Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்படி இருக்கிறது யாழ்ப்பாணம் ‘‘திறந்தவெளி சிறைச்சாலைக்குள் தினம் தினம் சாக ஏலாது!’’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இருக்கிறது யாழ்ப்பாணம்

‘‘திறந்தவெளி சிறைச்சாலைக்குள் தினம் தினம் சாக ஏலாது!’’

‘‘ரவுணில் இருக்கிற எல்லாக் கடையளுக்கும் போய்ரன், ஒரு ‘ஹோர்லிக்ஸ்’ வாங்கலாமெண்டு! ஓர் இடமும் கிடைக்கயில்ல. அப்பாவுக்கு உடல் நலமில்லாம வைத்திய சாலையில சேர்த்திருக்கிறம். ஓப்ரேஷனுக்கு நாள் குறிச்சாச்சு. உடம்பில சக்தி இல்ல. எதாவது சத்து மா வாங்கிக் கொடுக்கச் சொல்லி மருத்துவர்கள் சொல்லுகினம். அதுக்காக ரெண்டு நாளா அலையுறன். எவ்வளவு காசு வேணுமெண்டாலும் கொடுக்கலாம். ஆனா, எல்லாக் கடையிலயும் சாமான் இல்லயெண்டு சொல்லுகினம்...’’ - ஏக்கமும் களைப்புமாகச் சொல்கிறார் சிந்துஜா.

p142bjs7.jpg

இலங்கையின் மற்ற பகுதிகளைத் தரை வழியாக யாழ்ப்பாணத்துடன் இணைக்கும் முக்கியச் சாலையான ஏ-9 பாதை கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டு உள்ளதால், அனைவராலும் கைவிடப்பட்ட அநாதைக் குழந்தை போல் ஆகிவிட்டது யாழ்ப்பாணம். உணவு விநியோகம் முற்றிலுமாகத் தடைப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதால், பட்டினிச் சாவுகளை எதிர்நோக்கி நாட்களைக் கடத்திக்கொண்டு இருக்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

p142azf4.jpg

நியூயார்க்கில் நடைபெற்ற, இலங்கைக்கு உதவிகள் வழங்கும் நாடுகளின் மாநாட்டில் ஏ-9 பாதையைத் திறக்கச்சொல்லி வற்புறுத்துவதாக இருந்தார்கள். அதனைத் தெரிந்துகொண்ட ராஜபக்சே, ‘‘ஏ-9 பாதையைத் திறப்போம்’’ என அறிவித்தார். இது மாநாட்டுக்காகச் செய்யப்பட்ட ஒரு கண்துடைப்புதான். அதன் பிறகு, இன்று வரை பாதை--யைத் திறக்க இலங்கை அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திரிகோணமலை துறைமுகத்தில் இருந்து அவ்வப்போது யாழ்ப்-பாணத்துக்கு வரும் கப்பலும், கொழும்பிலிருந்து வரும் விமானமும் மட்டும்தான் யாழ்ப்பாண மக்களுக்கு இப்போது இருக்கும் ஒரே போக்குவரத்து வசதி. ஆனால், இவற்-றில் பயணம் செய்ய இலங்கை ராணுவத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். மேலும், கடலில் அடிக்கடி சண்டை நடப்பதாலும், கப்பலின் மேல்- தளத்தில் ராணு-வத்தினர் இருப்-பதாலும், கப்பல் போக்குவரத்து பாதுகாப்பானதல்ல என்கிற நிலை. யாழ்ப்பாணத்-தைச் சுற்றி-லும் கடல்பகுதி ராணு-வத்-தால் கம்பிவேலி அமைக்-கப்-பட்டுள்ளதால், கடல் வழியாகக் கள்ளத்தோணிகளில் வெளியேறு-வதும் சாத்திய-மில்லை. தரைப்பகுதியில் காடு வழியே ரகசிய-மாக நடந்தே செல்வது மட்டும்தான், வெளியேற இருக்கும் ஒரே வாய்ப்பு. கொஞ்சம் ரிஸ்க்-கான பயணம்தான் என்றா-லும், இவ்வழியே புலிகளின் கட்டுப்-பாட்டுப் பகுதியான வன்னிக் குள் சென்றுவிடலாம்.

‘‘வன்னியில் உணவுப் பிரச்னை யாழ்ப்பாணத்தில் இருக்கும் அளவு இல்லை. கப்பல் மூலம் உணவுப் பொருட்-களை இறக்குமதி செய்து ஸ்டாக் பண்ணியிருக்கிறார்கள் புலிகள். எனவே, பாதுகாப்பு கருதி யாழ்ப்பாணத்திலிருந்து பலரும் இப்படி வன்னிக்குச் செல்கிறார்கள். கடந்த மூன்று மாதத்தில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை வெளியேறி வன்னிக்குச் சென்றிருக்-கலாம்’’ என்கிறார் பத்திரிகை-யாளரான தயாபரன்.

யாழ்ப்-பாணத்---தில் ஒரு சில பத்திரிகை-யாளர்-கள் மட்டும்-தான் இப்போது உள்ளார்-கள். ‘‘தொடர்ந்து பத்திரிகை-யாளர்கள் காணாமல் போனது, கொலை செய்யப்பட்டது மற்றும் பத்திரிகை அலுவலகங்கள் ராணுவத்தால் அச்சுறுத்தப்--பட்டது ஆகியவற்றின் காரண-மாக பல பத்திரிகையா-ளர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். இங்கேயிருந்து இயங்கி வந்த ‘ஈழநாடு’ பத்திரிகை தனது அலுவலகத்தை மூடி-விட்டது. ‘உதயன்’, ‘யாழ் தினக்குரல்’ போன்ற பத்திரிகைகளின் ஆசிரியர்-களும் திரும்பிவிட்டார்-கள். புகைப்படக் கருவி-யுடன் ஒருவரை ராணுவம் பார்த்தால், அவர் உயிரு-க்கு உத்தரவாதம் இல்லை என்பதுதான் உண்மை நிலவரம். கடந்த நான்கு மாதத்தில் மட்டும் 500 பேருக்கும் மேல் காணாமல் போயிருக்கிறார்கள். இவர்-களில் 300-க்கும் மேற்பட்-டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு -இருக்கலாம் என அஞ்சுகிறோம்’’ என்கிறார் தயாபரன்.

‘‘1995-ல் இலங்கை ராணுவம் யாழ்ப்-பாணத்தைக் கைப்பற்றியபோது இருந்தது போன்ற நிலைமையைத்தான் மீண்டும் இப்போது நாங்கள் எதிர்-கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு ஒரு நாள் என்பது பகல் பொழுது மட்டும்தான். யாழ்ப்பாண நகரப்பகுதி உட்பட யாழ்குடா நாடு முழுவதும் ராணுவமயப்படுத்தப்பட்டு, மாலை 6 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கிட்டத்தட்ட 40,000 ராணுவ வீரர்கள் இங்கே குவிக்கப்பட்டு உள்-ளார்கள்.

ஊரடங்கு மனிதர்களுக்கு மட்டு-மல்ல; மிருகங்களுக்கும்தான்! யாழ்ப்-பாணம் மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான வட்டுக்கோட்-டையில் ஊரடங்கு நேரத்தில் நடமாடிய இரண்டு பசுமாடுகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று-விட்டார்கள். இலங்கை அரசின் கெடுபிடியான கட்டுப்-பாடுகள் காரண மாகப் பல அவலங்கள் வெளியே தெரிவதில்லை’’ என்கிறார் தயாபரன்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இல்லாத பகல் பொழுதுகளிலும், பாதுகாப்பைக் காரணம் காட்டிப் பல தடைகள்; சில வீதிகளுக்குள் மக்கள் நுழையத் தடை! யாழ்ப்பாணத்தின் முக்கிய வணிக வீதிகளில் ஒன்றான ஸ்டேன்லி வீதி மூடப்பட்டுள்ளது. பல அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் அலுவலகங்கள் இந்த வீதியில் உள்ளது-தான் காரணம். யாழ் வைத்தியசாலை வீதியில், மருத்துவமனைக்குச் செல்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்-படுகிறார்கள். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் மட்டுமே யாழ்ப்பாணத்தில் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. பேருந்து நிலையம், நகருக்கு வெளியே கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள பண்ணை என்ற பகுதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால், அரசுப் போக்கு-வரத்து ஊழியர்கள் பணிப் புறக்-கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். எனவே, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போக ஒரே நம்பிக்கையான வாகனம் சைக்கிள் மட்டும்தான்.

p143aag5.jpg

இடையிடையே கொழும்பிலிருந்து கப்பல்கள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்கிறது அரசாங்கம். இதனால், இப் பொருட் களுக்கு மட்டும் யாழ்ப்பாணத்தில் தட்டுப்பாடு இல்லை. அரசின் கூட்டு றவுக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் ஓரளவு நியாய விலையில் கிடைக்கின்றன. டீசலும் நியாயமான விலையில் வழங்கப்படுகிறது. ‘‘இதற்குக் காரணம், இதனைக் கண்-காணிக்க ஒரு குழுவை அரசு நியமித்-துள்ளதுதான்’’ என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத யாழ்ப்பாண அரசாங்கச் செயலக அதிகாரி ஒருவர். ஆனால், மளிகைக் கடைகளில் நிலைமை தலைகீழ்! ஐந்து மாதங் களுக்கு முன்னால் 30 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ அரிசி இப்போது 200 ரூபாய். 60 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ மீன் 600 முதல் 1,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கோதுமை 180 ரூபாய், சர்க்கரை 300 ரூபாய், தேயிலை 1,000 ரூபாய், மண்ணெண்-ணெய் ஒரு லிட்டர் 200 ரூபாய், தேங்காய் எண்ணெய் 1,000 ரூபாய், பெட்ரோல் 600 ரூபாய்! இவ்வளவு விலை கொடுத்து வாங்க மக்கள் தயாராக இருந்தாலும், அதற்குப் பல மணி நேரம் கியூவில் நிற்க வேண்டும்!

யாழ்ப்பாணத்தின் முக்கியத் தொழில்-களில் ஒன்று மீன் பிடித்தல். இலங்-கையின் மொத்த மீன் வளத்தில் கிட்டத்-தட்ட 60 சதவிகிதம் யாழ்ப்பாணத்தின் பங்குதான். ஆனால், இப்போது பகலில் மட்டும்தான் கடலுக்குச் செல்ல மீனவர்களை ராணுவம் அனுமதிக்கிறது. அதுவும் கடற்கரையில் இருந்து சில 100 மீட்டர் எல்லையைத் தாண்டக்-கூடாது என்கிற கட்டுப்பாடு! இதனால், மீன் பிடித்தல் பெரு-மளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. பெரும்பகுதி நிலம் ராணுவத்தின் உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் மாட்டிக்கொண்டு இருப்பதால், யாழ்ப்பாணத்தின் இன்னொரு முக்கியத் தொழிலான விவசாயமும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது.

‘‘கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்லூரிகள் அனைத்தும் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளன. காரணம் மாணவ, மாணவியருக்குப் போதுமான பாதுகாப்பு இல்லாதது தான்! குறிப்பாக, மாலை நேர வகுப்புகள் முடிந்து வீட்டுக்குச் செல்லும் பெண்கள் மிகவும் ஆபத் தான நிலைமையில்தான் வீடு திரும்ப வேண்டியுள்ளது. இதனால் பல மாணவ, மாணவிகள் கல்லூரியை விட்டு வெளியேறிவிட்டனர். எனவே தான் கல்லூரிகளை மூடிவிட்டோம்’’ என்கிறார் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் வி.பி.சிவநாதன்.

வங்கிகள் செயல்படுவதால், வெளிநாடுகளிலிருந்து உறவினர்கள் அனுப்பும் பணத்தைப் பெற்றுக்கொள் வதில் யாழ்ப்பாணத்தவர்களுக்குச் சிக்கல் இல்லை. எனவே, பணம் ஒரு பிரச்னை இல்லை. ஆனால், அந்தப் பணத்தைக் கொடுத்து ஏதாவது வாங்கலாம் என்றால், கடைகளில் பொருள் இல்லை.

இவ்வளவு நெருக்கடியான வாழ்க்-கைக்கு மத்தியில், தங்களை ஆசுவாசப்-படுத்திக்கொள்ள மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு யாழ்ப்-பாணத்தில் ஒலிபரப்பாகும் தென்னிந்திய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும்தான்.

p143ub1.jpg

இன்னொரு பொழுதுபோக்கு சினிமா தியேட்டர். யாழ்ப்பாணத்தில் மொத்தம் நான்கு திரையரங்குகள் இயங்கி வந்தன. இப்போது ராஜா தியேட்டர் மட்டுமே இயங்குகிறது. அதுவும் காலை 10.30 மணி காட்சி மட்டும்தான். இப்போது இந்த தியேட்டரில் ‘(சம்திங் சம்திங்) உனக்கும் எனக்கும்’ படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. மிகக் குறைவானவர்களே வருகிறார்கள் என்றாலும், புதிதாக படப் பெட்டிகளை வெளியேயிருந்து கொண்டுவர முடியாது என்பதால், இதே படத்தையே மீண்டும் மீண்டும் ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள் தியேட்டர்-காரர்கள். இப்படியாக 80 தினங்களைக் கடந்து ஓடிக்-கொண்டு இருக்கிறது இப்படம்.

‘‘கெதியில் ஏதாவது தீர்வு வர வேணும். அரசாங்கத்துக்கு எங்களைப் பற்றிக் கவலை-யில்லை. எல்லோரும் அரசியல் பிரச்னையாக மட்டுமே இதைப் பார்க்கினம். ஒண்டில் சமாதானம் வேணும்; இல்லாட்டிச் சண்டை பிடிச்சுச் செத்து மடிஞ்சு அப்படியாகிலும் ஒரு தீர்வு ஏற்பட வேணும். இப்படித் திறந்தவெளி சிறைச்சாலைக்குள் தினம் தினம் சாக ஏலாது!’’ என்கிறார் சிந்துஜா வேதனை கொப்பளிக்கும் குரலில்!

ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்தவர்களின் கோரிக்கையும் இப்போது அதுதான்... ‘‘ஏதாவது ஒரு முடிவு சீக்கிரம் வேணும்!’’

அந்த முடிவு நல்ல முடிவாக அமையட்டும்!

http://www.vikatan.com/

unkal thakavalukku nanri karuppi :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.