Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயகாந்த் ஆச்சர்ய பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த் ஆச்சர்ய பேட்டி

சினிமாவையும் விடுவதாக இல்லை விஜயகாந்த். இதோ பொங்கலுக்கு ‘சபரி’ ரிலீஸ்!

‘‘இது ‘சபரி’ங்கிற ஒரு டாக்டரின் கதை. ஆக்ஷன் படம். ஆனா, ஆழமான, அழுத்தமான படம். ‘ரமணா’ ஸ்டைலில் ரொம்ப ஸ்டைலான படம். வழக்கமா விஜயகாந்த் படம்னா, இன்னின்ன விஷயங்கள்தான் இருக்கும்னு நினைப்பீங்கள்ல... இது செம ஷார்ப்பான கதை. எனக்கே ‘சபரி’ சரியான படமா வந்திருக்குன்னு தோணுது!’’ & உற்சாகமாகப் பேசுகிறார் விஜயகாந்த்.

p8acp2.jpg

‘‘லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு, உங்களை இன்னும் பிரமாண்டமாக்கிக் காட்டுது. என்ன நினைக்கி றீங்க?’’

‘‘தி.மு.க, அ.தி.மு.க. ரெண்டு கட்சிக்கும் மாற்று சக்தியா என்னை மக்கள் நினைச்சிருக்காங்க என்பது சந்தோஷமான விஷயம்.

நமக்கான பொறுப்பு, கடமை உணர்வு இன்னும் அதிகமாகுது. ஒரு கட்சியை வழி நடத்திப்போறது எவ்வளவு பெரிய வேலைங்கிறது புரியுது. ஒலிம்பிக்ல ஒரு நாள் ஓடுறதுக்காக, வாழ்க்கை முழுக்க பயிற்சி பண்ற விளையாட்டு வீரர்கள் மாதிரி கட்சியை வளர்க்க விரும்பறேன். அரசியலுக்கு இளைஞர்கள் வரணும். நல்லது செய்யறதுக்கு மனசும் வயசும் இருக்கிறவங்களோட சேர்ந்து நடக்கணும். அஞ்சு வருஷம் மாடல் ஆட்சி செஞ்சுகாட்டணும். அவ்வளவுதான்!’’

‘‘தி.மு.க. அரசை அதிகமாக விமர்சனம் பண்றீங்க. என்ன காரணம்?’’

‘‘நல்லது செஞ்சா பாராட்டவும் தயங்க மாட்டேன். ஆனா, என்ன நல்லது நடக்குது இங்கே?

‘மிடாஸ்’ மதுத் தொழிற்சாலை பற்றித் தேர்தலுக்கு முன்னாடி அதிரடியா பேசினாங்களே... இப்போ என்ன நடக்குது? அந்தத் தொழிற்சாலை மூடியிருக்கா, திறந்திருக்கான்னு தெரியுமா? அவங்களோடு தமிழக அரசுக்கு வியாபாரத் தொடர்பு இருக்கா, இல்லையா? அது பற்றிய விவரங் களை வெளிப்படையா மக்களுக் குச் சொல்லுங்கன்னு கேட்கிறேன்.

எங்கே பார்த்தாலும் வாரிசு அரசியல் உச்சமா இருக்கு. ஸ்டாலினை நான் குறை சொல்ல மாட் டேன். அடிப்படையில் இருந்து வந்தவர் அவர். இப்போ புதுசா வந்திருக்கிறவங்களைத்தான் கேட்கிறேன். இதெல்லாம் எங்கே போய் முடியும் ?

தேசியக் கட்சிகள் மீது குதிரைச் சவாரி செய்து சுகம் கண்டுட்டாங்க. அவங்களை இவங்க மதிக்கிறதும் இல்லை. ஆனா, மத்திய அரசைக் காப்பாற்ற காங்கிரஸ§ம் இவங்க பண்றதுக்கெல்லாம் துணை போகிற அவலம் நடக்குது.

இதையெல்லாம் விஜயகாந்த் எப்படி மாத்துவார்னு கேலி பேசலாம். ஜனங்களைப் பத்தி கவலைப்படுற என்னை மாதிரி ஒருத்தனை அவங்க ஏத்துக் கிட்டதே நல்ல அடையாளம் தானே!’’

‘‘ இலவச கலர் டி.வி, இரண்டு ஏக்கர் நிலம்னு எல்லாம் மக்களுக்குத்தானே போகுது? அதிலும் குறை சொல்றீங்களே?’’

‘‘வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதனால்கூட பயிரிட முடியாத கட்டாந்தரையை எல்லாம் விவசாய நிலம்னு சொல்லிக் கொடுக்கிறாங்க. அதை வெச்சுக்கிட்டு, ஏழைங்க என்ன செய்வாங்க? நீர்நிலை ஆதாரம் வேண்டாமா?

மக்கள் காதில் பூ சுத்த நினைக்கக் கூடாது. Ôமாடு கொடுத்தா, மூக்கணாங்கயிறும் கேட்கி றாங்கÕன்னு கேலி பேசினாங்க. தவறுகளைச் சுட்டிக் காட்டினா, விமர்சனம் செய்றேன்னு பேனாவைத் தூக்கிடுறார்! நிலத்தைப் பண்படுத்தித் தருவீங்களானு கேட்டா, ‘கல்யாண மண்டபம் கேட்காமல் போனாரே!’ன்னு கலைஞர் கிண்டல் பேசினார். ‘இருக்கிற கட்சியெல்லாம் தனக்கே வேணும்’னு எல்லாத்தையும் கலைஞர் கேட்காமல் போனாரே, அதுவே பெரிய விஷயம் தான்!

சமீபத்தில் சென்னைப் பல்கலைக் கழகமும், ஒரு தனியார் நிறுவனமும் சேர்ந்து வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடத்தினாங்க. நூத்துக்கணக்கான கல்லூரிகள்ல இருந்து 30 ஆயிரம் மாணவர்கள் கலந்துக்கிட்டாங்க. பட்டப்படிப்பு முடிச்ச அந்த இளைஞர்களில் வேலைக்காகத் தேர்ந் தெடுக்கப்பட்டவங்க 500 பேர்தானாம். காரணம், அவங்களுக்கு இங்கிலீஷ் தெரியாது. எல்லோருக்கும் எல்லாம் கிடைச்சுடணும்னு பேசுறவங்க, அதைப் பற்றி முதலில் அக்கறை காட்டணும்ல? அதனால்தான், ‘அன்னை மொழி காப்போம்! அனைத்து மொழியும் கற்போம்’னு நான் சொல்றேன்!’’

ÔÔகட்சிகளை உடைக்க சதி நடப்பதாகப் பரபரப்பாகச் செய்திகள் வருது. வைகோ கூட இப்போது கொந்தளிப்பில் இருக்கிறார். நீங்க என்ன நினைக்கிறீங்க?ÕÕ

ÔÔஎன் விஷயத்தையே எடுத்துக்கங்க... தொண்டர்கள் என் மீது வைத்திருக்கும் பாச உணர்வுக்கு ஏற்ற மாதிரி நான் செயல்படு றேன். நானும் என் தொண்டர் களும் ஒருவரை ஒருவர் கைவிடுவ தில்லை. என்னுடைய சீரான வளர்ச்சியை ஆளும்கட்சியால் ஜீரணிக்க முடியலை. அவர்களால் ஜீரணிக்க முடியலை என்பதே நாங்கள் வளர்ந்துகொண்டு இருக்கி றோம் என்பதை ஊருக்கு இன்னும் வெட்ட வெளிச்சமா காட்டுது.

வளருகிற கட்சிகளை ஜீரணிக்க முடியாமல் தவிப்பது... எதிர்க்கிற கட்சிகளை உடைப்பது இதெல்லாமே அப்படித் தவிக்கிற, உடைக்கிறவங்க பார்வையிலிருந்து தேவையா இருக்கலாம். ஆனா, உடைக்கப்படுகிற கட்சிகள்தான் தங்களை உடையாமல் பார்த்துக்கணும். அப்படிப் போராடினாதான் அரசியலில் நீடித்து வேலை செய்ய முடியும்.

அப்படிப் பார்க்கும்போது, வைகோ விழுந்துடக் கூடாது. அவர் மட்டுமில்லை... எந்தக் கட்சியையெல்லாம் பலவீனப் படுத்த முயற்சி நடக்குதோ, அவங்க எல்லோருமே தங்களை நிலைநிறுத்திக் கிறது ஆரோக்கியமான அரசியலுக்கு அவசியம்!

கட்சிகளை உடைப்பதைவிட, அந்தக் கவனத்தை மக்களின் நலனில் திருப்பறது நல்லது. இது என் தாழ்மையான கருத்து!"

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.