Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் மேகம் சூழ்வதால் பொருளாதாரமும் பாதிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் மேகம் சூழ்வதால் பொருளாதாரமும் பாதிப்பு

பழையன கழிதலும், புதியன புகுதலும் இயற்கையின் நியதி. அதன் வழி 2006 கழிய, 2007 இல் பூமிப் பந்து காலடி எடுத்துவைக்கின்றது.

புதிய வருடப் பிறப்புடன் புது வாழ்வு கிட்டுமா என்று ஏங்குவது மனித இயல்பு. அதுவும் அவலத்திலும், அபத்தத் திலும் சிக்கி அந்தரப் பட்டு, அர்த்தம் இழந்து நிற்கும் இலங் கைத் தீவு, புத்தாண்டிலாவது போர் மேகம் கலைந்து, அமை தித் தென்றல் வீசாதா என்று ஏங்கி நிற்பது புரிந்துகொள்ளத் தக்கது.

ஒருபுறம் சமாதான முயற்சிகள் கானல் நீராகிக் கலைந்து போகும் அவலநிலை. மறுபுறம், போர்ச் சூழல் கவிந்து, பொருளாதாரம் சீர்குலைந்து, வாழ்வுக்கு அல்லாடும் கையறு நிலை.

திசை தெரியாது, போக்கிடம் புரியாது தடுமாறுகிறது இலங்கைத் தீவு.

அதிலும், போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டு, விநி யோக மார்க்கம் தடைப்பட்டு, மனிதப் பேரவலத்தை எதிர் கொண்டு நிற்கும் யாழ். குடாநாட்டு மக்களினதும், வாக ரைப் பிரதேசத் தமிழர்களினதும் நிலையோ சொல்லுந்தர மன்று.

யுத்தக் கொடூரமும், பேரிழப்பும் எங்கும் சூழ்ந்து நிற்க, படுகொலைகளும், ஆட்கடத்தல்களும், அச்சுறுத்தல்களும் என வன்முறைகள் கட்டுமீறி காட்டுத் தர்பார் தொடர, வாழ் வின் அர்த்தமிழந்து, சூனியத்தை வெறுமையை எதிர் நோக்கி, சலித்துப் போய் நிற்கிறது இலங்கைச் சமூகம்.

போர்க் கொடூரம் குறித்து இப்பத்தியில் விவரித்துக் களைத்தாயிற்று. போர்ச் சீரழிவின் விளைவாகப் பொருளா தாரப் பேரழிவை இலங்கைத் தீவு எதிர்கொள்வது இப்போது அம்பலத்துக்கு வந்திருக் கின்றது.

போர் விளிம்பில் தடுமாறும் இலங்கையின் பொருளா தாரம் மிகமிக மோசமான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண் டிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

கடந்து சென்ற வருடத்தின் நான்காவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வீதம், எதிர்பார்த்த விருத்தியை அடையாமல் வீழ்ச்சியடைந்திருப்பதை இலங்கை மத்திய வங்கியே ஒப்புக்கொண்டிருக் கின்றது. போர் நெருக்கடியால் நாட்டின் பிரதான வருவாய் மூல மான சுற்றுலாத்துறை மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின் றது. வெளிநாட்டு வர்த்தகமும் சீரழிந்து வருகின்றது. போதாக் குறைக்குப் பாதுகாப்புச் செலவினத்துக்கான கட்டுமட்டில்லாத நிதி ஒதுக்கீடு காரணமாக நாடு, சர்வ தேசக் கடனாளியாகி அந்தரிக்கின்றது.

நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு புதிய பண நோட்டு களை அச்சிட்டுப் புழக்கத்துக்கு விடும் அரசின் குறுக்கு வழிப் புத்தியால் பொருத்தமற்ற பொருளாதாரக் கொள் கையால் பணவீக்கம் எல்லை மீறுகின்றது. வட்டி வீதத்தை, கட்டுப்பாட்டைத் தாண்டி அவ்வப்போது அதிகரிக்க வேண்டிய கட்டாயம் மத்திய வங்கிக்கு. பண வீக்கத்தால் வாழ்க்கைச் செலவு எகிற, நாட்டின் மத்திய மற்றும் கீழ்த்தட்டு வர்க்கத்தினர் ஒருவேளைக் கஞ் சிக்கே அல்லாடும் அவல நிலை நெருங்கி வருகின்றது. வாழ்க்கைச் செலவுப் புள்ளி வீதம் முனனெப்போதும் இல் லாத சாதனை அதிகரிப்பை உச்சப் பாய்ச்சலை தொட்டு நிற்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிராந்தியத்தில் பொதுவான சராசரிப் பணவீக்க வீதம் ஐந்தாக இருக்கையில், இலங்கையில் மட்டும் அது நான்கு மடங்காக இருபது வீதமாக உயர்ந்திருக்கின்றது.

வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபா வின் பெறுமதி மோசமாக வீழ்ச்சி கண்டு வர, நிலைமை யைச் சமாளிப்ப தற்காகக் குறுகிய காலத் தற்காலிகக் கடன் களைப் பெற்றுக்கொள்ளும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டி ருக்கின்றது.

நேற்றுடன் கழிந்த 2006 இல் இந்த அரசு பெற்றுக் கொண்ட குறுகிய கால தற்காலிக கடன் தொகையின் அளவு 22 ஆயிரத்து 300 கோடி ரூபா என்ற அதிர்ச்சித் தக வலும் வெளியாகியிருக்கின்றது.

இத்தகைய கட்டுக்கடங்காத மிக மோசமான மீளவே முடியாத பொருண்மிய நிலைமையை நோக்கி வீழ்ச்சி யுறும் கட்டத்துக்கு நாடு தள்ளப்பட்டிருப்பதற்குக் கார ணம், பொருத்தமான பொருளாதாரக் கொள்கை அரசிடம் இல்லை என்பது மட்டுமல்ல, பொருளாதார மீட்சி நிலைக்கு நாட்டை இட்டுச் செல்லும் சுபீட்சமான திட்டமும், நோக் கமும், தெளிவான தூரதிருஷ்டியும், அரசியல் பார்வையும் அரசுத் தலைமையிடம் இல்லை என்பதும் கூட அடிப் படையாகும்.

பௌத்தசிங்களப் பேரினவாதப் போக்கும், மேலாண் மைத் திமிரும் கொண்ட தென்னிலங்கைச் சமூகத்தின் ஒரு பகுதியினரைத் திருப்திப்படுத்தும் நோக்கில், தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தைப் போர்வெறிப் போக்கோடு அணுகுகின்றது இந்த அரசுத் தலைமை.

இந்தப் பக்கச் சார்பான தூரநோக்கற்ற அமைதித் தீர்வுக்கு சாத்தியப்படாத அரசியல் மிடுக்குத்தனம் இலங் கைத் தீவு முழுவதையும் யுத்த பீதிக்குள் ஆழ்த்த, அதன் விளைவாக நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்துக் குள் விழும் அவலம் உருவாகி இருக்கின்றது.

எந்நேரமும் வெடிக்கக் கூடிய கொடூரப் போர், சிறுபான் மையினரான தமிழரின் தாயகத்தை மட்டும் பேரவலத் துக்குள் ஆழ்த்தும் என்பது அல்ல. போரின் கொடூரமும், பொருளாதார நெருக்குதலும் தென்னிலங்கையையும் எண் ணிப்பார்க்க முடியாத பின்னடைவுக்குள்ளும் சமூகப் பாதிப்புக்குள்ளும் வீழ்த்தும் என்பதை தென்னிலங்கைத் தலைமைகள் உணர்ந்து கொள்வது நல்லது. அது எப்போது நடக்கும்?

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.