Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரிகாவிற்கு ஒரு ஏ-9 மகிந்தருக்கு ஏ-15

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகாவிற்கு ஒரு ஏ-9 மகிந்தருக்கு ஏ-15

-அருஸ் (வேல்ஸ்)-

'வாகரையில் இருந்து மிக விரைவில் தமிழீழ விடுதலைப் புலிகளை வெறியேற்றுவதுடன் கிழக்குப் பகுதியில் இருந்தும் புலிகள் முற்றாக வெளியேற்றப்படுவார்கள்" இது சிங்கள தேசத்து இராணுவ தளபதி அண்மையில் தெரிவித்த உளக்கிடக்கை. இராணுவ அதிகாரியின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல அரசின் ஆதங்கமும் அது தான்.

அண்மையில் தென்பகுதியில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகரும் அவரின் சகோதரருமான பசில் ராஜபக்ச கூறுகையில், அனைத்துக்கட்சி குழு தனது தீர்வுத்திட்ட அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னராக கிழக்கிலங்கையை படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

அதாவது கிழக்கில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை மாகாண அதிகாரம் அல்லது கிராம அதிகாரம் என்ற நடைமுறையற்ற தீர்வுத்திட்டங்கள் மூலம் உலகின் கண்களில் இருந்து மறைக்கவும் பின்னர் இனவாத கட்சிகளையும், தனிச்சிங்கள உயர் நீதிமன்றங்களையும் கொண்டு அதனையும் இல்லாது ஒளித்து விடுவதும் தான் திட்டம்.

போர்நிறுத்தம், கருணா குழு என்ற இரண்டு கருவிகளைக் கொண்டு தனது இராணுவ அபிலாசைகளை நிறைவேற்றுவதில் முனைப்பாக அரசு உள்ளதையே இது காட்டுகின்றது. கிழக்கின் முக்கிய இலக்காக சிங்களப்படை கருதுவது வாகரையைத் தான்.

வாகரையைப் பொறுத்தவரை திருமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையேயான கடற்கரையோர பிரதேசம். இது மேற்குப்பகுதி சதுப்பு நிலக்காடுகளையும், கிழக்குப்பகுதி கடற்பிரதேசத்தையும், வடக்குப் புறமாக திருமலையும் தெற்குப்புறமாக மட்டக்களப்பையும் உள்ளடக்கியது.

வாகரையை ஊடறுத்துச் செல்லும் ஒரே ஒரு பிரதான நெடுஞ்சாலையாக ஏ-15 சாலை உள்ளது. இதுவே வாகரைக்குரிய வழங்கல் பாதையுமாகும். 120 கி.மீ நீளமான இந்த கடற்கரைச்சாலையில் வடக்கே மகிந்தபுர தொடக்கம் தெற்கே மாங்கேணி வரையான 20 கி.மீ பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவை தவிர அரச கட்டுப்பாட்டில் உள்ள மிகுதிப் பகுதியும் பூரணமாக படையினரின் கட்டுப்பாட்டில் இல்லை. புலிகள் ஆங்காங்கு தாக்குதல்களை நடத்தி உடைப்பை ஏற்படுத்துவதும், தாக்குதலை நடத்தாமல் போக்குவரத்துக்களை மேற்கொள்வதும் உண்டு.

வாகரைக்கு கிழக்குப்புறமாக உள்ள கடற்பிரதேசம் கடற்புலிகளின் நடவடிக்கைகளுக்கும் அவர்களின் விநியோக வழிகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாக இருப்பதால் தான் கிழக்கில் புலிகள் பலமடைகின்றார்கள் என்பது அரசின் கணிப்பு.

எனவே வடக்கு மற்றும் தெற்கு முனைகளில் இருந்து வாகரையை நோக்கி நகருவதன் மூலம் திருமலையையும், மட்டக்களப்பையும் கூறு போடலாம் என்பதுடன் புலிகளையும் ஒரு நெருக்கடி நிலைக்கு தள்ள முடியும் என கணக்கு போட்டள்ளது அரசு.

இதற்காக அரசு தேர்ந்தெடுத்த பகுதி வாகரையை ஊடறுத்துச் செல்லும் ஏ-15 வீதி. சம்பூரில் கால்வைத்த அரசு வாகரையில் மேலும் அகலக் கால் பதிக்க முனைந்து நிற்கிறது.

1997 இல் சந்திரிகா அரசினால் ஆரம்பிக்கப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கை போன்றது தான் தற்போது வாகரையை நோக்கி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள். யாழில் இருந்து வெளியேறிய புலிகளின் வன்னிப் பிரதேசத்தை பல கூறுகளாக பிரித்து விட்டால் அவர்களால் இலகுவாக நகரமுடியாது என்பதும். அவர்களை ஒரு நெருக்கடிக்குள் வைத்திருக்க முடியும் என்பதும் சந்திரிகாவின் கணக்கு.

இதற்காக கிளிநொச்சியில் இருந்து வவுனியா வரையான 115 கி.மீ ஏ-9 பாதையை கைப்பற்ற முனைந்த அரச படைகள் இறுதியாக கைப்பற்றப்பட்ட பகுதிகளில் ஒரு கி.மீற்றரை கூட தக்கவைக்க முடியாது போனது மட்டுமல்லாது ஆனையிறவுத் தளத்துடன் சேர்ந்து மேலும் பல கி.மீற்றர்களையும் புலிகளிடம் இழந்தது தான் உண்மை.

இது மட்டுமல்லாது ஜெயசிக்குறு நடவடிக்கையின் தொடர்ச்சியாக உக்கிரமடைந்த மோதல்களில் இராணுவம் சந்தித்த இழப்புக்களும் அதன் தொடர்ச்சியாக அரசியலில் சந்திரிகா பெற்ற பாடங்களும் உலகறியும். ஏன் இந்த அரசியல் இராணுவத் தோல்விகளை சந்தித்தோம் என சிங்கள அரசுகள் ஒருபோதும் எண்ணிப்பார்த்தது கிடையாது.

இனவாதத்தை விடுத்து தமது சொந்த அரசியல் நடவடிக்கைகள் மூலம் தென்பகுதியில் தமது அரசியல் உறுதித்தன்மையை பேணுவதற்கு அவர்களின் அரசியல் வரட்டுத்தனம் வழிவிடப் போவதில்லை. எனவே தான் தோற்போம் என்று தெரிந்த பின்னரும் தென்பகுதிச் சிங்கள இளைஞர்களின் இரத்தத்தில் தமது ஆட்சியை தக்கவைக்க முனைகின்றன ஒவ்வொரு சிங்கள அரசும்.

1997 இல் ஆரம்பிக்கப்பட்ட ஏ-9 பாதை திறப்பில் சிங்களப்படைகள் தோற்றுப்போனது எதனால் என சிந்தித்தவர்களுக்கு சர்வதேச இராணுவ வல்லுனர்கள் பின்வரும் விளக்கங்களை கொடுத்திருந்தார்கள்.

- 115 கி.மீ நீளமான ஏ-9 நெடுஞ்சாலையை கைப்பற்ற எண்ணிய படையினர் அதை எவ்வாறு பாதுகாக்கப்போகிறோம் என சிந்திக்கத் தவறிவிட்டனர்.

- சாலையின் இருபுறமும் உள்ள இராணுவ நிலைகளை பக்கவாட்டில் புலிகள் தாக்கினால் அதை பாதுகாப்பது தொடர்பான ஏற்பாடுகளை சிந்திக்கத் தவறிவிட்டனர்.

- சிங்களப் படைகளின் படையினரின் எண்ணிக்கைக்கும் கைப்பற்றப்படும் பிரதேசங்களின் பரப்பளவுகளுக்கும் உள்ள வேறுபாடுகள்.

- சிங்களப்படைகளின் ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் புலிகள் தமது பலத்தை தக்க வைப்பது.

இவை தவிர மேலும் பல அரசியல் இராணுவ காரணிகளும் உள்ளன. இந்த காரணிகளால் தோற்றுப்போன ஜெயசுக்குறு போன்றதொரு நீண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகள் தான் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாவிலாறு, சம்பூர் என தொடர்ந்த இராணுவ நடவடிக்கைகள் தற்போது வாகரையை கைப்பற்றுவோம் என கங்கணம் கட்டி நிற்கிறது. மாவிலாறு தொடக்கம் தற்போது வாகரையில் தொங்கி நிற்கும் சமர் வரைக்கும் சிங்களப்படைகள் சந்தித்த இழப்புக்கள் ஏராளம்.

ஓக்டோபர் மாதத்தில் மெல்ல மெல்ல ஆரம்பித்த வாகரையை கைப்பற்றும் நடவடிக்கைகள் டிசம்பரில் உச்சம் பெற்றதுடன் இன்று வரை பாதிக்கிணறு கூட தாண்டவில்லை. 20 கி.மீ தூரத்தை இருமுனைகளில் கைப்பற்ற சிங்களப் படைகளுக்கு எடுக்கும் காலம் மிக மிக அதிகம். இந்த நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் சுடு வலுவும் மிக அதிகம். பல்குழல் ஏவுகணைகள், விமானக்குண்டு வீச்சுக்கள் என்பன தாராளமாக உபயோகிக்கப்படுகின்றன.

இராணுவத்தரப்புத் தகவல்களின் படி வாகரையை நோக்கிய முன்னகர்வுகளில் முன்நிற்பது அதன் விசேட படையணிகள் தான். ஆறாவது விஜயபாகு, ஆறாவது மற்றும் எட்டாவது கஜபா படைணிகளைச் சேர்ந்த விசேட படையினரே ஈடுபடுகின்றனர்.

இந்தப்படையணி சந்தித்து வரும் இழப்புக்களும் அதிகம், ஜெயசுக்குறு நடவடிக்கைகளிலும் சிங்களப் படையணியின் விசேட படையினர் பேரழிவை சந்தித்திருந்தனர். ஆனால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை தக்கவைப்பதற்கு சாதாரண இராணுவத்தினருடன் கடற்படையினர் கூட பயன்படுத்தப்பட்டனர்.

வடக்கில் ஒப்பரேசன் பலவேகயா, சூரியக்கதிர், சத்ஜெய, ஜெயசுக்குறு என நடைபெற்ற சமர்கள் எல்லாம் மிக நீண்ட சமர்கள். இந்த நீண்ட சமர்களின் தத்துவம் என்ன? அந்த பிரதேசத்தில் உள்ள புலிகளின் பலம் தான் இராணுவத்தின் நகர்வை மந்தமாக்கியது.

ஆனால் கிழக்கில் அன்று நிலமைகள் அப்படி இருக்கவில்லை அதற்கு கிழக்கில் அன்றைய புலிகளின் பலமும், அந்த பிரதேசத்தின் புவியியல் நிலைமைகளும் காரணமாகின. இன்று இராணுவம் எதிர்பார்த்ததற்கு மாறாகவே களம் உள்ளது. அது தான் தற்போது அந்தரத்தில் தொங்கி நிற்கும் வாகரை இராணுவ நடவடிக்கையின் நிலைமையும், மாவிலாறு, சம்பூர் இராணுவ நடவடிக்கைகளின் கால நீட்சியும். அதாவது போர்நிறுத்த உடன்பாட்டிற்கு முன்னர் இருந்த கிழக்கிற்கும் தற்போது உள்ள கிழக்கிற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

மேலும் கிழக்கில் புலிகளின் ஆட்பலத்தையும் கனரக ஆயுதங்களையும் அழிப்பதற்கு சிங்களப்படைகள் விரிக்கும் வலையில் புலிகள் விழப்போவதில்லை. வாகரையை பகுதியாக படையினர் கைப்பற்றலாம் அல்லது புலிகள் தந்திரமாக வெளியெறலாம். ஆனால் அதற்கு பின்னர் படையினரால் வாகரையை பாதுகாக்க முடியுமா என்பதும் அதன் எதிர்விளைவுகளை சந்திக்க முடியுமா என்பதும் தான் முக்கிய கேள்வி.

ஓமந்தையில் இருந்து நகர்ந்த படையினர் மாங்குளம் கடந்து ஒட்டிசுட்டான் வரை சென்ற போது சந்திரிகா நினைத்திருக்க மாட்டார் தாம் ஆனையிறவையும் சேர்த்து இழக்கப்போகிறோம் என்று.

1992-1993 களில் கேணல் பாணுவின் வழிநடத்தலில் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிகள் எவ்வாறு வடக்கில் படையினரின் செறிவை ஒன்று குவிக்காது செய்ததோ, 1995 இல் சிங்களப்படைகளின் சூரியக்கதிருக்கு எதிரான சமர் எவ்வாறு கிழக்கின் பலபகுதிகளை போரின்றி விடுவித்ததோ, அதே போலவே வாகரைக்கும் ஒரு பதிலுண்டு.

இதைத்தான் விடுதலைப் புலிகளின் தலைவர்களும் கூறியுள்ளார்கள். அதாவது 'வாகரையில் இருந்து புலிகளை வெளியேற்றும் முயற்சி பேரழிவிற்கு வழிவகுக்கும்" என்று.

கிழக்கை நோக்கி மையப்படுத்தப்படும் அரசின் இராணுவ அரசியல் நடவடிக்கைகளுக்கு தீர்க்கமான பதில் ஒன்றுக்கு புலிகள் தயாராகி வருகின்றார்கள் என்பது உண்மை. ஆனால் அது கிழக்கிலா அல்லது வடக்கிலா என்பது அல்ல விவாதம். இராணுவத்தின் போரிடும் வலு மீது எத்தகைய தாக்கத்தை எற்படுத்தப்போகிறது என்பதில் தான் போரின் போக்கு தங்கியுள்ளது.

ஏ-9 பாதையை கைப்பற்றும் நடவடிக்கை எவ்வாறு சந்திரிகாவிற்கு பாடம் கற்பித்ததோ அதே போலவே ஏ-15 பாதை கைப்பற்றலும் மகிந்தவுக்கு ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்க காத்திருக்கின்றது.

http://www.tamilnaatham.com

இராணுவ அரசியல் ரீதியாக காய்கள் நகர்த்தப்படுகின்றன. முக்கியமான கட்டத்தை நெருங்கிக்கொண்டிருப்பது நிச்சயம்.

அடுத்த அடி எங்கே எப்போது விழப்போகிறது என்பதை பார்ப்போம். பொறுமை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் வெற்றி தமிழர்கள் ஆயுத பலத்தால் கையோங்கும் போது தான் எதுவும் சாத்தியமாகும்.இதனை புலம்பெயர்ந்தவர்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.மகிந்தர் தலை கீழாக நின்றாவது போரில் வெற்றி கொள்ள கங்கணம் கட்டி நிற்கிறார்.இதனை புலம் பெயர்ந்தவர்கள் விடுதலை புலிகளை பலப் படுத்துவதன் மூலம் தான் சாத்தியமாக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.