Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பருத்தித்துறையில் ரூ.10 ஆயிரத்துக்கு ஒரு பிள்ளை விற்கப்பட்ட கொடுமை: எஸ்.வி.கிருபாகரன்

Featured Replies

யாழ். பருத்தித்துறையில் ரூ.10 ஆயிரத்துக்கு ஒரு பிள்ளை விற்கப்பட்ட கொடுமை: எஸ்.வி.கிருபாகரன்

[வியாழக்கிழமை, 21 டிசெம்பர் 2006, 18:18 ஈழம்] [ப.தயாளினி]

யாழ். பருத்தித்துறையில் 3 பிள்ளைகளின் உணவுக்காக ரூ. 10 ஆயிரத்துக்கு ஒரு பிள்ளை விற்கப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளதாக பிரான்சைச் சேர்ந்த தமிழர் மனித மையத்தின் பொதுச் செயலாளர் எஸ்.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் "மெளபிம" (10.12.06) சிங்கள வார ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளதாவது:

கேள்வி: தமிழர்களுக்கான மனித உரிமை மையம் எதற்காக நிறுவப்பட்டது?

பதில்: இலங்கையில் கைது செய்யப்பட்டு, பல்வேறு முகாம்களிலும் சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்ட மற்றும் சித்திரவதைக்கு உள்ளானவர்களினால் தமிழர்களுக்கான மனித உரிமைகள் மையம் 1990 ஆம் ஆண்டு பிரான்சில் தொடங்கப்பட்டது. கொடிய போரின் விளைவாக தமது உற்றார் உறவினரை இழந்தவர்கள், இந்த மையத்தை தொடங்க காரணகர்த்தாவாக இருந்தனர்.

முதலில் நாம் ஒரு சிறிய மையமாகவே இருந்தோம். எமது கடினமாக உழைப்பினதும் உண்மையான செயற்பாட்டாலும் 16 வருடங்கள் கடந்து பணி புரிகின்றோம். இன்று பல மேற்கத்தைய நாடுகளில் எமது கிளை செயற்படுவதுடன் வேறு பல நாட்டு மக்களுக்கும் சேவை செய்து வருகின்றோம்.

சர்வதேசத்தை உற்று நோக்கியபோது அரபு மனித உரிமைகள் மையம், யூதர்களுக்கான மனித உரிமைகள் மையம், பலஸ்தீனியர்களுக்கான மனித உரிமை மையம் மற்றும் தலிபான்களுக்கான மனித உரிமை மையம் போன்றவை இருந்தன. அப்படி இருக்கும் போது ஏன் தமிழர்களுக்கான மனித உரிமை மையம் ஒன்று இருக்கக்கூடாது?

"தேவை என்றால் தேடித்தான் செல்ல வேண்டும்" என்று ஒரு பழமொழி இருக்கின்றது. அதேபோல் தான் தமிழர் மனித உரிமைகள் மையத்தை தொடங்க வேண்டிய அவசர தேவை இருந்தது.

கேள்வி: உங்களின் மையத்தை விடுதலைப் புலிகளின் அமைப்புக்களில் ஒன்று என நான் குற்றஞ்சாட்டினால் உங்களின் பதில் என்ன?

பதில்: வன்முறைகள் தொடர்பாக எம்மிடம் உள்ள சரியான ஆதாரங்களை சரியானவர்களுக்குத் தெரிவிக்கின்றோம். சில வருடங்களுக்கு முன்னர் மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவின் குற்றச்சாட்டு தொடர்பாக சி.என்.என் தொலைக்காட்சி சந்திரிகாவை கேட்டது. அதேபோல் அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவும் குற்றம்சாட்டுகிறது. அப்படியானால் அவைகளும் விடுதலைப் புலிகளின் அமைப்புக்களா?

கேள்வி: சிறிலங்கா அரசுக்கு எதிராக உங்கள் மையம் கடந்த நவம்பர் மாதம் முதல் கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. நீங்கள் எந்த அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றீர்கள். அதற்கான உண்மை ஆதாரங்கள் ஏதாவது உங்களிடம் இருக்கின்றதா?

பதில்: ஆம், வடக்கு-கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து எமக்கு பெருமளவு உண்மை ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. சுடுகாடு நிறைய இறந்த மனித உடல்கள், காயப்பட்டவர்களால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள், முகாம் முழுவதும் இடம்பெயர்ந்த மக்கள், பொதுமக்களுக்கு எதிரான பொருளாதாரத் தடை, குண்டுகளால் கட்டங்கள் உடைக்கப்படுகின்றன. இது போன்று இன்னும் பலவற்றை நாம் கூறலாம்.

கேள்வி: வடக்கு-கிழக்கில் காணாமல் போதல் என்பது சர்வ சாதரண விடயமாகிவிட்டது. இந்த நிலை தற்போது தெற்கிலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலமையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உங்கள் மையம் என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது?

பதில்: சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுடைய மகிந்தவினாலேயே இந்த நிலையை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கையில் நாம் என்ன செய்ய முடியும். இருப்பினும் கடந்த ஒக்ரோபர், நவம்பர் மாதங்களில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நாவின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கண்டனத் தீர்மானம் எடுக்க இருந்தது. எனினும் அரசு தனது அதிகாரத்தை பாவித்து அதைத் தடுத்து விட்டது. ஆனால் எப்போதும் அவ்வாறு செய்ய முடியாது.

கேள்வி: ஜெனீவா-2 பேச்சுவார்த்தகள் முறிவடைந்ததை அடுத்து வடக்கு-கிழக்கில் வாழும் மக்களின் துன்பம் எல்லையற்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. ஏ-9 பாதையை அரசு திறக்க மறுத்ததை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டது. இந்த விடயத்தை நீங்கள் எப்படி கருதுகின்றீர்கள்? குடாநாடு உட்பட பாதிக்கப்பட்ட பகுதிகளின் உண்மை நிலை என்ன?

பதில்: ஏ-9 வீதியை திறப்பது என்பது போர் நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயம் மட்டுமன்றி மனிதாபிமான விடயமும் கூட. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துகளான 1.10 மற்றும் 2.10 ஆகியவற்றின் பேரில் ஏ-9 பாதை பொதுமக்கள் பாவனைக்காக கட்டாயம் திறக்கப்பட வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதையை அரசு மூடி விட்டு திறக்க மறுப்புத் தெரிவிக்கின்றது. இதன் மூலம் தாம் போர் நிறுத்த உடன்படிக்கையை நிராகரித்து விட்டோம் என்ற செய்தியை சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்திருக்கின்றது.

யாழ். குடாநாட்டிலும் வாகரையிலும் நிலை மிகவும் மோசமாகவுள்ளது. இந்த பகுதிகளில் குழந்தைகளுக்கான பால்மா, உணவுப் பொருட்கள், மருந்து வகைகள், மின்சாரம், தொலைபேசி போன்றவை உட்பட பல பொருட்கள் இன்றி மக்கள் அவதியுறுகின்றனர்.

அரச வட்டாரங்கள் தொடர்ச்சியாக பொய்யே சொல்லிக் கொண்டிருக்கின்றன. பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல போரின் நகைச்சுவை கதாபாத்திரமாக இருக்கின்றார். ஈராக்கின் முன்னாள் அரச தலைவர் சதாம் உசைனின் தகவல் அமைச்சரும் பேச்சாளருமான முகமட் கயீட் அல் காவ் மக்களை சிரிக்க வைத்தது போல இவரும் சிரிக்க வைக்க முயல்கின்றார். அமெரிக்கப் படைகள் ஈராக்கை முற்றாக கைப்பற்றிய பின்னர் முகமட் தமது மறைவிடத்தில் இருந்து பாக்தாத் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று ஊடகங்களுக்குத் கூறினார். இதே பொய்மைதான் கேகலிய ரம்புக்வெலவிடமும் காணப்படுகின்றது. உலகிலேயே அதிகமான பொய் பேசிய மனிதர் என்ற அடிப்படையில் ரம்புக்வெலவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தாலும் இடம்பிடிக்கலாம்.

குடாநாட்டின் நிலை குறித்து அரசு உண்மை சொல்கிறதா? சர்வதேச ஊடகவியலாளர்களை குடாநாட்டிற்கு செல்ல அனுமதித்து அங்குள்ள நிலைமைகளை அறிக்கையிடச் சொல்லலாமே! குடாநாட்டு மக்கள் படையினரால் மனிதக் கேடயமாகப் பாவிக்கப்படுகின்றார்கள். இரவில் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் சில வீடுகளில் சென்று நித்திரை கொள்கின்றார்கள்.

பருத்தித்துறையில் ஒரு பெற்றோர் தமது மூன்று பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதற்காக தமது ஒரு பிள்ளையை பத்தாயிரம் ரூபாவிற்கு விற்றுள்ளார். இது தொடர்பாக கடந்த வாரம் எமக்கு தகவல் வந்துள்ளது.

கேள்வி: தற்போதைய சூழ்நிலை காரணமாக வசதி குறைந்த சிங்கள மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதுடன் தமது ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் இருக்கின்றார்கள். இது குறித்து உங்களின் கருத்து என்ன?

பதில்: அரசியல்வாதிகள் எப்போதும் வாக்குக்காக செயற்படுபவர்கள். தேர்தலில் வென்ற பின்னர் தாம் வழங்கிய வாக்குறுதியை அவர்கள் மறந்து விடுவார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறையில் இருந்த காலப் பகுதியில் எமது உறுப்பினர்கள் இலங்கையின் அனைத்துப் பகுதிக்கும் சென்றனர். வசதி குறைந்த சிங்கள மக்களின் நிலை எங்களுக்குத் தெரியும்.

போர் முனையில் நிற்கின்ற சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவரை எடுத்தால் அவர் தென்பகுதியில் வசதி குறைந்த சிங்களக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார். இந்த வீரர்களுடன் எமது உறுப்பினர்கள் அவர்களது குடும்பம் தொடர்பாக கதைத்துள்ளார்கள். குடும்ப வறுமை காரணமாக அரசு கூறிய பொய்களை நம்பி இராணுவத்தில் சேர்ந்ததாக தெரிவித்துள்ளனர். பாடசாலைகளில் கவர்ச்சியான விளம்பரங்களைக் கொடுத்து அரசு படைக்கு ஆட்களைச் சேர்க்கின்றது. சிலர் தமது வயது குறைவு காரணமாக பொய்யான பிறப்பத்தாட்சிப் பத்திரத்திற்கு கிராம சேகவரிடமிருந்து கையொப்பம் பெற்றுக் கொடுக்கின்றனர்.

பின்தங்கிய கிராமங்களில் வாழும் வசதி குறைந்த சிங்கள மக்களுக்கு போர் பற்றிய உண்மை நிலை தெரியாது. இனப் பிரச்சினை தொடர்பாகவே போர் இடம்பெறுவதாக எந்த ஊடகங்களும் அவர்களுக்குத் தெரிவிப்பதில்லை. அரசியல்வாதிகள் சொல்வதே சரி என இவர்கள் நம்புகின்றார்கள்.

தமிழ் மக்களை கொள்வதற்காக வெளிநாடுகளிடமிருந்து பெருமளவு நிதியை வாங்கி ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதை விட அவற்றை கல்வி சுகாதாரம் உட்பட ஏனைய மக்களின் தேவைக்காக அதைச் செலவிடலாம். இராணுவத்திற்கான செலவு ஒவ்வொரு வருடமும் வானளவுக்கு அதிகரித்துச் செல்கின்றது. ஆனால் மக்களுக்கான சேவைக்கான செலவு குறைகின்றது. இதனால் வசதி குறைந்த சிங்களவர்கள் பொருளாதார நெருக்குதல்களுக்கு உள்ளாகின்றார்கள்.

இனப்பிரச்சினை தொடர்பாக அரசியல்வாதிகள் கூறும் கருத்துக் குறித்து விழிப்புடன் இருக்குமாறு சிங்கள மக்களை நாம் கேட்டுக் கொள்கின்றோம். தமிழ் மக்களின் நிலை குறித்து சிந்தித்து பார்க்குமாறு சிங்கள மக்களை கேட்டுக் கொள்கின்றோம். இதுவே இனப்பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும்.

இலங்கையில் நீதியையும் தீர்வையும் கொண்டு வருவதற்கு மனித உரிமை மீறல்கள் பெரும் சவாலானவை. ஓவ்வொரு இனத்தினதும் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டியவை மட்டுமன்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவையும் கூட என்றார் அவர். :lol::)

thanks:puthinam

திரு கிருபாகரன் அவர்களின் சேவை பாராட்டப்பட வேண்டியது.

கொடுத்ததும் ஒரு தமிழன், அது முக்கியம் இல்லை ஆனால் வாங்கினதும் ஒரு தமிழன் தான்!!

உறுதிப்படுத்தப்படாத வேறு செய்தி ஒன்று....

உணவகத்தில் வேலை செய்பவர் ஒருவர் வேலை முடிந்து உணவோடு இரவு வீடு திரும்பும் பொழுது கத்தியால் குத்தப்பட்டு உணவு பறித்துச் செல்லப்பட்டிருக்கிறது. ஒரு நேர உணவிற்கு கத்திக் குத்து நிலை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.