Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தின் நிலைமையோ

Featured Replies

தமிழகத்தின் நிலைமையோ இன்று கன்னடத்தில் இருந்து வந்தவர்களும்,தெலுங்கர்களும் , மலையாளிகளும் வந்து தமிழகத்தை அடக்கி ஆள்வதும்.மலையாள நிறுவனங்கள் தமிழக பொருளாதாரத்தை கொள்ளையடிப்பதும்,தமிழகத்தின் வளங்கள் பிற இனத்தவருக்கு வழங்கப்பட்டதும்.தமிழகத்தில் உயர்பதவிகளை பிற இனத்தவர் ஆக்கிரமிப்பதும்.தமிழ் தமிழ் எனச்சொல்லி ஒரு கூட்டமும்,பார்ப்பானிய ஆதரவு என ஒரு கூட்டமும் கொள்ளையடிப்பதும் இங்கே தான்.

 


பணக்காரன் கொலை செய்தால் தற்கொலை என்பதும் ,அதே ஒரு ஏழை கொலைசெய்தால் அவனுக்கு ஆயுள் தண்டனை அளிப்பதும் இங்கே எழுதப்படாத அரசியல் நீதி ஆகிப்போனது.இந்தியாவை போன்றதொரு பாரம்பரியம்மிக்க நாட்டில் மதத்தால் பிரித்து மோதவிடுவதும்,அரசு அலுவலகங்களில் லஞ்சமும்,அரசு அலுவலர்களின் பொறுப்பற்ற தன்மையும்,பாலியல் வல்லுறவு,பெண்களுக்கு எதிரான வன்முறையும்,நீதிக்கு எதிரான வன்முறையும்,காவல்துறை அதிகாரியை கொலைசெய்வதும் நடக்கத்தான் செய்கிறது.இங்கு இந்த பிரச்சினைகளை சரிசெய்ய எவ்வளவோ முயற்சியெடுத்தாலும்,அது சட்டப்படி குற்றம் எனக்கூறி கைது செய்வதும் நாட்டின் வழக்கமாக இருப்பது வருந்த செய்கிறது.
நாம் ஒரு நாள் மதுவிலக்குக்காக பொங்கியெழுந்தால்,அடுத்த நாளே அதை திசைதிருப்ப பெண்களுக்கு எதிரான கருத்து என்று நம்மை பொங்கச்செய்வதே அரசியலாக உள்ளது.எதையும் மறந்துவிடும் நம் இயல்பு,இங்கு அரசியல்வாதிகளால் மிக அழகாக நம்மை ஏமாற்ற கையாளப்பட்டுவருகிறது.

 

 

 

ஏப்ரல் 2015ல் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் "தாலி பெண்களை பெருமைபடுத்துகிறதா? இல்லை சிறுமைபடுத்துகிறதா? என்ற விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்ப கூடாது என புதிய தலைமுறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர் இந்து மதவெறியர்கள்.மாதொருபாகன் நாவல் பிரச்சினையில் எழுத்தாளர் பெருமாள் இந்து மதவெறிர்களால் தாக்கப்பட்டார்.தோழர் கோவன் தமிழக அரசின் மதுவிலக்கு கொள்கையை விமர்சித்ததிற்காக தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைதானது.மேலும் சமூக வலைதளங்களில் முதல்வரை விமர்சித்ததற்காக கைது எனும் நிகழ்வுகளை நாம் சாதரணமாக ஒன்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என கூறிவிட முடியாது.

 

இந்நிகழ்வுகள் அனைத்தும் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆதரவாக நடத்தப்பட்டவை.
இன்று நடந்து வரும் திராவிட கட்சிகளின் ஆட்சியானது அதன் மதச்சார்பின்மை,தமிழர் நல்வாழ்வு,சாதி எதிர்ப்பு,பகுத்தறிவு போன்ற திராவிட கொள்கையிலிருந்து விலகிசென்றுவிட்டது என்றே சொல்லலாம்.நடந்து வரும் அ.தி.மு.க அரசு மதகுருக்களின் திட்டப்படி நடந்து கொண்டுதான் இருக்கிறது.

 


ஒரு காலத்தில் இங்கு இருந்த அ.தி.மு.க அரசு,அயோத்தியில் நடந்த மசூதி இடிப்புக்கு கரசேவைக்கு ஆள் அனுப்பிய வரலாறு நாடறியும்.மதச்சார்பின்மையை ஆதாரமாக கொண்ட திராவிட கட்சிகள் இன்று மதவாதிகள் ஆதரவை கேட்டு அவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலில் களம் காண்பதும்.சமீபத்தில் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் அவர்களின் நமக்கு நாமே பயணத்தில் கோயிலுக்கு சென்றதை நினைவுபடுத்துகிறேன்.திராவிட கட்சிகளின் கைகள் மதக்கறை படிய தொடங்கிவிட்டது.சாதிக்கு எதிரான கொள்கை உடைய திராவிட கட்சிகள் இன்று கேவலம் ஓட்டுக்காக சாதிக்கட்சிளின் கால்களை பிடித்தது.இவ்வாறு பெரியார் வழியை பின்பற்றுகிறேன் என சொன்னவர்கள் சாதியை வழக்க தூபம் போட்டனர்.இலங்கையிலே நம் ரத்தச்சொந்தங்கள் சிங்கள இனவெறியர்களால் வேட்டையாடப்பட்டுகொண்டிருந்த போது வெறும் வேடிக்கையையோடு நாடகத்தை தானே நடத்தினர்.தமிழர் நலவாழ்வு எனும் கொள்கையை உடைய திராவிட கட்சிகள் அதிலிருந்து விலகி கட்சி நலவாழ்வு என மாறிப்போனது.ஆனால் திராவிட கட்சிகள் தமிழகத்தில் வேறு எந்த மாற்றுக்கருத்தையும் வேறுண்ற விடவில்லை.

 


இலவசங்கள்,மது,ஸ்டீக்கர்,காவல்துறை ஏவல்,பார்பணிய ஆதரவுபோக்கு,சாதிய ஆதரவுபோக்கு என பல பிழைகள் உள்ளன தற்போதைய ஆளும் அ.தி.மு.க அரசிடம்.திருந்தவேண்டும் அவர்கள்.

 


ஆனால் தமிழகத்தில் சென்னை மழை தந்த பாடம்,அரசியல்வாதிகள் மக்களுக்கு ஆதாயங்களுக்காகவே உதவுவார்கள் என.இன்று நம் தமிழக மக்கள் யாருக்கு வாக்களிப்பது என தெரியாமல்,புரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

 


பார்ப்பணிய அ.தி.மு.க வேண்டாம்.ஊழல்,குடும்ப ஆட்சி கட்சிமுறையுள்ள தி.மு.க வேண்டாம்.சாதியக்கட்சிகளும் வேண்டாம்.பொதுவுடமை கொள்கையும் தெரியாது எனவே அதுவும் வேண்டாம்.மதவாதமும் வேண்டாம்.வேறு என்ன கட்சி இருக்கிறது வாக்களிக்க? என்ற யோசனையிலே பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர்.

 


மறதி தேசிய வியாதி என்பது மறந்து போய் மக்கள் சிந்தித்து வாக்களித்தார்கள் எனில் மாற்றம்

 

http://nethajidhasan.blogspot.co.uk/2016/01/blog-post_64.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.