Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழமக்களை நசுக்குவதற்கும் ஓர் அதிகார மையம்

Featured Replies

ஈழப் பிரச்சினையில் மன்மோகன் சிங் அரசின் கொள்கை

[02 - January - 2007] [Font Size - A - A - A]

* இருட்டு வீட்டில் குருட்டுப் பூனையை தேடிய கதை

ஈழப் பிரச்சினையில் மன்மோகன் சிங் அரசின் கொள்கை, இருட்டு வீட்டில் குருட்டுப் பூனையைத் தேடிய கதையாக இருக்கிறது.

இலங்கை அரசும் ஈழப் போராளி களும் கூடிப்பேசி, பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று தொடர்ந்து உபந்நியாசம் செய்து வருகிறார்கள். அதே சமயத்தில், ஈழப் போராளிக ளுக்கு எதிராக இலங்கை அரசிற்கு எந்த அளவிற்கு ஆயுத உதவி, உணவுப் பொருள் உதவி அளிக்கவேண்டுமோ, அந்த அளவிற்கு உதவி செய்து வருகிறார்கள். அப்போதெல்லாம், இவர்களுடைய நடுநிலை நாடகம் அம்பலத்திற்கு வந்துவிடுகிறது.

இந்த நாடகத்திற்கு, இப்போது ஐக்கிய முன்னணியின் தலைவியும் காங்கிரஸ் கட்சித் தலைவியுமான சோனியாகாந்தி முற்றுப்புள்ளி வைத் திருக்கிறார்.

இலங்கைக்கு இந்தியா இனி ஆயுத உதவி செய்யாது. அப்படி உதவி அளிப் பது இலங்கைத் தமிழர்களின் உயி ருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெளிவாக அறிவித்திருக்கிறார்.

இலங்கை அரசிற்கு இந்தியா ஆயுத உதவி அளிக்கக்கூடாது என்பதனை, ஏற்கெனவே பழ.நெடுமாறன், வைகோ, டாக்டர் ராமதாஸ், கி. வீரமணி ஆகியோர் பலமுறை பிரதமரைக் கேட்டுக்கொண்டனர். அப்படி எந்த உத வியும் அளிக்கப்படமாட்டாது என்று ஒவ் வொரு முறையும் உறுதி அளித்தனர். ஆனால், அந்த உறுதிமொழி அடுத்த சில மணிநேரங்களிலேயே சருகாய்க் காற் றில் பறந்து போனது.

என்ன இது கொடுமை என்று தனிப்பட்ட முறையில் கேட்டால், இலங் கைக்கு நாம் ஆயுதம் கொடுக்கவில்லை யென்றால் பாகிஸ்தான் கொடுக்கும். அதனால்தான் கொடுக்கிறோம் என்பார் கள். அடப்பாவிகளே! நீங்கள் தரும்ஆயுதம்ஈழத்தையே சுடுகாடாக்குகிறதே என்றால் பதிலே வராது.

அண்மையில் இந்தியா வந்து திரும் பிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்ன சொன்னார்? ஆம். இந்தியா எங்களுக்கு ராணுவ உதவி அளிக்கிறது என்றார். அவர் கூறுவது தான் முழுக்க முழுக்க உண்மை. இன்றைக்கு ஈழத்தில் பலாலி விமான தளத்தில் சுழன்று கொண்டி ருப்பதே இந்தியா அளித்த ராடார்தான். ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் காக்க உதவி செய்யும்படி, எங்களுக்கு இந்திய அரசின் அதிகார பீடம் உத்தரவிட்டிருக் கிறது என்று இந்திய கடற்படைத் தளப தியே கூறினார்.

கூர்ந்து பாருங்கள். இன்றைக்கு டெல்லியில் இனவாத அரசைத் தூக்கிப் பிடிப்பதற்கும் ஈழமக்களை நசுக்குவதற்கும் ஓர் அதிகார மையம் உருவாகி இருக்கிறது. அந்த மையத் தில் மணிசங்கரஅய்யரும் இருக்கிறார். சிதம்பரமும் இருக்கிறார்.ஈழப்பிரச் சினையில் ராஜீவ்காந்தியைத் திசை திருப்பிய அந்த உயர்ந்த அதிகாரிகள் பலரும், இன்றைக்கு மன்மோகன் சிங்கைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். இவர்களை நம்பித்தான் இன்றைக்கு ஈழத்தில் இலங்கை இனவாத அரசு போர் நடத்திக்கொண்டிருக்கிறது.

ஆனால், தமிழக முதல்வராகக் கலைஞர் பொறுப்பேற்ற பின்னர், அந்த அதிகார மையம் கொஞ்சம் அச்சம் கொண்டது. ஈழப்பிரச்சினையில் கலைஞர் என்ன நிலை எடுப்பார் என்று குழம்பிப் போனது. ஆனால், கலைஞர் மிகச் சரியான நிலையே எடுத்தார்.

பிரதமரின் தூதர்களாக வெளியு றவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராய ணனும் முதன்முதலாகக் கலைஞரைச் சந்தித்தனர். ஈழ மக்களுக்கு சிங்கள மக்களோடு சமஉரிமை என்ற அடிப் படையில் பிரச்சினைக்குத் தீர்வு காணப் படவேண்டும் என்று வலியுறுத்தினார். மீண்டும் அவர்கள் சந்தித்தபோது, ஈழப் பிரச்சினைக்கு இதுதான் தீர்வு என்பத னைத் தெளிவுபடுத்தினார். ஆனால், தமிழ் மக்களின் உணர்வுகள் அவர்களுக்குப் புரியவில்லை.

இத்தனை எதிர்ப்புக்கு மத்தியில், தமிழக அரசின் நிலை தெரிந்த பின்ன ரும், இலங்கை அரசிற்கு ஆயுதங்கள் அனுப்பப்படுவது நிறுத்தப்பட வில்லை. நாகபுரியிலிருந்து ஒருலொறி நிறைய இலங்கை ராணுவத்திற்கு வெடிமருந்துப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. தமிழகத்தின் வீதிகள் வழியாகவே அந்த வெடிபொருட்கள், ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன.

இது என்ன கூத்து என்று வெளியு றவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைக் கலைஞர் கேட்டார். யாம் அனுமதி அளிக்கவில்லை என்றார். பாதுகாப்பு அமைச்சர் அந்தோனியைக் கேட்டார். நானும் அனுமதி அளிக்கவில்லை என்றார்.

இவர்கள் மன்மோகன் சிங் அரசின் பொறுப்பான, சக்திமிக்க அமைச்சர் கள். இவர்களுக்கே தெரியாமல் இலங்கைஇராணுவத்திற்கு வெடி மருந்துகள் அனுப்ப உத்தரவிட்டது யார்? நாம் ஏற்கெனவே குறிப்பட்ட அந்த அதிகார மையம்தான், இந்த ஆயுதக் கடத்தல்க ளுக்குப் பின்னணியில் இருக்கிறது. அந்த வெடிமருந்துகளை இலங்கை ராணுவத்திற்கு எடுத்துச் செல்ல, சுங்க இலாகாதான் அனுமதித்திருக்கிறது. இது பத்திரிகைகளில் செய்தியாகவே வெளிவந்தது.

அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் கலைஞர் டெல்லி சென்றார். ஈழத்திற்கு என்னதான் தேவை என் பதனை உற்சவருக்கு விளக்குவதை விட, கருவறையின் மூலவருக்கே உணர்த்துவது நல்லது என்று முடிவு செய்தார். சோனியாவைச் சந்தித்தார். எடுத்துக் கூறினார். நற்பலன் ஏற் பட்டது.

சோனியாவிடம் என்ன சொன்னார் என்பதனை அவரே கோடிட்டுக் காட்டி னார்.

"இதுவரை நடந்தவைகள் நடந்தவை களாக இருக்கட்டும். இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும் என்பதனை எடுத்துக் கூறினேன் என்றார். அதனை சோனியா ஏற்றுக் கொண்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் களை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்று இங்கே ஓர் அம்மணி இப்போதும் கேட்கிறார். அந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சகோதரியின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுங்கள் என்று சோனியா வேண்டுகோள் விடுத்தார். அத்தகைய தாயுள்ளம் கொண்ட சோனியா ஈழத்தில் பெண்களும் குழந்தைகளும்கூட, கொல்லப்படு வதை எப்படிப் பொறுத்துக் கொள் வார்?

இப்போது, ஈழத்தின் சரித்திரச் சக்க ரம் வேகமாகச் சுழலத் தொடங்கியி ருக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிங்கள இனத் தலை வர்களுக்குத்தான் டெல்லியின் கதவு கள் திறக்கப்பட்டன. இலங்கை பாராளுமன்றத்திற்கு ஈழத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதி நிதிக ளுக்குக் கூட அந்தக் கதவுகள் திறக்கப்படவேயில்லை. அதற்குக் காரணம், டெல்லியில் சிங்கள இன வாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் அந்த அதிகார மையம் தான்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர், அதே பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரின் ஒப்புதலின் பேரிலேயே டெல்லி சென்றனர். காத்திருந்தனர். கடைசிவரை அவர்கள் பிரதமர் மன் மோகன் சிங்கை சந்திக்கவே முடிய வில்லை. சிங்கள இனவாதிகள் வெற்றி விழாக் கொண்டாடினர்.

இன்றைக்கு அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், சரியான வழி தெரிந்து தமிழகம் வந்தனர். கலைஞரைச் சந்தித்தனர். அதற்கு முன்னதாகவே, அவர்களுக்காகக் கலைஞர் அந்த டெல்லிக் கதவுகளைத் திறந்து வைத்து விட்டார்.

என்றாலும், சிங்கள இனவாதத் தின் டெல்லி அதிகார மையம் இன் னும் தமது சேட்டைகளை நிறுத்த வில்லை. கடந்தமாதம் ஐ.நா. மன்றத் தின், மனித உரிமை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது.

ஈழத்தில் இலங்கை ராணு வம் மனித உரிமைகளை தமது சப் பாத்துக் கால்களால் நசுக்குகிறது என்று ஜப்பான், நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் கண்டித்தன. அப்படி எதுவுமே நடைபெறவில்லை என்று இலங்கை வாதாடியது. இந்தியா என்ன சொன்னது? ஆமாம். அப்படி எதுவுமே நடைபெறவில்லை என்று இலங்கைக் குக் கைத்தாளம் போட்டது.

இந்திய வெளியுறவுத் துறையின் அனுமதியின் பேரில் தான் ஆலோச னையின் பேரில்தான் இந்தியப் பிரதி நிதி இலங்கை இனவாத அரசிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்க முடி யும்.

ஆனால், இனி ஈழப்பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று மைய அரசு இருட்டு வீட்டில் குருட்டுப் பூனையைத் தேடிக் கொண்டிருக்க முடியாது.

ஈழப் பிரச்சினையில் தமிழகத்தின் உணர்வுகள் என்ன என்பதனைக் கலைஞர் தெளிவுபடுத்திவிட்டார்.

ஈழ மக்களுக்கு ஆதரவான நிலை எடுத்தால், சோனியா கோபம் கொள் வாரோ என்ற அச்சமும் அகற்றப்பட்டு விட்டது. அவர் ஈழ மக்களுக்கு ஆதர வாகக் குரல் கொடுத்திருக்கிறார். ஆனால், மைய அரசின் நிர்வாக இயந்திரம் எப்படிச் செயல்படும்?

ஈழப் போராளிகளைக் களத்தில் சந்திக்கத் திராணியற்ற இலங்கை ராணுவம், யாழ்ப்பாண நெடுஞ் சாலையை அடைத்து லட்சோப லட்சம் தமிழர்களைப் பட்டினி போட்டுப் பழி வாங்கப் பார்க்கிறது. அந்தச் சாலை திறக்கப்பட வேண்டும். அதற்கு இந்திய அரசு ஓங்கி ஒரு குரல் கொடுத்தாலே போதும். அடைக்கப்பட்ட கதவுகள் வெடித்துச் சிதறும்.

- குமுதம் ரிப்போர்ட்டர்

நல்ல கட்டுரை இணைப்புக்கு நன்றி

குருட்டுப் பூனைகள் இனியாவது வெளிச்சத்திற்கு வரட்டும். வழிகாட்டிய கலைஞருக்கு நன்றிகள்.

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.