Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைகோ கட்சியை விட்டு நீக்கம்!பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன்!!

Featured Replies

சேலம்: மதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் வைகோவை நீக்கி சேலத்தில் நடந்து வரும் போட்டி மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய பொதுச் செயலாளராக செஞ்சி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலத்தில் எல்.கணேசன்செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டிய மதிமுக போட்டி பொதுக்குழு இன்று காலை கூடியது. சுமங்கலி கல்யாண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஆட்கள் வர தாமதமானதால் 12.30 மணிக்குத் தான் தொடங்கியது. இதுவரை எல்.ஜியும் செஞ்சியும் காத்திருந்தனர்.

இக் கூட்டத்திற்கு விழுப்புரம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் வந்திருந்தனர். அவர்களில் எத்தனை பேர் பொதுக்குழு உறுப்பினர்கள் என்பது தெரியவில்லை. திரளாக வந்தவர்களை போலீஸார் சோதனை நடத்திய பின்னர் உள்ளே அனுமதித்தனர்.

மொத்தமுள்ள பொதுக் குழு உறுப்பினர்கள் சுமார் 1,000 பேரில் இன்றைய போட்டி மதிமுக கூட்டத்தில் 600 பேர் கலந்து கொண்டதாக எல்.கணேசன் கூறினார். ஆனால், 200 பேர் தான் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இக்கூட்டத்தில் வைகோவை பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கும் தீர்மானமும் கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக எல்.கணேசன் அறிவித்தார்.

மேலும், புதிய பொதுச் செயலாளராக செஞ்சி ராமச்சந்திரனை நியமித்தும் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இனிமேல் எக்காரணம் கொண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில்லை என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனது சுயநலத்துக்காக ஜெயலலிதாவுடன் வைகோ கூட்டணிஅமைத்ததாகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுக் கூட்டத்தையொட்டி கல்யாண மண்டபம் உள்ள பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடப்பதைத் தடுக்க சீருடையிலும், மாறு வேடத்திலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டள்ளனர்.

கூட்டத்துக்கு எல்.கணேசன் தலைமை தாங்குகிறார். செஞ்சி ராமச்சந்திரன் முன்னிலை வகிக்கிறார்.

கூட்டம் நடக்கும் கல்யாண மண்டபப் பகுதியிலும் ஐந்து ரோடு, நாலு ரோடு உள்ளிட்ட பல இடங்களிலும் மதிமுக கொடிகள், கட் அவுட்கள்,தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.

பொதுக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து இன்று மாலை அம்மாப்பேட்டை காந்தி மைதானத்தில் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.

இதற்கிடையே, சேலம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலத்த பாதுகாப்புடன் சேலத்தை விட்டு வெளியேறி (வெளியேற்றப்பட்டு?) விட்டனர். இதனால் அவர்களில் ஒருவர் கூட எல்.ஜி கூட்டியுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது.

முன்னதாக சேலம் வந்த எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுக்குழுக் கூட்டத்தில், 500 முதல் 600, 700 உறுப்பினர்கள் வரை கலந்து கொள்வார்கள். பொதுக்குழுக் கூட்டத்தில், 13 ஆண்டு கால மதிமுக தேர்தல் கூட்டணி, அரசியல் பணிகள், திராவிடர் கொள்கையிலிருந்து வைகோ வழி தவறியது குறித்துப் பேசவுள்ளோம் என்றனர்.

கூட்டத்தில் வைகோவை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பான தீர்மானமும் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.

எல்ஜி நடத்தும் கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வழக்குப் போடுவோம், சிறையில் தள்ளுவோம் என காவல்துறை மூலம் மதிமுக பொதுக் குழு உறுப்பினர்களை திமுக மிரட்டி வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து சேலம் மாவட்ட மதிமுக செயலாளர் தாமரைக்கண்ணன் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 பொதுக்குழு உறுப்பினர்களும் வைகோ பக்கமே உள்ளனர். இதில் ஒருவர் கூட போட்டி எல்.ஜி. கூட்டிய பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தனது ஆட்களை மதிமுகவினர் என்று கூறி போட்டி பொதுக் குழுவிற்கு ஆட்களை அனுப்பியுள்ளார். இது பொதுகுழுக் கூட்டமும் அல்ல, அதில் எடுக்கும் எந்த முடிவும் வைகோவை கட்டுப்படுத்தப் போவதும் இல்லை என்றார்

http://thatstamil.oneindia.in/news/2006/12/29/mdmk.html

  • கருத்துக்கள உறவுகள்

எமோஷனல் பொலிட்டிக்ஸ் வைகோ

- ஞாநி

மீடியா டிலைட் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது செய்திகள் டல்லாக இருக்கக்கூடிய சூழலில்கூட இவர்களின் பங்கேற்பு கலகலப்பை ஏற்படுத்திவிடும். அப்படிப் பட்ட மிகச் சிலரில் வைகோ என்று தன் பெயரைச் சுருக்கிக் கொண்ட வை.கோபால்சாமியும் ஒருவர்!

தமிழ்நாட்டில் கடந்த முப்பது வருடங்களில் அரசியல் மேடையில் சிறந்த பேச்சாளர் என்று பட்டியல் போட்டால் இரண்டே பேர்தான் தேறுவார்கள். ஒருவர் கருணாநிதி இன்னொருவர் வைகோ.

இருவரும் ஒருவர் இன்னொருவரை அவுட் ஆக்க முயற்சிக்கும் அரசியல் விளையாட்டில் அடுத்த ரவுண்ட்தான் இப்போது நடந்து வருகிறது. சேம் சைட் கோல் போடக் கூடிய இரண்டு பேரை (எல்.கணேசன் செஞ்சி ராமச்சந்திரன்) தன் அணியில் வைத்திருப்பதுதான் வைகோவின் பலவீனம்; கருணாநிதியின் பலம்!

வைகோ ஒரு சிறந்த உற்சவமூர்த்தி என்பதை கருணாநிதி முதல் செஞ்சியார் வரை பிரபாகரன் முதல் நெடுமாறன் வரை எல்லாரும் அறிவார்கள். ஆனால் எப்போதுமே கோயில்களில் உற்சவமூர்த்தி வேறு; மூலவர் வேறு. மூலவர்களுக்குத்தான் பாலபிஷேகம் முதல் உண்டியல் வசூல் வரை எல்லாமே! உற்சவர்கள் கற்பூர ஆரத்திகளுடன் திருப்தி அடைய வேண்டியதுதான்!

வைகோவை மூலவராக்கிப் பார்க்கத் திட்டமிட்டவர்களில் ஒரு பிரிவினர்தான் இப்போது அவரால் வசூல் நடக்காது என்ற நிலையில் சீச்சி இந்தச் சாமிக்கு சக்தி இல்லை என்று வேறு கோயிலில் பூசாரி வேலைக்கு மனு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

அரசியலில் ஏன் இன்னும் வைகோவால் மூலவராக முடியவில்லை? காரணம் மிக எளிது. பக்தன்தான் உணர்ச்சி வசப்படலாமே தவிர சாமியே உணர்ச்சிவசப்பட்டால் கோயில் தாங்காது. அவருடைய உணர்ச்சிப் பிரவாகத்தை மேடைகளில் பலர் பார்த்திருக்கலாம். தனியே நான் ஒரு முறை தரிசித்தேன்.

வி.பி.சிங் 1987ரூல் ராஜீவிடமிருந்து விலகியது முதல் 1990ரூல் அவர் மண்டல் கமிஷன் நிறைவேற் றத்துக்காக பி.ஜே.பிரூயால் பிரதமர் பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்டது வரை அவரைத் தீவிரமாக ஆதரித்து நான் செயல்பட்டு வந்தேன். ராஜீவ் எதிர்ப்புப் பிரசாரத்துக் கென்றே தொடங்கிய முரசொலியின் வார இணைப்பான புதையல் இணைப்பின் தொகுப்பாசிரியனாக ஓராண்டு வேலை பார்த்தேன்.

வி.பி.சிங் தி.மு.கரூவுடன் இணைந்து தேசிய முன்னணியை உருவாக்கியபோதும் தி.மு.கரூவுக்காகத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசியபோதும் பல மேடைகளில் நான் அவருடைய பேச்சை மொழிபெயர்த்து வந்தேன்.

பிரதமர் பதவியில் அமர்ந்த வி.பி.சிங் மண்டல் கமிஷனால் பதவி இழந்ததும் தமிழ் நாட்டில் ஒரு சூறாவளிச் சுற்றுப்பயணத்தை தி.மு.க. ஏற்பாடு செய்தது. தன்னை முதல்முறை மத்திய அமைச்சராக்கிய வி.பி.சிங்குக்கு தான் செலுத்தும் நன்றிக்கடனாக அவரது உரையை தானே மொழிபெயர்க்க விரும்பினார் மாறன். அவரை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நான் பார்த்தது அந்த ஒரு முறைதான்.

வி.பி.சிங்குக்கு அந்தச் சுற்றுப்பயணத்தில் சென்ற இடமெல்லாம் எழுச்சியான வரவேற்பு. மதுரை வரை எல்லாக் கூட்டங்களிலும் முரசொலி மாறனே மொழிபெயர்த்தார். மற்ற தென் மாவட்டங்களில் தான் மொழி பெயர்க்க வேண்டுமென்று வைகோ விரும்பினார். ஆனால் மாறன் மொழிபெயர்ப்பே தொடர்ந்தது. தன் சொந்தச் சீமையான நெல்லையிலாவது தனக்கு வாய்ப்பு தரப்படு மென்று வைகோ எதிர்பார்த்தார். அங்கேயும் அதற்கான வாய்ப்பு அமையாமல் போனது. அங்கிருந்து அடுத்த ஊருக்கு வைகோவுடன் நான் ஒரே காரில் போக நேர்ந்தது. அடுத்த அரை மணி நேரம் அவர் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். தி.மு.கரூவிலிருந்து தன்னை ஓரங்கட்டுவது தொடங்கிவிட்டது என்று கடும் கோபமும் வேதனையும் கொந்தளித்தது அவர் பேச்சில். தனக்கு யார் நிஜமான தலைவன் என்று ஒரு குமுறல் குமுறினார்! அவரை அப்போது சமாதானப்படுத்துவது மிகக் கடினமாக இருந்தது.

வைகோவின் உணர்ச்சிவசப்படும் இந்த இயல்புதான் தி.மு.கரூவிலிருந்து பின்னர் அவர் வெளியேற்றப்பட்டபோது அவருக்குப் பலமாகவும் இருந்தது; பலவீனமாகவும் இருந்தது. அவரோடு தி.மு.கரூவிலிருந்து வெளியேறிய தலைவர்களுக்கும் அவருக்கும் இருந்த ஒரே கொள்கை ஒற்றுமை கருணாநிதி மீது ஏற்பட்டிருந்த வெறுப்பு மட்டும்தான்.

உண்மையில் வைகோவை தி.மு.கரூவிலிருந்து கருணாநிதி வெளியேற்றாமல் இருந்திருந் தால் இப்போது பத்தோடு பதினொன்றாக இன்னுமொரு மாநில அமைச்சராக இருந்து கொண்டு தயாநிதி மாறனின் சிறப்பியல்புகளை உணர்ச்சி பொங்கத் தமிழக மக்களுக்கு அவர் எடுத்துச் சொல்லிக் கொண்டு இருக்கக்கூடும்.

வைகோவின் உணர்ச்சிகரமான அரசியலில் அவருடைய உழைப்பும் அதிகம்; பட்ட துயரங்களும் அதிகம். அடைந்த லாபங்கள் மிக மிகக் குறைவு. தி.மு.கரூவிலிருந்து வெளியேறி ம.தி.முகரூவை ஒரு கட்சியாக நிலைநிறுத்த பல தொண்டர்கள் செய்த தியாகத்தையும் தன் சுயமரியாதையையும் ஒதுக்கிவிட்டு மீண்டும் தி.மு.க. அணியில் சேர்ந்தபோதே அவருடைய அரசியல் நம்ப கத்தன்மை அடிவாங்கிவிட்டது. அதிலிருந்து மீண்டு வரும் வேளையில் ஜெயலலிதா வுடன் திரும்பவும் கூட்டணி சேர்ந்தது மீண்டும் அவருடைய நம்பகத்தன்மையைக் குலைத்தது. பொடா சிறைவாசம் பாத யாத்திரைகள் எல்லாமே விழலுக்கு இறைத்த நீர்தான்!

ஆனால் தற்போது தி.மு.கரூவை எதிர்ப்பதைத் தவிர வைகோவுக்குச் செய்வதற்கு வேறு அரசியல் ஏதும் இல்லை என்பதுதான் இத்தனைக் குழப்பத்துக்கும் காரணம். கருணா நிதிக்குப் பிறகு தி.மு.க. உடைந்தோ உடையாமலோ தன் வசம் வந்துவிடும் என்று அவர் போட்ட கணக்குகள் தயாநிதி மாறனின் வருகைக்குப் பிறகு தவிடுபொடியாகிவிட்டன.

தி.மு.கரூவும் அ.தி.மு.கரூவும் ஒன்றுக் கொன்று மாற்றாக தங்களை அறி வித்து வருகிற வரையில் மற்றவர்கள் இதில் ஏதேனும் ஓரணியுடன் இணைந்து சிங்கம் சாப்பிட்டது போகச் சிதறியதைச் சாப்பிடும் நரி களாக மட்டுமே இருப்பார்கள். இரு கழகங்களுக்கும் தானே மாற்று என்று தன்னை மூன்றாவது சக்தியாக அறி வித்துக்கொண்டு அதற்கான தலைமை யாகத் தன்னைக் காட்டிக்கொண்ட வரையில் வைகோவுக்கு நம்பகத் தன்மை இருந்தது. இரண்டில் ஒன்றுடன் சேரத் தொடங்கியதும் அவர் கட்சியின் நிலை இடதுசாரிகளின் நிலைக்குச் சமமாகிவிட்டது.

அதனால்தான் வைகோவுக்கு நிகரான பேச்சாற்றலோ நாடாளுமன்றத் திறமையோ கட்சி நடத்தும் முன் அனுபவமோ எதுவும் இல்லாத விஜயகாந்த்துக்கு எட்டு சதவிகித ஓட்டுகள் விழுந்தன. வைகோவின் ம.தி.மு.கரூவுக்கு அதை நெருங்கும் வாய்ப்புக்கூட இல்லை.

தமிழக அரசியலில் இருக்கும் வெற்றிடம் ஒன்றே ஒன்றுதான். தி.மு.கரூவுக்கு மாற்று அ.தி.மு.க அதற்கு மாற்று தி.மு.க. இரண்டுக்கும் மாற்று யார்? இதை நிரப்பும் அரசியல் பார்வை இதற்கான வியூகம் அமைக்கும் ஆற்றல் அனைத்திந்தியக் கட்சி களான காங்கிரஸக்கும் இல்லை பி.ஜே.பிரூக்கும் இல்லை. யாருக்கு உள்ளது என்ற கேள்வியுடன் சுமார் 15ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள் மக்கள். வைகோ ராமதாஸ் விஜயகாந்த் என்று வரிசையாக வந்து செல்லும் ஒவ்வொரு தலைமையும் இன்னும் தடுமாறிக்கொண்டேதான் இருக்கிறது.

இந்தத் தடுமாற்றத்தில் முதலிடம் வைகோவுக்கு! எமோஷனல் பாலிட்டிக்ஸ் என்பது மேடைக்கு மட்டுமே சரி என்பதைத் தன் முன்னாள் தலைவரிடம் அவர் கற்கவே இல்லை!

நன்றி. விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.