Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படகுதுறை பொதுமக்கள் படுகொலை ஐ.நா.கண்டனம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படகுதுறை பொதுமக்கள் படுகொலை ஐ.நா.கண்டனம்.

சமாதான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரிக்கை.

(ஆங்கிலத்திலான அறிக்கை தமிழ் மொழிபெயர்ப்பு)

மன்னார் படகுத்துறை கிராமத்தின் மீது ஸ்ரீலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் தாக்குதல் நடத்தி 14பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை ஐ.நா.சபை வன்மையாக கண்டித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா.சபையின் உதவிச்செயலாளரும் மனிதாபிமான அலுவல்கள் மற்றும் இடர்கால உதவி வழங்கும் பிரிவின் இணைப்பாளருமான மார்கிரட் வேல்ஸ்ரேம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறு குழந்தைகள் உட்பட 14பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து ஐ.நா.சபை ஆழ்ந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை மக்கள் போரினால் தங்கள் வாழ்வை இழந்து தவிக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இருதரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைய பொதுமக்களை போரிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதை நாங்கள் வற்புறுத்தி கூறுகிறோம் என தெரிவித்துள்ளார்

ஐ.நா.சபை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது இலங்கையின் வடமேற்கு பிரதேசமான விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் படகுத்துறை கிராமத்தின் மீது இன்று ஸ்ரீலங்கா விமானப்படை விமானங்கள் குண்டுதாக்குதல்களை நடத்தியுள்ளன. தாக்குதல்களுக்கு உள்ளான பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்ட ஐ.நா.சபையின் மனிதாபிமான பணிகளுக்கான இணைப்பு அலுவலக அதிகாரிகளின் தகவல்களின் படி சிறுவர்கள் உட்பட 14பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் ஆகக்குறைந்தது 35பொதுமக்கள் காயமடைந்திருக்கிறார்கள்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் கடந்த வருடத்தில் 3000ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், இதுவரை இலங்கையில் நடந்த போரில் 67ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்

ஏறத்தாள ½ மில்லியன் மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள் கிட்டத்தட்ட 21300 பேர் போரினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களில் பலர் சுனாமியால் பாதிக்கப்பட்டார்கள் பல உயிரிழப்புக்களும் ஏற்பட்டது. மீண்டும் கரையோர பிரதேச மக்கள் சுமார் 315000 ஆயிரம் பேர் மீண்டும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.

மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு இருதரப்பையும் கேட்டுக்கொள்வதுடன் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஐ.நா.சபையின் உதவிச்செயலாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கில் யாழ்குடாநாட்டில் ஐந்து இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

Edited by shanthy

ஐக்கிய நாடுகள் சபை இருதரப்பையும் மீள பேச்சுக்கு செல்லுமாறு அழைப்பு.

நேற்று மன்னாரில் படகுத்துறையில் 14க்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள்சபை சிறீலங்கா அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளையும் போர் புரிவதை நிறுத்தி சமாதானப்பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன.

சிறீலங்காவில் இனமுரண்பாடுகளால் தொடர்ந்தும் மக்கள் துன்பங்களை அநுபவித்து வருவதாகவும் இன்றைய தாக்குதலில் இறந்தவர்களுக்கு தமது ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் துணை மனித உரிமைகள் செயலரும் மற்றும் அவசரகால மீட்பு ஒருங்கிணைப்பாளருமான மகிறிற்ரா வஸ்ரம் (Margareta Wahlstram) தெரிவித்துள்ளார்.

இரு தரப்பும் மிக அவசரமாக அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்து சர்வதேச யுத்த விதிகளுக்கு அமைவாக அப்பாவிப் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

www.pathivu.com

ஐக்கிய நாடுகள் சபை இருதரப்பையும் மீள பேச்சுக்கு செல்லுமாறு அழைப்பு.

நேற்று மன்னாரில் படகுத்துறையில் 14க்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள்சபை சிறீலங்கா அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளையும் போர் புரிவதை நிறுத்தி சமாதானப்பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன.

சிறீலங்காவில் இனமுரண்பாடுகளால் தொடர்ந்தும் மக்கள் துன்பங்களை அநுபவித்து வருவதாகவும் இன்றைய தாக்குதலில் இறந்தவர்களுக்கு தமது ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் துணை மனித உரிமைகள் செயலரும் மற்றும் அவசரகால மீட்பு ஒருங்கிணைப்பாளருமான மகிறிற்ரா வஸ்ரம் (Margareta Wahlstram) தெரிவித்துள்ளார்.

இரு தரப்பும் மிக அவசரமாக அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்து சர்வதேச யுத்த விதிகளுக்கு அமைவாக அப்பாவிப் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

www.pathivu.com

post-2821-1167794985_thumb.jpg

ஐ நாவின் ஏட்டுச்சுரக்காய் எல்லாம் கறிக்குதவாது.இவர்கள் ஏன் ஜேர்மனியைப்போல அதிகாரத்தை பயன்படுத்துகிறார்களில்லை. யாரும் புரிந்துகொள்கிறீர்களா? இதை ஐ நாவிடம் கேட்டால் எப்படி பதிலளிப்பார்கள்.

பொறுத்தது போதும் பொங்கியெழு தமிழா!

(படம் நிதர்சனத்தில் சுட்டது)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.