Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ வேட்டைக்கு மத்தியில் பாலாவின் தலைமறைவு வாழ்க்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ வேட்டைக்கு மத்தியில் பாலாவின் தலைமறைவு வாழ்க்கை

திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தினால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் அப்போது இலங்கைக்கான இந்தியத் தூதுவராகவிருந்த டிக்ஷித்தை யாழ்ப்பாணம் அனுப்பி நிலைமையை ஆராய வைத்தது. கடும்போக்கு வாதியான டிக்ஷித்தை சந்தித்து பிரபாகரன் - பாலா பேச்சில் ஈடுபட்டனர். நிலைமையை புரிய வைத்தனர். எச்சரிக்கைவிடுத்தனர். அலட்சியம் செய்தார் டிக்ஷித் திலீபன் தியாக மரணமடைந்தார்.

குமாரப்பா, புலேந்திரனுக்கு சயனைட் கொடுத்த பாலா

இதையடுத்து புலிகளின் மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட 15 போராளிகளை இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை மீறி தமிழீழ கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்து இராணுவத்திடம் ஒப்படைத்தது. இவர்களை விடுவிக்க பாலா பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டார்.

இந்தியத் தூதுவர் டிக்ஷித்தை மீண்டும் சந்தித்த பாலா நிலைமையின் விபரீதத்தை விளக்கினார். ஆனால், எதையும் டிக்ஷித் ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் பாலா எச்சரிக்கையும் விடுத்தார். இதற்கிடையில் குமரப்பா, புலேந்திரன் உட்பட கைது செய்யப்பட்ட போராளிகளை கொழும்புக்கு கொண்டு செல்ல முயற்சி நடந்தது.

இலங்கை அரசின் செயலில் பிரபாகரன் மிகவும் கோபமுற்றிருந்தார். நிலைமை விபரீதமாக முடியப் போவதை உணர்ந்த பாலா இந்திய அமைதிப்படையின் அனுமதியுடன் கைதான தளபதிகளை சந்தித்து நிலைமைகளை விளக்கினார். அப்போது தளபதிகள் பிரபாகரனிடம் கொடுக்குமாறு கூறி கடிதம் ஒன்றை வழங்கினர். அக்கடிதம் பிரபாகரனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் தாம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுவோம் என்பதால் தற்கொலை செய்து கொள்ள அனுமதிகேட்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பாலா மிகவும் அவசர அவசரமாக மீண்டும் டிக்ஷித்தை சந்தித்தார். இந்த விவகாரம் மூலம் புலிகளுக்கும் இந்தியாவுக்குமிடையே விரிசல் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதில் பாலா ஆர்வமாக விருந்தார். ஆனால், தோல்வியே கிடைத்தது.

அக்டோபர் 5 ஆம் திகதி குமரப்பா, புலேந்திரனையும் ஏனைய போராளிகளையும் கொழும்புக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட விபரம் பிரபாகரனுக்கு தெரியவந்தது. இதனால் குமரப்பா, புலேந்திரனின் கோரிக்கைக்கு ஏற்ப தனது கழுத்திலிருந்த சயனைட் குப்பியையும் ஏனைய தளபதிகளின் கழுத்திலிருந்த சயனைட் குப்பிகளையும் கழற்றி பாலா மற்றும் மாத்தையா ஆகியோரின் கழுத்தில் போட்டு குமரப்பா, புலேந்திரனிடம் ஒப்படைக்குமாறு பணித்தார்.

சம்பவதினம் தளபதிகளை கொழும்புக்கு கொண்டு செல்ல முயன்ற போது அவர்கள் பாலா கொடுத்த சயனைட் குப்பிகளை உட்கொண்டு வீரச்சாவடைந்தனர். 12 பேர் வீரச்சாவடைய 3 பேர் காப்பாற்றப்பட்டனர். இச்சம்பவம் பாலாவை மிகவும் பாதித்தது.

பாலாவை வேட்டையாடிய இந்திய அமைதிப்படை

புலிகளுக்கும் இந்தியப் படைக்குமிடையே போர் மூண்ட பின்னர் பாலாவினது வாழ்க்கையும் தலைமறைவு வாழ்க்கையானது. பாலாவையும் அடேலையும் இலக்கு வைத்து பல நடவடிக்கைகளை இந்தியப் படை மேற்கொண்டது. தெய்வாதீனமாக அவற்றிலிருந்து தப்பிய பாலாவும் அடேலும் தினமும் ஒவ்வொரு இடமாக தலைமறைவாகிக் கொண்டிருந்தனர்.

இந்தியப் படை பாலாவையும் ஏனைய போராளிகளையும் துரத்தி துரத்தி வேட்டையாடிக் கொண்டிருந்தது. இதனால், ஒவ்வொரு நாளும் தமது மறைவிடங்களை மாற்ற வேண்டிய நிலை பாலாவுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்தியப் படைக்கு இலகுவாக அடையாளம் காட்டிக் கொடுக்க கூடியவராக வெள்ளைக்காரப் பெண்ணான பாலாவின் மனைவி அடேல் இருந்தார்.

இந்தியப் படைக்கு பாலாவை அதிகளவில் தெரியாததால் தாம் சுற்றிவளைக்கும் கிராம மக்களிடையே பாலாவின் மனைவியான அடேலை அடையாளம் கூறி விசாரணைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இதனால் பாலாவுக்கு இன்னும் சிக்கல் நிலை ஏற்பட்டது.

வடமராட்சிக்குள்ளேயே இந்தியப் படைக்கு பாலாவும் ஏனைய போராளிகளும் தண்ணி காட்டிக் கொண்டிருந்தனர். முதல் நாள் பாலா தங்குமிடம் மறுநாள் இந்தியப் படையால் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்படுவது வழமையாகியிருந்தது. இதனால், சிறந்த பாதுகாப்பு இடமொன்றைத் தேடி பாலாவும் அடேலும் வடமராட்சியின் கரவெட்டிப் பகுதிக்குள் சென்றனர்.

பாலாவை கைது செய்ய இந்தியப் படை சூழ்ச்சி

பாலா தம்பதியை வேட்டையாடித் திரிந்த இந்தியப் படையினர் இறுதியில் சூழ்ச்சியொன்றைக் கையாண்டனர். அப்போது இந்தியப் படையுடன் முரண்படாதவராகவும் விடுதலைப் புலிகளை மதிப்பவராகவும் அவர்களின் செயற்பாட்டை ஏற்றுக் கொண்டவராகவும் ஈரோஸ் தலைவரான பாலகுமார் இருந்தார். அவரை அணுகிய வடமராட்சிப் பகுதிக்கு பொறுப்பான இந்தியப் படைத் தளபதிகள் இந்திய உயர் பீடத்துக்கும் பாலாவுக்குமிடையே சந்திப்பொன்றை ஏற்படுத்த தாம் விரும்புவதாகவும் இதனை பாலாவிடம் தெரிவிக்கும் படியும் பாலகுமாரிடம் கூறினர்.

இதனையடுத்து பாலகுமார் வடமராட்சியின் மறைவிடமொன்றில் வைத்து பாலாவை சந்தித்து இந்தியப் படைத் தளபதிகள் தெரிவித்த விருப்பத்தைக் கூறினார். இந்தியப் படையின் கோரிக்கையில் சூழ்ச்சி இருப்பதை பாலா புரிந்து கொண்டார். ஆனாலும், இந்திய அரசுக்கும் புலிகளுக்குமிடையே ஒரு சுமுகமான உறவை மீண்டும் ஏற்படுத்த பாலா விரும்பி இந்த சந்திப்புக்கான இந்தியப் படைத் தளபதிகளின் விருப்பம் தொடர்பாக பிரபாகரனுக்கு தெரியப்படுத்தி சந்திப்புக்கான அனுமதியைக் கோரினார்.

இந்தியப் படைத் தளபதிகளின் விருப்பத்தை தீவிரமாக ஆராய்ந்த பிரபாகரன் அச்சந்திப்புக்கு பாலாவை போக வேண்டாமெனக் கூறியதுடன், பாலாவை சந்திப்புக்கு அழைத்து கைது செய்வதே இந்தியப் படையின் நோக்கமெனவும் விளக்கியிருந்தார். இதனை ஊர்ஜிதப்படுத்துவது போல இதே ஏமாற்று முறையைப் பயன்படுத்தி மட்டக்களப்பில் புலிகளின் மூத்த போராளியொருவரை இந்தியப் படை கைது செய்தது. ஆனால், பிரபாகரனின் அறிவுறுத்தலினால் பாலா தப்பிக் கொண்டார்.

பாலசிங்கம் அனுபவித்த அவஸ்தை

ஒரு கட்டத்தில் பாலா கரவெட்டியில் மறைந்திருப்பது இந்தியப் படைக்கு தெரிந்து விட்டது. இதையடுத்து பாலாவை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வருமாறு இந்தியப் படைத் தளபதிகள் ஆணை பிறப்பித்தனர். இதனால் கரவெட்டிப் பிரதேசம் இந்தியப் படைகளால் சல்லடை போட்டுத் தேடப்பட்டது.

இந்தியப் படைக்கு பாலாவை அதிகமாக தெரியாததாலும் அவருடைய அடையாளங்கள் புரியாததாலும் அப்பகுதியில் `பாலசிங்கம்' என்ற பெயரில் இருந்த பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வீடுகள் கடுமையாக சோதனையிடப்பட்டன. பாலசிங்கம் என்ற பெயர்களில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு இராணுவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறான நிலையில் பாலாவும் அவரின் மனைவி அடேலும் தங்கியிருந்த வீட்டை அடையாளம் கண்ட இந்தியப் படை திடீரென ஒரு நாள் அவ்வீட்டின் மீது ஹெலிகொப்டர் மூலம் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் பாலாவும் அடேலும் மயிரிழையில் தப்பினர். ஆனால், அவர்கள் தங்கியிருந்த வீடு பலத்த சேதமடைந்தது.

இதனையடுத்து அங்கிருந்து தப்பியோடிய பாலா நெல்லியடியில் மறைவிடமொன்றில் தங்கினார். அங்கு காயமடைந்த நிலையில் பொட்டம்மானும் தங்கியிருந்தார். ஆனால், இதனையும் மோப்பம் பிடித்து விட்ட இந்தியப் படை அந்த மறைவிடத்தை சுற்றிவளைத்தது. இந்தியப் படையால் சகல வழிகளாலும் அந்த மறைவிடம் சுற்றி வளைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஒரு வீதியால் வந்த இராணுவத்தினர் தாமதமானதால் அவ்வீதியை பயன்படுத்தி பாலாவும் பொட்டம்மானும் தப்பிச் சென்றனர்.

இதனை அறியாத இந்தியப் படை பாலாவை சரணடையுமாறு பலதடவைகள் எச்சரித்த பின் அந்த மறைவிடம் மீது தாக்குதலை நடத்தின. அதற்கிடையில் பாலாவும் பொட்டம்மனும் இன்னொரு மறைவிடத்திற்கு பாதுகாப்பாக சென்றடைந்தனர்.

நாளுக்கு நாள் இந்தியப் படையின் சுற்றிவளைப்புகள், தேடுதல்கள் அதிகரித்ததால் பாலா தம்பதியை அங்கு வைத்திருப்பது முடியாத காரியமென்பதை உணர்ந்து கொண்ட பிரபாகரன் அவர்களை இந்தியாவுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்குமாறு சூசைக்கு பணித்தார்.

தனது மரணத்திலும் உதவிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

பாலா தம்பதியை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க பொருத்தமான நேரத்தை தளபதி சூசை எதிர்பார்த்திருந்தார். தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மரணத்தில் அந்த நேரம் புலிகளுக்கு கிடைத்தது. தமிழ் நாட்டில் தங்கியிருந்த புலிகளுக்கு பேருதவி புரிந்தவர் எம்.ஜி.ஆர்.பாலாவின் சிகிச்சைக்கு கூட நிதியுதவி புரிந்தார். இறுதியில் அவர் தனது மரணத்தின் போதும் பாலாவுக்கு உதவி புரிந்தார்.

1987 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் திகதி எம்.ஜி.ஆர். காலமானார். இதையடுத்து தேசிய துக்க தினமும் போர் நிறுத்தமும் அறிவிக்கப்பட்டன. முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் முகமாக இந்தியப் படைகள் முகாம்களுக்குள் இருக்குமென அறிவிக்கப்பட்டது. இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட தளபதி சூசை பாலாவையும் அவரது மனைவி அடேலையும் டிசம்பர் 24 ஆம் திகதி வடமராட்சி கடல் பகுதியிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.

கடல் பயணத்திலும் மரண விளிம்பு வரை சென்ற பாலா தம்பதியினர் ஒருவாறாக இந்தியக் கடற்கரையை சென்றடைந்தனர். இலங்கையில் இந்தியப் படை பாலாவை வேட்டையாடிக் கொண்டிருக்க அவர் பத்திரமாக இந்தியாவை சென்றடைந்தார்.

பாலாவுக்கு உதவியபுலனாய்வுத்துறை அதிகாரி

இந்தியாவிலும் கியூ பிரிவு பொலிஸார் விடுதலைப் புலிப் போராளிகள் மீது தீவிர கண்காணிப்பை மேற்கொண்டிருந்ததால் பாலாவினால் அங்கும் தலைமறைவு வாழ்க்கையே மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் சென்னையில் இருப்பது பாதுகாப்பற்றதெனக் கருதிய பாலா பெங்களூரில் பாதுகாப்பான இடமொன்றில் தங்கியிருந்தார்.

அங்கிருந்தவாறே அவர் தீவிர நடவடிக்கைகளில் இறங்கினார். அப்போது சென்னையில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கிட்டு இந்திய பொலிஸாரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.கிட்டு

Edited by கந்தப்பு

அப்பு நீ நல்லா இருக்கனும்....உனது தகவல்கள்....கோடி பெறுமதியானவை...தலை வணங்குகிறேன்.....

கரவெட்டிப்பகுதியில் அவர் மறைந்திருந்த ஒருவீட்டில் எவ்வாறு தப்பினார் தெரியுமா?

புகைக்குடில் (பொயிலை)தேரியுமா?

புகைக்குடிலின் வாசலில் பொச்சு அடுக்கி புகை போட்டு அதன் பின் பகுதியில் பாலசிங்கம் தம்பதியினரை காப்பாற்றினார்.

எவ்வாறு அவர்கள் சுவாசித்தார்கள்( புகையோடு போராடினார்கள்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.