Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொல்லப்பட்ட 110 செய்தியாளர்களில் 9 பேர் இந்தியர்கள் : பத்திரிகையாளர்களுக்கு டேஞ்சரான நாடு இந்தியா

Featured Replies

கொல்லப்பட்ட 110 செய்தியாளர்களில் 9 பேர் இந்தியர்கள் : பத்திரிகையாளர்களுக்கு டேஞ்சரான நாடு இந்தியா

 

செய்தியாளர்களுக்கு டேஞ்சரான நாடு இந்திய என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு உலகம் முழுக்க கொல்லப்பட்ட 110 செய்தியாளர்களில் 9 பேர் இந்தியர்கள்.

med%20.jpg

'ரிபோர்ட்டர்ஸ் விதவுட் பார்டர்ஸ்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை,  கிரைம் செய்தியாளர்களும், அரசியல்வாதிகளை பற்றிய புலனாய்வு செய்திகள் தரும் செய்தியாளர்களும் கனிம வளக் கொள்ளை பற்றிய செய்தி வெளியிட்ட செய்தியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதில்  செய்தி சேகரிக்கும் இடத்திலேயே 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மற்ற  4 பேர் விபத்து ஏற்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்கள்.

இந்த வருட ஆய்வின்படி ஆசியாவில் அதிக செய்தியாளர்கள் கொல்லப்பட்டது இந்தியாவில்தான். எனவே ஆசியாவில் இந்தியா முதலிடம் பிடிக்கிறது. அடுத்த இடத்தை பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் பிடிக்கின்றன.

சர்வதேச நாடுகளை பொறுத்தவரை,  67 செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கும் இடத்திலேயே பலியாகியுள்ளனர். இன்னும் 43 பேர் எப்படி இறந்து போனார்கள் என்றே தெரிய வரவில்லை. சர்வதேச நாடுகளை பொறுத்த வரை சிரியாதான் செய்தியாளர்களுக்கு அச்சுறுத்தல் தரும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தை பிரான்ஸ் பிடிக்க பிரேசிலுக்கு 3வது இடம்.

http://www.vikatan.com/news/india/56967-india-deadliest-country-for-media-personnel.art

  • கருத்துக்கள உறவுகள்
அமைதிப் பூங்காவாக திகழும் நாடுகளில் தான் இந்த ஆண்டு அதிக அளவிலான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.   லண்டனை அடிப்படையாக கொண்டு இயங்கும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில்

அமைதிப் பூங்காவாக திகழும் நாடுகளில் தான் இந்த ஆண்டு அதிக அளவிலான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. லண்டனை அடிப்படையாக கொண்டு இயங்கும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில் "இந்த ஆண்டு உலகம் முழுவதும் 110 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 67 பேர் செய்தி சேகரிப்பில் ஈடுப்பட்டிருந்த போது கொல்லப்பட்டுள்ளனர். மீதமுள்ள 43 பேரின் படுகொலை பற்றி தெளிவான தகவல் இல்லை. உலகம் முழுவதும் தொழில் ரீதியாக அல்லாமல் மக்கள்-ஊடகவியலாளர்கள் பிரிவில் பணியாற்றிய 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஊடக நிறுவனங்களில் வேலைப்பார்த்த 7 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்றில் 2 பங்கு ஊடகவியலாளர்கள் அமைதி தவழும் நாடுகளில் கொல்லப்பட்டுள்ளனர்.

   

2014-ம் ஆண்டில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் மூன்றில் 2 பங்கு பேர் போர் நடைபெற்ற நாடுகளில் கொல்லப்பட்டது குறிப்பிட்டத்தக்கது. இந்த ஆண்டு உலக அளவில் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தாக விளங்கிய நாடுகள் பட்டியலில் சிரியா முதல் இடத்தில் உள்ளது. சிரியாவில் 11 பேரும் ஈராக்கில் 10 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இந்தியாவில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் பணியில் இருக்கும் போது கொல்லப்பட்டுள்ளனர். 4 பேரின் மரணம் நிகழ்ந்த சூழ்நிலை பற்றி தெளிவான தகவல் இல்லை. ஆசியாவில் ஊடகவியலாளர்கள் வேலை செய்வதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதல் இடத்தில் உள்ளது. மேலும் இந்த படுகொலைகள் பற்றி இந்திய அரசு அதிகாரிகள் காட்டும் அலட்சியம் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது. ஊடகவியலாளர்களைக் காப்பதற்காக இந்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டுவரும் அளவிற்கு இந்தியாவில் அவர்களின் பாதுகாப்பு மோசமாக உள்ளது. எனவே ஊடகவியலாளர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=148087&category=IndianNews&language=tamil

  • தொடங்கியவர்

செய்தியாளர்களுக்கு ஆபத்தான இரண்டாவது நாடு பிரான்ஸ்'

 

உலகில் ஊடகவியலார்களுக்கு மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.

'செய்தியாளர்களுக்கு ஆபத்தான இரண்டாவது நாடு பிரான்ஸ்'
I 'செய்தியாளர்களுக்கு ஆபத்தான இரண்டாவது நாடு பிரான்ஸ்'

இந்த ஆண்டு ஜனவரியில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகையின் தலைமையகத்தில் ஊடகவியலாளரகள் கொலை செய்யப்பட்டதை அடுத்து உலகில் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த தாக்குதலில் செய்தியாளர்கள் 9 பேர் கொல்லப்பட்டிருந்ததுடன் இந்த ஆண்டில் மாத்திரம், தமது பணியை செய்ததற்காக பிரான்ஸில் மொத்தம் 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பட்டியலில் முதலாவது இடத்தில் சிரியா உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டில் தமது தொழில் காரணமாக மொத்தமாக 69 செய்தியாளர்கள் பலியாகியுள்ளதாக சிபிஜே எனப்படும் ஊடகவியாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

அதில் 40 வீதமானோர் அதாவது 28 பேர் இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

இராக், பிரேசில், வங்கதேசம், தென் சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இந்த ஆண்டு குறைந்தது 5 செய்தியாளர்களாவது கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 23 வரை தமது பணியை செய்த்தற்காக கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும் .

2014 இல் இவ்வாறு பலியாகியிருந்த ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 61 என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மரணமடைந்திருந்த செய்தியாளர்களில் குறைந்தது 26 பேரின் இறப்பு அவர்களது தொழில் காரணமாகவா ஏற்பட்டது என்பது குறித்து சிபிஜே விசாரித்து வரும் நிலையில் இந்த ஆண்டில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் மொத்த தொகை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சிரியா முதலிடம்:

ஊடகவியலாளர்களுக்கு மிகவும் மோசமான நாடுகளின் பட்டியிலில் கடந்த நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் சிரியா உள்ளது.

151127104545_ramallah_journalists_640x36  

இந்த ஆண்டில் 13 ஊடகவியலாளர்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை குறைவாகும்.

இஸ்லாமிய அரசு என தம்மை அழைத்துக் கொள்ளும் குழு சிரியாவில் தமது கட்டுப்பாட்டு பகுதியை விஸ்தரித்துள்ள நிலையில் அந்தப் பகுதியில் கடமையாற்றும் செய்தியாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை இதற்கு காரணம் என குறிப்பிடும் சிபிஜே, அங்கு நடைபெறும் வன்முறைகளை கண்காணிப்பதில் நிலவும் சிரம்ம் அதிகரித்துள்ளமையும் இதற்கு காரணங்கள் என தெரிவித்துள்ளது.

போர் காரணமாக அல்லலுறும் லிபியா, ஏமன், இராக் போன்ற ஏனைய நாடுகளில் தகவல்களை கையாள்வதில் கட்டுப்பாடுகள் உள்ளமையும் உலகளவில் கொல்லப்பட்ட செய்தியாளர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணிக்கமுடியாமல் உள்ளமைக்கு காரணமாக இருக்கலாம்.

உலகளாவிய ரீதியில் தமது தொழில் காரணமாக இலக்கு வைத்து கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள், மோதல்களில் இடையில் அகப்பட்டு பலியான செய்தியாளர்கள் மற்றும் ஏனைய ஆபத்தான செய்திப் பணிகளின் போது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விபரங்களையும் சிபிஜே வெளியிட்டுள்ள இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

http://www.bbc.com/tamil/global/2015/12/151229_cpjreport.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.