Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிமுக விழா நடாத்த யாழ். பல்கலைக்கழகம் அனுமதி மறுப்பு

Featured Replies

அறிமுக விழா நடாத்த   யாழ். பல்கலைக்கழகம் அனுமதி மறுப்பு

இன்று (18) யாழ்.பல்கலைக்கழக  நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவிருந்த “சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்” என்ற நூலின் அறிமுக விழாவினை அங்கு நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது என  யாழ். பல்கலைக்கழகம் நிர்வாகம்   இறுதி நேரத்தில் தடை விதித்தது. இதனால் இவ் நிகழ்வு இன்று மாலை யாழ்.   மறைக்கல்வி  நிலையத்தில் இடம் பெற்றது.

ஆசிரியர் மு.சி.கந்தையா 1965ஆம் ஆண்டு சிறீமா – சாஷ்த்திரி ஒப்பந்தம் மூலம் மலையகத்திலிருந்து  இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் என்பது, இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த 975,000 இந்திய வம்சாவளித் தமிழர்களின் எதிர் காலம் தொடர்பாக, அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கும், இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் 1964 ஆம் ஆண்டில் அக்டோபர் 30 இல் கையெழுத்தான ஒப்பந்தத்தைக் குறிக்கும்.

இந்த ஒப்பந்தத்தின்படி மேற் குறிப்பிட்டவர்களில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும், 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதெனவும் முடிவானது. மீதி 150,000 பேர் விடுபட்டுப் போயினர். 1967 முதல் அமலாகத் தொடங்கிய இந்த ஒப்பந்தம் அம்மக்களை இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கை குடியுரிமை பெறுவோர், நாடற்றவர்கள் என மூன்று கூறாகபிரித்தது.

இதனால் ஒன்றாக இருந்த மலையஉறவுகள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. பல குடும்பங்களில் உள்ள சகோதரர்கள் இருநாடுகளில் பிரிக்கப்பட்டு அதாவது தொப்பிள்கொடிஉறவு, தாலிக் கொடிஉறவுகள் வலுக்கட்டாயமாக சிதைக்கப்பட்டன.

அன்று வாங்கிய அடியில் இருந்து மலையமக்கள் இன்னும் எழுந்திருக்க முடியவில்லை. இன்றும் வரலாற்று தவறு ஒன்றை யாழ். பல்கலைக்கழக சமூகம் செய்துள்ளது.

12994577_1160701263970195_513529113441454273_n

http://tamilleader.com/

 

சிதைக்கப்பட்ட மலையகத்தமிழர் எனும் வரலாற்று நூல் ஒன்றின் அறிமுக நிகழ்வு மலையக சமூக ஆய்வு நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் இன்று யாழ் பல்கலைக்கழக் நூலக கேட்போர் கூடத்தில் நடக்க ஏற்பாடாகி இருந்தது.
அந்நிகழ்வில் சிற‌ப்பு பிரதி பெறுபவர்களில் ஓரிருவர் அரசியல்வாதிகள் எனக்கூறி, அந்நிகழ்வுக்கான மண்டப அனுமதி கடைசி நேரத்தில் தடுக்கப்படுகின்ற கேவலமான நிகழ்வு இன்று இடம்பெற்றிருக்கிறது. நிகழ்வுக்காக அங்கிருந்து வந்தவர்களும் அலைக்கழிக்கப்பட்டு, இறுதியில் வேறு ஒரு இடத்தில் சில சமுக ஆர்வலக‌ர்களின் ஏற்பாட்டி நிகழ்வு நடந்தேறியிருக்கிறது.
,
ஒரு உயர்கல்வி நிறுவனம் என்கிற வகையில், திறந்த கலந்துரையாடல்களுக்கான களமாக இருக்கவேண்டியது பல்கலைக்கழகமே. ஒரு சமூகத்தின் முன்னோக்கிய பயணத்தின் முன்னோடியாக இருக்கவேண்டியவர்களும் பல்கலைக்கழக சமுகமே. உலக நாடுகள் பலவற்றில் பல்கலைக்கழகம்தான் புதிய சிந்தனைகளின் தோற்றுவாயாக இருந்திருக்கிறது.தமிழினத்தை பொறுத்தவரையில் கூட 80 களில் இடம்பெற்ற கலந்துரையாடல்களும் ஆற்றுகைகளும் , அது போல் 2000களில் இடம்பெற்ற பொங்குதமிழ் நிகழ்வுகளும் இன்றும் ஏக்கத்துடனும் பிரமிப்புடனும் பார்க்கப்படுபவை,
ஆனால் போகிற போக்கில் அவை இனி வெறும் வரலாறாகவே ஏக்கத்துடன் பார்ப்பதாக இருக்கபோகிறது போல் தெரிகிறது.
சுயமாய் சிந்திப்பதை தடுப்பது என்பது ஆதிக்க சக்திகளின் அதிகாரத்தை தக்கவைக்கும் ஒரு வழிமுறை.அதைதான் சிங்கள அரசும் செய்கிறது.
இப்படியான கருத்து தணிக்கைகளில் /ஒடுக்குமுறைகளில் ஈடுபடும் நாங்கள், இனியும் சிங்கள அரசின் அடக்குமுறைகளுக்கெதிராக கதைக்கும் தார்மிக உரிமையை கொண்டிருக்கிறோமா என்று எம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

FB

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கருத்து தணிக்கைகளில் /ஒடுக்குமுறைகளில் ஈடுபடும் நாங்கள், இனியும் சிங்கள அரசின் அடக்குமுறைகளுக்கெதிராக கதைக்கும் தார்மிக உரிமையை கொண்டிருக்கிறோமா என்று எம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் 

இந்த பல்கலைகழகம் சிறிலங்காவின் அதிகாரத்தின் கீழ் தான் உள்ளது என்பதை முகநூல் நண்பர் அறியவில்லை போலும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.