Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்குனி உத்தரமும் சித்திரையும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம்-2016

6-ஆம் பதிவு

நாள்: 26-03-2016

-----------------------------------------------------------------------------------------------------------------------------

     பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி இவ்வாண்டின் நான்காவது நிலவு வெற்றி பெற்றுள்ளது. 23.03.2016 அன்று 6.33-க்குத் தோன்றி நள்ளிரவை 12.33-க்கு கடந்தது. இது இழு பறியான நிலைதான் ஆயினும் முறை முற்றிய நிலவாகக் கணக்கில் கொள்ளலாம்.

     இவ்வாண்டின் முதல் இரண்டு முழுநிலவுகளான தைப்பூசம், மாசிமகம் இரண்டும் ஒவ்வொரு நாள் குறைவுற்ற நிலையில் பங்குனி உத்தரமும், சித்திரைச் சித்தரையும் வெற்றி பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.

சித்திரைமேழி:-

      தமிழ் மரபில் இச்சொல் தச்சர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'இது இவ்வூர்த் தச்சன் சித்திரமேழி எழுத்து' என்று 12-ம் நூற்றாண்டின் எண்கண் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேழிப்பத்தி மண்டபம் என்பது நான்கு மூலைகளிலும் சுவருடன் இடையில் தூண்களால் இணைக்கப்பட்ட வடிவமைப்பு. கலப்பையின் வளைந்த கட்டை மேழியாகும். மற்றபடி கலப்பை என்ற சொல் தச்சுக்கருவிகளை சுமந்து செல்லக் கம்மியர் தம் தோளில் சுமந்து செல்ல வடிவமைத்தது ஆகும். அதாவது பையைத் தொங்க விட்டுத் தோளில் சுமந்து செல்வது. கம்மியர் கலப்பை, ஔவையார் தோளில் கலப்பைச் சுமந்தார்.

     காவினம் கலனே சுருக்கினம் கலப்பை

     மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்

     மழுவுடை காட்டகத்து அற்றே

     எத்திசைச் செலினும்  அத்திசைச் சோறே - புறநானூறு 206: 10-13

 

மேழியும் உத்தரமும்:-

     நன்கு வளர்ந்த மரத்தைத் தேர்வு செய்யும் தச்சர்கள் அடிமரத்தில் மேழியளவு எவ்வளவு தேறும் என்பதை முதலில் கணக்கிடுவர். அதற்காக அந்த மரத்தை அறுத்துப் பார்க்க வேண்டும் என்ற தேவை கிடையாது. நூல்பிடித்து பார்த்தே தெரிந்து கொள்வர். மேழியின் இருபுற அளவு கிடைத்தபின் மரத்தின் சுற்றளவைக் கணக்கிட்டு நான்காவது புள்ளியைக் கணக்கிடுவர். சதுரம் அல்லது செவ்வகம் செம்மையாக அமைந்தால் அது உத்தரம் ஆகும். அடுத்து அடிமரத்தின் நீளம் கணு நீங்கலாக அளக்கப்படும். அது யோகம் ஆகும். ஓகம் அல்லது ஓங்கு என்ற அடியில் பிறந்திருக்கலாம்.

     இன்றைக்கு யோகம் அடித்தது என்றால் நீளமான மரம் கிடைத்து விட்டது என்று பொருள். வாசக்கால், உத்தரம், விட்டம் இவற்றுக்கு ஆகும் மரங்களைத் தெரிவு செய்யும் தச்சர்களே இவற்றை அழகாக வானவியலில் பொருத்தியுள்ளனர் எனச் சான்றுகளோடு இன்று நிறுவ இயலும்.

     இரவில் தோன்றும் மீன் கூட்டங்களில் கொத்தாக நகரும் கூட்டங்களே இராசிகள் ஆகும். இராசிகளைப் பன்னிரண்டாகப் பகுத்து கதிரவன் ஒவ்வொரு 30 நாளும் நகரும் பாதைகள் முடிவு செய்யப்பட்டுள்ளன.

     ஆனால் ஓராண்டின் 12 முழுநிலவுகளும் சில மீன் களோடு சேர்வதும், விலகுவதும் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இவற்றுக்கும் 12 இராசிகளுக்கும் தொடர்பில்லை. தொடர்பு நிலவுடன் தான். அது அறிகுறியாகவே கருதப்படும்.

     வானில் மிகவும் வெளிச்சமாகத் தோன்றும் வான வன்கையன் என்று அழைக்கப்படும் மக வெண் மீன் எனும் மீன் தற்காலத்தில் நாம் வியாழன் என்று புரிந்து கொண்டுள்ள மீனே ஆகும். அதிலிருந்து முக்கோண வடிவில் செங்குத்தாகத் தோன்றும் கூட்டம் ஒன்றே ஒன்றுதான் உள்ளது. அதுவே சித்திர மேழியாகும். இந்தச் சித்திரமேழி முக்கோணத்தில் நான்காவது புள்ளி கூடும் இடத்தில் முழுநிலவு பொருந்தினால் அது உத்தரம் என்றும் பங்குனி உத்தரம் என்றும் அழைக்கப்படுகிறது. பாழ், கால், பாகு, ஒன்று, இரண்டு என்று வகைப்படுத்தப்பட்ட பாய்கலைப்பாவைக் கணக்கீட்டின்படி 'பாகு' ஆகிய பங்குனி என்பது மூன்றாவது முழுநிலவு ஆகும். (பரிபாடல்- ஊழிஎண் நவிற்றும் சிறப்பு 3:77-78)

     இவ்வாண்டின்  மூன்றாவது முழுநிலவு உத்தரமாக அமைந்தது. நான்காவது முழுநிலவு மேழியை நெருங்கியது, அதில் சிக்காமல் விலகியது.

மூத்தது மோழை இளையது காளை:-

      இப்படியாக வழக்குச் சொல் தமிழில் உள்ளதை அறிவோம். மேழ இராசிக்கு அடுத்தபடியாகவே காளை இராசி அமைய வேண்டும். அதில் சுற்று ஏற்பட்டால் பாதிப்பை ஏற்படுத்தும். இன்று அப்படி ஒரு பாதிப்பு ஏற்படவில்லை.

ஆடுதலை:-

     நிலவின் வளர்பிறைப் போக்கு ஆடுதலையாகும். இதுபற்றி விரிவாக முந்தையப் பதிவுகளில் செய்திகள் உள்ளன. அந்த ஆடுதலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் என்பது தமிழர்களுக்கு ஆகிவந்த கலை.

அச்சம் நீங்கியது:-

      மூன்றாவது முழுநிலவு உத்தரமாக அமைந்ததும் நான் காவது முழுநிலவு சித்திரை மேழியில் சிக்காமல் விலகியதும் வரவேற்கத்தக்க வானவியல் மாற்றங்கள்.

தமிழர்களின் பெருந்தச்சு மரபு:-

     தமிழர்களின் பெருந்தச்சு மரபு ஒரு செய்தியைப் புலப்படுத்துகிறது என்றால் அரசுருவாக்கம் அமைகிறது என்று பொருள். இது 'காணா மரபு' வகையைச் சேர்ந்தது. அதாவது ஒன்றுமில்லாமல் மறைந்த நிலையில் திடீரென தோன்றி நிற்கும். இது குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழர்கள் ஒருமுறை உறக்கம் கலைந்தால் மீண்டும் உறங்க மாட்டார்கள். தமிழ்ப் புத்தாண்டு புரிதல் தமிழர்களை உயிர்மலர்ச்சி பெறச் செய்யும். பிற உயிர்களையும் ஆறுதலாக அழைத்துச் செல்லும்.

 

கடந்த இரண்டு முழுநிலவுகளின் ஆடுதலை:-

            வளர்பிறை ஒரு குறிப்பிட்ட திசையில் விலகி முழுநிலவு நாளோடு நிறைவு பெற்றுப் பின்வாங்கி விடும். கடந்த உத்தரம் எட்டித் தொட்ட எல்லையானது மீண்டும் ஊக்கப்பட்டுத் தெற்கு எல்லைக்குச் சென்று சரியாக கதிரவனில் பொருந்தியது. மீண்டும் திரும்பி வந்து மேழியின் விளிம்பில் நின்றது. மறுபடியும் அது தெற்கு நோக்கியே விலகியிருக்கிறது.

 

     திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக

     விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலன் மண்டிலத்து

                                          (நெடுநல்வாடை 160-161)

மேழியே அளவு:-

     தமிழ்ப்புத்தாண்டின் மூன்றாவது முழுநிலவும், நான்காவது முழுநிலவும் அதாவது பங்குனியும், சித்திரையும் அதாவது உத்தரமும், சித்திரையும் சீரான இடைவெளியுடன் உரசி நெருங்கி வருகின்றன என்று தெரிகின்றது. இந்த இரண்டு முழுநிலவுகளுக்கு இடையில் தான் ஓசையின்றி வருடை பிறந்து இருக்கிறது.

     அடுத்த முழுநிலவு வைகாசி ஆகும். அதன் அறிகுறிகள் தனியே ஆவணப்படுத்தப்படும். நிலவின் அறிகுறியானது பிழையைச் சுட்டினாலும் திருத்தம் என்னவோ கதிரவனோடுதான். இதுதான் பெருந்தச்சு நிழல் நாள்காட்டி வாய்ப்பாட்டின் பங்களிப்பு.

---000---OOO---000---

©இது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 இன் வெளியீடு

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.