Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரையிலிருந்து புலிகளை வெளியேற்றி கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல்:-கருணா கட்சியும் போட்டியிடும்.

Featured Replies

வாகரையிலிருந்து புலிகளை வெளியேற்றி

கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல்

கருணா கட்சியும் போட்டியிடும்.

வாகரைப் பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றுவதே அரசின் இப்போதைய முன்னுரிமைத் திட்டம் என்றும் அதன் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக "றொய்ட்டர்' செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடைபெறும்போது விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று இராணுவத்துடன் இணைந்து இயங்கும் கருணா குழுவின் அரசியல் கட்சியும் போட்டியிடும் என்றும் ஆய்வாளர் கருதுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கும் வாகரை, மிக விரைவில் இராணுவத்தின் கைவசம் வரும் என்று பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கா தம்மிடம் கூறியதாக, "றொய்டர்' நிறுவனத்தின் செய்தியாளர் சஞ்சீவ் மிக்லானி எழுதியுள்ளார்.

வாகரையை இராணுவம் கைப்பற்றுவது என்பது காலம் சம்பந்தப்பட்ட ஒன்றே அந்தக் காலம் சில நாள்களாகவும் இருக்கலாம் சில வாரங்களாகவும் இருக்கலாம் எதுவாயினும் நாங்கள் அங்கு சென்றே தீருவோம் என்று இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்கா "றொய்ட்டருக்கு' அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:நாம் வாகரைக்கு முன்னேற முயலும்போது விடுதலைப் புலிகள் மக்களை மனித கேடயமாகப் பயன்படுத்துவார்கள் என்ற அச்சம் காரணமாகவே எமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியுள்ளோம். இராணுவத்தினருக்கு ஆத்திரமூட்டும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகள் நகரப் புறங்களில் இருந்து தாக்குதல்களை நடத்துகின்றனர். அவர்களே தாக்குதல்களை முதலில் நடத்தினார்கள். சுமார் 30, 000 சிவிலியன்கள் அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக காடுகளுக்கு ஊடாக வெளியேறியுள்ளனர். இப்போது 8,000 தொடக்கம் 10,000 பேர் வரையிலேயே அவர்களின் பிரதேசத்தில் உள்ளனர் அவர்களில் அநேகர் வயதானவர்களும், சிறுவர்களும் ஆவர் உணவு மற்றும் மருந்துவகைகளுக்கு அங்கு தட்டுப்பாடு நிலவுவதால் சிவிலியன்களை அதிக நாள்களுக்கு அவர்களால் தடுத்து வைத்திருக்க இயலாது இப்போது அங்கு தங்கியிருக்கும் மக்களை வீதிகளால் வருவதற்கு அனுமதிக்குமாறும், வீதிகளைத் திறந்து விடுவதற்கு நாம் தயார் என்று சர்வதேச சமூகத்தின் ஊடாகவும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு மூலமும் அவர்களுக்குத் தெரியப் படுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.

வாகரையில் இராணுவத்தினர் தாக்குதல்களை ஆரம்பித்தால் முழு அளவில் யுத்தம் வெடிக்கும் என்று விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.

அரசாங்கப் படையினர் யுத்த வெறி பிடித்தவர்கள் என்றும் 2002 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடப்பவர்கள் என்றும் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள் என்று "றொய்ட்டர்' செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.uthayan.com

Edited by YARLVINO

வாகரையில் இருந்து விடுதலைப்புலிகளை வெளியேற்றுவதே அரசின் இப்போதைய முன்னுரிமைத்திட்டம்: பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க

- பண்டார வன்னியன் ளுயவரசனயலஇ 30 னுநஉநஅடிநச 2006 10:49

வாகரைப் பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றுவதே அரசின் இப்போதைய முன்னுரிமைத் திட்டம் என்றும் அதன் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும

மட்டக்களப்பில் தாக்குதல் முயற்சி முறியடிப்பு

[சனிக்கிழமை, 30 டிசெம்பர் 2006, 14:14 ஈழம்] [தாயக செய்தியாளர்]

மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளை தாக்குவதற்கு முயற்சித்த சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை பின்னிரவில் மட்டக்களப்பு படுவான்கரையில் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் இராணுவத்தினர் எறிகணை சூட்டாதரவை வழங்க, துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதல் முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் பலமான பதில் தாக்குதலை தொடுத்தனர். இதனையடுத்து துணை இராணுவக்குழுவினரும் சிறிலங்கா இராணுவத்தினரும் சிதறி ஓடினர்.

வடமுனை காட்ப்பகுதிக்குள் சிதறி ஓடிய அவர்கள் தற்போது விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொரு துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் நான்கு விடுதலைப் புலிகள் காயமடைந்துள்ளனர்

http://www.eelampage.com/?cn=30279

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் படைமானம் அரங்கேற்றம் காண,கடந்தகாலங்கள் படிஅளக்கவில்லைப் போலும்.

இனித்தான் ஆக்கும் அதற்கு நாள்வந்தது. சரி அந்த நாள் மிக அண்மையில்தான் ஆனால் அது. இந்தியாவுக்கு இம்முறையும் கப்பல் ஏற வைக்காதீர்கள்.

வடக்கு கிழக்கு இணைந்த எமது தாயகக் கோட்பாடானது அரசியல் இராஜதந்திர ரீதியில் ஒரு பாரிய சதியை நெருக்கடியை சந்திக்க இருக்கிறது அடுத்த வருடத்தில்.

இந்த சதிக்கு பின்புலமாக மறைமுக ஆதரவாக இந்தியா நோர்வோ அமொரிக்க சக்த்திகள் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைக்க சிங்கள தேசத்தோடு கை கோத்து நிக்கிறது.

இன்று மூதூர் முதல் வாகரை வரை நடந்த இராணுவ நடவடிக்கையில் எத்தனை ஆயிரம் இஸ்லாமிய தமிழ்க் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள் அகதியாக்கப்பட்டிருக்கிறார்

கருணாவினால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாத களத்தை கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டுவர முடியாது, என்பதை இண்றய கள நிலவரம் சொல்கிறது..

தமிழர் தரப்பை பலவீனமாக்கிய நிலையில் ஒரு தேர்தலை இலங்கை சந்திக்க முயலலாம் ஆனால் அந்த தேர்தல் கிழக்கின் தமிழர் பகுதிகளில் நடைபெறும் சாத்தியங்கள் இல்லை.. பகிஸ்கரிக்கும் நிலையும் தோண்றலாம். எதிர் நடவடிக்கைகள் ஆரம்பித்தால் நிலைமை தலைகீழாக அமையும் சாத்தியங்களும் அதிகம். ( அப்படி நிலமை மாறாது எண்று நினைப்பவர்களுக்கு அது மாறாமலே இருக்கட்டும்)

கிழக்கு முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை என்பது முழு அளவிலான யுத்தத்துக்கு தான் கொண்டு செல்லும் எண்று புலிகள் அறிவித்த வேளையில் பின் தாக்குதல் கைப்பற்றுதல் என்பது போர் நிறுத்ததை முறித்து கொள்வதாகத்தான் அமையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.