Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மம்தா பானார்ஜியின் உண்ணாவிரதம்

Featured Replies

சிங்கூர் பகுதியில் டாடா கார் தொழிற்சாலை அமைக்க, மேற்கு வங்க அரசு விவசாய நிலங்களை, அவர்களின் விருப்பமில்லாமல் வற்புறத்தி பெற்றதாக கூறி, மம்தா உண்ணாவிரத பேராட்டத்தை ஆரம்பித்து இன்றோடு 26 நாளாக ஆகி விட்டது. அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி கொண்டு வருகிறது.இந்நிகழ்வில் குறிப்பிடதக்க அம்சம் என்னவென்றால், நிலமற்ற விவசாயிகளுக்காக போராடி அதானால் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிகட்டிலில் அமர்ந்திருக்கும் பொதுவுடைமை கட்சியினர், தொழில்அதிபர்க்கு சாதகமான போக்கினை மேற்கொள்வதும், முதலாளித்துவ சக்திகளுக்கு ஆதரவான பாஜக, திரினாமுல் கட்சிகள், விவசாயிகளுக்காக போராட்டாம் நடத்துவதும் வினோதமாக உள்ளது. மம்தா அவர்களின் உண்ணாவிரத்தை, ஒரு பொருட்டாக கருதாது போல். பொதுவுடைமை கட்சியினர் வெளியில் காட்டிகொண்டாலும், உண்மையில் ரொம்ப பயந்து போய்தான் உள்ளார்கள் என தெரிகிறது. புலிவால் பிடித்த நாயர் கதை போல் ஆயிற்று. பொதுவுடைமை கட்சியினரை ஆட்சிகட்டிலில் இருந்து இறக்க இதை விட சரியான ஆயூதம் வேறு ஏதும் எதிர்கட்சிகளுக்கு கிடைக்காது.காங்கிரஸ் கட்சியினரோ சண்டையில் எந்த பக்கம் வெற்றி கிட்டுமென நரிபோல் யோசித்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் விருப்பட்டுத்தான் தங்களது நிலத்தை கொடுத்தார்கள் உறுதியாக கூறும் புத்தேவ், ஏன் நிலத்தை திரும்ப பெற்றுகொள்விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்தை அவர்கள் விருப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிக்கை விட்டு அதன்படி நடக்ககூடாது?. இது சரியான தீர்வாக இருக்குமா?

எனக்கொரு சந்தேகம்? அதெப்படி 26 நாள் வரைக்கும் உண்ணாவிரதம் இருந்து உயிர் வாழ முடிகிறது? எங்கள் திலீபன் அண்ணா 12 நாள் வரைக்கும் தானே உயிருடன் இருந்தார்.

"12 நாள் இருந்து அவன் உருகினான், நாங்கள் பார்த்திருக்க மேடையிலே கண் சொருகினான்".

மம்தாவுக்கு இன்னும் தெரியவில்லை போல, இந்திய தேசம் வெறும் பெயரளவில் தான் அகிம்சையை கடைபிடிக்க்ரது என்று. மகாத்மாவுடன் அகிம்சையும் என்றைக்கோ செத்து போய் விட்டது

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரத்தை விட்டார் மம்தா பானர்ஜி!

டிசம்பர் 29, 2006 http://thatstamil.oneindia.in

கொல்கத்தா: குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்களின் கோரிக்கையை ஏற்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தனது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார்.

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளின் நிலங்களை மீண்டும் அவர்களுக்குத் திரும்ப வழங்கக் கோரி கொல்கத்தாவில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் மம்தா.

நேற்று அவரது போராட்டம் 25வது நாளை தொட்டது. செவ்வாய்க்கிழமை முதல் மம்தாவின் உடல் நிலை மோசமடைய ஆரம்பித்தது. அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று காலை அவரது ரத்த அழுத்தம் குறைய ஆரம்பித்தது. அவரது நிலை மேலும் மோசமடைந்து வந்தது.

இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நேற்று மாலை சந்தித்துப் பேசினர். மம்தா விவகாரத்தில் தலையிட்டு அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலாமை கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்குடன் கலாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மம்தா பானர்ஜியின் கோரிக்கைகளை பரிசீலித்து, இந்த விவகாரத்துக்குத் தீர்வு கண்டு மம்தா போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

இதேபோல மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுடனும் கலாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநில அரசின் அவசர ஆலோசனைக் கூட்டம் மாலையில் நடந்தது. இதில் தொழில்துறை, வீட்டு வசதித் துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தின்போது போராட்டத்தைக் கைவிடும்படி மீண்டும் கோரிக்கை விடுப்பது, மம்தாவின் கோரிக்கைகளை பரிசீலிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இந்த முடிவு அடங்கிய கடிதத்தை முதல்வரின் சிறப்புச் செயலாளர் மம்தாவிடம் நேரில் சேர்ப்பித்தார். முதல்வரின் கடிதம் குறித்து திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து நள்ளிரவுவாக்கில் தனது போராட்டத்தைக் கைவிட மம்தா முடிவு செய்தார். இதுதொடர்பாக அவர் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட நாட்டின் உயர் தலைவர்கள் வேண்டுகோளுக்கிணங்க எனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன்.

எனது உடல் நிலையைப் பரிசோதிப்பதற்காக உடனடியாக மருத்துவமனைக்கு செல்கிறேன்.

இன்று இரவு (நேற்று) பிரதமரிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. அதில், மருத்துவமனையில் சேர்ந்து உடல் நலத்தை தேற்றிக் கொண்ட பின்னர் சிங்கூர் நில விவகாரம் குறித்து மேற்கு வங்க முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என பிரதமர் தெரிவித்திருந்தார்.

இதேபோல குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து எனது போராட்டத்தை விலக்கிக் கொள்கிறேன்.

இருப்பினும் விவசாயிகளுக்கான எனது போராட்டம் தொடரும். விவசாயிகள் மீண்டும் தங்களது நிலங்களைப் பெறும் வரை போராடுவோம் என்றார் மம்தா. இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதன் மூலம் 25 நாள் பரபரப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

முன்னதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்துப் பேசினார். மக்கள் பிரச்சினைகள் நிறைய உள்ளன. அவற்றுக்காக தொடர்ந்து போராட வேண்டியுள்ளது, எனவே உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

வைகோவுடன், மம்தா சுமார் 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சிங்கூர் விவசாயிகள் வழங்கிய பிரமாணப் பத்திரத்தை வைகோவிடம் மம்தா காட்டினார். மேலும் தன்னைக் காண சென்னையிலிருந்து வந்ததற்காக மம்தா, வைகோவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

  • தொடங்கியவர்

உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துவிட்டது. நிலத்தை விரும்பி அளிக்காதவர்களுக்கு திரும்ப அளிக்கப்பட்டால் நல்லது.

Edited by v.pitchumani

  • கருத்துக்கள உறவுகள்

திலிபன் அண்ணா நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தார். இது மம்தா அக்கா நல்லாய் விட்டு கட்டிப்போட்டு வந்து 26 நாட்கள் இருந்து விட்டு பம்மாத்து விடுகினம். கடைசி 4 ரொட்டியாவது ஆள் சுருட்டி மடக்கியிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வங்கத்துப் பெண்புலி, கிழக்கிந்தியாவின் ஜெயலலிதா என்றெல்லாம் மீடியாக்கள் மற்றும் அரசியல் நோக்கர்களால் வர்ணிக்கப்படுபவர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக மேற்குவங்கத்தில் இடதுசாரிகளுக்கு தண்ணி காட்டி வருபவர். சிங்கூர் விவசாய நிலங்கள் விவகாரத்தின் புண்ணியத்தால் மீடியாக்களில் இன்று அதிகம் அடிபடும் பெயர் மம்தா பானர்ஜி.

இவரையும், ஜெ.வையும் எப்படி ஒப்பிடுகிறார்கள் என்று புரியவில்லை. எனக்குத் தெரிந்து இருவருக்கும் இரு ஒற்றுமைகள் உண்டு. இருவரும் அடங்க மறுக்கும் பெண்கள். இருவருக்கும் திருமணமாகவில்லை. ஜெ.வுக்கு திருமணம் ஆகாததற்கு வேறு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால் இவருக்கு திருமணம் ஆகாததற்கு இவரது பொதுவாழ்வுக்கான அர்ப்பணிப்பே காரணம்.

மிக மிக நடுத்தரமான மேற்கு வங்க குடும்பம் ஒன்றில் பிறந்த மம்தாவுக்கு இளமைப் பருவம் அவ்வளவு சிலாக்கியமானதாக இல்லை. இவருக்கு 15 வயதிருக்கும் போதே இவரது தந்தை காலமாகி விட்டார். மூத்த மகள் என்ற அடிப்படையில் குடும்பப் பொறுப்பினை அந்த வயதிலேயே சுமக்கத் தொடங்கி விட்டார். குடும்பச் சுமை அழுத்தினாலும் படிப்பில் கில்லி மம்தா.

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் கல்லூரியில் நுழைந்தார். மம்தா வாழ்க்கையின் திருப்புமுனை அவரது கல்லூரி நாட்களே. கல்லூரியில் காங்கிரஸின் மாணவர் அணித் தலைவர் பொறுப்பு இவரைத் தேடி வந்தது. மேற்கு வங்கத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான மம்தா எப்படி காங்கிரஸ் இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பது எனக்கு ஆச்சரியத்தையே கொடுக்கிறது. காங்கிரசுக்கு என்று வெளிப்படையான முற்போக்குக் கொள்கை எதுவும் சுதந்திரத்துக்குப் பிறகு இருப்பதாக நான் கருதவில்லை. மதச்சார்பின்மை என்ற ஒரு விஷயத்தில் மட்டுமே காங்கிரஸ் என்னை திருப்திப் படுத்துகிறது. ஆனால் கொள்கை விஷயங்களில் இடது சாரிகள் எப்பவுமே கிங் தான். மம்தா இடதுசாரி இயக்கங்களைத் தேர்ந்தெடுத்திருந்தால் அவரது போராட்டக் குணத்தின் காரணமாக நல்ல உயரத்தை அடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

மம்தாவின் கல்லூரி நாட்களில் அவருக்கு இடதுசாரிகள் மீது ஏற்பட்ட வெறுப்பு இன்றளவுக்கும் அதிகமாகிக் கொண்டே போகிறது. கல்லூரியில் இடதுசாரி மாணவர் அமைப்புகளுடன் மோதியவர் இன்று இடதுசாரி இயக்கங்கள் கண்ணில் விரலைவிட்டு ஆட்டி வருகிறார். கல்லூரியை முடித்தவர் வேலை தேடிச் செல்லாமல் சட்டம் படிக்க ஆரம்பித்தார். சட்டம் ஒரு புறம், அரசியல் ஒரு புறம் என தனது வளர்ச்சியை மெல்ல மெல்ல அழுத்தமாக பதிக்க ஆரம்பித்தார்.

மம்தாவை புகழேணியில் ஏற்றியது 84ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல். அந்தத் தேர்தலில் இவர் தோற்கடித்தது சாதாரண வேட்பாளரை அல்ல. மேற்கு வங்கத்தில் மிகவும் புகழ்பெற்ற சீனியர் அரசியல்வாதியான சோம்நாத் சாட்டர்ஜியை (இன்றைய பாராளுமன்ற சபாநாயகர்). பின்னர் 91ஆம் ஆண்டில் நரசிம்மராவ் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றினார்.

காங்கிரஸ் தலைவர்கள் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் அணுசரனையாக நடந்துக்கொள்கிறார்கள் என குற்றம் சாட்டி 97ல் திரிணாமுல் காங்கிரஸ் எனும் தனி இயக்கம் கண்டார். ஒரிஜினல் காரணம் இவருக்கு சோனியாவை பிடிக்காதது தான் என்கிறார்கள். இதன் பின்னர் பா.ஜ.க.வுடன் கூட்டணி கண்டு ஓரளவு வெற்றி பெற்று மீண்டும் மத்திய அமைச்சர் ஆனார். பா.ஜ.க. ஆட்சி கவிழ்ந்தவுடன் மீண்டும் மம்தா காங்கிரஸுக்கு வருவார் என்று ஆருடம் கூறினார்கள். எனினும் மேற்கு வங்க காங்கிரசை டெல்லி தலையீடு இல்லாமல் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற மம்தாவின் நிபந்தனையை காங்கிரஸ் ஏற்காததால் தனியாகவே தன் அரசியல் பயணத்தைத் தொடர்கிறார்.

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை சில காலம் முன்பு நெ.1 அரசியல்வாதி ஜோதிபாசு. நெம்பர் 2 மம்தா பானர்ஜியே. இன்றைய தேதியில் புத்ததேவ் பட்டாச்சார்யா நெ.1 ஆக இருந்தாலும் நெ.2 ஆக மம்தாவே தொடர்கிறார். மம்தாவுக்கு 51 வயதாகிறது. இந்த வயதிலேயே பல உயரங்களை அடைந்தவர் என்றாலும் மேற்கு வங்கத்தில் எதிர்காலத்தில் இவர் நெ.1 ஆவது என்பது இடதுசாரிகளின் வீரியம் தொடரும் வரை சந்தேகமே. சிங்கூர் விவகாரம் தொடர்பான இவரது உண்ணாவிரதம் எந்த அளவுக்கு இவரது செல்வாக்கை தூக்கி நிறுத்தப் போகிறது என்ற கேள்விக்கு காலம் தான் விடை சொல்ல வேண்டும்.

(http://madippakkam.blogspot.com)

  • கருத்துக்கள உறவுகள்

திலிபன் அண்ணா நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தார். இது மம்தா அக்கா நல்லாய் விட்டு கட்டிப்போட்டு வந்து 26 நாட்கள் இருந்து விட்டு பம்மாத்து விடுகினம். கடைசி 4 ரொட்டியாவது ஆள் சுருட்டி மடக்கியிருக்கும்.

திலீபனின் உண்ணவிரதத்தை உலகம் மதிக்கவில்லை என்பதற்காக மற்றவர்களைத் திட்டுவது சரியல்ல. திலீபன் அண்ணாவை விட, அன்னை பூபதி அதிக நாள் உயிரோடு இருந்தார்.

நிற்க, இந்தியாவில் உண்ணாவிரதம் என்பது உணவு உண்ணாமை மட்டுமே. நீர் அருந்தாலாம். மகாத்மா காந்தி தன் சந்தியாகிரகத்தில் உப்பு போட்ட நீர் அருந்துவார். அவர் அதிக நாட்கள் இவ்வாறு உண்ணாவிரதம் இருந்திருக்கின்றார்.

எனவே, அவரின் செயற்பாட்டை அவமதிக்கரீர்கள்.

--------------

நல்லதொரு கட்டுரையை இணைத்தமைக்கு நன்றிகள் லக்கிலுக்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.