Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சுவார்த்தைகளும் இந்தியாவும் .

Featured Replies

 

83 இலங்கையில் இனக்கலவரம் நடந்து முடிந்த நேரம் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்கு சென்றுவிட்டு tube இல் வீடு திரும்புகின்றேன் .ஊர்வலத்தில் தந்த நோட்டிஸ்கள் சில எனது bag இல் இருந்தது .தமிழ் முகங்களை காணும் போது கொடுப்பதற்காக வைத்திருந்தேன் .


 

Dollieshill Station தமிழ் முகம் என்று நம்பி நோட்டிசை நீட்டிவிட்டேன் .தந்தான் பாரு பேச்சு ஆங்கிலம்,சிங்களத்தில் .ஒரு வசனம் இன்றும் மனதில் இருக்கு " இந்த கலவரத்துடன் நிற்காது முழு தமிழர்களையும் கடலுக்குள் தள்ளி முடித்துவிடுவோம் "

நானும் விடாமல் "எமது விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதம் வருது அடுத்த பொங்கலுக்கு தமிழ் ஈழம் எழுமென்றால் பண்ணிப்பாரும் " அடுத்த ஸ்டேசனில் நான் இறங்கிவிட்டேன் .

இரண்டு வருடங்கள் ஓடியிருக்கும்.இந்திய அரசின் அனுசரணையுடன் திம்பு பேச்சுவர்த்தைக்கு அரசுடன் பேச அனைத்து முக்கிய இயக்கங்களும் புறப்படுகின்றார்கள்.நாலு அம்ச கோரிக்கையை முன்வைக்கின்றார்கள்.அப்போது முழுதாக தமிழ் ஈழம் என்பதன் சாத்தியம் எனக்கு சந்தேகத்திற்கு இடமாகிவிட்டது .

அதற்கு முதலே சில விடயங்கள் என்னை உறுத்திக்கொண்டு இருந்தது.


 

ஜே ஆர் திரும்ப திரும்ப தமிழ் நாட்டில் இருக்கும் பயிற்சிமுகாம்களை மூடிவிட்டால் ஒருநாளில் அனைத்து இயக்கங்களையும் அழித்துவிடுவேன் என்கின்றார் .

இந்தியா தமிழ் நாட்டில் அப்படி எதுவித பயிற்சி முகாம்களும் இல்லை என்று பச்சை பொய்யை சொல்கின்றது .

அனைத்து இயக்க தலைவர்களும் முக்கால்வாசி போராளிகளும் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றார்கள் .

இந்தியாவில் நான் சந்திக்கும் அனைத்து பத்திரிகையார்களும் சரி சந்தித்த சில கொள்கைவகுப்பாளர்களும் சரி தமிழ் ஈழத்தின் சாத்தியம் இல்லை என்றதையே சொல்லிவந்தார்கள் .

அதை விட பார்த்தசாரதி அனைத்து இயக்க தலைவர்களுக்கும் தமிழ் ஈழம் என்று ஒன்று அமைய இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது என்பதை அழுத்தம் திருத்தமாக சொன்னாராம் .


 

டெல்கியில் இருக்கும் போது இந்தியாவின் பிரமாண்டமும் அவர்களுக்குள்ளேயே இருக்கும் பிரச்சனைகளும் நாம் வியந்து பார்க்கும் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கேட்பாரர்ரவ்ர்களாக உலா வருவதும் எமது பிரச்சனை அவர்களுக்கு ஆயிரத்துடன் ஒன்று போலவும் பல வட இந்தியா பாராளுமன்ற அங்கதவர்களுக்கே இலங்கையில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் இருந்ததும் தான் உண்மை.


 

இந்தியா என்ற பெரிய பொறிக்குள் எமது போராட்டம் முற்றுமுழுதாக அகப்படுவிட்டதாக உணர்ந்தேன் .

ஒன்று அவர்கள் சொல் படி ஆடவேண்டும் அல்லது அழியவேண்டும் என்ற நிலைதான் இருந்தது .

எமது பிரச்சனையில் அக்கறை கொண்ட பல பத்திரிகையாளர்கள் இந்தியாவை பகைக்காமல் பட்டும் படாமல் உங்கள் போரட்டத்தை இலங்கைக்கே நகர்த்துவதுதான் புத்திசாலித்தனம் என்றார்கள் .


 

இதில் இன்னொரு விடயத்தையும் சொல்லவேண்டும் எமது விடுதலை இயக்கங்ககளையும் அவர்கள் வெவ்வேறு விதமாக கையாண்டார்கள் .தமது செல்ல பிள்ளைகளாக டெலோ ,ஈபி ஈரோசையும் கள்ள பிள்ளையாக புலிகளையும் வேண்டா பிள்ளையாக புளோட்டையும் வைத்திருந்தார்கள் .வெளிப்படையில் அந்த மூன்று அமைப்புகளையும் தாங்கள் உதவி செய்ததாக காட்டிக்கொண்டார்கள் அவர்களும் அதை பெருமையாக நினைத்து உதவிகளையும் பெற்றுவந்தார்கள் .


 

புலிகள் பற்றிய இந்தியாவின் நிலைப்பாடு படு இரகசியமாகவே இருந்தது .மற்றைய இயக்கங்களுக்கு ஆயுத பயிற்சி கொடுத்ததை பல பத்திரிகை எழுதின ஆனால் புலிகளுக்கு பயிற்சி கொடுத்தது பற்றி எழுதவில்லை .புலிகளும் இந்தியாவில் பயிற்சி எடுத்ததை மறைத்தே வந்தது .ஆயுதங்கள் ,தொழில் நுட்ப சாதனங்கள் புலிகளுக்கு வருவதை கண்டும் காணமால் விட்டே இருந்தார்கள் .அனுராதபுர பொதுமக்களின் மீதான புலிகளின் தாக்குதல் இந்த கள்ள உறவை கொஞ்சம் வெளியில் கொண்டுவந்தது .நீங்கள் பொதுமக்களில் கை வைத்தால் நாங்களும் வைப்போம் என்று சிறிலங்கா அரசிற்கு ஒரு பாடம் புகட்ட இந்த தாக்குதல் நடந்ததாக அனிதா பிரதாப் இந்தியா ருடெயில் எழுதியிருந்தார் .பின்னர் டெலோ மீது புலிகளின் தாக்குதலும் சிறி கொலையின் போதும் இந்தியா மௌனமாக இருந்தது அந்த கள்ள உறவை உறுதிப்படுத்தியது .இந்தியா நினத்திருந்தால் ஒரு மணித்தியாலத்தில் டெலோ மீதான தாக்குதலை நிறுத்தியிருக்கலாம் .


 

வேண்டா பிள்ளை புளொட் பற்றி பார்ப்போம் .

புளொட்டின் பிரச்சனையே தலைமை தான் .தன்னை கொஞ்சம் விபரம் தெரிந்தவராக காட்ட வெளிகிட்டு மாட்டுப்பட்டுவிட்டார் என்று நினைகின்றேன் .இந்திராகாந்தி சந்திப்பு வேறு எந்த இயக்க தலைமையும் சந்தித்ததாக நான் அறியவில்லை ,மொரிசியஸ் விஜயம்.மறைவு வாழ்க்கை இல்லாமல் பல பத்திரிகையாளர்கள் தொடர்பால் பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பது ,தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் தொடர்பு ,பொதுக்கூட்டங்களில் தோன்றுவது ,இந்திய கொள்கை வகுப்பாளர்களுடன் முரண்பாடு ,வங்கம் தந்த பாடம் (உமா எழுதாவிட்டாலும் புளொட்டில் விழுந்த பழி ),ஆயுத கொள்வனவு ஆயத்தம் .

இந்தியா அனைத்து இயக்கங்களுக்கும் பயிற்சி கொடுத்துக்கொண்டு இருக்கும் போது புளொட்டுக்கான பயிற்சியை இடையில் நிறுத்தியது .புளொட்டுக்கு வந்த ஆயுத கப்பலை கைப்பற்றியது .தலைமை டெல்கியில் பார்தசாரதி ,பண்டாரி போன்றவர்களை சந்தித்து நல்லுறைவை பேண முயற்சித்தாலும் ரோ அவரை ஒதிக்கிவைப்பது கண் கூடாகத்தெரிந்தது .

சிலர் உட்கொலைகள் தான் காரணம் என்று கூறுகின்றார்கள் ரோ விற்கு அது பற்றி எதுவித அக்கறையும் இல்லை .


 

இதுதான் இயக்கங்கள் இந்திய உறவு பற்றிய எனது கண்ணூட்டம்.


 

திம்பு பேச்சுவார்த்தை இரண்டு கட்டங்களில் நடைபெற்று தோல்வியில் முடிந்தது .இதற்குள் அன்ரன் பாலசிங்கம் ,சந்திரகாசன் நாடு கடத்தல் என்ற நாடகமும் நடந்தது.


 

திம்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தாலும் இந்தியா தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்தது .அனைத்து இயக்க தலைவர்களும் டெல்கி வரவழைக்கபட்டு அருண் நேரு ? பேச்சுவார்த்தை நடத்தினார் என்று நம்புகின்றேன் .


 

இதே நேரம் வெளிப்படையாக தமிழ் நாட்டில் எம் ஜி ஆர் புலிகளுக்கு ஆதரவு கொடுக்க தொடங்கியிருந்தார் நாட்டிலும் புலிகள் பல தாக்குதல்களை நடாத்திகொண்டிருந்தார்கள் .


 

 

Edited by arjun
எழுத்து பிழை திருத்தம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.