Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலிந்து அவதியுறும் யாழ். மக்களை வாட்டி வதைத்து முடக்கியசிக்குன் குனியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நலிந்து அவதியுறும் யாழ். மக்களை வாட்டி வதைத்து முடக்கியசிக்குன் குனியா!

யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவலங்களுக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் மற்றும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம்கொடுத்துவரும் இவ்வேளையில் எங்கிருந்தோ வந்து இங்கு பரவிய சிக்குன் குனியா அவர்களை வாட்டி வதைத்து பிழிந்தெடுத்து விட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தச் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் நிரம்பி வழிந்ததை தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் மூலம் பார்க்க அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், அதன் விபரீதம் குறித்து நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை

பின்னர் இலங்கையிலும் இந்நோய் பரவியுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிந்தது. எம்மக்கள் அதனையும் கூட பெரிதாக எடுக்கவில்லை. வேறு பல வழிகளிலும் பாதிக்கப்பட்டு அவதியுற்றிருந்த காரணங்களினால் அந்தப் பயங்கரமான சிக்குன் குனியா குறித்து எம்மவர்கள் பெரிதாக காதில் போட்டுக்கொள்ளவில்லை.

வழமையாக மாரி காலங்களில் பரவும் ஏதோ ஒருவித வைரஸ் காய்ச்சல் போன்று சற்றுக் கடுமையாக இருக்கலாம் என்று கருதிய குடாநாட்டு மக்களை கிராமம் கிராமமாகத் தாக்கத் தொடங்கியது சிக்குன் குனியா.

ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கில் வைத்தியசாலைகளை நாடிய நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ஆயிரக்கணக்கை எட்டியது. சுதுமலை, மானிப்பாய், கொக்குவில், இணுவில் என்று புயல் வேகத்தில் தாக்கிய சிக்குன்குனியா யாழ். நகர மக்களையும் விட்டுவைக்கவில்லை. கிராமப் புறங்களையும் விட நகர்ப்புறங்களில் நுளம்புத்தொல்லை அதிகம் என்பதால் இக் காய்ச்சல் பரவும் வேகம் வீரியம் இங்கு பலமடங்கு அதிகரித்து வீச்சாக இருந்தது. யாழ்.நகரப் பகுதியில் எங்கு பார்த்தாலும் சிக்குன் குனியா பற்றியே பேச்சாக இருந்தது.

வீடுகளில் முடக்கம்

வீடுகள் தோறும் சின்னஞ்சிறிசுகள் முதல் பெரியோர் வரையில் அனைவரையும் வாட்டியது சிக்குன்குனியா. ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர், இருவர், மூவரென ஒரே சமயத்தில் படுத்த படுக்கையாக முடங்கிக் கிடக்கும் பரிதாபம்.

ஏற்கனவே பொருளாதாரப் பிரச்சினைகளால் கால்வயிறு, அரை வயிறு என்ற நிலையிலுள்ள ஏழை, எளிய மக்களை மடக்கிப் படுக்கையில் போட்டு சீரழித்துவிட்டது இந்தக் கொடிய சிக்குன் குனியா!

ஓரளவு வசதி படைத்தவர்கள் மற்றும் செல்வச் செழிப்புள்ளவர்களையும் இந்நோய் விட்டுவைக்கவில்லை. அவர்களுக்கு பணம் இருந்தும் கடைகளில் சத்துள்ள பானங்களோ, உணவு வகைகளோ பெற்றுக்கொள்ள முடியாத இக்கட்டான நிலைமை. ஏன் சத்துக் குளிகைகளோ சத்துமிக்க "டொனிக்' வகைகள் கூட வாங்க முடியாமல் அவர்களும் அவஸ்தைப்பட்டனர்.

யாழ்.குடாநாட்டில் அரிசி, மா, சீனி, பருப்பு என்று அரசாங்கத்தால் பணத்திற்கு வழங்கப்படும் பொருள்கள் மற்றும் இடையிடையே நானாவிதப் பொருள்கள் என்று 100 கிராம், 250 கிராம், 500 கிராம் என்று வழங்கப்பட்டு வரும் மிளகாய், உழுந்து, கடலை, சர்க்கரை, பூடு, தீப்பெட்டி போன்ற வற்றை மிகக் கஷ்டத்துடன் பெற்றுக்கொள்ள முடிகிறது.

ஆனால் பிஸ்கட் வகைகளையோ, நெஸ்டோ மோல்ட், ஹோர்லிக்ஸ் போன்ற சத்துமிக்க பால்மா வகைகளையோ சோடா போன்ற வேறு எந்தப் பொருள்களையோ எவ்வளவு விலை கொடுத்தும் பெற்றுக் கொள்ளமுடியாது. ஏன் கண்களால் பார்க்கக் கூட முடியாது.

பனடோல் தட்டுப்பாடு

இவ்வாறான நிலைமையில் இந்தக் கொடுமையான காய்ச்சால் பாதிக்கப்பட்ட வர்கள் என்ன பாடுபட்டிருக்கவேண்டும் என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. பாதிக்கப்பட்ட எம்மைப் போன்றவர்களுக்கு அந்த அனுபவத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. உடல் முழுவதும் நடுங்கி ஒடுங்கிப் போய் விடுகிறது.

சிக்குன்குனியா வந்தவர்களுக்கு பன டோல் வில்லைகளைக் கூட கடைகளில் தேடிப் பிடிக்க முடியவில்லை. வெளியில் அதாவது அங்காடி வியாபாரிகளிடம் பனடோல் ஒரு காட் 50 ரூபா முதல் 60 ரூபா வரை விலை போனது. அதையும் சிரமப்பட்டே பெறமுடிந்தது. அரச மருத்துவமனைகளில் நோயாளர் கூட்டம் நிரம்பி வழிந்ததால் அங்கு சென்றும் இலேசில் பெறமுடியாத நிலைமையே நீடித்தது. ஆஸ்பத்திரிகளில் ஓரளவு மருந்துகள் கிடைத்ததால் அம்மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். சுகாதாரப் பகுதியினருக்கு எம்மக்களின் நன்றிகள்.

குடாநாடே ஸ்தம்பிதம்

குடாநாட்டில் சிக்குன்குனியா தலைவிரித்தாடிய வேளையில் இங்கு எல்லாமே ஸ்தம்பிதம் அடைந்துவிட்டது என்றே கூறவேண்டும்.

பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. ஆசிரியர்களின் வரவும் மந்தமாக இருந்தது. தனியார் கல்வி நிறுவனங்கள் சில இழுத்து மூடப்பட்டிருந்தன. தனியார் நிறுவனங்கள் பல இயங்க முடியாமல் திணறின. கடைகள், சிற்றுண்டிச்சாலைகள் பலவற்றில் ஊழியர்களின் வரவும் குறைந்தே காணப்பட்டது. அதனால் சில கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

குடாநாட்டு மக்களுக்கு கடந்த சில மாதங்களான "அமுதம்' வழங்கிவரும் ப. நோ.கூ. சங்கங்கக் கிளைகளிலும் முகாமையாளர், ஊழியர்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டதால் அவையும் இயங்கத் திணறின. வங்கிகளிலும் அதே நிலைதான்.

சரி! இவ்வளவும் கூறியாகிவிட்டது. இந்தச் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குதான

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.