Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய உணவு முறைநீண்ட நாட்களுக்குபலன் தராது!

Featured Replies

Tamil_News_large_139726220151127225720.j

சுக்ரா டயாபடீஸ் கேர் அண்டு ரிசர்ச் சென்டரின் மருத்துவர் கே.பரணீதரன்: நம் வழக்கத்தில் இல்லாத எந்த உணவு முறையும், நீண்ட நாட்களுக்குப் பலன் தராது. சர்க்கரை நோய் பிரச்னை இருந்தாலும், இல்லாவிட்டாலும், சமச்சீரான உணவு அனைவருக்கும் தேவை. 

ஒருநாளில் நாம் சாப்பிடும் உணவில், 50 சதவீதம் கார்போ ஹைட்ரேட், 20 சதவீதம் கொழுப்பு, 20 சதவீதம் புரதம், மீதி, 10 சதவீதம் தாதுக்களும், வைட்டமின்களும் உடலுக்குக் கிடைக்கும் விதமாக இருக்க வேண்டும்.தற்போது, உலக அளவில் நடந்து வரும் ஆய்வில், மரபியல் ரீதியில் நமக்குப் பழக்கமான உணவுகளை மட்டுமே, நம் உடல் ஒப்புக் கொள்கிறது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது, பல தலைமுறைகளாக நம் குடும்பத்தில் என்ன உணவுகளை சாப்பிட்டனரோ, அந்த முறையை பின்பற்றுவதே பாதுகாப்பானது. ஆனால், கடந்த, 10 ஆண்டுகளில், நமக்குக் கொஞ்சமும் பழக்கம் இல்லாத மேற்கத்திய உணவு முறைகள் தினசரி டயட்டில் இருக்கின்றன. இந்தக் காலக்கட்டத்தில் தான், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் கோடிக்கணக்கில் அதிகரித்துள்ளது. வெளிக்காரணிகளால் மனம் பாதித்து மன அழுத்தம், மனச்சோர்வு எப்படி ஏற்படுகிறதோ, அதேபோல நம் உடல் இத்தனை தலைமுறைகளாக பழகாத பீட்சா, பர்கர் உணவுகளை சாப்பிடும்போது பாதிக்கப்படுகிறது. நாம் சாப்பிடும் உணவு செரித்து குளுக்கோசாக மாறி, ரத்தத்தில் கலந்து உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. இந்த வேதி மாற்றத்திற்குப் பெயர், 'ஆக்ஸிடேஷன்!' இந்த உடல் உள்செயல்பாடு சரியாக நடந்தால் தான் திசு, செல்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும். இப்படி கிடைக்கும் சக்தியில், 60 சதவீதம் மூளைக்கு கிடைத்தால் தான் ஆரோக்கியமாக சிந்திக்க, செயல்பட முடியும். உடனடியாக உடலுக்கு சக்தி கிடைப்பது, கார்போ ஹைட்ரேட் உணவில் இருந்து தான். 

ஆனால், தற்போது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படாத சில உணவு முறைகளில், முழுக்கவே கொழுப்பு சார்ந்த உணவுகள் அல்லது காய்கறி, பழம் போன்ற நுண்ணுாட்டச் சத்துக்கள் அதிகம் உள்ளன.இன்னொரு விஷயம், இந்தியர்களின் உடல் அமைப்பு பட்டினியாக இருப்பதற்கே வெகு காலமாக பழகிவிட்டது. மரபுரீதியாக நாம் சிறிதளவு உணவு சாப்பிட்டு, உழைப்பதற்குக் கற்றுக் கொண்டோம். இதனால், நம் உடலுக்கு அதிக அளவிலான உணவை செரிமானம் செய்ய தெரியவில்லை. கொழுப்பு, சோடியம் அதிகம் உள்ள துரித உணவுகளைச் சாப்பிட்டு, உடல் உழைப்பே இல்லாமல் இருப்பதால், உடல் எடை பெரிய பிரச்னை ஆகிவிட்டது.
எந்தப் புதிய உணவு முறையும் நீண்ட நாட்களுக்குப் பலனைத் தராது. நம் சுற்றுப்புறச் சூழலுக்கும், பருவ நிலைக்கும் ஏற்ப, காலங்காலமாக என்ன உணவை உடல் பழகியிருக்கிறதோ, அது தான் பாதுகாப்பானது.

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.