Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனந்தசங்கரியா இப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஊடகத்தில் வந்த செய்தி தினக்குரல் பத்திரிகையில் இருந்து

ஆனந்தசங்கரியா இப்படி?

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி புதிய கதை ஒன்றைச் சொல்லுகிறார். இம்முறை அவர் கூறும் கதை யாதெனில், வடக்கும், கிழக்கும் வேறாகப் பிரிக்கப்படக் கூடாது என்பதாகும். அவருடைய இந்தக் கூற்று பல வருடங்களுக்குப் பின்னர் வீ.ஆனந்த சங்கரியும் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் சமமான கருத்தை உடையவர்களாக இருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை எடுத்துக் காட்டுவதாகவே எந்த ஒருவருக்கும் தென்பட இடமுண்டு.

வீ.ஆனந்தசங்கரி நீண்ட காலமாக தமிழ் மக்களின் குடியியல் உரிமைகளுக்காகத் தோன்றிப் பேசி வந்த ஒரு அரசியல் வாதியாகும். புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் குடியுரிமைகளை குரூரமான முறையில் நசுக்கும் வகையில் செயற்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் ஆனந்த சங்கரி அதற்கு எதிராகச் சர்வதேச மட்டத்தில் குரல் எழுப்பி வந்தார். சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை வெட்டியும் குண்டுகளை வீசியும் சொத்துகள், உடைமைகளை நாசம் செய்தும் அவர்களுடைய குடும்பங்களை தெருவில் திரியவிட்ட பிரபாகரன் இவ்வாறான கொடுமைகளைச் செய்து கொண்டே இறுதியில் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி தானே என்று கூறினார். இந்த நிலையில் புலிகளால் அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவே நித்தம் பேசி வந்த வீ.ஆனந்த சங்கரியே உண்மையில் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக இருப்பதற்கு எல்லா வகையிலும் தகுதி பெற்ற தலைவராக இருந்தார்.

பிரபாகரனுக்கு எதிராகச் செயற்பட்ட ஒவ்வொரு தமிழ்த் தலைவர்களும் உடனேயே கொல்லப்பட்டு பரலோகம் அனுப்பப்பட்டு விடுவார்கள். ஆனால், தர்மத்தின் பாதையில் செயற்படுபவர்கள் தர்மத்தாலே பாதுகாக்கப்படுவார்கள் எனப்படும் புத்த போதனைக்கேற்ப ஆனந்த சங்கரி பிரபாகரனின் துப்பாக்கி முனையிலிருந்து உயிர்தப்பி வந்துள்ளார். சில வேளைகளில் அவர் கடைப்பிடிக்கும் அகிம்சைக் கொள்கைகளாலேயே அவர் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். இதேவேளை, ஆனந்தசங்கரி உயிருடன் இருப்பதைப் பார்க்கப் பொறுக்காத ஒரு சில வடக்கின் பாவம் பிடித்த பத்திரிகைகள் அவர் எப்படி இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று கேள்வி கிளப்பின. இது ஆனந்தசங்கரியை இன்னும் ஏன் கொலை செய்யவில்லை என்றுபிரபாகரனிடம் கேள்வி கேட்பதற்குச் சமமாகும்.

ஆயினும், மேற்குறிப்பிட்டவாறு ஈடுபாடுள்ள ஒரு வரலாற்றையும் ஈடுபாடான ஒரு நிகழ்வையும் உருவாக்கிய வீ.ஆனந்தசங்கரி தற்போது வடக்கையும் கிழக்கையும் வேறாகப் பிரிப்பதற்கு எதிராக வருவது ஏன்? இவ்வாறு வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு எதிராக ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள சந்தர்ப்பத்தில் வடக்கையும் கிழக்கையும் வேறாகப் பிரிக்கும் செயற்பாட்டால் நிகழக் கடியது யாதெனில் அந்தப் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் விரும்பாவிட்டாலும் கூட பிரபாகரனை நோக்கிப் போக வேண்டிய நிலையே, கடந்த 17 வருடங்களாக ஒன்றாக இணைக்கப்பட்டிருந்த இரண்டு மாகாணங்களின் நிருவாகச் செயற்பாடுகள் மிகவும் அவதானமாக மிருதுவாகக் கையாளப்பட்டு வந்தவை ஆகும். இந்த கடந்த 17 வருட நிருவாகச் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் இருந்ததில்லை.

இவ்வாறு தெரிவித்துள்ள எமது கௌரவத்துக்கும் அன்புக்குரிய வீ.ஆனந்தசங்கரி ஐயா மிகவும் அறிந்திருந்த ஆனால்,அவசரத்தில் மறந்து விட்ட ஒரு விடயத்தை நாம் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. அதாவது வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் இரண்டும் இவ்வாறு 17 வருடங்களுக்கு முன்னர் அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியினுடையதும் இந்திய அரசாங்கத்தினுடையதுமான தேவைகளுக்கு ஏற்ப கைச்சாத்திடப்பட்ட இந்தோ-லங்கா ஒப்பந்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது ஒரு வருட காலத்திற்கு மட்டுமே. அதுவும் சம காலத்தில் தீர்வுக்காக மேற்கொள்ள வேண்டிய ஒரு நடவடிக்கையாக ஜே.ஆர்.ஜயவர்தனவுக்குத் தோன்றியதாலேயே அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆயினும் அந்த ஒப்பந்தத்துக்கு ஏற்ப ஒரு வருட காலத்துக்குப் பின்னர் வடக்கும், கிழக்கும் தொடர்ந்தும் இணைக்கப்பட்டிருக்க வேண்டுமா என்பது பற்றி மக்களின் அதிகாரத்தைப் பெறுவதற்காகச் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டியிருந்தது.

எனினும், அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு எந்தக் காலத்திலும் நடத்தப்படவில்லை. இதனால் வடக்கு, கிழக்கு நிருவாகம் இந்தோ-லங்கா ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளுக்கும் எதிராகவே அண்மைக் காலம் வரையில் ஒன்றுபட்ட நிருவாகமாக நடத்தப்பட்டு வந்துள்ளது. வடக்கு, கிழக்கு இணைப்பு சட்ட விரோதமானது என்று அண்மையில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் செய்யப்பட்டது யாதெனில், காலாவதியான மேற்படி ஒப்பந்தத்தின் கீழ் இது காலவரை சட்ட பூர்வமற்ற முறையில் நடத்தப்பட்டு வந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாகம் மீண்டும் அந்த ஒப்பந்தத்துக்கு முன்னிருந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டதேயாகும்.

எம்மால், சுருக்கமாகக் கூறப்பட்ட இந்த வரலாற்றை நாம் ஞாபகப்படுத்திய நிலையில் வீ.ஆனந்தசங்கரி ஐயா இதுபற்றிப் பொறுமையுடன் சிந்தித்துப் பார்ப்பார் என்பதே எமது நம்பிக்கையாகும்.

-திவயின ஆசிரிய விமர்சனம்: 29.12.2006-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.