Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏப்ரல் 1 ஏன் முட்டாள்கள் தினமானது..? - தெரியுமா உங்களுக்கு ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இன்று ஏப்ரல் 1… உலகம் முழுக்க முட்டாள்களின் தினமாகக் ‘கொண்டாடுகிறார்கள்’… ஆம் மக்கள் தங்களைத் தாங்களே முட்டாள்களாக்கிக் கொண்டு, அதையும் கொண்டாடி மகிழும் நாள் இன்று. எப்போது முட்டாள்கள் தினம் பிறந்தது என்பதை யாரும் உறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. சரித்திரம் முன்னும் பின்னுமாக சில சம்பவங்களைச் சொல்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பல காலம் வரை ஏப்ரல் முதல் நாள்தான் வருடத்தின் முதல் நாளாக இருந்தது. அதன் பின் 16ம் நூற்றாண்டில் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாக பின்பற்றத் தொடங்கினர். 1582ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 13ம் கிரிகோரி, ஜார்ஜியன் காலண்டர் என்ற புதிய காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். அதில் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு பிறப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று ஏப்ரல் 1… உலகம் முழுக்க முட்டாள்களின் தினமாகக் ‘கொண்டாடுகிறார்கள்’… ஆம் மக்கள் தங்களைத் தாங்களே முட்டாள்களாக்கிக் கொண்டு, அதையும் கொண்டாடி மகிழும் நாள் இன்று. எப்போது முட்டாள்கள் தினம் பிறந்தது என்பதை யாரும் உறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. சரித்திரம் முன்னும் பின்னுமாக சில சம்பவங்களைச் சொல்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பல காலம் வரை ஏப்ரல் முதல் நாள்தான் வருடத்தின் முதல் நாளாக இருந்தது. அதன் பின் 16ம் நூற்றாண்டில் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாக பின்பற்றத் தொடங்கினர். 1582ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 13ம் கிரிகோரி, ஜார்ஜியன் காலண்டர் என்ற புதிய காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். அதில் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு பிறப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

   

ஸ்காட்லாந்து, ஜெர்மனி, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் படிப்படியாக இந்த மாற்றத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டன. ஆனால் பல ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் காலனி நாடுகளும் இந்த புத்தாண்டை ஏற்கவில்லை. எனவே அப்போது சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐரோப்பியர்கள் தங்களின் புத்தாண்டை பின்பற்றாதவர்களை முட்டாள்கள் என நையாண்டி செய்யத் தொடங்கினர்.

அத்தோடு நில்லாமல், ஏப்ரல் 1ம் தேதி பல்வேறு பொய்யான, தவறான செய்திகளைச் சொல்லி அவர்களை ஏமாற்றவும் ஆரம்பித்தனர். இது தான் காலப்போக்கில் ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் என மாறிவிட்டதாக கூறுகிறார்கள்.

ஆனால் இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈரானியர்கள் முட்டாள்கள் தினம் போன்ற நாளை கடைப்பிடித்ததாக வரலாறு கூறுகிறது. தற்போது உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்கள் தினமாக கடைப்பிடித்து வருகின்றனர். பெரியளவிலான கொண்டாட்டங்கள் போன்றவை இல்லை என்றாலும், நண்பர்கள், குடும்பத்தினர் என தெரிந்த நபர்களிடம் வேடிக்கை செய்வதும் அவர்களை முட்டாளாக்கி மகிழ்வதிலும் பெரும்பாலான மக்கள் ஈடுபடுகிறார்கள்.

பிரான்ஸ் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் , ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810-ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை எல்லோரும் கேலி செய்தனராம். ‘நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார்’ என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.

நவீன காலத்தில் பிரபல டிவி, ரேடியோ, பத்திரிகைகளும் முட்டாள்கள் தினத்தை ஒட்டி, தங்கள் வாசகர்களையும், நேயர்களையும் ஏமாற்றி ‘உட்டாலக்கடி’ செய்திகளை வெளியிடுவதுண்டு.

முன்பு ஒரு தமிழ் வார இதழ் குஷ்புவுக்கும், பாலச்சந்தருக்கும் கல்யாணம் என்றும், மீனாவுக்கும் சடகோபன் ரமேஷுக்கும் காதல் திருமணம் என்றும் சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். குஷ்பு கோடி ரூபாய் நஷ்டம் கேட்டு வழக்குப் போட்டதெல்லாம் நினைவிருக்கலாம்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் கூட கடந்த 2005ம் ஆண்டில் ஏப்ரல் 1ம் தேதி ஒரு குறும்பு வேலையில் ஈடுபட்டுள்ளது.

‘மார்ஸில் (செவ்வாய் கிரகம்) தண்ணீர்’ என்று கொட்டையாக ஒரு தலைப்பில் தன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் எழுதிவைத்து, ஒரு குடுவை தண்ணீர் இருக்கும் படத்தையும் போட்டிருந்தது. பின்னர் அதை ‘சும்மா தமாசு’ என்றது நாசா. ஆனால் சில நேரங்களில் ஏப்ரல் 1 அன்று காமெடி என்ற பெயரில் சிலர் செய்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

2003ல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை கொன்றுவிட்டார்கள் என சில இணையத் தளங்கள் பொய் செய்தியை பரப்பி அதனால் தென்கொரியா பங்குச் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனப் பங்கு 1.5 சதவீதம் சரிந்தது நினைவிருக்கலாம்.

ஆனால், வரலாற்றில் பல நல்ல விஷயங்களின் துவக்க நாளாக இருந்ததும் இதே ஏப்ரல் 1 தான் என்பதை மறக்கக்கூடாது. காரணம் ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கமாக ஏப்ரல் 1 அமைந்திருப்பதால் தொழிலிலும் வணிகத்திலும் ஏப்ரல் 1 முக்கிய நாளாகக் கருதப்படுகிறது. 1935 ஏப்ரல் 1-ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி துவங்கப்பட்டது, 2004 -ல் கூகுளின் மெயில் சேவை துவங்கப்பட்டது என ஏகப்பட்ட நல்ல விஷயங்களின் துவக்கம் ஏப்ரல் 1 தான் என்பது நினைவிருக்கலாம்.

இன்னொன்று வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் நாள் இந்த ஏப்ரல் 1-தான். யோசித்துப் பார்த்தால், முட்டாள்கள் தினத்தன்றுதான் பல புத்திசாலித்தனமான நிகழ்வுகளை சரித்திரம் கண்டுள்ளது.

ஆக, இதை ஏன் முட்டாள்கள் தினமாகப் பார்க்க வேண்டும்… புத்திசாலிகள் விழிப்போடு இருக்க வேண்டிய நாளாகவும் பார்க்கலாம்!

இதைத் தவிர, வேறு சில கதைகளும் இதற்கு கூறப்படுகின்றன. 16ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த தினம் கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சரி... இந்த ஏப்ரல் ஃபூல் கொடுமைக்கு வருவோம். ஃபூல் என்கிற ஆங்கில வார்த்தைக்கு, 'முட்டாள்' என்கிற வார்த்தையை மொழிபெயர்ப்பாகப் பயன்படுத்தியது முதல் கொடுமை. உண்மையில், 'முட்டாள்' என்பவர்கள், கொடுக்கப்பட்ட வேலையை செவ்வனே செய்பவர்கள். தங்களின் கவனம் வேறு எங்கும் திசை திரும்பிவிடாமல், கொடுத்த வேலையில் மட்டுமே நிலைக்கச் செய்திருப்பவர்கள்.

அதாவது, ஊர்களில் தேரோட்டம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தத் தேரை ஆங்காங்கே நிறுத்துவதற்கு முட்டு (பிரேக்) கொடுப்பார்கள். அத்தகைய முட்டு கொடுக்கும் வேலையைச் செய்பவர்கள், 'முட்டு ஆள்'. இது 'முட்டாள்' என்று மருவி, பிற்காலத்தில், மூடர்கள் என்று பொருள் கொள்ளும் வகையில், புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. அற்புதமான முட்டுக் கொடுக்கும் பணியைச் செய்யும் அந்த வேலைக்காரர்களையே கேவலப்படுத்துவதாகவும் மாறிவிட்டது.

'ஒரு வேலையைச் சொன்னால், அதை மட்டுமே செய்து கொண்டிருக்காதே, அக்கம்பக்கமிருக்கும் விஷயங்களையும் கவனி, அதையும் சேர்த்தே செய்து முடி' என்று வலியுறுத்துவதற்காக, 'முட்டு ஆள்' மாதிரி வேலை பார்க்காதே என்று சொல்லப்பட்டது... அப்படியே நிலைத்துவிட்டது.

பிற வேலைகளுக்கு வேண்டுமானால், 'முட்டு ஆள் மாதிரி வேலை பார்க்காதே' என்பது பொருத்தமாகக்கூட இருக்கலாம். ஆனால், தேருக்கு முட்டுக் கொடுப்பவர், தன் கவனத்தை வேறு எங்காவது சிதறவிட்டால்... அது பல நூறு உயிர்களை பலி கொண்டுவிடும். அதனால்தான், முட்டு ஆட்கள், அதில் மட்டுமே கவனத்தைச் செலுத்துவார்கள். வேறு எங்குமே கவனத்தை சிதறவிட மாட்டார்கள்.

இது தேரோட்ட காலம்தான். திருவாரூர் தேர் போன்ற பெரும் தேர்களுக்கு பிரேக் வந்துவிட்டது. ஆனாலும்கூட முட்டுக் கொடுப்பதும் தொடர்கிறது. இதேபோல பெரும்பாலான ஊர்களின் தேர்களுக்கு முட்டுதான் கொடுக்கப்படுகிறது. அங்கேயெல்லாம் ஒரு தடவை எட்டிப் பாருங்கள்... முட்டுக் கொடுக்கும் வேலை செய்பவர்கள் எத்தகையச் சூழலில் செய்கிறார்கள் என்பதை நேரடியாகவே தெரிந்து கொள்ளலாம். அவர்கள் படும் அவதியையும் புரிந்து கொள்ளலாம்.

'முட்டு ஆள்' விஷயம் இப்படி இங்கே மாறிப்போய், ஆங்கிலேயேர்களின் வருகைக்குப் பின்னால், 'ஏப்ரல் ஃபூல்' என்பதும் இங்கே இறக்குமதியாகி... 'முட்டாள்கள் தினம்' என்று இன்று வரையிலும் கேவலப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

நம்மளுக்கு இன்று அல்ல முட்டாள்கள் தினம்.. வருஷம் முழுவதும் முட்டாள்கள் தினம் தான்.. எப்போ தான் நாங்க புத்திசாலிய இருந்திருக்கம் சொல்லுங்க பாப்பம்.. அவன் இவனை ஏமாத்துறதும் இவன் அவனை எமத்துறதும் ஏறி மிதிக்குறது விழுந்தவனை பாத்து சிரிக்கிறதும், ஏமாந்தவனை பாத்து கை கட்டி, கை கொட்டி சிரிக்கிறது தினமும் தானே நடக்கிறது ஆகவே.. முட்டாள்கள் தினம் இன்று மட்டும் அல்ல..

இருந்தாலும் எல்லோருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்..

http://www.seithy.com/breifNews.php?newsID=154615&category=CommonNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.