Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

16 மறைநிலவுகளும் படிப்பினைகளும் - தமிழ்ப் புத்தாண்டு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015

16-ஆம் பதிவு

07.12.2015

     பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின் படி இவ்வாண்டின் 12 முழு நிலவு நாள்களும் அறியப்பட்டுள்ளன. அவ்வாறே 12 மறை நிலவு நாள்களின் பட்டியலையும் சரிபார்த்துக் கொள்வது தேவையாகிறது. ஏனெனில் இவ்வாண்டின் 12 வது மறைநிலவு நாள் வரும் 11.12.2015 அன்று அமையவிருக்கிறது. அத்துடன் மூன்று நாட்களில் ஆண்டு நிறைவு பெற்று விடும். மறுநாள் இனிய தமிழ்ப்புத்தாண்டு நாள் ஆகும்.

மறைநிலவு நாள்களின் பட்டியல் - 2015

 

வ.எண்

மறைநிலவு

வர வேண்டிய நாள் (ஆண்டின்......வது நாள்)

வந்த நாள்

 

1

முதலாவது

27

19.01.2015

 

2

இரண்டாவது

57

18.02.2015

 

3

மூன்றாவது

87

20.03.2015

 

4

நான்காவது

117

19.04.2015

 

5

ஐந்தாவது

147

18.05.2015

 

6

ஆறாவது

177

17.06.2015

 

7

ஏழாவது

207

17.07.2015

 

8

எட்டாவது

237

15.08.2015

 

9

ஒன்பதாவது

267

13.09.2015

 

10

பத்தாவது

297

12.10.2015

 

11

பதினொன்றாவது

327

11.11.2015

 

12

பன்னிரெண்டாவது

357

11.12.2015

+3 நாட்கள்

                                                                                                                             +3   14.12.2015 (ஆண்டு நிறைவு)

                                                                                                                         = 360

                                                                                                                ---------------------------

                                                                                                                ஆண்டு நிறைவு

                                     ----------------------------

குறிப்பு: முழுநிலவு தடுமாறினால் மறைநிலவின் தொடர் நாட்கள் மாறும். ஆனால் அதன் 15 நாள் முறை ஒரு போதும் மாறாது.

 

 

மறைநிலவு நாள் – செவ்வாய்க்கிழமை:-

     நிலவு என்றாலே அது முழுநிலவைக் குறிக்கிறது. மதியம் என்ற சொல், நாள் முதிர் மதியம் ஆகியவை தைப்பூச நிலவை மட்டும் குறிக்கப் பயன்பட்டு இருக்கலாம்.

 

     ஐ தேய்ந்தன்று பிறையும் அன்று

      மை தீர்ந்தன்று மதியும் அன்று    - (குறிஞ்சிக்கலி – 54-9-10)

    

     இவள் கண்ணுக்கு மையிட்டிருக்கிறாள். மை தீர்ந்தபாடில்லை. அதனால் மதியும் இல்லை. கொஞ்சம் கூட வட்டம் தேயவே இல்லை. அதனால் பிறையும் இல்லை என்று ஒரு விடலை வியப்பதாகச் செய்தி விரிகிறது.

     எது எப்படியாயினும் தமிழர்கள் மறைநிலவு நாளை நன்கு அறிந்து வைத்திருந்தனர். மறைநிலவு என்பது அண்மைக் காலப் பயன்பாடுதான். உவா என்றும், உவவு என்றும் இரண்டு சொற்கள் மறை நிலவைக் குறித்தாலும் உவவு என்பது நல்ல நாள், பெரிய நாள் ஆகிய மறைநிலவு முழுநிலவு இரண்டையுமே குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

     திருமந்திரம் மட்டுமே குழப்பத்திற்கு இடமின்றி உவா என்ற சொல்லால் மறைநிலவைக் குறிப்பிடுகிறது. புறநானூறு அதை உறுதி செய்கிறது.

     உவா என்ற சொல்லின் பொருள் என்ன? அது வேறு ஏதாவது ஒரு முழுச் சொல்லின் பிற்பகுதியாக இருக்குமா? என்பதெல்லாம் ஆய்வுக்குரியது.

     அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் தமிழ்ப்புத்தாண்டு புரிதல்களின் அடிப்படையில் மறைநிலவை, மறைநிலவு நாளைக் குறிக்கப் பயன்பட்ட சரியான தமிழ்ச்சொல் செவ்வாய் மற்றும் செவ்வாய்க்கிழமை என்பதாகும். இடைநாட்களிலும் செவ்வாய்க்கிழமை அமையும் அந்தச் செவ்வாய்க்கிழமை மறைநிலவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.

     வளர்பிறையின் 15-ஆம் நாளில் முழுநிலவு தோன்றினால் அன்று வெள்ளிக்கிழமை என்றும், தேய்பிறையின் 15-ஆம் நாளில் உவா அமைந்தால் அன்று செவ்வாய்க்கிழமை என்றும் மிகத் தெளிவாகப் பழந்தமிழர்கள் வகுத்திருக்கின்றனர்.

     ஆண்டு நாட்களில் சரிவு ஏற்படும் காலங்களில் முழுநிலவு நாளாகிய வெள்ளி தடுமாறினாலும் மறைநிலவு நாளாகிய செவ்வாய் தடுமாறாமல் கணக்கிடப்பட்டு நாளும் கிழமையும் பொருத்தப்பட்டிருக்கிறது என்பது வியப்பாகத் தோன்றும் உண்மை.

 

 

செவ்வாய் – வெள்ளி:-

     உண்மையில் மறைநிலவு நாளாகிய செவ்வாய் என்பது என்னவெனில், தேய்பிறையின் எல்லையில் 15-ஆம் நாளில் காலையில் கதிரவன் எழும்போது அதனுடன் தானும் பொருந்திப் பட்டப் பகலில் கதிரவனோடு சேர்ந்தே செல்லும் நிலவேயாகும். ஓரிரு நாட்களில் சற்றுப் பிந்தி வளர்பிறையின் இரண்டாம் நாளில் மெல்லிய கீற்றாகவும் மூன்றாம் நாளில் துலக்கமாகவும் மேற்கு வானில் கதிரவன் மறைந்த பிறகு தெரியும். சற்று நேரத்தில் மறைந்து விடும். ஒவ்வொரு நாளாக வளர்ந்து எட்டாம் நாளில் அரைவட்ட வடிவை எய்தித் தலை உச்சியில் மாலை 6 மணிக்குப் புறப்பட்டுப் பிறகு முழுவட்டமாக வளர்பிறையின் 15-ஆம் நாளில் கிழக்கில் முழுநிலவாகத் தோன்றும். அது வெள்ளி. ஆக செவ்வாயும், வெள்ளியுமாக நல்ல நாளும் பெரிய நாளும் தங்களுக்குள் 15 நாள்களைப் பகிர்ந்து கொண்டு அவற்றை ஒன்றிணைத்து ஒரு திங்கள் (மாதம்) என்றாக்கி, அதன் 12-ன் கூட்டமைப்பை ஓர் ஆண்டு ஆக்கியது மாந்த அறிவே அல்லாமல் இயற்கை என்று ஒதுக்கிட முடியாது.

 

செவ்வாய்க் கிழமையைக் கணித்தல்:-

     தமிழர்களின் மரபறிவில் மிகவும் ஊற்றமான பக்கம் மறைநிலவு பற்றியதாகும். அது அவ்வப்போது தட்டிப் பறிக்கப்படுகிறது. மீண்டும் தமிழர்கள் புரிந்து கொண்டு தலையெடுக்கிறார்கள். அத்தகைய மறைநிலவு எப்போது அமைகிறது என்று காத்திருந்து சொல்லத் தேவையில்லை. முழுநிலவை உறுதி செய்தே அன்றே அதனில் 15 நாள்களைக் கூட்டித் தமிழர் எவரும் அறிவித்து விடலாம். அறிவித்த பிறகு கண்காணிக்கலாம். ஒரு வேளை பிழை இருந்தால், மறைநிலவு நாளின் போது அன்று காலை 5.30 மணியளவில் கிழக்கு வானில் தேய்பிறையின் இறுதிக் கீற்று தெரிந்து விடும். அவ்வாறு தெரிந்து விட்டால் அதற்கு முன்பு தோன்றிய முழுநிலவைக் கணித்ததில் பிழை என்று தெரிந்து கொள்ளலாம்.

     கடந்த மூன்று ஆண்டுகளாக மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையத்தார் இயன்றவரை மறைநிலவைக் கணித்து விட்டுக் கண்காணித்து வந்திருக்கின்றனர். இதுவரை பிழை செய்து விடவில்லை. ஒரு வேளை பிழை என்று தெரிந்திருந்தால், அல்லது சுட்டிக் காட்டப்பட்டால் ஆண்டு நாள்களை ஒழுங்கு செய்யும் போது அதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தம்மைத் திருத்திக் கொள்வர்.

 

மறைநிலவு பற்றிய நுட்ப அறிவு:-

     மறைநிலவு நாள் பற்றிய தமிழர்களின் மரபறிவு என்பது இந்த உலகை வழி நடத்தும் ஆற்றல் உடையது. மெள்ள மெள்ளத் தமிழர்கள் அதனைப் புரிந்து கொண்டு பிற செயல்களை அன்று கைவிட வேண்டியது கடமை.

 

கைவிட வேண்டியது:-

     வாழை இலையை விரித்து அதில் பச்சரிசியைக் குவியலாகக் கொட்டி, காய்கறிகளைப் பரப்பி, தச்சிணையாக ரொக்கம் வைத்துக் கொடுத்தால் கையை நீட்டச் சொல்லி அதில் பச்சைத் தண்ணீரை மட்டும் ஊற்றி கைகழுவி விட்டுத் திரும்பிப் பார்க்காமல் போ!. பேரு, நாளு, நட்சத்திரம் சொல்லீட்டல்ல, ஒன் தோப்பனாருக்கு ஒரு வருடத்துக்கு இது போதும்! என்று மறைநிலவு நாளில் குளக்கரையில் ஆள்வைத்துத் திவசம் கொடுக்கும் செயலைத் தமிழர்கள் கைவிட வேண்டும்.

     தமிழர்களுக்கே சோறு போடாதவர்கள் தமிழர்களின் முன்னோரின் வயிற்றுப் பசியைத் தீர்க்க மாட்டார்கள்.

 

செய்ய வேண்டியது:-

     மறைநிலவு நாளில் வீட்டில் பெண்கள் விளக்கேற்றலாம். வானவியல் நிகழ்வுகளை நன்கு உற்றுப் பார்க்கலாம். நிலவு இல்லாததால் சிறுமீன்கள் எல்லாம் தம்மை அறிமுகம் செய்து கொள்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.

 

நோன்பு:-

     மறைநிலவு நாளை நடுவப்படுத்தி அதன் முன்பாக மூன்று நாட்கள் பின்பாக மூன்று நாட்கள் என முறையே 3+1+3=7 நாள்கள் ஒரு தொகுப்பாக, கண்ணியாகப் பின்பற்றப்படும் நோன்பு பழந்தமிழர் வழக்கத்தில் இருந்துள்ளது. அரச மகளிர் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு பெரும் வீரர்களை மணந்து வீரம் செறிந்த தலைமுறையினை உருவாக்கியிருக்கின்றனர்.

 

இவ்வாண்டின் கடைசிக் கண்ணி:-

     3+1+3 என்ற தொகுப்பின் கடைசிக் கண்ணியாக, 12 வது மறைநிலவை நடுவப்படுத்தி 11.12.2015-க்கு முன்பாக மூன்று நாள்கள் அதாவது 08.12.2015 தொடங்கி, பிற்பகுதி 3 நாள்கள் அதாவது 14.12.2015 வரை நோன்பிருந்து இந்த ஆண்டின் நிறைவை உறுதி செய்யும் தமிழர்கள், தமது இனிய தமிழ்ப்புத்தாண்டு நாளைச் சரியாக 15.12.2015-ல் எதிர்பார்க்கலாம்.

 

அடுத்த ஆண்டில் வானவியல் பல்சக்கரம்:-

     முழுநிலவு, மறைநிலவு, வளர்பிறை, தேய்பிறை, வடசெலவு, தென்செலவு, ஆட்டை நிமிர்வு போன்ற நாட்களை நன்கு தெரிந்து கொண்டு தமிழர்கள் தமது வாழ்வியலைத் தகவமைத்துக் கொண்டால் வானம் வசப்படும்.

 

பெண்ணியல்பான தமிழ்:-

     பூப்பு, ஒதுங்கல், விலக்கு, காராட்டு போன்ற சொற்களைப் பழந்தமிழ் திறம்படக் கையாள்கிறது. கலம் தொடா மகளிர், மனையுறை மகளிர் போன்ற சொற்களும் கூர்த்த அறிவுடையவை. இவையனைத்தும் வானவியல், வழங்கியல் எனும் சுடர் வழங்கியல் காலச் சுழற்சி இவற்றோடு தொடர்புடையன.

 

மனை – அறை:-

     முழுநிலாவுக்கும் மறைநிலவுக்கும் இடையிலான நாள்கள் 14, முறையே திதிகள் என ஒன்று முதல் எண்ணப்படுகின்றன. இந்த 14-ன் தொகுப்பு இரண்டு கொண்டது ஒரு மனை ஆகும். அதாவது ஒரு மனையின் அறைகள் 28. இந்த 28-க்குள் நல்ல நாள் பெரிய நாள் தாண்டிச் சுழல்வதால் மகளிர் மனையுறை மகளிர் போலும். இருக்கட்டும்! இதில் மனைப்பட்டு, மனைஇருந்து என்ற சொற்கள் உயர் ஆய்வுக்கு உரியன. 24 மனைகள் சேர்ந்த இரண்டு ஆண்டுகளைச் சேர்த்துச் சேர்த்தே சுழற்சியை உடல் வசப்படுத்துகிறது.

 

     மனைப் பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு

     நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும்....... (தொல்-1064-12,13)

 

     புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனைஇருந்து

இடைச் சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி அன்புறு

தக்க கிளத்தல் தானே கிழவோன் செய்வினைக்கு அச்சம் ஆகும்

                                            (தொல் – 1101)

 

இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதால் பெண்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்வர் என்பதனை விடவும், பெண்ணியல்பானது தமிழ் என்பதனை விளங்கிக் கொள்வதுவே முதல் தேவை என்பது தமிழ்ப் புத்தாண்டுப் புரிதலை எளிமைப் படுத்தும்.

 

தென்னன் மகள்:-

     தென் பாண்டியர்களுக்கு முத்துமாலை ஒரு சிறப்புத் தகுதியானது போல இன்னொரு சிறப்பு இருக்கிறது. முத்தின் குளிர்ச்சி போன்றதே தமிழின் குளிர்ச்சியும். அதை இன்றும் என்றும் காத்து வருபவர்கள் அவர்களே என்பதுதான்.

     அதைவிடவும் சிறப்பு தமிழ்ப்பாவை தங்கள் குலக்கொடி என்ற பெருமிதம். இந்த உண்மையை இளங்கோவடிகளுக்கு அடுத்தபடியாக நன்கு விளங்கிக் கொண்டு எடுத்துச் சொன்னவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

 

     தென்னவன் தீதிலன்..................

     ..........நான் அவன் தன் மகள்

     வென் வேலான் குன்றில் விளையாட்டு

     யான் அகலேன்...................... (சிலம்பு – வாழ்த்துக் காதை -10)

 

     தென்னவன் தன் மகளைப்

     பாடுதும் வம் மெல்லாம்........(சிலம்பு- வாழ்த்துக் காதை-11)

 

     மன்னி அரசிருந்த

     மண்ணுலகப் பேரரசே!

     தென்னன் மகளே!.....................(கனிச்சாறு-1)

 

     போர்தாங்கும் மறவர்தம் தோள்களிலும், முதுகிலும் நடை பயின்ற தமிழ்ப்பாவைக்குப் பாறைகளே பிடித்த இடமாகிப் போனதில் வியப்பில்லை.

     இயற்கையைப், பெண்மையைத், தாய்மையை, தைப்பாவைப் பண்பினை மெள்ள மெள்ள உள்வாங்கித் தம்மைத் தகவமைத்துக் கொண்டால் மட்டுமே தமிழ்ப்புத்தாண்டு புரியும். பருவஞ்செய்யாப் பாலகருக்குப் புரியாது. பண்படாத வேற்று இனத்தார்க்கு ஒரு போதும் புரியாது. மற்றபடி தமிழ்ப்புத்தாண்டு குழந்தை போன்றது.

 

இனிய தமிழ்ப்புத்தாண்டு:-

      மறைநிலவில் மறைந்திருக்கும் பேருண்மைகள் ஆசான், மாணாக்கன் முறையினால் மட்டுமே செதுக்கிச் செதுக்கிப் புரிந்து கொள்ளப்படுவது  மரபு. தமிழ்ப் புத்தாண்டுப் புரிதலிலும் அந்த மரபைப் பின்பற்றலாம். எந்த ஒரு மறைநிலவும் சரியாக மூன்றாம் நாளில் மாதத்தை முடிக்கும். அவற்றுள் ஒன்று ஆண்டை முடிக்கும். அவ்வளவுதான்.

 

ஆக இனிய தமிழ்ப்புத்தாண்டு நாள் 15.12.2015.

 

....>>> இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் >>>...

 

 

 இது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015 : இன் வெளியீடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.