Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேருந்தில் குண்டு வெடித்தது

Featured Replies

நிட்டம்புவையில் பேருந்தில் இன்று மாலை குண்டு ஒன்று வெடித்துள்ளது. நிட்டம்புவை கிரியுள்ள மார்க்த்தில் சேவையில் ஈடுபட்டுள்ள பஸ் ஒன்றினுள்ளே இக் குண்டு வெடித்துள்ளது. பேருந்து முற்றாக எரிந்தாக செய்தி. ஜந்து பேர் ஸ்தலத்திலே மரணமானார்கள். படுகாயங்களுடன் சிலர் வைத்திய சாலையில அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் கொழும்பு கண்டி மார்க்கத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது

மேலதிக விபரங்கள் தொடரும்

ஜானா

  • தொடங்கியவர்

மாலை 6:40 மணியளவில் நிட்டம்புவ கிரியுள்ள மார்க்கத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த பஸ் வண்டியிலே குண்டு வெடித்துள்ளது. ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாகவும், பத்துப் பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இருபது பேர் வரை சிறு சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்

நிட்டம்புவில் குண்டு வெடிப்பு: 5 பொதுமக்கள் பலி: 50 பேர் காயம். 10 பேர் நிலை கவலைக்கிடம்.

கொழும்பிலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள நிட்டம்பு பிரதான வீதியில் பாரிய சத்த்துடன் குண்டு ஒன்று வெடித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தப்பிரதேசத்தில் பேரிரைச்சலுடன் சத்தம் ஒன்று கேட்டதாகவும், பேருந்து ஒன்றில் இருந்தே இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும் முதலில் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பு - கண்டி வீதியில் பிரதானதொரு இடமாக நிட்டம்புவவில் பேருந்து ஒன்றில் இக்குண்டு வெடித்துள்ளது. முதல் கிடைத்த தகவல்களின் படி ஐவர் கொல்லபட்டதுடன் 50 பேர் வரையில் காயங்களுக்கு உள்ளாகியதாக செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது எனினும் இதனை சுயாதீனமாக உறுதி செய்யமுடியவில்லை. இப்பேருந்தில் 80 பயணிகள் பயணம் செய்தனர் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 10 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-Pathivu-

  • கருத்துக்கள உறவுகள்

நிட்டம்புவ பஸ் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் பலி

மு.சுப்பிரமணியம்

கொழும்புக்கு அருகாமையில் உள்ள நிட்டம்புவ பகுதியில் இன்று மாலை வேளையில் பொதுமக்கள் பயணம் செய்யும் பஸ் பாரிய குண்டு வெடிப்புக்குள்ளானது.

சுமார் 80 பேர் பயணம் செய்த இந்த பஸ்ஸில் ஆககுறைந்தது 7 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்தாகவும் என நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு கண்டி வீதீயில் நிட்டம்புவ-கிருல்ல என்ற இடைப்பட்ட இடத்தில் மிகவும் வாகனம் நெரிசல் மிக்க நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த பஸ் குண்டு வெடித்தவுடன் பஸ் தீப்பற்றியது என அந்த சம்பவ இடத்தில் இருந்தவர் தெரிவித்தார்.

சனம் நிறைந்த பஸ் இந்த குறிப்பிட்ட நேரத்தில் வெடித்ததில் பலர் பாதிக்கபட்டுள்ளனர் . எனவும் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல் எதுவும் தற்போதைக்கு தெரியவில்லை எனவும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிராத் சமரசிங்க ஏ.எப்பி செய்தி ஸ்தாபனத்திற்க்கு தெரிவித்துள்ளனர் .

இது முழுக்க முழுக்க விடுதலைப்புலிகளின் செயல் என அவர் மேலும் தெரிவித்துள்ளதாக ஏ.எப்பி செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=3607

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரநாயக்க குடும்பத்தின் கோட்டையான அத்தனகலவில் ஜேஆர் போல, கைப்பற்ற மகிந்த முயல்வார் என்று சமீபத்தில் தான் கட்டுரை ஒன்று படிச்சன். ஆனால் இவ்வளவு வேகமாக இருக்கும் என்று யோசிக்கவே இல்லை.

முதலில் குண்டு வெடிக்கும். பிறகு "ஜயோ புலி இங்க வந்திட்டுது" என்று அந்தச் சனத்தை பீதிக்கு உள்ளாக்குவினம். நாளைக்கு( இணடைக்கு இருண்டு போச்சில்லோ. மகிந்தவுக்கு இருட்டு எணடால் கொஞ்சம் பயம்) மகிந்த போய்ப் பார்ப்பார். அப்படியே மக்களே உங்களுக்காக நான் இருக்கின்றேன். பண்டாரநாயக்க குடும்பம் இல்லை எண்டு கதை விடுவார். பிறகென்ன அடுத்த தேர்தலில் தன்னுடைய ஆளுக்கு சீட் கிடைக்கும்.

இது முழுக்க முழுக்க விடுதலைப்புலிகளின் செயல் என அவர் மேலும் தெரிவித்துள்ளதாக ஏ.எப்பி செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் ஏன் குண்டு வெடிச்ச கையோடு புலிகளில் பழி போடறார். விசாரணையை அதுக்குள்ள நடத்தி முடிச்சினமோ? அல்லது தங்களின் மீது பழி வந்திடும் என்ற பயம் வந்திட்டுதோ?

இனி தமிழர் பகுதிகளில் வான் குண்டுத் தாக்குதல்களை உலகத்தின்முன் நியாயப்படுத்தவும் வசதியாகவும் இருக்கும்.

நித்தம்புவவில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது: தேடுதலில் 3 சிங்களவர் உட்பட 20 பேர் கைது.

கம்பகா மாவட்டத்தில் நித்தம்புவ பகுதியில் பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்குப் பிறப்பிக்கப்பட்ட காவல்துறை ஊரடங்கு இன்று சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டது.

வன்முறைகள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காகவும், தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவுமே இரவு நேர ஊடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

இன்று காலை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள அதேவேளையில், அப்பகுதியில் படிப்படியாக நிலைமை வழமைக்குத் திரும்பிக்கொண்டிருப்பதாகவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.