Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி யுத்தத்துக்கான அழைப்பு

Featured Replies

திருமலையைத் தனியாக பிரித்தெடுத்து வடக்கு - கிழக்கு மாகாணங்களை பிளவுபடுத்த அரசு வகுத்துள்ள வியூகம்

நாடு முழு அளவிலான யுத்தத்துக்குள் இழுத்துவிடப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கைப் பிரித்து கிழக்கிற்கு தனி மாகாணத்தை உருவாக்கி அதற்காகத் தேர்தலொன்றை நடத்துவதற்காக கிழக்கில் பாரிய தாக்குதலொன்றுக்காக படைத்தரப்பு முழு அளவில் தயாராகியுள்ளது.

விடுதலைப் புலிகள் வசமுள்ள வாகரையை அடுத்த சில தினங்களுக்குள் அல்லது அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் கைப்பற்றிவிடுவோமென இராணுவம் மீண்டும் மீண்டும் கூறிவருவதன் மூலம், எவ்வேளையிலும் வாகரையை இலக்கு வைத்து பாரிய படை நடவடிக்கை ஆரம்பமாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பாரிய படை நடவடிக்கை மூலம் திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்குமிடையிலான பிரதான வீதியை (ஏ-15) கைப்பற்றி திருகோணமலை - மட்டக்களப்பு மாவட்டத்தை தரைவழியாக இணைப்பதே அரசின் திட்டமாகும்.

திருமலைக்கும் மட்டக்களப்புக்குமிடையே மிக நீண்ட காலமாகவே தரை வழிப்பாதை மூடப்பட்டேயிருந்தது. மூதூர் கிழக்கு முதல் பனிச்சங்கேணி வரையான பெரும் பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்ததால் திருமலைக்கும் மட்டக்களப்புக்குமிடையிலான போக்குவரத்துகள் பொலநறுவையூடாகவே நடைபெற வேண்டியிருந்தது.

மூதூர் கிழக்கில், சம்பூரை மையமாக வைத்து நடத்தப்பட்ட பாரிய படையெடுப்பையடுத்து மூதூர் கிழக்கில், சம்பூர் முதல் தோப்பூர் வரையிலான பிரதேசம் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தற்போது திருமலைக்குக் கிழக்கே ஈச்சிலம்பற்று முதல் வெருகல் வரையிலான சிறிய பிரதேசமே புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ளது.

இதுபோன்று, மட்டக்களப்புக்கு வடக்கே திருமலை எல்லையில் கதிரவெளி முதல் பனிச்சங்கேணி வரையான ஒடுங்கிய பிரதேசம் புலிகள் வசமேயுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்தப் பிரதேசத்தின் மையமாக இன்று வாகரை விளங்குகிறது. வாகரையைக் கைப்பற்றுவதன் மூலம் திருமலை, மட்டக்களப்பு எல்லையில், இதுகாலவரை புலிகளின் பிடியிலிருந்த முழுப் பிரதேசங்களையும் தங்கள் வசப்படுத்திவிட முடியுமென அரசு கருதுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கில் நிலை கொண்டிருந்த புலிகள் தற்போது வாகரையிலும் அதனை அண்மித்த பகுதிகளிலுமேயே நிலைகொண்டுள்ளனர். பாரிய பிரதேசங்களில் பெரும் படையெடுப்பை சந்திப்பதை விட, குறுகலான பிரதேசங்களில் பெரும் படையெடுப்புகளை புலிகள் மிக இலகுவாக முறியடித்துள்ளனர்.

தற்போது புலிகளின் ஆட்லறித் தளங்கள் கதிரவெளி, வாகரைப் பகுதிகளிலேயே உள்ளன. இந்த ஆட்லறித் தளங்களிலிருந்தே திருமலையில் கல்லாறு, மகிந்தபுர, சேருநுவர போன்ற படை முகாம்கள் மீதும் மட்டக்களப்பில் மாங்கேணி, கஜுவத்தை மற்றும் வாழைச்சேனை காகித ஆலை படை முகாம்கள் மீதும் புலிகள் கடும் தாக்குல்களைத் தொடுத்து வருகின்றனர்.

வாகரை மற்றும் அதனோடிணைந்த பகுதிகளைக் கைப்பற்றுவதன் மூலம் ஒரே நேரத்தில் பலவற்றை சாதிக்க முடியுமென அரசு கருதுகிறது. இதனாலேயே வடக்கு - கிழக்கு மாகாணங்களைத் தனித்தனியாக பிரித்து இரு மாகாணங்களாக்கியவுடன் வாகரையை கைப்பற்றி திருமலை மாவட்டத்திலிருந்தே புலிகளை விரட்டி விட வேண்டுமென்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

நாளை திங்கட்கிழமை பிறக்கும் புதிய ஆண்டுடன் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக செயற்படவுள்ளன. மாகாண சபை சட்டப்படி, புதிய மாகாண சபையொன்று உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களினுள் அந்த மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பின் பெரும்பாலான பகுதி இராணுவக் கட்டுப்பாட்டில் இல்லை. அதேநேரம் , கிழக்கையும், இரண்டாகப் பிரித்து திருகோணமலையை கிழக்கிலிருந்து துண்டாடி தனியாக்கி அதனை மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தினுள் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருகோணமலையை சிங்களக் குடியேற்ற பிரதேசமாக்கி தமிழர்களையும் முஸ்லிம்களையும் சிறுபான்மையினமாக்கி விடுவதே அரசின் திட்டமாகும்.

...

http://www.thinakkural.com/news/2006/12/31...u_nilavaram.htm

நாளை முதல் வடக்கு கிழக்கு மாகாண அரச செயலகங்களில் தினமும் சிங்கள தேசியகீதம்.

நாளை முதல் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல அரசாங்க செயலகங்களும் காலை 8:15 மணிக்கு சிங்கள தேசிய கீதத்தை இசைத்து கடமைகளை ஆரம்பிக்க வேண்டும் என றியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம உத்தரவு பிறப்பித்துள்ளார்

இதேவேளை சிறீலங்கா அரசாங்கத்தின் வடக்கு மாகாணத்திற்கான ஆளுநரான முன்னாள் காவல்துறை தலைமையதிகாரி சந்திரா பெர்னான்டோ பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது ஆளுகையின் கீழ் வடக்கு மாகாணத்திற்கான முதன்மை செயலாளராக யு.ரங்கராஜா என்ற தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநரான சந்திரா பெர்னான்டோ பொறுப்பேற்கும் வரை பதில் ஆளுநராக தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம கடமையாற்றவுள்ளார்.

www.pathivu.com

இறுதி யுத்தத்துக்கான அழைப்பு

* திருமலையைத் தனியாக பிரித்தெடுத்து வடக்கு - கிழக்கு மாகாணங்களை பிளவுபடுத்த அரசு வகுத்துள்ள வியூகம்

நாடு முழு அளவிலான யுத்தத்துக்குள் இழுத்துவிடப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கைப் பிரித்து கிழக்கிற்கு தனி மாகாணத்தை உருவாக்கி அதற்காகத் தேர்தலொன்றை நடத்துவதற்காக கிழக்கில் பாரிய தாக்குதலொன்றுக்காக படைத்தரப்பு முழு அளவில் தயாராகியுள்ளது.

விடுதலைப் புலிகள் வசமுள்ள வாகரையை அடுத்த சில தினங்களுக்குள் அல்லது அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் கைப்பற்றிவிடுவோமென இராணுவம் மீண்டும் மீண்டும் கூறிவருவதன் மூலம், எவ்வேளையிலும் வாகரையை இலக்கு வைத்து பாரிய படை நடவடிக்கை ஆரம்பமாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பாரிய படை நடவடிக்கை மூலம் திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்குமிடையிலான பிரதான வீதியை (ஏ-15) கைப்பற்றி திருகோணமலை - மட்டக்களப்பு மாவட்டத்தை தரைவழியாக இணைப்பதே அரசின் திட்டமாகும்.

திருமலைக்கும் மட்டக்களப்புக்குமிடையே மிக நீண்ட காலமாகவே தரை வழிப்பாதை மூடப்பட்டேயிருந்தது. மூதூர் கிழக்கு முதல் பனிச்சங்கேணி வரையான பெரும் பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்ததால் திருமலைக்கும் மட்டக்களப்புக்குமிடையிலான போக்குவரத்துகள் பொலநறுவையூடாகவே நடைபெற வேண்டியிருந்தது.

மூதூர் கிழக்கில், சம்பூரை மையமாக வைத்து நடத்தப்பட்ட பாரிய படையெடுப்பையடுத்து மூதூர் கிழக்கில், சம்பூர் முதல் தோப்பூர் வரையிலான பிரதேசம் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தற்போது திருமலைக்குக் கிழக்கே ஈச்சிலம்பற்று முதல் வெருகல் வரையிலான சிறிய பிரதேசமே புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ளது.

இதுபோன்று, மட்டக்களப்புக்கு வடக்கே திருமலை எல்லையில் கதிரவெளி முதல் பனிச்சங்கேணி வரையான ஒடுங்கிய பிரதேசம் புலிகள் வசமேயுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்தப் பிரதேசத்தின் மையமாக இன்று வாகரை விளங்குகிறது. வாகரையைக் கைப்பற்றுவதன் மூலம் திருமலை, மட்டக்களப்பு எல்லையில், இதுகாலவரை புலிகளின் பிடியிலிருந்த முழுப் பிரதேசங்களையும் தங்கள் வசப்படுத்திவிட முடியுமென அரசு கருதுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கில் நிலை கொண்டிருந்த புலிகள் தற்போது வாகரையிலும் அதனை அண்மித்த பகுதிகளிலுமேயே நிலைகொண்டுள்ளனர். பாரிய பிரதேசங்களில் பெரும் படையெடுப்பை சந்திப்பதை விட, குறுகலான பிரதேசங்களில் பெரும் படையெடுப்புகளை புலிகள் மிக இலகுவாக முறியடித்துள்ளனர்.

தற்போது புலிகளின் ஆட்லறித் தளங்கள் கதிரவெளி, வாகரைப் பகுதிகளிலேயே உள்ளன. இந்த ஆட்லறித் தளங்களிலிருந்தே திருமலையில் கல்லாறு, மகிந்தபுர, சேருநுவர போன்ற படை முகாம்கள் மீதும் மட்டக்களப்பில் மாங்கேணி, கஜுவத்தை மற்றும் வாழைச்சேனை காகித ஆலை படை முகாம்கள் மீதும் புலிகள் கடும் தாக்குல்களைத் தொடுத்து வருகின்றனர்.

வாகரை மற்றும் அதனோடிணைந்த பகுதிகளைக் கைப்பற்றுவதன் மூலம் ஒரே நேரத்தில் பலவற்றை சாதிக்க முடியுமென அரசு கருதுகிறது. இதனாலேயே வடக்கு - கிழக்கு மாகாணங்களைத் தனித்தனியாக பிரித்து இரு மாகாணங்களாக்கியவுடன் வாகரையை கைப்பற்றி திருமலை மாவட்டத்திலிருந்தே புலிகளை விரட்டி விட வேண்டுமென்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

நாளை திங்கட்கிழமை பிறக்கும் புதிய ஆண்டுடன் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக செயற்படவுள்ளன. மாகாண சபை சட்டப்படி, புதிய மாகாண சபையொன்று உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களினுள் அந்த மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பின் பெரும்பாலான பகுதி இராணுவக் கட்டுப்பாட்டில் இல்லை. அதேநேரம் , கிழக்கையும், இரண்டாகப் பிரித்து திருகோணமலையை கிழக்கிலிருந்து துண்டாடி தனியாக்கி அதனை மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தினுள் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருகோணமலையை சிங்களக் குடியேற்ற பிரதேசமாக்கி தமிழர்களையும் முஸ்லிம்களையும் சிறுபான்மையினமாக்கி விடுவதே அரசின் திட்டமாகும்.

கிழக்கில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுடன் திருகோணமலையும் இணைந்திருந்தால், திருமலை மாவட்டத்தின் செயற்பாடுகள் கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்திலேயே இருக்கும்.

கிழக்கில் தமிழ் - முஸ்லிம்களே பெரும்பான்மையென்பதால் கிழக்கு மாகாண சபையூடாக திருமலையில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வது சாத்தியமற்றதென்பதாலேயே திருமலையை கிழக்கிலிருந்து பிரித்து தனியாக்கி அதனை மத்திய அரசின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து, பாரிய அபிவிருத்திகள் என்ற பேரில் திருகோணமலையை முழுமையாகவே சிங்கள மயப்படுத்துவதே அரசின் திட்டமாகும்.

இதனால், திருகோணமலை மாவட்டத்திலிருந்து புலிகளை அப்புறப்படுத்த வேண்டிய அவசர தேவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மூதூர் கிழக்கில் 23 கிராமங்களிலிருந்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், பாரிய படை நடவடிக்கை மூலம் விரட்டப்பட்டு இன்று மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் அவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

மட்டக்களப்பில் இவர்களை அரச காணிகளில் தங்க வைக்க (நிரந்தரமாக) அரசு முடிவு செய்துள்ளதால் இந்த மக்கள் மீண்டும் திருமலையில் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப அனுமதிக்கப்படமாட்டார்களென்

Edited by kavithaa

இந்த நிலையில், வாகரையை கைப்பற்றுவதன் மூலம் கிழக்கே கடற்புலிகளுக்கான கடற்தளத்தை இல்லாது செய்வதன் மூலம் கிழக்கே கடற்புலிகளால் ஏற்படும் மிகப்பெரும் அச்சுறுத்தலை தடுத்து விட முடியுமெனவும் அரசு கருதுகிறது. அதேநேரம், கடற்புலிகள் கிழக்கே தரையிறங்கும் வாய்ப்பு இல்லாது போவதுடன் வடக்கிலிருந்து கிழக்கிற்கான ஆயுத விநியோகங்களையும் தடுத்து நிறுத்திவிட முடியுமெனவும் அரசு கருதுகிறது.

திருமலை முதல் அம்பாறை வரையான தரை வழிப் பாதையையும் நிலப் பிரதேசத்தையும் முழுமையாகக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதன் மூலம் வடக்கிற்கும் கிழக்கிற்குமிடையே தரை வழியாக (காடுகளினூடாக) புலிகளின் விநியோகப் பாதைகளையும் மூடிவிட முடியுமெனவும் அரசு கருதுவதால், வாகரை மற்றும் அதனோடிணைந்த பகுதிகளிலிருந்து புலிகளை உடனடியாக அப்புறப்படுத்தும் பாரிய படை நடவடிக்கை எவ்வேளையிலும் ஆரம்பமாகும் சூழ்நிலையுள்ளது.

Edited by kavithaa

24டிசம்2006 வீரகேசரி வார வெளியீட்டில் 'சுபத்ரா" எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி.

விடுதலைப் புலிகளின் பலத்தை சரியாக எடை போடுகிறதா அரசு?

...புலிகளிடமுள்ள ஆட்லறிகள் மோட்டார்களின் பலம் என்பது சாதாரணமானதல்ல. முல்லைத்தீவி;ல் புலிகள் இரண்டு ஆட்லறிகளைக் கைப்பற்றிய பின்னர் அவர்களின் மரபுவழிப் போர்ப்பலம் வெகுவாக அதிகரித்தது.

வன்னிப் பிரதேசத்துக்குள் மட்டுமே இவர்களின் ஆட்லறிகளின் பலம் அன்று குவிக்கப்பட்டிருந்த போது ஜெயசிக்குறு நடவடிக்கையை முறியடித்ததுடன் ஓயாத அலைகள் 3 நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக முன்னேடுத்தனர்.

இப்பொது புலிகளிடம் 20 ஆட்லறிகளும் 100 கனரக மோட்டார்களும் இருப்பதாக இராணுவத்தினால் மதிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் இவற்றின் பலம் மட்டக்களப்பு,அம்பாறை மற்றும் வன்னிப் பிரதேசங்களுக்கு விஸ்தரிக்கப்ட்டிருக்கிறது.

முன்னர் திருகோணமலையில் இருந்த ஆட்லறிகளை வெருகல் ஆற்றுக்கு அப்பால் வாகரைப் பகுதிக்கு நகர்த்தி புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். திருகோணமலைத் துறைமுகத்தை ஆட்லறிகளின் வீச்செல்லையில் இருந்து பாதுகாத்து விட்டதாக படைத் தரப்புக் கூறிக் கொண்டலும் குடாநாட்டிலுள்ள பிரதான தளங்களையோ துறைமுகம் மற்றும் விமான தளத்தையோ நிரந்தரமாக பாதுகாக்க முடியவில்லை. இந்த நிலையில் திருமலையில ஈச்சிலம்பற்றுக்கு தெற்காகவும் மட்டக்களப்பின் மாங்கேணிக்கு வடக்காகவும உள்ள வாகரைப் பிரதேசத்தைக் கைப்பற்றும் நடவடிக்கைகளை படைத்தரப்பு தீவிரப்படுத்தியிருக்கிறது.

வாகரைப் பிரதேசத்தைக் கைப்பற்றி புலிகளின் கிழக்கு பிரதேசத்துக்கான கடல்வழி விநியோகத்தை துண்டித்த விட படைத்தரப்பு நினைத்தாலும் இது எந்தளவுக்கு சாத்தியம என்பது தெரியவிலை;லை.

ஒரு வேளை புலிகள் வாகரையை இழப்பதற்கு முடிவு செய்தாலும் கூட ஆட்லறிகள்,கனரக மோட்டார்களை வேறு பிரதேசங்களுக்கு முன்னரே இடம் மாற்றி விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

வாகரையையோ அல்லது வேறு பிரதேசங்களையோ புலிகளிடம் இருந்து கைப்பற்றுவது படைத்தரப்புக்கு எந்தவித அனுகூலத்தையும் ஏற்படுத்தாது. புலிகளின் போர்ப்பலத்தையும் அழித்தால் தான் நிம்மதியாக இருக்க முடியும்

வாகரையையோ அல்லது வேறு பிரதேசங்களையயோ படையினர் கைப்பற்றுகிக்ற போது புலிகள் தமது போர் பலத்தையும் படைவளங்ளையும் ஆளணியையும் வேறு பகுதிக்கு மாற்றி விடுவர்.

அப்போது வேறொரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புலிகளின் போர்ப்பலம் வெகுவாக உயரும் அதேவேளை புதிய கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை பாதுகாக்க படையினர் பெருமளவு ஆளணி வளத்தை ஈடுபடுத்த நேரிடும். அப்போது ஏற்கனவே இருந்த கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் படைச் செறிவு குறைவடையும்.

புலிகளின் போர்ப் பலமும் படைச் செறிவும் அதிகரித்து கட்டுப்பாட்டுப் பிரதேசம் குறைவடைகின்ற போது அவர்களின் தாக்குதல் திறன் அதிகரிக்கிறது. குறிப்பாக வன்னி மீது அரச படைகள் ஜெயசிக்குறு நடவடிக்கையை மேற் கொண்ட போது இப்படித்தான் புலிகள் திமிறி எழுந்தனர்.

குறிக்கபட்ட சிறிய பிரதேசத்துக்குள் புலிகளை முடக்குவதன் மூலம் அவர்களின் போர்ப்பலத்தை குறைத்தோ அழித்தோ விடலாம் என்பது நடைமுறைச் சாத்திமற்ற விடயமாகும்

கிழக்கில் குறிப்பாக வாகரைப் பிரதேசத்தில் புலிகள் ஆட்லறிகள், கனரக மோட்டார்கள் மூலம் ஏற்படுத்துகின்ற அச்சுறுத்தல் திருகோணமலையில் உள்ள சிங்களக் குடியேற்ற வாசிகளைப் பெரிதும் பீதி கொள்ள செய்திருக்கிறது.

மஹிந்தபுர, சேருநுவர,கந்தளாய் பிரதேசங்;களில் ஆட்லறித தாக்குதல்கiளால் பெருமளவில் சிங்களக் குடியேற்றவாசிகள் இடம் பெயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அரச படைகள் வாகரைப் பிரதேசம் நோக்கிப்படை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

கிழக்கில் புலிகளின் ஆடலறி மற்றும் மோட்டார் தாக்குதல் பலத்தை மட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளுடன் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் படைத்தரப்பிலும் இல்லாமல் இல்லை.

இன்றைய சூழலில் புலிகளின் கிழக்கில் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விரிவுபடுத்த வாய்ப்புகள் குறைவே. எனவே அரச படைகளின் எந்தவொரு படை நகர்வையும் அவர்கள்

மூர்க்கத் தனமாக எதிர்க்கவும் வாய்ப்புகள் உள்ளன.

அத்துடன் புலிகளின் போர்ப் பலத்தைக் குறைத்துவிடும் நடவடிக்கைகளை அரச படைகள் தொடரப் போகின்றனவா அல்லது தமது கட்டுப்பாட்டுப பிரதேசங்களை விரிவுபடுத்தி அவர்களின் தாக்குதல் பலத்ததை ஒன்று குவிக்க இடம் கொடுக்கப் போகின்றனவா என்பதைப் பொறுத்தே களநிலைமைகளின் எதிர்காலம் இருக்கும்.

நன்றி : வீரகேசரி வார வெளியீடு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.