Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் 'வாய்ஸ்' ஆன்டன் பாலசிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரனின் 'வாய்ஸ்' ஆன்டன் பாலசிங்கம்

விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனின் நண்பராக இருந்த ஆன்டன் பாலசிங்கம், நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்திருக்கிறார். இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமான "போர் - அமைதி' (ரஹழ் ஹய்க் டங்ஹஸ்ரீங்) என்ற அத்தியாயத்தில் பாலசிங்கம் அமைதியின் ஃபேஸ"க இருந்திருக்கிறார். போர் முனை யுக்திகளைப் பொறுத்தமட்டில் பிரபாகரன் அதைத் தன்னகத்தே வைத்துக்கொண்டார் என்பதில் சந்தேகமில்லை.

பாலசிங்கம் மரணம் அடைந்ததும் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "வாய்ஸ் ஆஃப் தி நேஷன்' என்று பாலசிங்கத்தை வர்ணித்துள்ளார் பிரபாகரன். இதில் "நேஷன்' என்று அவர் சொல்வது தனி ஈழத்தைக் குறிக்கும்! வெளி உலகத்திற்கு விடுதலைப்புலிகளின் "வாய்ஸ2க'வும், விடுதலைப் புலிகளுக்கு வெளி உலகத்தினர் வாய்ஸ"கவும் பாலசிங்கம் இருந்தார் என்பது பிரபாகரன் - பாலசிங்கம் உறவில் உள்ள சிறப்பம்சம்!

இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தை தடம் மாறிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் பாலசிங்கத்தின் மறைவு உண்மையில் விடுதலைப் புலிகளுக்கு கெட்ட நேரமாகவே அமைந்துள்ளது. இலங்கை அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தீவிரமாக இருக்கும்போது, பாலசிங்கம் தனக்கு எதிரான நோய்களுக்காக தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இது விடுதலைப் புலிகளுக்கு சோதனை காலமாகவே அமைந்தது.

அப்படியென்றால் "இதுவரை அப்படி சண்டையே நடக்கவில்லையா?' என்ற கேள்வி எழும். அவ்வப்போது இரு தரப்பும் சண்டை போட்டுக் கொள்வார்கள். பிறகு தங்களின் ஆயுதக் கிடங்குகளைப் பலப்படுத்திக் கொள்ள அமைதியாவார்கள். ஆனால் இந்த முறைதான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுவதுமாக மீறியுள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடைசியாக பாலசிங்கம் டி.வி. மீடியாவில் பேசியது என்பது கடந்த ஜூன் மாதம் நடந்தது. என்.டி.டி.விக்கு அப்போது பேட்டியளித்தார். விடுதலைப்புலிகள் சார்பாக இந்தியா மீது பாசம் பொழிந்தார். ராஜீவ் கொலைக்குப் பொறுப்பேற்று வருத்தம் தெரிவிப்பதுபோல் பேட்டியளித்து, விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவின் சப்போர்ட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாலசிங்கத்தின் தந்திரமான மூவாக அந்தப் பேட்டி இருக்கலாம்.

ஆனால் அந்தப் பேட்டி வெளிவந்த சூழ்நிலைகளைப் பார்த்தால் இலங்கை ராணுவத்தை சமாளிக்க விடுதலைப்புலிகளுக்கு இந்திய உதவியைக் கேட்டார் என்பதை விட, அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்காகவே பேசினார் என்பதே பொருத்தமானதாக இருக்கும். ஆனால் பாலசிங்கம் எதிர்பார்த்த பலன் கிடைக்காமலேயே அந்தப் பேட்டி வீணாகிப் போனது.

இலங்கை அரசுடன் நடைபெற்ற அனைத்து அமைதிப் பேச்சுவார்த்தைகளிலும் பாலசிங்கம்தான் விடுதலைப்புலிகளின் டீமை லீட் பண்ணினார். ஆனால் பேச்சுவார்த்தை முறிவு ஏற்பட்டு, போர் ஆரம்பித்து, என்.டி.டி.வி. பேட்டிக்குப் பிறகு மீண்டும் ஜெனிவாவில் இரண்டாவது பேச்சுவார்த்தை துவங்கிய போது விடுதலைப் புலிகள் டீமை பாலசிங்கம் தலைமேயற்று நடத்தவில்லை.

அதற்குப் பதிலாக "பொலிடிக்கல் விங்' லீடரும், ஹார்டுலைனருமான தமிழ்ச்செல்வனை ஜெனீவா பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் அனுப்பினர். ஒரு வழியில் சொல்லப் போனால் பாலசிங்கம் தவிர பிரபாகரனுடன் இருக்கும் அனைவருமே ஹார்டு லைனர்கள்! "தம்பி' என்று அழைக்கும் பருவத்தில் பிரபாகரனுடன் பழகத் துவங்கி, இன்று "தலைவர்' என்ற அந்தஸ்துக்கு அவர் வந்த பிறகும் பழகியவர் பாலசிங்கம்.

அந்தந்த பருவ கால வளர்ச்சிக்கு ஏற்ப பிரபாகரனை "தம்பி' என்றும், "தலைவர்' என்றும் அழைப்பதில் எந்தத் தயக்கமும் காட்டாதவர் பாலசிங்கம். பிரபாகரனுக்கு பாலசிங்கம் ஓர் அட்வைஸர்! ஆனால் மற்றவர்கள் எல்லாருமே பிரபாகரனுக்கு ரசிகர்கள். அதேபோல் இறுதி வரை பிரபாகரனுடன் பயணித்த கடைசித் தலைவராக பாலசிங்கம் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பாலசிங்கம் மறைவால் விடுதலைப் புலிகள் "அட்வைஸர்' அந்தஸ்தில் உள்ள "கொள்கைவாதி' "நெறி வகுப்பவர்' "லட்சியமிக்கவர்' "விடுதலைப்புலிகளின் கருத்துக்களை பரப்புபவர்' என்ற பெயர்களுக்குச் சொந்தமான மனிதனை இழந்திருக்கின்றனர். ஆனால் இதனாலேயே இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை தடைபட்டுவிடும் என்று அர்த்தமாகாது. ஏனென்றால் அமைதியும், போரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல்தான்!

பாலசிங்கம் உயிரோடு இருந்தபோதே இரண்டாவது ஜெனிவா பேச்சுவார்த்தைக்கு அவரை அனுப்பவில்லை. தேவைப்பட்ட சமயங்களில் விடுதலைப் புலிகளே நேரடியாக பாலசிங்கம் இல்லாமலேயே பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார்கள். அதே சமயத்தில் பாலசிங்கம் உலகம் முழுவதும் விடுதலைப் புலிகளுக்காக ஏற்படுத்தியிருக்கும் தொடர்புகளை புதிதாக அந்த ரோலை எடுத்துக் கொள்பவர் உருவாக்குவதற்கு நீண்ட காலம் பிடிக்கும்.

தீவிரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் இலங்கை இனப்பிரச்சினையை பக்குவமாக உலக அரங்கில் பதிய வைத்தவர் பாலசிங்கம். இப்பிரச்சினையில் விடுதலைப் புலிகளின் கண், காது, மூளை எல்லாமே பாலசிங்கமாகவே இருந்தது. விடுதலைப்புலிகள் மீதான எண்ணத்தை மாற்றி, தமிழர் பிரச்சினையில் உலக நாடுகளின் ஒப்பீனியனை உருவாக்கினார் அவர் என்பதில் சற்றும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

"வாய்ஸ்' கொடுக்கும் ரோலை இப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உள்ளவர் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் எண்ணவோட்டத்தை மிகச் சரியாக புரிந்துகொண்டு வெளி உலகிற்கு அதைப் பரப்பும் சக்தி பாலசிங்கத்திற்கு இருந்த அளவு இப்போது அந்த இயக்கத்தில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாருக்குமே இருக்காது என்பதே மறுக்க முடியாத உண்மை.

அதனால்தான் பாலசிங்கம் இறந்தவுடன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ""நம் சுதந்திரப் போராட்டம் தீவிரமடையும் நேரத்தில் அவருடைய (பாலசிங்கம்) உதவி நமக்கு அதிகம் தேவைப்பட்டது. இது போன்ற நேரத்தில் அவரை நாம் இழந்திருக்கிறோம். நம்முடைய ராஜதந்திர முயற்சிகளின் நடு நாயகமாகத் திகழ்ந்தவர் பாலசிங்கம்'' என்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

www.tamilanexpress.com/investigate/investigate.asp

என். சத்தியமூர்த்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.