீனவர்கள் 126 பேர் விடுதலை
 
 

article_1447081881-gavel.jpgஇலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த  இந்திய மீனவர்கள் 126 பேர், யாழ்ப்பாணம், மன்னாரில் நேற்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களால் 78 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குள் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்ட 59 மீனவர்களைப் பருத்தித்துறை பதில் நீதவான் மா.சுப்பிரமணியம் விடுதலை செய்தார்.

ஊர்காவற்துறை கடற்பிராந்திய எல்லைக்குள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட 19 இந்திய மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் விடுதலை செய்தார்.

தீபாவளிப் பண்டிகையையொட்டி நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் உத்தரவின் பெயரில், இந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், மீனவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 41 பேரையும் விடுதலை செய்யுமாறு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ, நேற்று திங்கட்கிழமை(9) உத்தவிட்டார்.

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட  இந்திய மீனவர்கள் 41 பேரும், பல்வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, மன்னார் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளினூடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களில், முதலில் 35 மீனவர்களை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தால் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, விளக்கமறியலில் உள்ள 6 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த 41 இந்திய மீனவர்களும் விடுதலை செய்ய விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் நேற்று திங்கட்கிழமை, கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினால் மன்னார் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதன்போது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ, குறித்த அறிவுறுத்தலுக்கு அமைவாக, 41 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார். இவர்களில் 4 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் தற்போது, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு, கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா கூறினார்.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 7 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு மேலதிகமாக நேற்று காலையில் கரையொதுங்கிய நால்வரும், விடுவிக்கப்பட்டுள்ளனர்.

- See more at: http://www.tamilmirror.lk/158750/%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2-#sthash.HX7cVAJb.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.