Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோலிக்கு இந்த வாரம் அபராத வாரம்!

Featured Replies

கோலிக்கு இந்த வாரம் அபராத வாரம்!

kolivc1.jpg

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கு இவ்வாண்டு மிகவும் அற்புதமான ஆண்டு. தொட்டதெல்லாம் பொன் என்பதுபோல் ரன் மழையாகப் பொழிந்து வருகிறார். டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்றார். இப்போது ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசமே வைத்துள்ளார். ஆனால் இந்த வாரம், ஏனோ தெரியவில்லை கோலிக்கு பிரச்சனைகள் படையெடுத்த வண்ணம் உள்ளன. கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மெதுவாகப் பந்துவீசியதால் கேப்டன் கோலிக்கு 24 லட்சம்
அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இணை உரிமையாளராக உள்ள ஐ.எஸ்.எல் கால்பந்து அணியான கோவா அணிக்கு தற்போது 11 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
   
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் அணி இந்த ஒன்பதாவது ஐ.பி.எல் தொடரில் பெரிதும் ஏமாற்றி வருகிறது. பேட்டிங் பலமாக இருந்தாலும் மிக மோசமான பவுலிங்கின் காரணமாக இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 2ல் மட்டுமே வென்றுள்ளது. கோலி என்னதான் ரன்களைக் குவித்துக்கொண்டே இருந்தாலும் எல்லாம் பாழாகி விடுகிறது. போதாதென்று கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நைட் ரைடர்சுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மெதுவாகப் பந்துவீசியதற்காக கேப்டன் கோலிக்கு ஆட்ட ஊதியத்தில் 50 சதவிகிதமும் மற்ற வீரர்களுக்கு ஊதியத்தில் 25 சதவிகிதமும் அபராதம் விதிக்கப்பட்டது. 15 ஓவர்கள் வரை வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த பெங்களூர் அணி கடைசி கட்ட சொதப்பல் பந்துவீச்சாலும், யூசுப் பதானின் விஸ்வரூபத்தாலும் தோல்வியைத் தழுவியது.
   
பந்துவீச்சிற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக கோலி எச்சரிக்கப்படுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன் புனே அணிக்கு எதிராகவும் தண்டிக்கப்பட்டிருந்தார். இன்னொரு முறை இத்தொடரில் மெதுவாகப் பந்துவீசினால் கேப்டன் என்ற முறையில் கோலிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். ஏற்கனவே பெங்களூர் அணியின் அரை இறுதி வாய்ப்பு மங்கி வரும் நிலையில் இது அவ்வணியின் பிரச்சனையை இன்னும் அதிகரிக்கும்.

kolivc2.jpg
   
கோலியின் பிரச்சனை கிரிக்கெட்டோடு முடிந்ததா என்றால் இல்லை. கோலி இணை உரிமையாளராக இருக்கும் கோவா ஐ.எஸ்.எல் அணி வாயிலாக அடுத்த பிரச்சனை கதவைத் தட்டியுள்ளது. கடந்த ஐ.எஸ்.எல் தொடரின் இறுதிப் போட்டி முடிந்ததும் சென்னையின் எப்.சி மற்றும் கோவா அணி வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். சென்னை கேப்டன் எலானோ கோவா அணியின் நிர்வாகிகளோடு மோதலில் ஈடுபட்டார். எலானோ மீது  கோவா அணி நிர்வாகம் புகார் அளித்தது. அந்தப் பிரச்சனையைப் பற்றி விசாரித்து வந்த ஐ.எஸ்.எல் நிர்வாகக் குழு நேற்று தனது தீர்ப்பை அறிவித்தது.
   
சென்னை அணி 3-2 என கோப்பையை வென்ற பிறகு நடைபெற்ற மோதல்களை வீடியோ ஆதாரம் மூலம் அக்குழு நடந்ததையெல்லாம் ஆராய்ந்தது. அதில் எலானோ தானாக எந்தத் தகராறும் செய்யவில்லை என்றும், கோவா அணியினர் தான் அவரிடம் மோதல் போக்கில் ஈடுபட்டனர் என்றும் தெரியவந்தது. தகறாரில் ஈடுபட்டற்காகவும், பொய்ப் புகார் அளித்ததற்காகவும் அவ்வணிக்கு 11 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதில் 10 கோடி ரூபாயை ஐ.எஸ்.எல் நிர்வாகத்திற்கும், 1 கோடியை சென்னையின் எப்.சி அணிக்கும் வழங்குமாறு உத்தரவிட்டது. மேலும் இத்தகராறில் ஈடுபட்ட கோவா அணியின் உரிமையாளர்கள் தட்டராஜ் சால்ககாருக்கு மூன்று ஆண்டுகளும், ஸ்ரீநிவாஸ் டெம்போவிற்கு இரண்டு ஆண்டுகளும் அவ்வணி சார்பான நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
   
அதுமட்டுமல்லாமல் அனைத்தையும் விட மோசமாக அவ்வணிக்கு அடுத்த ஐ.எஸ்.எல் சீசனில் 15 புள்ளிகள் குறைக்கப்படும். இதனால் அவ்வணி அடுத்த ஆண்டு அரை இறூதிக்குப் போகும் வாய்ப்பு பறிக்கப்படும். இது கோவா அணிக்கும், அவ்வணியின் ரசிகர்களுக்கும் பெரிய இழப்பாகும். இரண்டாவது ஐ.எஸ்.எல் சீசனில் இரண்டாம் இடம் பிடித்த கோவா அணி, முதல் சீசனில் அரை இறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
   
மூன்றாவது ஐ.எஸ்.எல் தொடரைப் பொறுத்தமட்டில் அனைத்துப் போட்டிகளில் வென்றாலும் கோவா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கடினம். இந்த ஐ.பி.எல் தொடரிலும் ஆர்.சி.பி எல்லாப் போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும். ஆக மொத்தம் கோலியின் கையில் ஒரு கோப்பை ஏறுவது என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. குறைந்தபட்சம் பவுலிங்கையாவது சரி செய்து இந்த ஐ.பி.எல் தொடரில் முன்னேற முயற்சி செய்ய வேண்டும்.

http://www.vikatan.com/news/sports/63705-kohli-fined-inr-24-lakh-for-slow-over-rate.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.